Jump to content

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

 

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.

பீட்டர் துரைராஜ்

peter-durai-raj.jpg?w=150&h=115 பீட்டர் துரைராஜ்

இலங்கை எழுத்தாளர் குணா கவியழகன் தமிழுக்கு தந்து இருக்கும் புதிய நாவல் – கர்ப்ப நிலம். ” புலிகளோடு களத்தில் இருந்தவர் குணா கவியழகன் எனவே அவரது வருணனைகள் மிக யதார்த்தமாக இருக்கும் ” என்றார் எழுத்தாளர் முருகவேள். இதனை படித்து முடிக்கையில் இரா.முருகவேள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. இளந்தமிழகம் இந்த நாவல் குறித்து ஒரு விமர்சனக் கூட்டத்தை சமீபத்தில் நடத்தியது.மேலும் பல கூட்டங்களுக்கு பொருத்தமானதுதான் இந்த நாவல்.

யாழ்ப்பாணம் நகரை காலி செய்யும்படி விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறார்கள். ‘புலிகள் சொன்னால் ஏதோ காரணத்திற்காகத்தான் இருக்கும் என்று யாழ்பாணம் நகரை மக்கள் காலி செய்கிறார்கள்; அனைவரும் காட்டிற்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். இந்த நூலுக்கு ‘ வனமேகு காதை’ என பொருத்தமான அடைமொழி இட்டிருக்கிறார் நாவலாசிரியர். கிட்டத்தட்ட இந்த இடப்பெயர்வின் காலத்தில் நடக்கும் சம்பவங்களின் கோவைதான் இந்த நாவல்.

யாழ்ப்பாணம் நகரை காலிசெய்யும் மருத்துவக் கல்லூரி மாணவி கனிமொழி தன் காதலை இந்தக் கதை முடிவதற்குள் தனது சீனியர் டாக்டர் மதிக்குமாரிடம் சொல்லிவிடுவாளா ? தன் குடும்பத்தை எதிர்த்து அந்தோணியை திருமணம் செய்து கொண்ட தேவி பிரசவிக்க இருக்கும் நாளில் இடப்பெயர்வு தொடங்குகிறது. அவளால் எப்படி நடக்க முடியும்? அவளுக்கு யார் பிரசவம் பார்ப்பார்கள்? ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாக புலம்பெயர்கிறார்கள். இவர்களோடு நாம் மனரீதியில் பயணம் செய்கிறோம். ஒருவேளை அதில் உங்கள் அப்பா இருக்கலாம்; அத்தை இருக்கலாம், சகோதரன் இருக்கலாம். யார் கண்டது ?

யாழ்நகரை வெற்றி கொள்கிறது இராணுவம்; யாழ் கோட்டையில் சிங்கக் கொடி ஏற்றப்படுகிறது. இந்த வெற்றிக்கு யார் காரணம்? யார் பெயரை தட்டிக் கொள்வது ? இராணுவமா ! அரசியல் தலைமையா! இவையெல்லாம் இந்த நாவலில் பேசப்படுகிறது.

சிங்கள அரசியல்வாதி ஆரிய ரத்னா இந்த வெற்றியைக் கொண்டாட குயின்ஸ் ஹோட்டலில் விருந்து வைக்கிறார். இதில் இராணுவ மேஜர் நுவான், சட்டத்தரணி காரிய விக்ரமசிங்க , நீதிபதி,எஸ்.பி, பத்திரிக்கையாளர் கமால , மகளிர் அணித்தலைவி சந்திரா களுநாயக்கா கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் கேளிக்கை, சல்லாபத்திற்கிடையே இலங்கை அரசியல் பேசப்படுகிறது; புலிகள் வீழ்ச்சி பேசப்படுகிறது. மிக நுட்பமாக தகவல்களை தந்திருக்கிறார். ” பாத்திரங்கள் என்னோடு மெய் பேசுவதுபோல மனிதர்கள் ஒருபோதும் பேசுவது இல்லை ” என்று ஆசிரியர் சொல்லுவது உண்மைதானோ என்னவோ !

இந்த விருந்திற்காகும் செலவை ஒரு மத்தியதர சிங்கள குடும்பத்திலிருந்து வந்த விஜயதாசா செய்கிறான்; ஆரிய ரத்னா செய்ய வைக்கிறார். அவனுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் தான் செய்து வரும் மரக்காலை ( மரம் அறுக்கும் ஆலை!) தொழிலுக்கு காவல்துறையின் ஆதரவு, அதிகாரி ஆதரவு தேவை. கால ஓட்டத்தில் இவனுக்கு சிங்கள அரசியலில் முக்கிய இடம் கிடைக்கக்கூடும். சட்ட விரோதச் செயல்களின் கூட்டணியில் பங்கு பெறுவான். இவனைப் போன்றவர்கள் வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்துதான் ஜனநாயகம் அமையும்! இவன் தன் மைத்துனன் மனைவியோடு உறவு கொள்ளும் அத்தியாயம் நாவலில் வரும் ஒரு ரசிக்கத்தக்க பகுதி.

இந்த நாவல் தமிழ் மக்களின் அவலம் குறித்த நாவல். ஆனால் இதில் என் மனதைக் கொள்ளை கொண்டது சிங்களக் குடும்பம்தான். தன் பேரன் சுனில் இராணுவத்தில் சேருவதை சீயா(தாத்தா) ரத்னாயக்கவால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைப் பொறுத்தவரை துவக்கை தூக்குவது என்பதே காசுக்காக கொலை செய்வதுதான். அறம் சார்ந்த வழியில் இருந்து கிஞ்சிற்றும் விலக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. வளவுக்காரர்களை ( அப்படி என்றால் யார்?) எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தன் மகன் விஜயதாசாவைக் கெடுத்தது அவர்கள்தான். தமிழர்கள் தங்கள் மண்ணைக் காக்க போராடுகிறார்கள் ; அதில் தவறு ஏதும் இல்லை என்பது அவர் கருத்து. மன்னர் காலத்தில் இருந்து தன் குடும்ப தொடர்ச்சியை அவரால் பகுத்தாராய முடிகிறது. தன் குடும்பம் தழைத்து இருப்பதற்கு காரணம் கடனாக புகையிலை, சுருட்டைத் தந்து விற்கச் செய்த தமிழ்க் குடும்பம்தான். அவர் மூத்த மகன் முன்பொரு காலம் புரட்சியில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் அவர் எழுப்பும் கேள்விகள் இன்னமும் அவசியமானவை. இடதுசாரி அரசியல் குறித்த சாதகமான பார்வை நாவலில் வருகிறது..

சிங்கள சுனிலுக்கு ஏறக்குறைய சம கால தமிழ்ச் சிறுவன் கதிர். இவனுக்கு வரலாறெல்லாம் தன் தாத்தா நாகமணி மூலம் சோற்றோடும், கதையோடும், பேச்சோடும் சொல்லப்படுகிறது. தன் நிலத்தை இடப்பெயர்வில் வரும் மக்களுக்கு கொடுத்து தங்க வைப்பதில் அவருக்கும் அவர் மனைவிக்கும் எந்த சுணக்கமும் இல்லை. தன் மருமகள் முணுமுணுப்பைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. மனிதாபிமானம்தான் அவருக்கு அளவுகோள்.

கதை , சிறுவன் கதிர் ‘ இடம் வலம் இடம் வலம் இடம் வலம் ‘ என்று சொல்லுவதில் கதை தொடங்குகிறது என்றால் சிங்கள இராணுவச் சிப்பாயாக இருக்கும் சுனில் ‘ லெப்ட், ரைட். லெப்ட் ,ரைட் என்று நடப்பதில் முடிகிறது. வன்னிக்காட்டில் கதை தொடர்ந்து நடக்குமோ ? ஒருக்காலத்தில் பரஸ்பரம் ஆதரவோடு இருந்த ரத்னாயக்க – நாகமணி வாரிசுகள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடுமோ !

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நாவலின் கட்டுக்கோப்பும் அழகியலும் இவருடைய மற்ற நாவல்களை படிக்க தூண்டுகிறது.

அகல் வெளியீடு, 348 டிடிகே சாலை,சென்னை-14 / பக்கம் 336/ விலை ரூ.300/முதல் பதிப்பு ஜனவரி 18.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

 

https://thetimestamil.com/2018/06/20/இலங்கை-இடப்பெயர்வின்-கு/

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

குணா. கவியழகனின் கர்ப்பநிலம் நாவலை சற்றுமுன்னர்தான் வாசித்து முடித்தேன். இது வனமேகு காதை என்று ஒரு பெரும்காவியத்தின் ஒரு நாவல் என்று சொல்லியுள்ளார்.

யாழ்ப்பாண இடப்பெயர்வை மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நாவலின் சில அத்தியாயங்கள் சொல்கின்றன. 

பிடித்த வரியொன்று:

”யதார்த்தத்தை நோக்கி இலட்சியத்தைத் திருப்பினால் அவன் வியாபாரி. இலட்சியத்தை நோக்கி யதார்த்தத்தைத் திருப்பினால் அவன் போராளி”

 

ஆனால் ஏதோ காழ்ப்புணர்வு காரணமாக ஊழிக்காலம் எழுதிய தமிழ்க்கவி அம்மா (அவரும் முன்னர் புலிகளின் அரசியல் பிரச்சாரம் செய்தவர்) விமர்சனம் என்று வன்மத்தைக் கொட்டியிருக்கின்றார்.

 

ச(க)ர்ப்ப நிலம்-நூல் விமர்சனம்-தமிழ்க்கவி

NL_large_1519992989.jpg?resize=300%2C181

 

மிக சாதுரிமாக சில உண்மைகளை புனைவுக்குள் புகுத்தி உண்மைகளையும் பொய்யாக்கி துவழ்கிறது நாவல். “ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை”அந்த மட்டில் இது புலம்பெயர்நாடுகளில் சர்க்கரையாகலாம் என்றாலும் அங்கும் சம்பவங்களுடன தொடர்புபட்டவர்கள் நிரம்பிவிட்டதால் கஸ்டம்தான்.

ஒரு காலத்தில் குணா கவியழகனின் எழுத்துக்களை விரும்பிப் படிக்க முடிந்தது. அவரது அரசியற் கல்வியானது திரு.மு. திருநாவுக்கரசு அவர்களின் அடியொற்றியது. அது அவரது மேடைப்பேச்சுகளிலும் அவதானிக்கப்பட்டது. எம்மைப்போல அது பல்கலைக்கழக பேராசிரியர்களின் கற்பித்தல், அனுபவம் என்பவற்றைக் கொண்டதல்ல. எனினும் அவர் இயக்கத்தின் கல்விப்பிரிவின் பொறுப்பாளராகவிருந்தார். இவரே சகல பிரிவினருக்குமான அரசியல் வகுப்புகளை நடாத்தும் பொறுப்பிலிருந்தவருமாவார். அது தவிர இறுதிக்காலங்களில் ‘விடுதலைப்புலிகள்’; என்ற இயக்கத்தின் முக்கிய பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் இருந்தார். மக்கள் இவரது அரசியற் பத்திகளையே பெரும்பாலும் பத்திரிகைகளில் படித்து வந்தனர் எனக்குத் தெரிய பெண்கள் பத்திரிகையான “சுதந்திரப்பறவைக்கும்”-கூட, இவரே தன் மனைவிக்காக ஆசிரிய தலையங்கம் எழுதினார் என்பது, எங்களில் பலருக்குத் தெரிந்து, அது பெரிய விவகாரமாக்கப்பட்டது என்றாலும் தமிழ்ச் செல்வனின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்.

இதனால்தான் அவர் துணிந்து ‘நஞ்சுண்டகாட்’டை அப்பவே எழுதினார். அது அப்பவே தடை செய்யப்பட்டது. அதிலுள்ள பயிற்சிமுகாம்பற்றிய செய்திகள் முன்பே வெளிவந்திருந்தால் புதிய போராளிகளை இணைப்பது முடியாமலே போயிருக்கும்.

குணா கவியழகனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒவ்வொரு விடயங்களையும் தத்துவபூர்வமாக விளக்கும் எழுத்துக்கள் எனக்குப்பிடிக்கும். அதுவும் நேராக சொல்லக்கூடிய ஒரு விசயத்தையும் மிக அழகாக புதிர்போட்டு விளங்கவைக்கும் தன்மை கொண்டது அவரது எழுத்து. அந்த பிரத்தியேக எழுத்து நடைபற்றி நான் பலமுறை வியந்து போயுள்ளேன். ஒரு ஒரேயொரு கருத்தைப்  பல கோணங்களில் ஆய்வு செய்து விபரிக்கக்கூடிய திறமை இவருக்குண்டு. அரசியல் ஆய்வாளர்களாக சிலரை இயக்கம் தேர்வு செய்தபோது இவரும் அதற்குள் கொண்டுவரப்பட்டார்.

“ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது” முது மொழி என்றாலும் இது இப்போது வழக்கொழிந்து விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. காரணம் ஏடுகளில் எழுதப்படுபவை பலருடைய சம்பாத்தியத்துக்கும் வாழ்க்கைக்கும் பெருமளவில் தொண்டு புரியக்கூடியதாக அமைகின்றன. இந்த வகையில் அண்மையில் வெளிவந்துள்ள குணா கவியழகனின் “ கர்ப்பநிலம்” என்ற புத்தகத்தை கூறலாம். புனைகதைகளின் ஒரு பெரும் தத்துவமாக இதை அவர் நகர்த்த முனைந்தாலும் அது மிக, மிகமிக வருத்தத்துடன் நகர்கிறது.  பெரும் சிரமங்களின் மத்தியில் இந்த புத்தகத்தைப் பெற்றேன்.

அதை பெற்றதும் கொஞ்சநேரம் ஆரத்தடவி மகிழ்ந்து கையில் பெருமையுடன்  வைத்திருந்து, வீட்டில் ஆரவாரமில்லாத ஒரு நல்ல பொழுதில் திறந்து படிக்க ஆரம்பித்தேன். எப்போதும் முன்னுரைகளை இறுதியாகவே படிப்பேன். காரணம் சில முன்னுரைகள் எம்மை சுதந்திரமாக எமது நோக்கில் புத்தகம் வாசிப்பதை திசை திருப்பி விடுகின்றன. பல புத்தக வெளியீடுகளில் விமர்சனத்திலேயே விமர்சகர் புத்தகத்தை பக்கம் பக்கமாக வாசித்து ஒப்பிப்பது போல முன்னுரைகளிலும் நடந்து விடுகிறது.

ஒரு வகையில் இதற்காகவே நான் வெளியீடுகளில் புத்தகம் கைக்கு வந்ததும் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி விடுகிறேன். நல்ல வேளையாக கர்ப்பநிலத்துக்கு முன்னுரை எதுவும் இல்லை. என்சொல் என்று ஆசிரியரின் சொல் மட்டும் ஒரு பக்கத்தில் அமைகிறது. வலு சுதந்திரமாக, புத்தகத்துள் இறங்கிவிட்டேன்.

மிகக் கடினமான பயணமாக அது இருந்தது. குடும்பங்களின் பின்னலில் மனம் ஒட்ட மறுத்தது. சம்பவங்களைத் தொகுப்பதில் கதாசிரியரியரின் திறமை வெளிப்படாது  ஒருவித அலுப்பே நிரம்பிக் கிடக்கிறது. சினிமாக்களில் திகைப்பான ஒருநிலையில் ரசிகர்களைக் கொண்டு வந்துவிட்டு ஒரு ‘டூயட’ போடுவார்களே அதுபோல, மனம் சம்பவக்கோர்வைகளில் லயித்துப்போகவில்லை. பாத்திரங்கள் ஒரு வாசகனைக் கட்டிப்போடும் திராணியற்றிருப்பதால் சம்பவங்களை கதை தனது பற்றுக்கோடாக கொண்டு செல்லமுனைகிறது. ( நல்ல வேளையாக குடும்ப வாரிசுநிலை பின்னால் தரப்பட்டுள்ளது. அது இல்லாது போனால் எல்லோரும் அநாதைகளே மிக முக்கியமாக நான் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்).

ஒரு காதல். கதைமுடிவில் அது காதலல்ல காமமே என்பது உறுதியானாலும் ஆரம்பத்தில் அது சித்தரிக்கப்படும்போது மிகக்கடினமான எண்ண ஓட்டங்களைக் கொண்டு விபரிக்கப்படுகின்றது. அந்த இரண்டு மனங்களுக்குமிடையே நடக்கும் போராட்டம் பின்னணியுடன் பத்துப்பன்னிரண்டு பக்கங்களில் வந்தாலும் ரொம்ப அலட்டலாக இருந்தமையால்  எனக்குப் பக்கங்களை கடக்க வெகு சிரமமாக இருந்தது.

கதை என்னவோ சூரியக்கதிர் நடவடிக்கைக்குள்தான் தொடங்குகிறது என்றாலும்  அந்த வைரமாளிகைக்கிழவர் எப்படி மறுஜென்மம் எடுத்தார் என்பது புரியவேயில்லை. நானும் யாழ்ப்பாணத்துக்கதான் அவரைக்காணாமல் திரிஞ்சனோ?! கவியழகனின் வயதுக்கு அந்தக்கிழவரை அவர் கண்டிருக்க வாய்ப்பே இல்லை. உயரமான வைரமாளிகை எனற பட்டியை அணிந்து கொண்டு

“வந்தா ஒருலச்சம் போனா அம்பேயம்”

என்று தேசிய ஆஸ்பத்திரி லொத்தர் டிக்கற் விற்ற அந்தக்கிழவருக்கு அறுபத்து ரெண்டாம் ஆண்டே… வயது அறுபதுக்குமேல இருக்குமே..

நாகமணி, கிளி குடும்பத்தைச்சுற்றி ஒரு பெருங்கதை சில உபகதைகளுடன் திரிகிறது. இதில் முக்கிய நிகழ்வு என்னவென்றால் நாகமணியர் காணுகின்ற கனவு, இருந்தாற்போல  சூரியக்கதிர் போர்க்களத்துள் இறங்கி ஒரு நீச்சலடித்துவிட்டுத்திரும்பி, கொழும்பு அரசியலுக்குள் நுழைந்து விட்டது. அங்கிருந்து அவர் செய்யும் விவகாரமான செயல்களாவன, மனிதர்களின் அந்தரங்கங்களை அருகிலிருந்தே குறிப்பெடுத்ததுதான். அவை கதைக்கு எவ்விதத்திலும் தேவையற்றதாயினும், கவர்ச்சிகருதி புகுத்தியிருப்பாரோ…?

நிலம் விட்டு வெளியேறிய சம்பவங்களும் மிக முக்கியமானது,  நாவற்குழி வீதியில் ஒரு பிரசவம் நிகழ்கிறது. போர்க்காலங்களில் இப்படி எத்தனையோ பிரசவங்கள் நடந்துள்ளனவாயினும். கண்டவரைக்கேட்டு கதாசிரியர் பார்க்கும் பிரசவம்‘நண்பன்’ படத்தில் விஜய் பார்த்த பிரசவத்தை விஞ்சி எங்கோ போய்விட்டது. யாராவது அத்தகைய கொலைமுயற்சியில் இறங்க வேண்டாமென இந்த நூல் விமர்சனத்தின் ஊடாக ஒரு மருத்துவ தாதியாக இருந்தவள் என்ற முறையில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சூரியக்கதிரின் மனிதப்பேரவலத்தை இப்படி கேலிக்கூத்தாக்கி  இருக்க வேண்டாம். அன்றைய நாளில் அந்த மக்கள் கூட்டத்துள் நானும் நடந்தேன் என்பதாலும் மட்டுவிலில் மட்டுமல்லாமல் தென்மராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் திரிகிற வேலையே செய்ததாலும் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். வேதனை சுமந்த மக்களின் வாழ்க்கையை நாகமணியர்  உறவுகளுடன் சுருக்கிவிட்டார்.

‘சைக்’ தொடங்கியது முதல் எதிர் கருத்துக்களையே எழுதுகிறேனே எதாவது நல்ல கருத்து இருக்காதா ? என மறுபடி மறுபடி புத்தகத்தை புரட்டுகிறேன். கடைசியில் வறுமை காரணமாக ‘காமென்ரு’களில் தைத்துப் பிழைக்கும் பெண்களையும்…கேவலமானவர்களாக்கி தன் சொந்த வரலாற்றை முடித்திருக்கிறார். இது கர்ப்ப நிலமல்ல தமிழர்கள் மீது ஏவப்பட்ட சர்ப்பநிலம்.  என்பதை அவரது என்சொல்லிலேயே அவர் குறித்துரைக்கிறார்,

“மனிதர்கள் தாம் ஏற்கிற பாத்திரம்போலதான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச்சிக்கலுக்குள் மாட்டிவிடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள்”

தமிழ்க்கவி இலங்கை 

 

http://www.naduweb.net/?p=8131

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.