Jump to content

அரை நிமிடக் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்கத் தெரிந்தவள்

85_ABB528-_DC35-4_DDE-8483-134581_FDBA7_

நீண்ட நாட்களுக்குப்பின்  சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில்  தளர்வு தெரிந்தது.

சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார்கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால்  அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.

“ எப்பிடி இருக்கிறீங்கள்?”

“என்னத்தைச் சொல்ல....”  சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது.

ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.

“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்

“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்

“அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். எதுக்கும் முதலிலை பண்டேச் போட்டுப் பார்ப்பம். சரிவரேல்லையெண்டால் ஒப்பரேசன் செய்யத்தான் வேணும்

“அதென்ன கையிலை பூங்கொத்து?”

“அது பெரிய கதை. போன வருசம் முழங்காலிலை நோ வந்திட்டுது. ஒத்தோப்பேடிக்கு ரெலிபோன் அடிச்சால் இப்ப அப்பொயின்ற்மென்ட் தரேலாது, ஒன்றரை மாசம் பொறுங்கோ எண்டு சொல்லிச்சினம். நோவோடை எப்பிடி இருக்கிறது? தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை  காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா? என்ன பிரச்சினை? உடனை வாங்கோ எண்டியினம்

கொடுத்து வேலை வாங்கும் விசயத்தை நாங்கள் யேர்மனியனுக்கும் பழக்கிப்போட்டம்

 

கவி அருணாசலம்

29.06.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஊர்ல சில அலுவலகங்களில் கெதியாய் வேலை முடிக்க இரண்டு சிகரெட் குடுக்க வேண்டும். இந்த நாடுகளில் ஒரு பூங்கொத்து அந்த வேலையை செய்து விடுகிறது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

கேட்டுவைப்பது எதுக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே

0_EBFD4_D1-3_DFC-4_AA7-_AA69-_FAE536_A2_

 

ஹம்தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வந்த கோகிலாவின் முகத்தில் மகிழ்ச்சியைக்  காணவில்லை

“நாளைக்கு ‘ஹம்முக்குப் போறம். இனி செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருவன். மூன்று நாளைக்கு இந்த வேலை அலுப்பில்லைஎன்று சந்தோசமாக வெள்ளிக்கிழமை சொல்லிவிட்டுப் போனவளுக்கு  என்ன நடந்திருக்கும்வீட்டில் பிரச்சினையாநீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா? ஏதாவது சுகயீனமா? என்று கவிதா தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாள்

அன்று வேலை இடத்தில்  அதிக வேலை இருந்ததால் கோகிலாவிடம் நெருங்கிப் போய் கேட்க கவிதாவால் முடியவில்லை. மதிய இடைவேளைக்கு சாப்பிட வருவாள்தானே அப்பொழுது கோகிலாவிடம் கேட்கலாம் என்று தனது ஆர்வத்தை அவள் அடக்கிக் கொண்டாள்.

மதிய இடைவேளையில்  அன்றும் கன்ரீன் நிறைந்திருந்தது. கோகிலா எங்கே இருக்கிறாள் என்று தேடிய கவிதாவுக்கு, கோகிலா தனியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது வசதியாகப் போனது. யாராவது அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் ஓடோடிப் போய் கோகிலாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“என்னடி கோயிலுக்குப் போட்டு வந்தால்  மனசு சுகமாயிடும் எண்டு சொல்லுவினம். உனக்கு என்ன நடந்தது?”

“ஏதோ கடவுள் குற்றம் போலை

“ஏன்? அப்பிடி என்ன?”

“நான் கேட்டு ஒருநாளும் மனுசன் மாட்டனெண்டு சொல்ல மாட்டார். அப்பிடித்தான் அந்த நெக்லஷையும் நான் கேட்ட உடனையே வாங்கித் தந்திட்டார். நகைகளை எல்லாம் பாங்கிலைதான் வைக்கிறனான். அண்டைக் கெண்டு என்ன கஸ்ரகாலமோ, ஹம்முக்குப் போகேக்கை அந்த நெக்லஸை பாங்கிலை இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு போனன். கழுத்திலை இருக்கிற மற்ற  நகைகளை விட்டிட்டு  அந்த நெக்லஸை மட்டும் குறி வைச்சு அடிச்சிட்டாங்கள்

“ஹம்மிலை நடந்ததோ?”

“கன பேரின்ரை நகைகள், பேர்ஸுகள் எல்லாம் அடிச்சிட்டாங்கள் எண்டு கதைச்சினம்

“நகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசேஉன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.

“தேருக்குப் போனால்  சாமியைக் கும்பிடுறதுதானே எதுக்கு தேர்மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு போனனீ எண்டு மனுசன் திட்டிப் போட்டு வேலைக்குப் போட்டார். சனி மாற்றம் எனக்கு நல்லா வேலை செய்து

“வேலையிடத்திலை லீவு கிடைக்கேல்லை. தேருக்கு வரேலாது மன்னிச்சுக் கொள் எண்டு அம்மன் இருக்கிற பக்கமா பாத்து கும்பிட்டு சாமியிட்டை மன்னிப்பு கேட்டதாலை தப்பிட்டன். இல்லையெண்டால் என்ரை நகையையுமெல்லே அடிச்சிருப்பாங்கள்கவிதா மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்

கவி அருணாசலம்

05.07.2018

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரஸ்வதி ரீச்சரை..வாசிச்சுக்....கருத்தெழுதவேனும் எண்டு நினைச்சு....ஒரு கிழமை போட்டுது!

அதுக்கிடையில...கோகிலாவும் வந்திட்டா!

இரண்டுமே அருமையான கதைகள் தான்!

எனது நேரடியான அனுபவம் ஒண்டையும் எழுதினால் ....நல்லம் போல கிடக்குது!

அது யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு!

மரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்!

சுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன!

சிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்!

பெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்!

அவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்!

இருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது!

அப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது!

இரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்!

எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்!

அட செத்த வீட்டில்...கூட நகை போட்டுத் தான்...வரவேண்டும் என்ற உண்மை....அப்போது தான் எனக்கு உரைத்தது!

கதைகளுக்கு நன்றி....கவியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

நகைத் திருட்டு இல்லை எண்டால் து திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. ங்களிட்டை இல்லாத காசேஉன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் ருவார்.

திருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும்  ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

திருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும்  ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.

ஒரு குழு......பொம்பிளை பாக்கவெண்டே வரும்!

அந்தக் குழுவைத் தேடித் தேடிய......இன்ஸ்பெக்ரர் ராசையா....தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கதைகளுமே... வெளி நாட்டில் நடக்கும், நிகழ்வுகளை ஒட்டி எழுதப் பட்டிருந்தமையால்,
என்னை மிகவும் கவர்ந்து இருந்தது. ✔️

சரஸ்வதி ரீச்சர்,   காலையில் இருந்து இரவு வரை. பூ  வியாபாரம் செய்கின்றவர்.
அவரை  ஏன்...  ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான  காரணத்தை அறிய விரும்புகின்றேன்.

ஹம்  அம்மன் கோவிலில்.... ஒவ்வொரு வருடமும் நகைத் திருட்டு  நடப்பதாக செய்திகள் தவறாமல் வந்தாலும்,
நம்மவர்கள்   மீண்டும், மீண்டும்  நகைகளை போட்டு... திருடர்களை வாழ வைக்கின்றார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

கேட்டுவைப்பது எதுக்கும் நல்லது.

 Bildergebnis für milka  schokolade geschenkbox    Bildergebnis für milka  schokolade geschenkbox

சொக்கலேற் கொடுங்கள்...  ஈழப்பிரியன். :grin:

Ãhnliches Foto

நான்  வேலை செய்யிற  இடத்தில், மாம்பழம் கொடுத்தே... 
எனது  சம்பளத்தை உயர்த்தி... உச்சிக்கு ? கொண்டு போய் விட்டனான்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2018 at 5:34 PM, ஈழப்பிரியன் said:

 

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

 

அதிகமாக டொக்டர்களின் வரவேற்பறையில் இருப்பது பெண்கள்தான். அவர்கள்தான் டொக்டர்களை சந்திப்பதற்கான நேரத்தை ஏற்பாடு செய்கிறார்கள். ஆகவே பூங்கொத்தோடு ஆண்கள் போனால் பலன் ஒன்றுக்கு இரண்டாக இருக்க வாய்ப்புகள் அதிகம்  ஈழப்பிரியன்.?

 

On 7/6/2018 at 1:10 AM, புங்கையூரன் said:

யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு!

மரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்!

சுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன!

சிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்!

பெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்!

அவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்!

இருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது!

அப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது!

இரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்!

 எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்!

 

நன்றாக எழுதியிருக்கிறார்கள். இதுகூட அரை நிமிடக் கதைதான். இதுபோன்ற உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்  புங்கையூரான்.??

 
On 7/6/2018 at 5:11 AM, தமிழ் சிறி said:

வரை  ஏன்...  ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான  காரணத்தை அறிய விரும்புகின்றேன்.

இதுக்கு ஒரு  ஆராய்ச்சி தேவையா தமிழ்சிறி? ஒன்றில் நாட்டில் அவர்  ஆசிரியையாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் இங்குதானே தமிழாலயம் பள்ளிக் கூடங்கள் நிறைய இருக்கின்றன அதில் படிப்பிப்பவராக (அல்லது படிப்பித்தவராக) இருக்கலாம்

உங்கள் நகரத்தில் பூக்கடை வைத்திருக்கும் தமிழ் ரீச்சர் யாராவது இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் எல்லாம் அந்த மாதிரி இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

F96_BC607-4_B88-4_B6_F-_AA4_A-_CE34_BF99

நேரம் நல்ல நேரம்

குமாரசாமி அண்ணன் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துப் போனதன் பிறகு நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

 “பென்சன் எடுத்தாப் போலை  எப்பிடி நேரம் போகுதண்ணை?”

 “வேலை செய்யிற ஆக்கள், பென்சன் எடுத்த ஆக்களைப் பிடிச்சுக் கேக்கிற வழக்கமான கேள்விதான்டா இது

 “இல்லை அண்ணை, வேலை வேலை எண்டு  ஓடிக் கொண்டிருந்தீங்கள். பென்சன் எடுத்தாப் போலை நேரம் போறது கஸ்ரமா  இருக்குமெல்லே

 “உனக்கு விளக்கம் பத்தாது. சொல்லுறன் கேள். போன கிழமை மனுசியோடை shopping center க்குப் போனன். ஐஞ்சு நிமிசம்தான். திரும்பி வாறன் கார் பிழையான இடத்திலை பார்க் பண்ணியிருக்கு எண்டு பொலீஸ்காரன் பைன் எழுதிக் கொண்டிருக்கிறான்.  “உங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு. மனுசன் ஆத்திரமந்தரத்துக்கு ஒரு ஐஞ்சு நிமிசம் கூட கார் பார்க் பண்ணக் கூடாது. உடனை எழுதிப் போடுங்கோ. பென்சன் எடுத்த ஆக்களைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பாக்கோணும். இரண்டு யூரோவுக்கு சாமான் வேண்டிட்டு வந்து அவையளாலை இருபது யூரோ பைன் கட்ட முடியுமே?”  

 நான் அப்பிடிச் சொல்ல, என்னை மேலையும் கீழையும் பாத்திட்டு ஒரு அசுமாத்தமும் காட்டாமல் பொலீஸ்காரன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். எனக்கு வந்த கோவத்துக்குகொழுத்த பண்டிஎண்டு திட்டிப் போட்டன். அவன் அதுக்கும் ஒரு கதையுமே கதைக்காமல்கார் ரயர் நல்லா தேய்ஞ்சு போய் இருக்கு இதுக்கு இன்னுமொரு பைன் போடவேணும்எண்டு திரும்ப ஒரு பைன் எழுதத் தொடங்கினான்.

 அவன் இரண்டாவது பைன் எழுதி முடிக்கக்கைஇவங்களுக்கு கொம்பு முளைச்சிட்டுதுஎண்டு என்ரை மனுசி சைகையாலை காட்டினாள். கோதாரி விழுவான் அதைக் கண்டிட்டான். திரும்ப எழுதத் தொடங்கினான். ”இப்ப என்ன எழுதுறாய்எண்டு கேட்டன். “கன நேரம் பார்க் செய்ததுக்கு இரண்டாவது பைன்என்றான். சரி எவ்வளவுதான் எழுதுறான் பாப்பம் எண்டு நான் பேசாமல் நிண்டன். அவன் எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டு வைப்பரைத் தூக்கி அதுக்குள்ளை எழுதின துண்டுகளைச் செருகினான். அவன் எவ்வளவு எழுதியிருப்பான்  எடுத்துப் பாக்கலாம் எண்டு யோசிக்கக்கை, நான் போக வேண்டிய பஸ் வந்து நிக்குது. அதை விட்டால் இன்னும்  ஒரு அரை மணித்தியாலம் அடுத்த பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்க வேணும். பேசாமல் மனுசியை இழுத்துக்கொண்டு  வந்து பஸ்ஸிலை ஏறிட்டன். அவனோடை சண்டை போட்டதிலை எனக்கு இருபத்தஞ்சு நிமிசம் போட்டுது.  

எனக்குக் கதை சொன்னதில் குமாரசாமி அண்ணனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கும்.

கவி அருணாசலம் 

12.07.2018

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவோ சண்டையும் வேறு யாரோடையோ காருக்காகவா?

தேவையில்லாமல் சண்டை பிடித்து கார்காரனுக்கு மூன்று ரிக்கற்.வாழ்க குமாரசாமி குடும்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... அருமையான சிரிப்புக் கதை. :grin:
கதையின் முடிவில்  வைத்த திருப்பம்... யாரும் எதிர் பாராதது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நாயகன் ....உண்மையில் குமாரசாமி அண்ணையாய் இருந்திருந்தால்...அந்தத் துண்டை நிச்சயம் எடுத்துக்கொண்டு போய்....பஸ்ஸுக்குள் வைச்சாவது வாசிச்சிருப்பார்!

இல்லாவிட்டால் அவருக்கு நிச்சயம் இரவுக்கு....நித்திரை வந்திருக்க மாட்டாது!

கார்க்காரனும்...வீட்டுக்குத் துண்டு தபாலில் வரும்வரையாவது...விசில் அடிச்சுக் கொண்டு காரோட்டி இருக்கலாம்!

கதை அருமை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி வைத்து எழுதும் அரை நிமிடக் கதைகள் அனைத்தும் சுவை......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்து கதை சொல்லுஎன்று ஏகாம்பரம் மாஸ்ரர் எங்களுக்கு பாடசாலையில் வகுப்பெடுத்திருக்கிறார்.

அந்த நினைவில் இங்கே நான் ஒரு படம் பார்த்து கதை சொல்கிறேன்.

இது ஒரு பழைய கதை தான். செவி வழி கேட்ட கதை. இங்கே கொஞ்சம் வைச்சு கிச்சு அந்தக் கதையை எழுதியிருக்கிறேன். இதில் அதி முக்கியமாக புதுமணலூர் என்ற இடத்தை நானே உருவாக்கி இருக்கிறேன்

95_CE2_B8_E-_CD5_B-4_F72-8_B6_A-68644487

புகையிலை பயிர்ச் செய்கையில் கணபதிக்கு அந்த வருசம் நல்ல விளைச்சல். இவ்வளவு புகையிலையையும் காலிக்கு கொண்டு போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அவரது நண்பர்கள் இவருக்கு ஆசையை கிளப்பி விட புகையிலை எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு கணபதி கொழும்புக்குப் பயணமானார்.

கொழும்பில் வந்து இறங்கிய பின்னர்தான், காலிக்கு இன்னும் ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று கணபதி அறிந்து கொண்டார்.

தனியாக நின்று அல்லாடிக் கொண்டிருந்த கணபதியின் நிலை அறிந்து அவருக்கு உதவுவதற்காக சோதி என்பவர் வந்து சேர்ந்தார்.

“கொழும்புக்கு புதுசு போலை. எங்கை போகோணும்?” சோதியின் அன்பான விசாரிப்பில் கணபதி மயங்கிப் போனார்

புகையிலையை காலிக்கு கொண்டு போய் விற்று பணம் பார்க்க இருக்கும் தன்னுடைய விருப்பத்தை சோதியிடம்  சொன்னார்.

“அப்பிடியா? நான் ஒரு புகையிலை புறோக்கர்தான்

“அப்ப நல்லதா போச்சுது

“என்ரை ஊர் புதுமணலூர். சின்னனிலை இருந்தே இங்கைதான் இருக்கிறேன். எனக்கு காலியிலையும் வியாபாரிகளை எல்லாம் நல்லாத் தெரியும். வேணுமெண்டால் சொல்லுங்கோ. நான் உங்களை அங்கை கூட்டிக் கொண்டு போறன். நல்ல விலைக்கும்  புகையிலையை வித்துத்தாறன்

“நல்லதாப்போச்சு. அந்த கதிர்காமக் கந்தன் தான் உங்களை என்னட்டை அனுப்பி வைச்சிருக்கிறான்

“ மனுசனுக்கு மனுசன் உதவி செய்யாட்டில் அது என்ன பிறப்பு. நீங்கள் கதிர்காமக் கந்தனை கும்பிடுற ஆள் போலக் கிடக்கு. அவரைப் போய்ப் பாக்க ஆசை இருக்கே ?”

“ஆசை இருக்குக்குத்தான். முதலிலை புகையிலையை விப்பம். பிறகு போய்க் கதிர்காமத்தானை பார்ப்பம்” 

“புகையிலை வித்திட்டு காசோடை கோயில், குளமெண்டு  அலையிறதும் நல்லாயிருக்காது”.                                     

“நீங்கள் சொல்லுறது சரி. புகையிலையை என்ன செய்யிறது?” 

“அது ஒரு பிரச்சினையுமில்லை. எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு. அங்கை கொண்டு போய் வைக்கலாம். நானும் உங்களோடை கதிர்காமம் வாறன்பிறகு காலியிலை புகையிலையையும் வித்துத்தாறன். நீங்கள் பாத்து ஏதாவது எனக்கு செய்யுங்கோ” 

சோதியின் பேச்சும், பழகும் தன்மையும் கணபதிக்கு பிடித்துப் போயிற்று. சோதி சொன்ன இடத்தில் புகையிலைப் பொதிகளை வைத்து விட்டு இருவரும் கதிர்காமம் பயணமானார்கள்.

“கதிர்காமம் வந்திட்டு மாணிக்க கங்கையிலை குளிக்காமல் போனால் நல்லா இருக்காது. நான் அடிக்கடி வந்து போறதாலை மாணிக்க கங்கையிலை இந்த முறை இல்லாட்டிலும் அடுத்தமுறை குளிச்சிக் கொள்ளுவன். நீங்கள் எப்போதாவதுதானே கங்கையிலை குளிக்க முடியும். போய்க் குளியுங்கோ. நான் கரையிலை இருந்து உங்கடை உடைமைகளை பாக்கிறன்

தனது ஆடைகளைக் களைந்து கணபதி மாணிக்க கங்கையில் இறங்கி மூழ்கி எழுந்தால் கரையில் சோதியை காணவில்லை கழட்டி வைத்த உடுப்புகள், கடிகாரம், பணம் எதுவும்  வைத்த இடத்தில் இல்லை. கணபதி சுற்று முற்றும் பார்த்து சோதி என்று உரத்த குரலில் பலமுறை அழைத்தும்  பலனில்லை .

மாணிக்க கங்கையில்  நின்றபடியே அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் முருகன் கோமணத்துடன்  இருக்கும் சிலைதான் கணபதிக்கு தெரிந்தது. கணபதி  சற்று குனிந்து தன்னிலையைப் பார்த்தார். அவரும் முருகனைப் போலவே கோமணத்துடன் நின்றது புரிந்தது

கணபதியின் வாய் அவரை அறியாமலே முருகனைப் பார்த்து கேட்டது," முருகா, நீயுமா புதுமணலூர்காரனை நம்பி புகையிலை விக்க வந்தனீ?

கவி அருணாசலம்

25.07.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு......புங்குடுதீவைப் புது மணலூர் எண்டு மாத்தினது இன்னும் நல்லாயிருக்குது!

கணபதி....சோதிக்குப் போயிலையை வித்ததும் உண்மை!

சோதியிடம் காசைக் கறக்க முடியாமல்.....சோதியைத் தேடி ஊர் ஊராக அலைந்ததும் உண்மை!

கடைசியா....நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவலின் படிக்கு.....சோதி கதிர்காமம் பயணித்ததும்  உண்மை!

கணபதி....சோதியைத் தேடிக் கதிர்காமம் போனதும் உண்மை!

மாணிக்க கங்கையில்.....கொஞ்சம் தண்ணீர் ஓடியதும் உண்மை!

மாணிக்க கங்கையில்....கணபதி...இறங்கிக் குளித்ததும் உண்மை!

ஆனால் வேட்டியக் களவெடுத்தது மட்டும் சோதி இல்லை!

முருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை!

 

பாடம்:     போயிலையை  நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை! அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உண்மைக்கதையை மெருகேற்றி விளாசிவிட்டிருக்கிறார் நம்ம அருணாச்சலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

விசுகர்... கடித்துக் குதறி விட்டுடுவார் என்று, கவியருக்கு... பயம் வரத்தானே... செய்யும்  ஈழப்பிரியன். :grin:
கதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது  கவி அருணாசலம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

முருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை!

  

பாடம்:     போயிலையை  நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை! அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே!

புங்கையூரான், உங்களுக்கு பெரிய மனது. நன்றி!

 
17 hours ago, ஈழப்பிரியன் said:

 

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

 

பயம் என்று இல்லை. ஆனாலும் அடி தாங்கும் உடம்பு எனக்கில்லைத்தான்

17 hours ago, தமிழ் சிறி said:

கதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது  கவி அருணாசலம். ?

படத்தை சுட்டது  “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான்ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப்  புகையிலைக் கதைதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kavi arunasalam said:

படத்தை சுட்டது  “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான்ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப்  புகையிலைக் கதைதான்.

 

அவர், குனிந்து பார்த்ததை  எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.
அதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட  உங்கள்  திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.

என்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 1:00 AM, தமிழ் சிறி said:

ன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ?  :grin:

என்னையும் விசுகரையும் எதுக்கு கோத்துவிட இப்பிடி துடிச்சுக் கொண்டு நிக்கிறீங்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 1:00 AM, தமிழ் சிறி said:

 

அவர், குனிந்து பார்த்ததை  எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.
அதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட  உங்கள்  திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.

என்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ? :grin:

 

On 7/27/2018 at 3:56 AM, ஈழப்பிரியன் said:

என்ன கவி அருணா புங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

 தாயகமென்றாலும்

ஊர்  என்றாலும் 

கண்டபடி எழுதினால்  நாம் வருவோம் 

 

அவரே  பெயரை  மாற்றி  எழுதியிருக்கிறார்

அத்துடன்

மேலே புங்கையண்ணா  தெளிவாக  எழுதியபின்..

நான்  ம(றை)டக்க  விரும்பவில்லை:grin:

 

ஆனாலும் கதைப்படி அவருக்கும் முருகனுக்கும் கச்சை  இருந்தது

எழுதியவருக்கு அதுவும் புடுங்கப்படும் என்ற  பயம் இருந்திருப்பது வரவேற்கத்தக்கது:D:

புங்கையண்ணா இது சார்ந்து அடக்கி  வாசித்திருப்பது அவரின் பெயரை காப்பாத்தாது:grin:

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.