Jump to content

வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில்- மீண்டும் ஒரு கொடூரச் செயல்- 59 வயதுப் பெண்ணின் வாயைக் கட்டி மிருகத்தனமாக வன்புணர்ந்த அரக்கர்கள்!!


Recommended Posts

வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில்- மீண்டும் ஒரு கொடூரச் செயல்- 59 வயதுப் பெண்ணின் வாயைக் கட்டி மிருகத்தனமாக வன்புணர்ந்த அரக்கர்கள்!!

முக­மூடி அணிந்­த­வர்­கள் அரா­ஜ­கம்; 20 பவுண்­களை அள்­ளிச் சென்­ற­னர்

 

474570334-Rape_6.jpg

 
 

ஓடு பிரித்து வீடு புகுந்த கொள்­ளை­ யர், 59 வயதுடைய குடும்­பத் தலை வி­யின் வாயைக் கட்­டி­விட்டு மிரு­கத் தன­மாக வன்­பு ணர்ந்­துள்­ள­னர். வன் பு­ணர்ந்­த­பின்­னர் 20 பவுண் நகை­களைக் கொள்­ளைய­டித்­துச் சென்­றுள்­ள­னர்.

அவ­ரது கண­வ­னின் வாயை­யும் கைகால்­க ளை­யும் கட்­டிப்­போட்­டு விட்டே கொள்­ளை­யர் இந்­தக் கொடூ ர­மான இழி­செ­ய­லைப் புரிந்­துள்­ள­னர் என்று விசா­ர­ணை­யில் தெரிவிக்­கப்­பட்­டது.

வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஒரு இடத்­தில் நேற்று அதி­காலை ஒரு மணி­ய­ள­வில் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

 

வன்­பு­ண­ரப்­பட்ட குடும்­பத் தலைவி பாதிக்­கப்­பட்ட நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சிகச்சை பெற்­று­வ­ரு­கி­றார்.

முகங்­களை மறைத்­த­வா­றும் கையு­றை­கள் அணிந்­த­வா­றும் இரு­வர் இந்த இழி­செ­யல்­க­ளைப் புரிந்­துள்­ள­னர். வீட்­டில் கண­வன் மனைவி இரு­வ­ருமே வசித்து வரு­கின்­ற­னர்.

கண­வன் உடல் நிலை பாதிக்­கப்­பட்­ட­வர். முத­லில் அவ­ரைக் கட்­டிப்­போட்டு சத்­த­மி­டா­த­வாறு வாயை­யும் கட்­டி­போட்­டுள்­ள­னர்.

பின்­னர் குடும்­பத் தலை­வி­யின் வாயைக்­கட்டி மிரு­கத்­த­ன­மாக வன்­பு­ணர்ந்­துள்­ள­னர். அவ­ரது தாலி உட்­பட 20 பவுண்­கள் நிறை­யு­டைய நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­றுள்­ள­னர்.

பின்­னர் அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் அவர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவர் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கட்­டமை மருத்­துவ பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்­தக் கொடூர சம்­ப­வம் பெரும் பதற்­றத்­தைத் தோற்­று­வித்­துள்­ளது.

சுழி­பு­ரம் சிறுமி பாலி­யல் கொடு­மை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்டு, அதற்­கான கண்­டன ஆர்ப்­பாட்­டங்­க­ளும் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கும் நிலை­யில், குடும்­பத் தலை­விக்கு நேற்று இந்­தக் கதி ஏற்­பட்­டுள்­ளது.

எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. விசா­ரணை இடம்­பெ­று­கி­றது என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/09/வட்டுக்கோட்டைப்-பொலிஸ்-பிரிவில்-மீண்டும்-ஒரு-கொடூரச்-செயல்-59-வயதுப்-பெண்ணின்-வாயைக்-கட்டி-மிருகத்தனமாக-வன்புணர்ந்த-அரக்கர்கள்.html

Link to comment
Share on other sites

59 வயதுப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்- போதைப்­பொ­ருள் பாவித்து வன்­பு­ணர்ந்­தி­ருக்­கி­றார்­கள்? -மருத்­து­வர்­கள் !!

 

கஞ்சா போதைப்­பொ­ருள் பாவித்­து ­விட்­டுத்­தான் குடும்­பத் தலை­வியை வன்­பு­ணர்ந்­துள்­ள­னரா என்று கரு­த­வேண்­டி­யுள்­ளது. அந்­த­ள­வுக்கு வார்­த்தை­க­ளால் கூற முடி­யாத அள­வுக்கு மிரு­கத் தன­மாக – கொடூ­ர­மாக வன்­பு­ணர்ந்­துள்­ள­னர் என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர்.

வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஓரி­டத்­தில் நேற்று அதி­காலை வீடு புகுந்த இரு­வர் அவரை வன்­பு­ணர்ந்­துள்­ள­னர். பாதிக்­கப்­பட்ட குடும்­பத் தலைவி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­கி­றார்.

தான் மிகக் கொடூ­ர­மாக வன்­பு­ண­ரப்­பட்­ட­த­னைக் கூறி அந்­தக் குடும்­பத் தலைவி கண்­ணீர் விட்டு அழு­கி­றார். அவ­ரது வேதனை, அவர் மீது நடத்­தப்­பட்ட வன்­பு­ணர்­வின் கொடூ­ரம் என்­ப­ன­வற்றை ஆராய்ந்து நோக்­கும் ­போது வன்­பு­ணர்ந்­த­வர்­கள் போதைப் பொருள் பாவித்­துள்­ள­னர் என்று கரு­த­வேண்­டி­யுள்­ளது – என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/09/59-வயதுப்-பெண்ணுக்கு-நடந்த-கொடூரம்-போதைப்­பொ­ருள்-பாவித்து-வன்­பு­ணர்ந்­தி­ருக்­கி­றார்­கள்-மருத்­து­வர்­கள்.html

Link to comment
Share on other sites

புலிகள் மௌனிக்கும்போது இல்லாத வலியை இப்போது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் உணர தொடங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:

59 வயதுப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்- போதைப்­பொ­ருள் பாவித்து வன்­பு­ணர்ந்­தி­ருக்­கி­றார்­கள்?

இந்த வளர்ந்த  நாடுகளில் இல்லாத போதைபொருள்களா அங்கு? குற்றவாளிகளை வளர்க்கும் சிங்கள கூலி போலிஸ்சின் கொடூரம் அவ்வளவே இளம்செழியனை இடமாற்றம் செய்யும்போதே விளங்கனும் யாழை சின்னாபின்னமாக்க போகினம் என்று .

Link to comment
Share on other sites

வட்டுக்கோட்டையில் வன்புணர்வின் பின் கொள்ளை- நடந்தது இது தான்- விளக்­கு­கி­றார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண­வன்!!

 
 

வீட்­டில் நுழைந்த கொள்­ளை­யர்­கள் 3 மணி­நே­ரம் தேடு­தல் நடத்­தி­னர். எனது கண்­ணைக் கட்­டி ­விட்டே அவர்­கள் எல்­லா­வற்றை­யும் செய்­த­னர். மனை­வி­யைச் சித்­தி­ர­வதை செய்தே நகை­க­ளைப் பறித்­த­னர். இவ்­வாறு வட்­டு­க்கோட்­டைச் சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர் தெரி­வித்­தார்.

வட்­டுக்­கோட்­டைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­ யில் நேற்­று­முன்­தி­னம் அதி­காலை வீடு புகுந்த கொள்­ளை­யர்­கள், அங்­கி­ருந்த 60வய­தான குடும்­பத் தலை­வியை மிரு­கத்­த­ன­மாக வண்­பு­ணர்வு செய்­த­னர்.

வீட்­டி­லி­ருந்த நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர். இந்­தச் சம்­ப­வம் பெரும் அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது வீட்­டில் இருந்து 500 மீற்­றர் தொலை­வில் இரா­ணுவ முகாம் அமைந்­துள்­ளது.

 

சம்­ப­வம் தொடர்­பில் வீட்­டின் உரி­மை­யா­ள­ரான கண­வன் தெரி­வித்­த­தா­வது,  எனக்கு 70வயது. மனை­விக்கு 60 வயது. இரவு 12 மணிக்கு நாய் குலைத்­தது. ஆள்­கள் நட­மாட்­டம் இருந்­தால்­தான் நாய் குலைக்­கும். மின்­கு­மி­ழைப் போட்டு விட்டு வெளி­யில் பார்த்­தேன். ஒரு நட­மாட்­ட­மும் இல்லை.

அதி­காலை 1.30மணிக்கு மீண்­டும் நாய் குலைத்­தது. அவர்­கள் வீட்­டுக்­குள் நுழைந்­தது எப்­ப­டி­யென்றே தெரி­ய­வில்லை. 2பேர் ரோச் லைட்­டு­டன் வந்­தார்­கள். முகத்­துக்கு நேரே வெளிச்­சத்தை பாச்­சி­னார்­கள். அவர்­க­ளின் கைக­ளில் வாள் இருந்­தது.

ஒரு­வர் எனது தோளில் வாளை வைத்­தார். மற்­ற­வர் பக்­கத்­தில் நின்­றார். பெட்­சீட்டை எடுத்து கிழித்து எனது கையைப் பின்­பு­ற­மா­கக் கட்­டி­னார்­கள். எனது கண்­ணைக் கட்­டி­னார்­கள். துணி­யால் வாயை­யும் கட்­டி­னார்­கள்.

எனது மனை­வி­யைச் சித்­தி­ர­வதை செய்து பொருள்­க­ளைக் கேட்­டி­ருக்­க ­வேண்­டும். அதற்கு இடை­யில் என்­னை­யும் கேட்­டார்­கள். நகை­கள் இல்லை என்று சொன்­னேன். கையில் இருந்த மோதி­ரத்தை அவ­தா­னித்து அதை­யும் கழற்­றி­னார்­கள். மனை­விக்கு என்ன நடந்­தது என்று தெரி­ய­வில்லை.

மனை­வியை சாமி­ய­றைக்­குள் கொண்டு சென்று சித்­தி­ர­வதை செய்து, பலாத்­கா­ரம் செய்து நகை­க­ளைக் கேட்­டி­ருக்­க­வேண்­டும். நகை­களை மனை­வி­யி­டம் கேட்­கும் சத்­தம் எனக்கு கேட்­டது. காலை 4.30 மணிக்­குத்­தான் அவர்­கள் வீட்­டி­லி­ருந்து புறப்­பட்­டார்­கள்.

அவர்­கள் முக­மூடி அணிந்­தி­ருந்­தார்­கள். கண் மாத்­தி­ரம் தெரிந்­தது. அவர்­கள் கைக்கு கையுறை அணிந்­தி­ருந்­தார்­கள். காலுக்குச் செருப்­புத்­தான் அணிந்­தி­ருந்­தார்­கள். தலைக்கு தொப்­பி­யும் போட்­டி­ருந்­தார்­கள் – என்­றார்.

இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய எவ­ரை­யும் நேற்று முன்­னி­ரவு வரை­யில் கைது செய்­ய­வில்லை என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/10/வட்டுக்கோட்டையில்-வன்புணர்வின்-பின்-கொள்ளை-நடந்தது-இது-தான்-விளக்­கு­கி­றார்-பாதிக்கப்பட்ட-பெண்ணின்-கண­வன்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.