Jump to content

அரை நிமிடக் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்கத் தெரிந்தவள்

85_ABB528-_DC35-4_DDE-8483-134581_FDBA7_

நீண்ட நாட்களுக்குப்பின்  சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில்  தளர்வு தெரிந்தது.

சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார்கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால்  அவரை வெளி இடங்களில் காண்பது அரிது.

“ எப்பிடி இருக்கிறீங்கள்?”

“என்னத்தைச் சொல்ல....”  சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது.

ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார்.

“கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்

“carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்

“அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். எதுக்கும் முதலிலை பண்டேச் போட்டுப் பார்ப்பம். சரிவரேல்லையெண்டால் ஒப்பரேசன் செய்யத்தான் வேணும்

“அதென்ன கையிலை பூங்கொத்து?”

“அது பெரிய கதை. போன வருசம் முழங்காலிலை நோ வந்திட்டுது. ஒத்தோப்பேடிக்கு ரெலிபோன் அடிச்சால் இப்ப அப்பொயின்ற்மென்ட் தரேலாது, ஒன்றரை மாசம் பொறுங்கோ எண்டு சொல்லிச்சினம். நோவோடை எப்பிடி இருக்கிறது? தாங்கேலாமல் நேரே ஒத்தோப்பேடியிட்டைப் போயிட்டன். அப்பொயின்ற்மெண்ட் உள்ளாக்களுக்குத்தான் முன்னுரிமை எண்டு சொல்லி இரண்டு மணித்தியாலமா என்னை  காக்க வைச்சிட்டினம். யோசிச்சுப் பாத்திட்டு அடுத்தமுறை போகக்கை கடையிலை இருக்கிற பூக்களிலை கொஞ்சத்தை எடுத்து, கொத்தாக் கட்டிக் கொண்டு போய்க் குடுத்திட்டு முழங்காலிலை நோ எண்டு சொன்னன். ராஜமரியாதை. இப்ப ரெலிபோன் அடிச்சுக் கேட்டால் யார் சரஸ்வதியா? என்ன பிரச்சினை? உடனை வாங்கோ எண்டியினம்

கொடுத்து வேலை வாங்கும் விசயத்தை நாங்கள் யேர்மனியனுக்கும் பழக்கிப்போட்டம்

 

கவி அருணாசலம்

29.06.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஊர்ல சில அலுவலகங்களில் கெதியாய் வேலை முடிக்க இரண்டு சிகரெட் குடுக்க வேண்டும். இந்த நாடுகளில் ஒரு பூங்கொத்து அந்த வேலையை செய்து விடுகிறது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

கேட்டுவைப்பது எதுக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேரு பார்க்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே

0_EBFD4_D1-3_DFC-4_AA7-_AA69-_FAE536_A2_

 

ஹம்தேர்த் திருவிழாவுக்குப் போய்விட்டு வந்த கோகிலாவின் முகத்தில் மகிழ்ச்சியைக்  காணவில்லை

“நாளைக்கு ‘ஹம்முக்குப் போறம். இனி செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருவன். மூன்று நாளைக்கு இந்த வேலை அலுப்பில்லைஎன்று சந்தோசமாக வெள்ளிக்கிழமை சொல்லிவிட்டுப் போனவளுக்கு  என்ன நடந்திருக்கும்வீட்டில் பிரச்சினையாநீண்ட தூரம் காரில் பயணித்ததால் வந்த களைப்பா? ஏதாவது சுகயீனமா? என்று கவிதா தனக்குள் பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாள்

அன்று வேலை இடத்தில்  அதிக வேலை இருந்ததால் கோகிலாவிடம் நெருங்கிப் போய் கேட்க கவிதாவால் முடியவில்லை. மதிய இடைவேளைக்கு சாப்பிட வருவாள்தானே அப்பொழுது கோகிலாவிடம் கேட்கலாம் என்று தனது ஆர்வத்தை அவள் அடக்கிக் கொண்டாள்.

மதிய இடைவேளையில்  அன்றும் கன்ரீன் நிறைந்திருந்தது. கோகிலா எங்கே இருக்கிறாள் என்று தேடிய கவிதாவுக்கு, கோகிலா தனியாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது வசதியாகப் போனது. யாராவது அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடன் ஓடோடிப் போய் கோகிலாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“என்னடி கோயிலுக்குப் போட்டு வந்தால்  மனசு சுகமாயிடும் எண்டு சொல்லுவினம். உனக்கு என்ன நடந்தது?”

“ஏதோ கடவுள் குற்றம் போலை

“ஏன்? அப்பிடி என்ன?”

“நான் கேட்டு ஒருநாளும் மனுசன் மாட்டனெண்டு சொல்ல மாட்டார். அப்பிடித்தான் அந்த நெக்லஷையும் நான் கேட்ட உடனையே வாங்கித் தந்திட்டார். நகைகளை எல்லாம் பாங்கிலைதான் வைக்கிறனான். அண்டைக் கெண்டு என்ன கஸ்ரகாலமோ, ஹம்முக்குப் போகேக்கை அந்த நெக்லஸை பாங்கிலை இருந்து எடுத்துப் போட்டுக் கொண்டு போனன். கழுத்திலை இருக்கிற மற்ற  நகைகளை விட்டிட்டு  அந்த நெக்லஸை மட்டும் குறி வைச்சு அடிச்சிட்டாங்கள்

“ஹம்மிலை நடந்ததோ?”

“கன பேரின்ரை நகைகள், பேர்ஸுகள் எல்லாம் அடிச்சிட்டாங்கள் எண்டு கதைச்சினம்

“நகைத் திருட்டு இல்லை எண்டால் அது திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. உங்களிட்டை இல்லாத காசேஉன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் தருவார்.

“தேருக்குப் போனால்  சாமியைக் கும்பிடுறதுதானே எதுக்கு தேர்மாதிரி அள்ளிப் போட்டுக் கொண்டு போனனீ எண்டு மனுசன் திட்டிப் போட்டு வேலைக்குப் போட்டார். சனி மாற்றம் எனக்கு நல்லா வேலை செய்து

“வேலையிடத்திலை லீவு கிடைக்கேல்லை. தேருக்கு வரேலாது மன்னிச்சுக் கொள் எண்டு அம்மன் இருக்கிற பக்கமா பாத்து கும்பிட்டு சாமியிட்டை மன்னிப்பு கேட்டதாலை தப்பிட்டன். இல்லையெண்டால் என்ரை நகையையுமெல்லே அடிச்சிருப்பாங்கள்கவிதா மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்

கவி அருணாசலம்

05.07.2018

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரஸ்வதி ரீச்சரை..வாசிச்சுக்....கருத்தெழுதவேனும் எண்டு நினைச்சு....ஒரு கிழமை போட்டுது!

அதுக்கிடையில...கோகிலாவும் வந்திட்டா!

இரண்டுமே அருமையான கதைகள் தான்!

எனது நேரடியான அனுபவம் ஒண்டையும் எழுதினால் ....நல்லம் போல கிடக்குது!

அது யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு!

மரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்!

சுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன!

சிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்!

பெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்!

அவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்!

இருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது!

அப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது!

இரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்!

எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்!

அட செத்த வீட்டில்...கூட நகை போட்டுத் தான்...வரவேண்டும் என்ற உண்மை....அப்போது தான் எனக்கு உரைத்தது!

கதைகளுக்கு நன்றி....கவியர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

நகைத் திருட்டு இல்லை எண்டால் து திருவிழாவா இருக்காது. ஊரிலை இருக்கிறதைப் போலவே எல்லாமும் இஞ்சையும் இருக்க வேணுமெல்லே. ங்களிட்டை இல்லாத காசேஉன்ரை மனுசனைக் கேட்டால் இன்னொரு நெக்லஸ் உடனையே வாங்கித் ருவார்.

திருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும்  ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

திருவிழா என்றால் ஒரு குழு கும்பிட வரும் ,ஒரு குழு இருக்கிற சேலையை போட்டுக் காட்ட வரும் ,ஒரு குழு ஆட்களைப் பார்க்க வரும்  ,இன்னொரு குழு திருடவென்றே வரும்.இந்த எல்லா குழுக்களையும் சந்தித்தேயாக வேண்டும்.

ஒரு குழு......பொம்பிளை பாக்கவெண்டே வரும்!

அந்தக் குழுவைத் தேடித் தேடிய......இன்ஸ்பெக்ரர் ராசையா....தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்தார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கதைகளுமே... வெளி நாட்டில் நடக்கும், நிகழ்வுகளை ஒட்டி எழுதப் பட்டிருந்தமையால்,
என்னை மிகவும் கவர்ந்து இருந்தது. ✔️

சரஸ்வதி ரீச்சர்,   காலையில் இருந்து இரவு வரை. பூ  வியாபாரம் செய்கின்றவர்.
அவரை  ஏன்...  ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான  காரணத்தை அறிய விரும்புகின்றேன்.

ஹம்  அம்மன் கோவிலில்.... ஒவ்வொரு வருடமும் நகைத் திருட்டு  நடப்பதாக செய்திகள் தவறாமல் வந்தாலும்,
நம்மவர்கள்   மீண்டும், மீண்டும்  நகைகளை போட்டு... திருடர்களை வாழ வைக்கின்றார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

கேட்டுவைப்பது எதுக்கும் நல்லது.

 Bildergebnis für milka  schokolade geschenkbox    Bildergebnis für milka  schokolade geschenkbox

சொக்கலேற் கொடுங்கள்...  ஈழப்பிரியன். :grin:

Ãhnliches Foto

நான்  வேலை செய்யிற  இடத்தில், மாம்பழம் கொடுத்தே... 
எனது  சம்பளத்தை உயர்த்தி... உச்சிக்கு ? கொண்டு போய் விட்டனான்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2018 at 5:34 PM, ஈழப்பிரியன் said:

 

சரி இதையே ஒரு ஆண் நோயாளி என்றால் என்ன செய்யலாம்?

 

அதிகமாக டொக்டர்களின் வரவேற்பறையில் இருப்பது பெண்கள்தான். அவர்கள்தான் டொக்டர்களை சந்திப்பதற்கான நேரத்தை ஏற்பாடு செய்கிறார்கள். ஆகவே பூங்கொத்தோடு ஆண்கள் போனால் பலன் ஒன்றுக்கு இரண்டாக இருக்க வாய்ப்புகள் அதிகம்  ஈழப்பிரியன்.?

 

On 7/6/2018 at 1:10 AM, புங்கையூரன் said:

யாழ்ப்பாணத்தில்...ஒரு மரண வீடு!

மரண வீட்டின் நாயகன் ஒரு மர வாங்கிலில்...நீட்டி நிமிர்ந்து...மல்லாக்காக...வீட்டின் விறாந்தையில் படுத்திருந்தார்!

சுவாமிப் படங்கள் எல்லாம்....சுவரைப் பார்த்தபடி...திருப்பப் பட்டிருந்தன!

சிறுவர்கள்...பெரியவர்கள்....தென்னங்குருத்துக்களில்.....தோரணங்கள் செய்யும் திறமையைப் பறை சாற்ற முயன்று கொண்டிருந்தார்கள்!

பெரியவர் ஒருவர்....மங்கல காரியங்களுக்கும், அமங்கல காரியங்களுக்கும் எவ்வாறு....தென்னங்குருத்தை மடிப்பது என விளங்கப் படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அண்மையில் தான் திருமணமாகிப் போன....மரணித்துக் கிடக்கும்....கதாநாயகனின்...நெருங்கிய உறவுப் பெண் வன்னியிலிருந்து வந்திருந்தார்!

அவரது கழுத்தை நன்றாகச் சேலைத் தலைப்பால்.....இழுத்து மூடிய படியே இருந்தார்!

இருந்தாலும்...கட்டிப் பிடித்து அழும்போது அவரது சேலைத் தலைப்பு...கொஞ்சம் எதிர்பாராத விதமாக் விலகியது!

அப்போது அவரது கழுத்தின் வெறுமை.....எல்லோருக்கும் தெரிந்தது!

இரண்டு பெண்கள்....தங்கள் கழுத்துக்களை...ஒரு பக்கமாக இடித்துக் கொண்டார்கள்!

 எல்லாத்தையும்....வித்துச்...சுட்டுப் போட்டான்...போல.....என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்!

 

நன்றாக எழுதியிருக்கிறார்கள். இதுகூட அரை நிமிடக் கதைதான். இதுபோன்ற உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறேன்  புங்கையூரான்.??

 
On 7/6/2018 at 5:11 AM, தமிழ் சிறி said:

வரை  ஏன்...  ரீச்சர் என்று கவி அருணாசலம் அழைத்ததற்கான  காரணத்தை அறிய விரும்புகின்றேன்.

இதுக்கு ஒரு  ஆராய்ச்சி தேவையா தமிழ்சிறி? ஒன்றில் நாட்டில் அவர்  ஆசிரியையாக இருந்திருக்கலாம். இல்லாவிட்டால் இங்குதானே தமிழாலயம் பள்ளிக் கூடங்கள் நிறைய இருக்கின்றன அதில் படிப்பிப்பவராக (அல்லது படிப்பித்தவராக) இருக்கலாம்

உங்கள் நகரத்தில் பூக்கடை வைத்திருக்கும் தமிழ் ரீச்சர் யாராவது இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள் எல்லாம் அந்த மாதிரி இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

F96_BC607-4_B88-4_B6_F-_AA4_A-_CE34_BF99

நேரம் நல்ல நேரம்

குமாரசாமி அண்ணன் வேலையில் இருந்து ஓய்வு எடுத்துப் போனதன் பிறகு நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.

 “பென்சன் எடுத்தாப் போலை  எப்பிடி நேரம் போகுதண்ணை?”

 “வேலை செய்யிற ஆக்கள், பென்சன் எடுத்த ஆக்களைப் பிடிச்சுக் கேக்கிற வழக்கமான கேள்விதான்டா இது

 “இல்லை அண்ணை, வேலை வேலை எண்டு  ஓடிக் கொண்டிருந்தீங்கள். பென்சன் எடுத்தாப் போலை நேரம் போறது கஸ்ரமா  இருக்குமெல்லே

 “உனக்கு விளக்கம் பத்தாது. சொல்லுறன் கேள். போன கிழமை மனுசியோடை shopping center க்குப் போனன். ஐஞ்சு நிமிசம்தான். திரும்பி வாறன் கார் பிழையான இடத்திலை பார்க் பண்ணியிருக்கு எண்டு பொலீஸ்காரன் பைன் எழுதிக் கொண்டிருக்கிறான்.  “உங்களுக்கு இதுவே வேலையாப் போச்சு. மனுசன் ஆத்திரமந்தரத்துக்கு ஒரு ஐஞ்சு நிமிசம் கூட கார் பார்க் பண்ணக் கூடாது. உடனை எழுதிப் போடுங்கோ. பென்சன் எடுத்த ஆக்களைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சுப் பாக்கோணும். இரண்டு யூரோவுக்கு சாமான் வேண்டிட்டு வந்து அவையளாலை இருபது யூரோ பைன் கட்ட முடியுமே?”  

 நான் அப்பிடிச் சொல்ல, என்னை மேலையும் கீழையும் பாத்திட்டு ஒரு அசுமாத்தமும் காட்டாமல் பொலீஸ்காரன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறான். எனக்கு வந்த கோவத்துக்குகொழுத்த பண்டிஎண்டு திட்டிப் போட்டன். அவன் அதுக்கும் ஒரு கதையுமே கதைக்காமல்கார் ரயர் நல்லா தேய்ஞ்சு போய் இருக்கு இதுக்கு இன்னுமொரு பைன் போடவேணும்எண்டு திரும்ப ஒரு பைன் எழுதத் தொடங்கினான்.

 அவன் இரண்டாவது பைன் எழுதி முடிக்கக்கைஇவங்களுக்கு கொம்பு முளைச்சிட்டுதுஎண்டு என்ரை மனுசி சைகையாலை காட்டினாள். கோதாரி விழுவான் அதைக் கண்டிட்டான். திரும்ப எழுதத் தொடங்கினான். ”இப்ப என்ன எழுதுறாய்எண்டு கேட்டன். “கன நேரம் பார்க் செய்ததுக்கு இரண்டாவது பைன்என்றான். சரி எவ்வளவுதான் எழுதுறான் பாப்பம் எண்டு நான் பேசாமல் நிண்டன். அவன் எல்லாத்தையும் எழுதி முடிச்சிட்டு வைப்பரைத் தூக்கி அதுக்குள்ளை எழுதின துண்டுகளைச் செருகினான். அவன் எவ்வளவு எழுதியிருப்பான்  எடுத்துப் பாக்கலாம் எண்டு யோசிக்கக்கை, நான் போக வேண்டிய பஸ் வந்து நிக்குது. அதை விட்டால் இன்னும்  ஒரு அரை மணித்தியாலம் அடுத்த பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்க வேணும். பேசாமல் மனுசியை இழுத்துக்கொண்டு  வந்து பஸ்ஸிலை ஏறிட்டன். அவனோடை சண்டை போட்டதிலை எனக்கு இருபத்தஞ்சு நிமிசம் போட்டுது.  

எனக்குக் கதை சொன்னதில் குமாரசாமி அண்ணனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கும்.

கவி அருணாசலம் 

12.07.2018

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவோ சண்டையும் வேறு யாரோடையோ காருக்காகவா?

தேவையில்லாமல் சண்டை பிடித்து கார்காரனுக்கு மூன்று ரிக்கற்.வாழ்க குமாரசாமி குடும்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... அருமையான சிரிப்புக் கதை. :grin:
கதையின் முடிவில்  வைத்த திருப்பம்... யாரும் எதிர் பாராதது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நாயகன் ....உண்மையில் குமாரசாமி அண்ணையாய் இருந்திருந்தால்...அந்தத் துண்டை நிச்சயம் எடுத்துக்கொண்டு போய்....பஸ்ஸுக்குள் வைச்சாவது வாசிச்சிருப்பார்!

இல்லாவிட்டால் அவருக்கு நிச்சயம் இரவுக்கு....நித்திரை வந்திருக்க மாட்டாது!

கார்க்காரனும்...வீட்டுக்குத் துண்டு தபாலில் வரும்வரையாவது...விசில் அடிச்சுக் கொண்டு காரோட்டி இருக்கலாம்!

கதை அருமை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி வைத்து எழுதும் அரை நிமிடக் கதைகள் அனைத்தும் சுவை......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம் பார்த்து கதை சொல்லுஎன்று ஏகாம்பரம் மாஸ்ரர் எங்களுக்கு பாடசாலையில் வகுப்பெடுத்திருக்கிறார்.

அந்த நினைவில் இங்கே நான் ஒரு படம் பார்த்து கதை சொல்கிறேன்.

இது ஒரு பழைய கதை தான். செவி வழி கேட்ட கதை. இங்கே கொஞ்சம் வைச்சு கிச்சு அந்தக் கதையை எழுதியிருக்கிறேன். இதில் அதி முக்கியமாக புதுமணலூர் என்ற இடத்தை நானே உருவாக்கி இருக்கிறேன்

95_CE2_B8_E-_CD5_B-4_F72-8_B6_A-68644487

புகையிலை பயிர்ச் செய்கையில் கணபதிக்கு அந்த வருசம் நல்ல விளைச்சல். இவ்வளவு புகையிலையையும் காலிக்கு கொண்டு போய் விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று அவரது நண்பர்கள் இவருக்கு ஆசையை கிளப்பி விட புகையிலை எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு கணபதி கொழும்புக்குப் பயணமானார்.

கொழும்பில் வந்து இறங்கிய பின்னர்தான், காலிக்கு இன்னும் ஒரு பயணம் செய்ய வேண்டும் என்று கணபதி அறிந்து கொண்டார்.

தனியாக நின்று அல்லாடிக் கொண்டிருந்த கணபதியின் நிலை அறிந்து அவருக்கு உதவுவதற்காக சோதி என்பவர் வந்து சேர்ந்தார்.

“கொழும்புக்கு புதுசு போலை. எங்கை போகோணும்?” சோதியின் அன்பான விசாரிப்பில் கணபதி மயங்கிப் போனார்

புகையிலையை காலிக்கு கொண்டு போய் விற்று பணம் பார்க்க இருக்கும் தன்னுடைய விருப்பத்தை சோதியிடம்  சொன்னார்.

“அப்பிடியா? நான் ஒரு புகையிலை புறோக்கர்தான்

“அப்ப நல்லதா போச்சுது

“என்ரை ஊர் புதுமணலூர். சின்னனிலை இருந்தே இங்கைதான் இருக்கிறேன். எனக்கு காலியிலையும் வியாபாரிகளை எல்லாம் நல்லாத் தெரியும். வேணுமெண்டால் சொல்லுங்கோ. நான் உங்களை அங்கை கூட்டிக் கொண்டு போறன். நல்ல விலைக்கும்  புகையிலையை வித்துத்தாறன்

“நல்லதாப்போச்சு. அந்த கதிர்காமக் கந்தன் தான் உங்களை என்னட்டை அனுப்பி வைச்சிருக்கிறான்

“ மனுசனுக்கு மனுசன் உதவி செய்யாட்டில் அது என்ன பிறப்பு. நீங்கள் கதிர்காமக் கந்தனை கும்பிடுற ஆள் போலக் கிடக்கு. அவரைப் போய்ப் பாக்க ஆசை இருக்கே ?”

“ஆசை இருக்குக்குத்தான். முதலிலை புகையிலையை விப்பம். பிறகு போய்க் கதிர்காமத்தானை பார்ப்பம்” 

“புகையிலை வித்திட்டு காசோடை கோயில், குளமெண்டு  அலையிறதும் நல்லாயிருக்காது”.                                     

“நீங்கள் சொல்லுறது சரி. புகையிலையை என்ன செய்யிறது?” 

“அது ஒரு பிரச்சினையுமில்லை. எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு. அங்கை கொண்டு போய் வைக்கலாம். நானும் உங்களோடை கதிர்காமம் வாறன்பிறகு காலியிலை புகையிலையையும் வித்துத்தாறன். நீங்கள் பாத்து ஏதாவது எனக்கு செய்யுங்கோ” 

சோதியின் பேச்சும், பழகும் தன்மையும் கணபதிக்கு பிடித்துப் போயிற்று. சோதி சொன்ன இடத்தில் புகையிலைப் பொதிகளை வைத்து விட்டு இருவரும் கதிர்காமம் பயணமானார்கள்.

“கதிர்காமம் வந்திட்டு மாணிக்க கங்கையிலை குளிக்காமல் போனால் நல்லா இருக்காது. நான் அடிக்கடி வந்து போறதாலை மாணிக்க கங்கையிலை இந்த முறை இல்லாட்டிலும் அடுத்தமுறை குளிச்சிக் கொள்ளுவன். நீங்கள் எப்போதாவதுதானே கங்கையிலை குளிக்க முடியும். போய்க் குளியுங்கோ. நான் கரையிலை இருந்து உங்கடை உடைமைகளை பாக்கிறன்

தனது ஆடைகளைக் களைந்து கணபதி மாணிக்க கங்கையில் இறங்கி மூழ்கி எழுந்தால் கரையில் சோதியை காணவில்லை கழட்டி வைத்த உடுப்புகள், கடிகாரம், பணம் எதுவும்  வைத்த இடத்தில் இல்லை. கணபதி சுற்று முற்றும் பார்த்து சோதி என்று உரத்த குரலில் பலமுறை அழைத்தும்  பலனில்லை .

மாணிக்க கங்கையில்  நின்றபடியே அண்ணாந்து பார்த்தால் கோபுரத்தில் முருகன் கோமணத்துடன்  இருக்கும் சிலைதான் கணபதிக்கு தெரிந்தது. கணபதி  சற்று குனிந்து தன்னிலையைப் பார்த்தார். அவரும் முருகனைப் போலவே கோமணத்துடன் நின்றது புரிந்தது

கணபதியின் வாய் அவரை அறியாமலே முருகனைப் பார்த்து கேட்டது," முருகா, நீயுமா புதுமணலூர்காரனை நம்பி புகையிலை விக்க வந்தனீ?

கவி அருணாசலம்

25.07.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு......புங்குடுதீவைப் புது மணலூர் எண்டு மாத்தினது இன்னும் நல்லாயிருக்குது!

கணபதி....சோதிக்குப் போயிலையை வித்ததும் உண்மை!

சோதியிடம் காசைக் கறக்க முடியாமல்.....சோதியைத் தேடி ஊர் ஊராக அலைந்ததும் உண்மை!

கடைசியா....நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவலின் படிக்கு.....சோதி கதிர்காமம் பயணித்ததும்  உண்மை!

கணபதி....சோதியைத் தேடிக் கதிர்காமம் போனதும் உண்மை!

மாணிக்க கங்கையில்.....கொஞ்சம் தண்ணீர் ஓடியதும் உண்மை!

மாணிக்க கங்கையில்....கணபதி...இறங்கிக் குளித்ததும் உண்மை!

ஆனால் வேட்டியக் களவெடுத்தது மட்டும் சோதி இல்லை!

முருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை!

 

பாடம்:     போயிலையை  நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை! அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உண்மைக்கதையை மெருகேற்றி விளாசிவிட்டிருக்கிறார் நம்ம அருணாச்சலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

விசுகர்... கடித்துக் குதறி விட்டுடுவார் என்று, கவியருக்கு... பயம் வரத்தானே... செய்யும்  ஈழப்பிரியன். :grin:
கதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது  கவி அருணாசலம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

முருகா.....நீயும் புங்குடுதீவானுக்குப் போயிலை வித்தா....இந்த நிலைக்கு வந்தாய் என்று....கணபதி முருகனிப் பார்த்துக் கேட்டதும் உண்மை!

  

பாடம்:     போயிலையை  நல்ல விலைக்கு விற்பது மட்டும் திறமையில்லை! அதற்கான பணம் முழுவதும்...கைக்கு வரும்வரை....போயிலைப் பொதியிலிருந்து உனது....கையை எடுக்காதே!

புங்கையூரான், உங்களுக்கு பெரிய மனது. நன்றி!

 
17 hours ago, ஈழப்பிரியன் said:

 

என்ன கவி அருணா பூங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

 

பயம் என்று இல்லை. ஆனாலும் அடி தாங்கும் உடம்பு எனக்கில்லைத்தான்

17 hours ago, தமிழ் சிறி said:

கதையும், அதற்கேற்ற படமும்... நன்றாக உள்ளது  கவி அருணாசலம். ?

படத்தை சுட்டது  “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான்ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப்  புகையிலைக் கதைதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kavi arunasalam said:

படத்தை சுட்டது  “சுவிஸ் தமிழர்கள் தீ மிதித்து பரவசமான” இடத்தில் இருந்துதான்ஏனோ தெரியவில்லை வீடியோவை பார்தத போது, படத்தில் உள்ளவர் அடிக்கடி குனிந்து பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்தேன். அதை பார்த்த எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது இந்தப்  புகையிலைக் கதைதான்.

 

அவர், குனிந்து பார்த்ததை  எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.
அதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட  உங்கள்  திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.

என்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 1:00 AM, தமிழ் சிறி said:

ன்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ?  :grin:

என்னையும் விசுகரையும் எதுக்கு கோத்துவிட இப்பிடி துடிச்சுக் கொண்டு நிக்கிறீங்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 1:00 AM, தமிழ் சிறி said:

 

அவர், குனிந்து பார்த்ததை  எல்லாம்... பார்த்தேன். கவி அருணாசலம்.
அதற்கு.. ஏற்ற, படத்தை.. புடம் போட்ட  உங்கள்  திறமைக்கு பாரா ட்டுக்கள் சகோதரம்.

என்ன... இருந்தாலும், விசுகர்..... இதில் பஞ்சாயத்து வைத்தால்... இன்னும், கிளு கிளுப்பாய்....  இருக்கும். ? :grin:

 

On 7/27/2018 at 3:56 AM, ஈழப்பிரியன் said:

என்ன கவி அருணா புங்குடுதீவு என்று எழுத அவ்வளவோ பயமா?

 தாயகமென்றாலும்

ஊர்  என்றாலும் 

கண்டபடி எழுதினால்  நாம் வருவோம் 

 

அவரே  பெயரை  மாற்றி  எழுதியிருக்கிறார்

அத்துடன்

மேலே புங்கையண்ணா  தெளிவாக  எழுதியபின்..

நான்  ம(றை)டக்க  விரும்பவில்லை:grin:

 

ஆனாலும் கதைப்படி அவருக்கும் முருகனுக்கும் கச்சை  இருந்தது

எழுதியவருக்கு அதுவும் புடுங்கப்படும் என்ற  பயம் இருந்திருப்பது வரவேற்கத்தக்கது:D:

புங்கையண்ணா இது சார்ந்து அடக்கி  வாசித்திருப்பது அவரின் பெயரை காப்பாத்தாது:grin:

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.