Jump to content

அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!-


Recommended Posts

 

அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!-

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d= 

 

C.V.-Wigneswaran.jpgவடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக்கான போட்டி சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்தித்துப் பரஸ்பர பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இது விடிய விடிய இராமாயணம் விடிந்தபின் சீதைக்கு இராமன் என்ன முறை என்று கேட்ட புத்திசாலியின் கதையாக இருக்கிறது.

நெருப்புச் சுடும் என்பதை முட்டாள் கையை வைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். புத்திசாலி நெருப்புச் சுடும் என்பதை மற்றவர்களது பட்டறிவில் இருந்து அறிந்து கொள்கிறான். இதுதான் இருவருக்கும் இடையில் உள்ள வேற்றுமை!

வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளாராக யாரை நிறுத்துவது என்பது பற்றி இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை. எனினும் யாரை நிறுத்தக் கூடாது என்பதில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது.

கடந்த யூன் மாதம் 9 ஆம் நாள் வெளிவந்த காலைக்கதிர் நாளேடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் உடனான நேர்காணல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இரண்டு பக்கம் நீடித்த அந்த நேர்காணலில் தற்போது முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசின் தலைவராக உள்ள மாவை சேனாதிராசா, இந்த இரண்டு பேரில் அடுத்த முதலமைச்சராக யார் வரக் கூடிய சாத்தியங்கள் உள்ளன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தாது விட்டால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடுவாராயின் அது கூட்டமைப்பின் மீது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்? என இரண்டு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

காலைக்கதிர் – தற்போது முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசின் தலைவராக உள்ள மாவை சேனாதிராசா இந்த இரண்டு பேரில் அடுத்த முதலமைச்சராக யார் வரக் கூடிய சாத்தியங்கள் உள்ளன?

சுமந்திரன் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக இனியும் விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. கூட்டமைப்பு அப்படி நிறுத்தாது என்றும் நான் தெரிவித்திருக்கின்றேன். அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூடத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்திருந்தது. அவர் கட்சியோடு முரண்பட்டு நிற்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே வெளிப்படையாகத் தெரியும் ஒரு விடயம் இருக்கையில் அவருக்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பது தேவையற்றது. அவர் தற்போது தனிக் கட்சி தொடங்கவுள்ளார் எனப் பேசி வருகின்றார். அப்படியான சூழ்நிலையில் அவரை வேட்பாளராக நியமிக்கின்றமையை மானம் மரியாதை உள்ள எந்தக் கட்சியும் சிந்திக்காது.

காலைக்கதிர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தாது விட்டால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவாராயின் அது கூட்டமைப்பின் மீது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?

சுமந்திரன் – கூட்டமைப்புக்கான ஆதரவு தொடர்ச்சியாக இருக்கும். கூட்டமைப்புக்கான ஆதரவு குறையப் போவதும் இல்லை. ஆனால் எவர் பிரிந்து சென்றாலும் வாக்குகள் பிரிவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. அவர் அது குறித்துச் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து அவரைக் கொண்டு வந்து முதலமைச்சர் ஆக்கியமைக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதனை நாங்கள் செய்திருந்தோம். ஆனால் அவர் கட்சியோடு இணங்கிப் போகாமல் தனது தனிப்பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான நிலையில் அடுத்த தடவையும் தனிப்பாதையில் செல்பவரைக் கட்சி திரும்பவும் நியமிக்குமென அவரும் எதிர்பார்க்க முடியாது.

 

vigneshwaran-sambanthan-news.jpg

உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சித்தம் போக்குச் சிவன் போக்கு என்றிருந்தவர் விக்னேஸ்வரன். அவரைச் சம்பந்தன் ஐயா அவர்கள்தான் 2013 இல் அரசியலுக்கு இழுத்து வந்தார். முன்பின் தெரியாத ஒருவரை, அரசியலுக்குப் புதியவரை பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில், வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனது பெயரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவகள் முன்மொழிந்தார். பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் “வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்” என்று எச்சரித்தார். இருப்பினும் அவரையும் சமாதானப்படுத்தி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்ப்புக்கு மேலும் ஒரு காரணம் இருந்தது. முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசா ததேகூ இன் சார்பாக போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட முடிவாகி இருந்தது. தமிழரசுக் கட்சியைவிட பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் கட்சிகள் முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசாவுக்கே ஆதரவு தெரிவித்தன. சம்பந்தன் ஒருவரே விக்னேஸ்வரனைக் கொண்டுவரக் கடும் முயற்சி எடுத்தார். சம்பந்தன் ஐயாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவை சேனாதிராசா பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தார்.

ஓய்வூதியமாக மாதம் கிடைக்கும் ரூபா 30,000  பணத்தில்தான் தனது சீவியம் நடப்பதாக விக்னேஸ்வரன், சம்பந்தன் ஐயாவுக்குத் தெரியப்படுத்திய போது அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் எனச் சொன்னார். சம்பந்தன் ஐயா கேட்டதற்கு இணங்க விக்னேஸ்வரனது தேர்தல் செலவுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் பல இலட்சங்களை நேரடியாக அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தது!

மக்களுக்கு யார் என்று தெரியாத ஒருவரை தேர்தல் களத்தில் இறக்கி அவரது வெற்றிக்கு இரவு பகல் பாராது, பசி நோக்காது, கண்துஞ்சாது உழைத்தவர்கள் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும்தான். ஒரு கட்டத்தில் தான் எங்கே இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவேனோ என்ற ஐயம் அவருக்கு வந்த போது, இல்லை அப்படியொன்றும் நடவாது தெம்பாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் சொல்லப்பட்டது.

தேர்தல் முடிவு வந்தபோது 1,32,255 விருப்பு வாக்குகளைப் பெற்று விக்னேஸ்வரன் முதலிடத்தில் இருந்தார். இரண்டாவது இடத்துக்கு வந்தவரை விட இவருக்கு 44,385 வாக்குகள் கூடுதலாக கிடைத்திருந்தது.

இன்று நிலைமை பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாகிப் போய்விட்டது! விக்னேஸ்வரனின் இந்தத் தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம் 2014 ஆம் அண்டு இறுதிப் பகுதியில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநாடே என்கிறார் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் அவர்கள். “கட்சியின் தலைமைப் பதவி மாவை சேனாதிராசா அண்ணன் அவர்களுக்குச் சென்றடைந்தமைதான் இதற்கெல்லாம் காரணம். எதிர்பார்ப்புக் கனவாயிற்றே என்பதைச் சகித்துக் கொள்வது கடினம் தான். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமானதொன்றல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கும் ஆசைப்பட்டார் என்பது பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு டிசெம்பர் 29 அன்று வெளியிட்ட அறிக்கை மூலமாகவே மற்றவர்களுக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தியை விக்னேஸ்வரன் இதுவரை மறுக்கவில்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆசை நல்லது ஆனால் அது பேராசையாக இருக்கக் கூடாது. (https://www.universaltamil.com/செயலாளர்-கிருஸ்ணபிள்ளை/)

தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பின்னர் விக்னேஸ்வரன் என்ன சொன்னார்? ”நான் யாருடைய தயவாலும் வெற்றி பெறவில்லை, மக்களிடம் இருக்கும் எனது சொந்தச் செல்வாக்கினால் வெற்றி பெற்றேன்” என்று பச்சைப் பொய் சொன்னார்! இதற்குத்தான் சொல்வது நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு இரண்டு ஆடு கேட்கும் என்று!

17-08-2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகளை கொழும்பில் இருந்தவாறு விக்னேஸ்வரன் வெளியிட்டார். தான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என. ஒரு புறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியில் வந்து நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். எனவே திறமையான, மக்களுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடக் கூடிய, விலைபோகாதவர்களை தெரிவு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். இதன் உட்பொருள் தமிழ் அரசுக் கட்சி / தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்பதுதான்.

ஆனால் தமிழ் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் சாரி சாரியாக வெளியில் வந்து சரியான தலைமைக்கு வாக்களித்து விக்னேஸ்வரனது முகத்தில் கரி பூசினார்கள். இதன் பின்னரும் அவர் தமிழரசுக் கட்சித் தலைமையோடு தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டார். மோதல் போக்கை மேற்கொண்டார். இன்றுவரை இந்தப் போக்குத் தொடர்கிறது.

wig-sam-428x288-1.jpe

மாற்றுத் தலைமை {தனக்கான தலைமை) வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்ற விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை டிசெம்பர் 19, 2015 அன்று உருவாக்கினார். எண்ணிப் 17 பேரை யாருக்கும் தெரியாமல், மூடிய அறைக்குள் பேச்சு நடத்தி விட்டு, ஏற்கனவே இரகசியமாக திட்டமிட்டதற்கு அமைய எல்லாவற்றையும் முடித்து விட்டு, அரசியல் சார்புமில்லை, யாருக்கும் எதிரானவர்களுமில்லை என்று விக்னேஸ்வரன் தத்துவம் பேசினார்.

இந்த அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது, சிவில் அமைப்புக்களை கொண்டது என்று விக்னேஸ்வரன் பறை சாற்றினாலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அரசியல் கட்சிகள் அதில் இடம்பிடித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் அரசுக் கட்சிக்கு மட்டும் அழைப்பு இல்லை! அவரது பார்வையில் அல்லது கணிப்பில் தமிழ் அரசுக் கட்சி ஒரு கட்சியே அல்ல!

ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல தமிழ் மக்கள் பேரவை உள்நாட்டிலும் சரி, பன்னாட்டு அரங்கிலும் சரி இன்றுவரை எதனையும் சாதித்தது கிடையாது. வெள்ளை வேட்டி கட்டிக் கொள்ளும் மேட்டுக் குடியினரது அமைப்பாகவே அது இயங்கி வருகிறது. சாதாரண மக்களுக்கும் அந்த அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வட மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஒரு நாள் பார்த்து விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஒப்புக்கேனும் போகவில்லை. அவர் மீது யூன், 2017 இல் 21 வட மாகாண சபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு போனபோதுதான் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் இரண்டாவது தடவை தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் கால் பதித்தார்.

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா அவர்களது இடத்துக்கு இமானுவேல் ஆர்னோல்ட் அவர்களை நியமிப்பது என உடன்பாடு காணப்பட்டது. அதற்கான கடிதத்தை தருமாறு அவசரப்படுத்தியதன் காரணமாக தமிழ் அரசுக் கட்சிப் பொதுச் செயலாளரே வட மாகாண சபைக்குச் சென்று கடிதத்தை நேரில் கொடுத்தார்.

அனந்தி சசிதரன் அவர்களை அமைச்சராக நியமிக்கும் தன விருப்பத்தை விக்னேஸ்வரன் வெளியிட்ட போது அதற்குப் பதில் அளித்த மாவை சேனாதிராசா அனந்தி மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து வருகிறது எனவே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

ஆனால் விக்னேஸ்வரன் என்ன செய்தார்? எப்படி நடந்து கொண்டார்? நேர்மையாக நடந்து கொண்டாரா? என தமிழ் அரசுக்கட்சி சார்பாக ஆர்னோல்ட் அவர்களைக் கல்வி அமைச்சராக நியமிக்கச் சம்மதம் தெரிவித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை அவசர அவசரமாகக் கேட்டுப் பெற்ற பின்னர் தனது அடிவருடி ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சிக்கு இரண்டகம் செய்தார். அத்தோடு நிறுத்தாமல் விக்னேஸ்வரன் அனந்தியை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.

தமிழ் அரசுக் கட்சி அமைச்சர்கள் குருகுலராசா மற்றும் சத்தியலிங்கம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் வைக்காத போதும் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய ஆணைக்குழு எந்தப் பரிந்துரையையும் செய்யாத போதும் அவர்கள் இருவரும் தங்கள் பதவியைத் துறக்க வேண்டும் என்று சொல்லி சின்னத்தனமாக ஒற்றைக் காலில் நின்றவர் விக்னேஸ்வரன். சத்தியலிங்கத்தை மாட்ட முடியாதா என்று தான் உருவாக்கிய ஆணைக் குழு உறுப்பினர்களையே கேட்ட ‘உத்தமர்’ விக்னேஸ்வரன்!

2018 இல் நடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது ததேகூ க்கு இது நிலநடுக்கத்தை உண்டாக்கியுள்ளது என்று விக்னேஸ்வரன் சொல்லி மகிழ்ந்தார். புளகாங்கிதம் அடைந்தார்.

மொத்தத்தில் விக்னேஸ்வரன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர். ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர். அன்னமிட்ட வீட்டுக்குக் கன்னம் வைத்தவர்.

சரி, அரசியலில் விக்னேஸ்வரன் ஒரு இரண்டகர் என்பதை மறந்து விடுவோம். அவரது நிருவாகம் எப்படிப்பட்டது? வட மாகாண சபையை வினைத்திறனோடு ஆட்சி செய்தாரா? அப்படி எதுவும் இல்லை. வினைத்திறனற்ற சபை என்பதே பலரது மதிப்பீடாக இருந்தது.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் யூஎன்டிபியின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தி (Subinay Nandi)ன வட மாகாணத்தில் வாழும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு Peacebuilding Commission (PBC) என்ற திட்டத்தின் கீழ் அ.டொலர் 150 மில்லியன் (ருபா225 கோடி) நிதியை கொடுக்க முன்வந்தார். அ.டொலர் 150 மில்லியன் என்பது கொஞ்சநஞ்சப் பணம் அல்ல. 2017 ஆம் ஆண்டில் மத்திய அரசு வட மாகாண சபையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி ரூபா 6013.48 மில்லியன் (ருபா 601.34 கோடி) மட்டுமே. வாராது வந்த இந்த நிதியை விக்னேஸ்வரன் ஓடோடிச் சென்று இரு கையாலும் நன்றியோடு பெற்றுக் கொண்டிருப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்தது என்ன? அது ஒரு சோகக் கதை.

விக்னேஸ்வரன் தனது தனிச் செயலாளராக பணியில் இருந்த தனது மருமகன் கார்த்திகேயன் நிமலனை அந்தத் திட்டத்தில் மாதம் அ.டொலர் 5,000 (ரூபா 750,000 இலட்சம்) சம்பளத்தில் ஒரு சிறப்பு ஆலோசகராக யூஎன்டிபி நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த யூஎன்டிபி கொழும்பு வதிவிடப் பிரதிநிதி “யாரை நியமிப்பது அல்லது நியமியாது விடுவது எங்களுடைய பொறுப்பு. அதனைச் செய்ய எங்களுக்கு சட்ட திட்டங்கள் இருக்கிறது” எனத் தெரிவித்தார். மேலும் ” ……குறித்த சிறப்பு ஆலோசகரின் (நிமலன் கார்திகேயன்) அதீத ஆதரவு திரட்டல் காரணமாக ஐ.நா அந்த நியமனம் பற்றி எண்ணிப்பார்ப்பதே சாத்தியம் இல்லாமல் போய்விட்டது (….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to rconsider such an appointment”) என நந்தி கடித மூலம் தெரிவித்தார். இன்று அந்த நிதியில் பாதி முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நடத்தும் ஒரு தொண்டு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது!

வலிய வந்த சீதேவியை விக்னேஸ்வரன் தனது மருமகனுக்கு பதவி கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக உதைத்துத் தள்ளினார். இதன் மூலம் வட மாகாண ஏழை விவசாயிகளது வயிற்றில் அடித்தார். உண்மையில் நரகம் என்று ஒன்றிருந்தால் அங்கே விக்னேஸ்வரனுக்கு சிறப்பிடம் ஒதுக்கப்படும்!

ஒரு எள்முனை அளவு தன்மானம் உள்ள தமிழ் அரசுக் கட்சிக்காரன் விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு நியமனம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டான். ஒரு கட்சிக்குக் கட்டுப்பாடு தேவை. கொள்கை, கோட்பாடு தேவை. இது உலகெங்கும் காணப்படும் நடைமுறையாகும். அவை தேவையில்லை என்பவர்கள் மட்டுமே விக்னேஸ்வரனும் சம்பந்தன் ஐயா அவர்களும் சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்பார்கள்! இருவரும் பேசினால் ஈர மண்ணும், சுட்ட மண்ணும் ஒட்டிவிடும் என நினைக்கிறார்கள்!

வட மாகாண சபையின் அடுத்த முதல்வராக யாரை நியமிப்பது என்பதை இலண்டனில் நாலு பேர் கூடிப் பேசி முடிவு எடுக்க முடியாது. அதிலும் புலம் பெயர் தமிழர்கள் சார்பில் நிச்சயம் முடிவு எடுக்க முடியாது. “வி்க்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கிய சிலரால் விட்ட தவறை உணர்ந்து வடமாகாண சபையின் அபிவிருத்திக்காக உழைப்பேன் என்று உறுதியளித்து வருகின்றார்” என்கிறார் ஒருவர். விக்னேஸ்வரன் எப்போது? எங்கே? உறுதி அளித்தார்? அவர் தனிக்கட்சி தொடங்கிப் போட்டியிடப் போவதாக அல்லவா நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அப்படி அவர் உறுதியளித்திருந்தால் அது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்தவன் கதை போன்றது!

விக்னேஸ்வரன் தனிக் கட்சி தொடங்குவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார். அதற்கு முன்னோடியாக வட கிழக்கில் உள்ள இளைஞர்கள் ,யுவதிகளைஅழைத்து அடுத்த மாதம் மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று “எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் தனியாகக் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவாரா?” என எழுப்பப் பட்ட கேள்விக்கு விக்னேஸ்வரன் பதில் அளித்துள்ளார்.

தனக்கு அடுத்த முறை போட்டியிட வாய்ப்பளிக்கப் படமாட்டாது எனச் சிலர் கூறுகிறார்கள். தம்முடன் இருக்குமாறு பெருமளவு மக்கள் தன்னிடம் கேட்கிறார்கள். முதலாவதாக கட்சி (தமிழ் அரசுக் கட்சி?) எனக்குப் போட்டியிட இடமளிக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால், தான் இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டியிருக்கும். இல்லையேல், தனிக்கட்சியை ஆரம்பிக்க வேண்டும். (தமிழ்வின்)

விக்னேஸ்வரன் அளித்திருக்கும் பதில்கள் அவர் அரசியலைச் சந்தையில் பேரம் பேசி மாடு வாங்குகிற வியாபாரமாகப் பார்க்கிறார் என்பது தெரிகிறது. தமிழ் அரசுக் கட்சி தான் போட்டியிட வாய்ப்புத் தரவேண்டும். அப்படி வாய்ப்புத் தராவிட்டால் இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிடுவேன். இரண்டும் சாத்தியம் இல்லாவிட்டால் தனிக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவேன்!

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தோணிகளில் பயணம் செய்ய நினைக்கும் அல்லது மனப்போக்குடைய ஒருவரை தமிழ் அரசுக் கட்சி மட்டுமல்ல வேறெந்த மானமுள்ள கட்சியும் தேர்தலில் போட்டிபோட நியமனம் வழங்காது.

ஒற்றுமை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப் படவேண்டும். அரசியல் கட்சி என்பது ஆண்டிகள் மடம் அல்ல. அது மக்களின் தலைவிதியை மாற்றவல்ல அமைப்பு. ஆனால் அரசியலில் உட்பகைக்கு உள்ளான கட்சி அரத்தால் தேய்க்கப்பட்ட இரும்பு போல் அழியும். எள்ளின் பிளப்பைப் போல் சிறியதாக இருந்தாலும் அதனால் கெடுதி மிகுதியாகும். உட்பகை புற்று நோய் போன்றது. இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. (குறள் 890)

மனப்பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் ஒரு வீட்டில் கூடி வாழ்வது, ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு வாழ்வது போலாகும் என்கிறார் வள்ளுவர். இங்கே பாம்பு யார் என்பதை யாரும் சொல்லிக் காட்டத் தேவையில்லை.

அடுத்து வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி/தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் போட்டியிடும். முதலமைச்சராக ஒருவரை முன்னிறுத்தும். ஆனால் அது நிச்சயமாக விக்னேஸ்வரன் ஆக இருக்க மாட்டாது. இருக்கக் கூடாது.

 

http://www.newsuthanthiran.com/2018/06/23/அரசியலில்-உட்பகை-என்பது/

Link to comment
Share on other sites

Quote

 உண்மையில் நரகம் என்று ஒன்றிருந்தால் அங்கே விக்னேஸ்வரனுக்கு சிறப்பிடம் ஒதுக்கப்படும்!

 

அரசியல் நேர்மை உள்ள மேற்கத்தையவர்கள் தான் சொன்ன வார்த்தைக்கு மன்னிப்பு கேட்பார்கள். சுமந்திரனிடம் அதனை எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கு கூட்டணி திரும்பவும் கூப்பிடுமோ என்ற எண்ணம் இருந்தது.இந்த பேட்டியுடன் திடமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.