Jump to content

அரை நிமிடக் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

77-E4-E1-CE-3989-4-F5-E-AF64-A6-B24-B6-B

சின்னச் சின்ன தீவுகள் போல் திட்டுத் திட்டாக  அவனது கைகளில் அங்கங்கே வீக்கங்கள் தெரிந்தன.

 எனது பார்வையின் கேள்வியை கணேசன் புரிந்து கொண்டான் 

 “கிட்னி பெயிலியர் மச்சசான். மூன்று நாளுக்கு ஒருக்கால் டயாலிசிஸ் செய்ய வேண்டி இருக்குது. அதனாலை வந்த வீர வடுக்கள்

 நீண்ட நாட்களுக்கும் பிறகு.... இல்லை நீண்ட வருடங்களுக்குப் பிறகு என்பதுதான் சரியாக இருக்கும் அவனை அப்படிப் பார்த்ததில் மனது சிரமப்பட்டது.

 எனது சங்கடம் அவனுக்கு விளங்கி இருக்கும்

 “கிட்னி மாத்திறதுக்கு ஏற்கனவே கனக்க யேர்மன்காரங்கள் காதிருக்கிறாங்கள். எங்கள் தரவளிக்கு இஞ்சை கிடைக்க வாய்ப்பேயில்லை. ஊரிலை பாக்கலாமெண்டால் காசு தந்திட்டு பெட்டியைக் கட்டிக் கொண்டு போ கிட்னி சட்னி எல்லாம் கிடைக்காது எண்ட மாதிரித்தான் பேச்சு இருந்தது

கதைத்துக் கொண்டு இருக்கும் போதே அவசரப்பட்டான். “நேரம் போகுது மச்சான். டயாலிசிஸ்க்கு நாலு மணித்தியாலங்கள் தேவை. அதை முடிச்சிட்டுத்தான் வேலைக்குப் போக வேணும். முடிஞ்சால் பிறகு சந்திப்பம்

பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவனுக்கு குழந்தை பிறந்திருந்த போது பரிசுகள் வாங்கிக் கொண்டு எனது குடும்பத்தோடு பார்க்கப் போயிருந்தேன். நாங்கள் வருவதை அவனுக்கு அறிவித்திருந்தாலும் ஏனோதானோ என்றுதான் வரவேற்றான். பொதுவாக கணேசன் தன்னுடைய வீட்டுக்கு யாரையும் அழைப்பதில்லை. “வாற போற ஆக்களுக்கு தேவையில்லாமல் சமைச்சுப் போட்டு காசை ஏன் கரியாக்க வேணும்என்ற பரந்த உள்ளம் அவனுக்கு இருந்தது.

 மதியம் சாப்பாடு தந்தான்.. சாப்பிட்டுவிட்டு கை  கழுவும் போதுதான் பார்த்தேன் குழாயில் இருந்து தண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துளியாக சிந்தும் நீரெல்லாம் ஒரு பிளாஸ்ரிக் பாத்திரத்தில் ஒன்றாகி ஐக்கியமாகிக் கொண்டிருந்தன

 “கணேசா பாத்ரூமுக்குள்ளை தண்ணி சிந்துது. கவனிக்கேல்லையோ?”

 “அது நானாத்தான் சிந்த விட்டனான். இப்பிடி துளித் துளியா சிந்தினால் மீற்றர் ஓடாது. இதை வைச்சுத்தான் எங்கடை தண்ணித் தேவைகளை முடிக்கிறனாங்கள்

 சூரிய வெளிச்சமே வராத நிலத்தடி வீடு. குறைந்த வாடகை . துளித் துளியாக தண்ணீர் சேகரிப்பு. இப்படி இன்னும்  எத்தனை வழிகள் இருந்தனவோ அத்தனை வழிகளிலும் கணேசன் காசை மிச்சம் பிடித்தான்

 “என்ன பாக்கிறாய்? ஊரிலை தென்னந்தோப்போடை காணி வாங்கி இங்கத்தைய ஸ்ரைலிலை வீடு ஒண்டு கட்டுறன்காசு வேணுமெல்லே

 “வீடு கட்டுறதுக்கு யாரை பொறுப்பா விட்டிருக்கிறாய்?

 “மனுசியின்ரை தமையன் அங்கை இருக்கிறார். ஆள் பார்த்துக் கொள்ளும்_”

 இன்று கணேசனை பார்த்த பிறகு, நாள் முழுதும் அவன் நினைவுதான். கூடவே அந்தக் காணியும், தென்னந்தோப்பும், வீடும் இனி என்னவாகும் என்ற கேள்வியும் ஏனோ வந்தது.

 கவி அருணாசலம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டங்கள், கனவுகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற சிறுகச் சிறுக சேமிப்பதும் கஞ்சத்தனமாக இருப்பதும் நமது பாரம்பரியத்தில் வந்தது. ஆனால் அது இப்போது மாறிக்கொண்டு வருகின்றது. நுகர்வோர் கலாச்சாரத்தால் ஆடம்பரமாக வாழ எல்லோரும் விரும்புகின்றார்கள்.

ஆசைகளை அந்த அந்த வயதில் அடையாவிட்டால் வருத்தங்களும் துன்பங்களும் வந்து சேர்த்ததையெல்லாம் பிறர் அனுபவிப்பார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் கணேசன்... இவ்வளவு கஸ்ரப் பட்டு சேமித்து, ஊரில் கட்டிய வீட்டில்  வாழ கொடுத்து வைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் என்ட வாழ்க்கையில் இவர்களை போல் எத்தனையோ பேரைப் பார்த்து உள்ளேன் ...வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரியாதவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தவறு உள்ளது? பெரும்பாலானவர்கள் இப்படி சிறுகச் சிறுக சேமித்து ஊரிலோ அல்லது இங்கேயோ வீடு வளவு என்று வசதியாக உள்ளார்கள். சிலருக்கு அதை அனுபவிக்க இயலாமல் போய்விடும். ஆனால் அதனை அவரது பிள்ளைகள் அனுபவிப்பார்கள்.

பிற்காலத்திற்கு தேவை என்று சேமிப்பதில் தவறில்லை. 

இங்கு லண்டனில் எமது பிள்ளைகளால் வீடு வாங்க கூடியதாக இருக்குமா என்று தெரியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

24 மணி நேரமும்  வேலை,வேலை என்று அலைந்து அவர்களுக்கு காசு மட்டும் சேர்த்து வைத்து என்ன புண்ணியம் ?...அவர்களோட நேரம் செலவிட வேண்டும்,அவர்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும்,வாழ்க்கையை அவர்களோட சேர்ந்து அனுபவிக்க வேண்டும்.

அதை விடுத்து நாங்கள் செத்தப் பிறகு எங்கள் காசு மட்டும் அவர்களுக்கு போதும் என்று நினைக்கப் படாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விவாதிக்கப்படுவது எப்படி கணேசன் மிச்சம் பிடித்தார் என்பது. மற்றவர்கள் எப்படி சேமிக்கிறார்கள் என்று வேலை தொடர்பாக அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலுமெண்டால் மாத்திரம் வீடு வாங்கத்தான் வேணும்....காசும் சேமிக்கத்தான் வேணும்.

அதுக்காக வாழ்கையையே அர்ப்பணிக்கிறது அதாலை நோய்நொடிகளை தேடுறதெல்லாம் கொஞ்சம் ஓவர் கண்டியளோ. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,கோபப் படாமல் நிதானமாய் யோசியுங்கள்...எல்லாத்திற்கும் தொடர்பு உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

மீரா,கோபப் படாமல் நிதானமாய் யோசியுங்கள்...எல்லாத்திற்கும் தொடர்பு உள்ளது 

ஏற்கனவே எழுதியது தான், சிறுக சிறுக சேமிப்பதில் தவறில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேமிப்பு கட்டாயம் தேவைதான்....அதுக்காக உச்சா போகக்கூட நேரமில்லாமல் உழைக்கிறது கொஞ்சம் ஓவர் கண்டியளோ.....

எல்லாரும் வீடு வாங்கீனம் எண்டுட்டு அளவு தகுதிக்கு மிஞ்சின தொகையிலை வீட்டை வாங்கிறது. பிறகு இருக்க நேரமில்லாமல் வேலை வேலை எண்டு பிள்ளையளையும் கவனிக்காமல் ஓடுப்பட்டு திரியிறது. பிள்ளையள் தாங்கள் நினைச்சபடி வளர்ந்து சீரழிஞ்சு போறது...பேந்து ஐயோ குய்யோ எண்டு தலையிலை அடிச்சுக்கொண்டு திரியிறது.

இதுதானே இப்ப எங்கடை புலம்பெயர் குடும்பங்களிலை கூடுதலாய் நடக்குது :cool:

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கதைகளையும், கருத்து ஓவியங்களையும் வரைவதற்காகவே...
கவி அருணாசலம் அவர்கள்... மீண்டும் யாழ். களத்திற்கு வர வேண்டும் என்று,
அன்பாக....  வேண்டுகின்றோம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

82-F7-FCCD-2147-453-F-B8-E1-B1620603-F16

உறவு என்றொரு சொல்லிருந்தால்...

 

வீட்டுக்குப் போவதற்காக முதலாம் நம்பர் பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருந்த போது கண்களை சுற்றிவர மேய விட்டேன். சுழன்ற என் கண்கள் கார் தரிப்பிடத்தில் போய் நிலை கொண்டு நின்றன.

 

குகதாஸ் கார் தரிப்பிடத்தில் இருந்து என்னைப் பார்ததுச் சிரித்தான்.

 

பஸ்ஸுக்கு இன்னும் ஏழு நிமிடங்கள் இருந்தன.

 

ஐஞ்சு நிமிசம் குகதாஸுடன் கதைக்கலாம் என கணக்குப் போட்டேன்.

 

எப்பிடி? கனகாலம் காணேல்லை...” இது ஒரு வழமையான எங்களுடைய விசாரிப்பு முறைதான். அதையே நானும் பாவித்தேன்.

 

இங்கைதான் இருக்கிறன். உங்களைத்தான் கனகாலம் காணேல்லைகேள்விக்கான பதில் குகதாஸிடம் இருந்து வந்தது.

 

எங்கை, கந்தவனத்தையும் கனகாலம் காணேல்லை. இரண்டு பேரும் ஒண்டாத்தானே திரிவீங்கள். இண்டைக்கு நீங்கள் மட்டும் தனிய நிக்கிறீங்கள். ஆளைக் கண்டால் நான் கேட்டதெண்டு சொல்லுங்கோ

 

எனக்கும் அவருக்கும் இப்ப சரியில்லை

 

ஏன் என்ன பிரச்சினை?”

 

அதண்ணை....” குகதாஸின் வார்த்தை கொஞ்சம் சுருதி குறைந்தது.

 

சொல்லக் கூடாத  விசயமெண்டால் அதை விடுங்கோ

 

இல்லை இல்லை அதிலை மறைக்கிறதுக்கு ஒண்டுமில்லை அண்ணைகந்தவனத்தின்ரை மகன் சங்கீதனுக்கு 16வது பேர்த்டே கொண்டாடினவன். அண்டைக்கெண்டு wifeஇன்ரை பெறாமகளுக்கும் சாமத்தியச் சடங்கு. அதுவும் Frankfurt இலை. அங்கை போனதாலை இவன்ரை birthdayக்கு போகேலாமல் போட்டுது

 

“birthdayக்குப் போகாததாலை பிரச்சினையாப் போச்சாக்கும்

 

விழாவுக்கு போகாததாலை பிரச்சினை இல்லை. மொய் எழுத இல்லை எண்டுதான் பிரச்சினை

 

அப்பிடியும் பிரச்சினை இருக்கே?”

 

நீங்கள் விழா வைச்சால் நாங்கள் வந்து மொய் எழுதோணும். நாங்கள் விழா வைச்சால் உங்களுக்கு  Frankfurtஇலை விழா Hamburg இலை விழா எண்டு ஓடிடுவீங்கள்  அடுத்த நாளாவது வந்து மொய் எழுதியிருக்கலாம்தானே எண்டு  ரெலிபோனிலை பேய்ச் சண்டை

 

 

அன்றைய காலத்தில் அநேக பல சரக்குக் கடைகளில், தேனீர் கடைகளில், ‘உறவுக்குப் பகை கடன்என்ற வாசகம் இருக்கும். பஸ்ஸில் வீடு நோக்கிப் பயணிக்கும் போது ஊரின்  அந்த பழைய நினைவுகள் எனக்கு வந்தன.

 

இன்று, புலம் பெயர் வாழ்வில்உறவுக்குப் பகை மொய்என்றாகிப் போயிற்று

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

நீங்கள் விழா வைச்சால் நாங்கள் வந்து மொய் எழுதோணும். நாங்கள் விழா வைச்சால் உங்களுக்கு  Frankfurtஇலை விழா Hamburg இலை விழா எண்டு ஓடிடுவீங்கள்  அடுத்த நாளாவது வந்து மொய் எழுதியிருக்கலாம்தானே எண்டு  ரெலிபோனிலை பேய்ச் சண்டை

முன்னர் ஊரில் “கொண்டாட்டம் மூன்று நாட்கள்” என்று அழைப்பிதழில் ஒரு வசனம் இருக்கும். அதற்கான காரணம் இப்பத்தான் விளங்குது😂🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
    • அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே ........!  😍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.