Jump to content

நள்ளிரவில் விழித்திருந்த கருணாநிதி… டிமிக்கி விட்ட புலிகள்: ஈழப்போராட்டத்தில் இதுவரை பதிவாகாத சம்பவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவில் விழித்திருந்த கருணாநிதி… டிமிக்கி விட்ட புலிகள்: ஈழப்போராட்டத்தில் இதுவரை பதிவாகாத சம்பவம்!

June 29, 2018
naba_douglas.jpg

ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்தரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர், முன்னாள் எம்.பியாக இருந்த பஷீர் சேகுதாவூத் தனது முகநூலில் பதிவு செய்துள்ள விடயம் இது. 

அதை தமிழ் பக்க வாசகர்களிற்காக இணைத்துள்ளோம்.

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.

1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.உதவியாளர்களால் வரவேற்கப்பட்டு முதலமைச்சரின் வீட்டு ஹோலில் கிடந்த கதிரைகளில் அமர்த்தப்பட்டோம். எங்களுக்கு சந்திப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரம் இரவு 9.30 மணியாகும்.

 

பதினொரு மணிவரை சந்திப்புக்கான அழைப்பு வரவில்லை. நான் முப்பது வயது முட்டிளந்தாரி, கனக்க விடயங்களை சீரியஸாக கணக்கில் எடுப்பதில்லை.என்னைக் கேட்காமலே தூக்கம் கண்களை இழுத்து மூடியது.அமர்ந்திருந்த இரட்டைக் கதிரையிலேயே தூங்கிவிட்டேன்.

“டேய், டேய் எழும்புடா மேல வரட்டாம்” என்றவாறு எனது தோளை உலுக்கி எழுப்பினார் பாலா அண்ணன். உடனே சுதாகரித்துக் கொண்டு எழுந்து – தெளிவடைந்து கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தேன் சரியாக நடு நிசி 12 மணி. மேல் மாடிக்கு ஏறும் பாலாவைப் பின் தொடர்ந்து நடந்தேன்.

மேல் மாடியில் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த சொகுசு ஆசனத்தில் முதல்வர் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அவரின் முன்னால் போடப்பட்டிருந்த குஷன் கதிரைகளில் நாங்கள் இருவரும் உட்கார்ந்தோம்.

அந்தச் சாமத்திலும் மடமடக்கும் புதிய வேஷ்டி,சட்டை, சால்வை உடுத்து கறுப்புக் கண்ணாடி அணிந்து கம்பீரமாக கருணாநிதி வீற்றிருந்தது என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கிற்று.இந்த நேரத்திலும் இப்படியா?

ஈழத்துல எல்லாரும் சுகமா இருக்கிறாங்களா? என்ற கரகரத்த குரலின் கேள்வியோடு தொடங்கிய உரையாடல், அரசியல் உட்பட பலதும் பத்துமாகக் கடந்து ஒரு மணி நேரத்தில் நிறைவடைந்தது. நான் ஒரு வார்த்தையேனும் பேசவில்லை.முதல்வரைச் சந்திக்கும் போதும் விடைபெறும் போதும் புன்னகைப்பதற்காக வாயை விரித்தது மட்டும்தான், வாயைத் திறக்கத்தானுமில்லை.

 

இடையில் ஒரு தடவை கருணாநிதி கறுப்புக் கண்ணாடியைக் களற்றி கண்களையும் கண்ணாடியையும் துடைத்துவிட்டு மீண்டும் அணிந்து கொண்டார். அவ்வேளை அவரின் முகத்தை உற்றுப் பார்த்த போதுதான் தெரிந்தது அவரது ஒரு கண் மற்றையதை விடவும் கொஞ்சம் சிறியது. ஓஹோ இதுதானா இவர் கறுப்புக்கண்ணாடி அணிவதன் மர்மம் என்றும் எண்ணிக் கொண்டேன்.

இந்தச் சந்திப்பின் போது கருணாநிதி கீழ்க்கண்டவாறு எங்களிடம் கூறினார்.

” பத்மநாபாவைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீங்கள் போய் அவரைச் சந்தித்து சென்னையில் இருக்கும் ஈ.பீ.ஆர். எல் எப் காரியாலயத்தை தற்காலிகமாக மூடிவிட்டு, அவரையும் அவரது உறுப்பினர்களையும் வேறு ஒரு மாநிலத்துக்குச் சென்று சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு பின்னர் தமிழ் நாட்டுக்கு வருமாறு நான் அறிவுறுத்துவதாக நாபாவிடம் கூறுங்கள்” என்று மிகவும் இரகசியமாக எம்மிடம் கூறப்பட்டது. வழமையாக சந்திப்புகளின் போது குறிப்பெடுப்பதற்கு முதல்வரின் ஆசனத்துக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் அவரது செயலர் அன்றைய எமது சந்திப்பில் உடனிருக்கவில்லை.

அப்போதுதான் முதல்வருடன் அவசரமான சந்திப்பு ஒன்றுக்காக கொழும்பில் இருந்து ஏன் நாங்கள் அழைக்கப்பட்டோம் என்பதைப் புரிந்து கொண்டோம்.

 

சந்திப்பு முடிந்தவுடன் பாலா, பத்மநாபாவுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக உங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்.உடனே வாங்கோ அண்ணே என்று அழைத்தார் நாபா. அவரும் சில தோழர்களும் சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டல் ‘சோலார்’ அல்லது ‘பிறசிடென்ட்’ ஆக இருக்கவேண்டும்,சரியாக நினைவில்லை.

அப்போது காலம் 17 ஆம் திகதி அதிகாலை 2.30 மணியாகியிருந்தது. உடனடியாகச் சென்று பாலாவும்,நானும் ஹோட்டலில் நாபாவையும், அவரது தோழர்களையும் சந்தித்து கருணாநிதியின் அறிவுறுத்தலைத் தெரிவித்தோம். நட்புடன் சிறிது நேரம் உரையாடினோம்.

கருணாநிதியின் அறிவுறுத்தலை நாபா கணக்கில் எடுத்தாரா? சிறிது காலம் தமிழ்நாட்டை விட்டு வெளியில் தங்கியிருக்கும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தாரா? அல்லது கொலை செய்தவர்களுக்கு, நாபாவும் தோழர்களும் இடம் மாறியிருக்க முயற்சிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து முந்திக் கொண்டார்களா? என்பது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.

18 ஆம் திகதி பாலாவும் நானும் கொழும்பு திரும்பிவிட்டோம். 19 ஆம் திகதி நாபாவும் தோழர்கள் சிலரும் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது

 

http://www.pagetamil.com/9856/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.