Jump to content

வடக்­கிற்கும் பரவும் சீன ஆதிக்கம்


Recommended Posts

வடக்­கிற்கும் பரவும் சீன ஆதிக்கம்

 

-சத்­ரியன்

இப்­போது இந்தத் திட்­டமும் சர்ச்­சையில் சிக்­கி­யி­ருக்­கி­றது, வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கிய பின்னர் தான், இந்த சர்ச்சை தோன்­றி­யி­ருக்­கி­றது.

இந்தச் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருப்­பது இந்­திய அர­சாங்கம். வடக்கு, கிழக்கில் வீடு­களை அமைக்கும் பணி சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை. இது தான் இந்தச் சர்ச்­சையின் அடிப்படை

 

 வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு 40 ஆயிரம் வீடு­களை அமைத்துக் கொடுக்கும், அர­சாங்­கத்தின் திட்டம் மீண்டும் சர்ச்­சையில் சிக்­கி­யி­ருக்­கி­றது.

முன்­ன­தாக, 65 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை பிரான்ஸின் ஆர்­சிலர் மிட்டல் நிறு­வ­னத்­துடன் செயற்­ப­டுத்­து­வ­தற்கு, அமைச்சர் சுவா­மி­நாதன் எல்லா நட­வ­டிக்­கை­க­ளையும் எடுத்­தி­ருந்தார்.

உலோக வீடு­களை அமைத்துக் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருந்­தது. இதற்­காக மாதிரி வீடு­களும் யாழ்ப்­பா­ணத்தில் அமைக்­கப்­பட்­டன.

ஆனால், உலோக வீடுகள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்­காது என்றும், அவை அதிக வெப்பம் கொண்ட யாழ்ப்­பா­ணத்தின் சுவாத்­தி­யத்­துக்கு ஏற்­ற­தல்ல என்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்புத் தெரி­வித்­தது.

அந்த எதிர்ப்­புக்­க­ளையும் மீறி உலோக வீட்டுத் திட்­டத்தை செயற்­ப­டுத்­து­வதில், அமைச்சர் சுவா­மி­நா­தனும், ஐ.தே.க. அமைச்­சர்­களும் அதீத அக்­கறை காட்­டினர்.

எனினும், கல்­வீ­டுகள் தான் அமைக்க வேண்டும் என்று கூட்­ட­மைப்பு விடாப்­பி­டி­யாக நின்று எதிர்ப்புத் தெரி­வித்­ததால், வேறு­வ­ழி­யின்றி அந்தத் திட்டம் கைவி­டப்­பட்­டது.

இதனால், போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 65 ஆயிரம் வீடு­களை அமைத்துக் கொடுக்கும் திட்டம் பின்­தள்­ளப்­பட்­டது என்­பதை மறுக்க முடி­யாது.

இப்­போது இந்தத் திட்­டத்தைச் செயற்­ப­டுத்தும் பொறுப்பு சீன ரயில்வே பெய்ஜிங் பொறி­யியல் குழும நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த நிறு­வனம் தான், மண்­ச­ரி­வினால் மலை­ய­கத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக 10 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை செயற்­ப­டுத்­த­வுள்­ளது.

பது­ளையில் சீன நிறு­வனம், நவீன தொழில்­நுட்­பங்­க­ளுடன் அமைத்த மாதிரி வீட்டைப் பார்­வை­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நான்கு எம்.பிக்­களைக் கொண்ட குழு, அது குறித்து திருப்தி தெரி­வித்­தி­ருந்­தது.

அதை­ய­டுத்து, இந்த திட்­டத்தை செயற்­ப­டுத்­து­மாறு, அமைச்சர் சுவா­மி­நா­த­னுக்கு கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், கடிதம் ஒன்­றையும் அனுப்­பி­யி­ருந்தார்.

இந்­த­நி­லையில், இப்­போது இந்தத் திட்­டமும் சர்ச்­சையில் சிக்­கி­யி­ருக்­கி­றது, வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடு­களை அமைக்கும் திட்­டத்தை சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கிய பின்னர் தான், இந்த சர்ச்சை தோன்­றி­யி­ருக்­கி­றது.

இந்தச் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருப்­பது இந்­திய அர­சாங்கம். வடக்கு, கிழக்கில் வீடு­களை அமைக்கும் பணி சீன நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வதை இந்­தியா விரும்­ப­வில்லை. இது தான் இந்தச் சர்ச்­சையின் அடிப்­படை.

வடக்கு, கிழக்கு பகு­தி­களில் தனக்கு எதி­ரான சக்­திகள் எந்த வகை­யிலும் தலை­யீ­டுகள் செய்­வ­தையோ, பலம் பெறு­வ­தையோ இந்­தியா விரும்­ப­வில்லை.

போர் முடி­வுக்கு வந்த பின்னர், யாழ்ப்­பா­ணத்­துக்­கான ஏ-9 நெடுஞ்­சா­லையைப் புன­ர­மைக்கும் பணியை சீன நிறு­வ­னமே முன்­னெ­டுத்­தி­ருந்­தது. அது இந்­தி­யா­வுக்கு கடு­மை­யான அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

பல சந்­தர்ப்­பங்­களில், சீனாவின் மூலம் வடக்கு, கிழக்கில் நிறை­வேற்­றப்­ப­ட­வி­ருந்த திட்­டங்­களை இந்­தியா தனது இரா­ஜ­தந்­திர அழுத்­தங்­களின் ஊடாக நிறுத்­தி­யி­ருந்­தது.

ஆனாலும், இந்­தி­யாவின் கையை மீறிச் சென்­றி­ருக்­கி­றது இந்த 40 ஆயிரம் வீடு­களை அமைக்கும் விவ­காரம்.

சீன நிறு­வ­னத்­துக்கு இந்தத் திட்­டத்தை செயற்­ப­டுத்தும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து இலங்கை அரசின் உயர் அதி­கா­ரி­க­ளிடம் இந்­தியா கவலை தெரி­வித்­துள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

அந்த செய்­தி­களின் படி, இந்­தியா இதனை பாது­காப்பு ரீதி­யான கரி­ச­னை­யாக முன்­வைக்­க­வில்லை என்று தெரி­கி­றது.

ஆனால், நாசூக்­காக தனது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதா­வது, இலங்­கையில் முன்­னெப்­போதும், வீடு­களை அமைத்­தி­ராத நிறு­வ­னத்­திடம் இந்தத் திட்டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது என்றும், வடக்கு கிழக்­குக்கு பரிச்­ச­ய­மில்­லாத நிறு­வ­னத்தின் மூலம் இந்தத் திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது என்றும் இந்­தியா கரி­சனை தெரி­வித்­துள்­ளது,

கால­நிலை, மண் ஆய்­வுகள் ஏதும் மேற்­கொள்­ளப்­ப­டாமல் கேள்­விப்­பத்­திரம் கோரப்­ப­டாமல் இந்தத் திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது குறித்தும் இந்­தியா சந்­தேகம் எழுப்­பி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அதை­விட, இந்தத் திட்­டத்­துக்­கான சீனத் தொழி­லா­ளர்கள் அதி­க­ளவில் பயன்­ப­டுத்தக் கூடிய சாத்­தி­யங்கள் இருப்­பதும் இந்­தி­யாவின் கவ­லைக்கு முக்­கி­ய­மான காரணம்.

அண்­மையில் இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, வெளி­நாட்டுச் செய்­தி­யாளர் சங்­கத்தின் உறுப்­பி­னர்­களைச் சந்­தித்த போது, அவ­ரிடம் பாது­காப்பு அச்­சு­றுத்தல் பற்­றிய கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்கு அவர், தற்­போது இலங்­கைக்குப் பாது­காப்பு அச்­சு­றுத்தல் ஏதும் இல்லை என்றும், ஆனால் பாது­காப்புக் கரி­ச­னைகள் பல இருப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

அவர் குறிப்­பிட்ட பாது­காப்புக் கரி­ச­னைக்­கு­ரிய விட­யங்­களில், இந்­தி­யாவில் ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான இலங்கை அக­திகள் இருப்­பது முத­லா­வது.

இலங்­கையில் சுமார் 10 ஆயிரம் தொடக்கம் 15 ஆயிரம் வரை­யான இந்­தி­யர்கள் இருப்­பது இரண்­டா­வது.  இலங்­கையில் 12 ஆயிரம் சீனத் தொழி­லா­ளர்கள் பணி­யாற்­று­வது மூன்­றா­வ­தாகும். 

அதா­வது, இலங்­கையில் பெரும் எண்­ணிக்­கை­யான சீனத் தொழி­லா­ளர்கள் பணி­யாற்­று­வ­தையும் ஒரு பாது­காப்புக் கரி­ச­னைக்­கு­ரிய விட­ய­மா­கவே, பாது­காப்புத் தரப்பு கரு­து­கி­றது. அவர்­களை பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லா­ன­வர்­க­ளாக கரு­தா­வி­டினும், பாது­காப்புக் கரி­ச­னைக்­கு­ரி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இலங்கை இரா­ணுவத் தள­ப­தியே, சீனத் தொழி­லா­ளர்­களை பாது­காப்புக் கரி­ச­னைக்­கு­ரிய ஒரு விட­ய­மாக சுட்­டிக்­காட்டும் போது, இந்­தியா அதனை எவ்­வாறு எடுத்துக் கொள்ளும் என்­பதை ஊகித்துக் கொள்­வது கடி­ன­மல்ல.

வடக்கு, கிழக்கில் அதி­க­ளவு சீனத் தொழி­லா­ளர்கள் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வதை இந்­தியா தனக்­கான பாது­காப்பு அச்­சு­றுத்­த­லா­கவே கருதக் கூடும்.

இது, இந்­தி­யாவின் எதிர்ப்­புக்கு முக்­கிய கார­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும், சீன நிறு­வ­னத்­திடம் இந்த திட்டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருப்­பது சரி­யான நட­வ­டிக்­கையே என்று அமைச்சர் சுவா­மி­நாதன் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு 165,000 வீடுகள் தேவைப்­ப­டு­கின்­றன. இதனைக் கருத்தில் கொண்டே, 2 ஆண்­டு­களில் வீடு­களை அமைத்துத் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ள சீன நிறு­வ­னத்­திடம் இந்தப் பணி ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

சீன நிறு­வ­னங்­களின் மீது இலங்­கையில் பர­வ­லாக ஒரு ஈர்ப்பு தோன்­றி­யி­ருப்­பதை யாரும் நிரா­க­ரிப்­ப­தற்­கில்லை. காரணம், குறு­கிய காலத்­துக்குள் பணி­களை முடித்துக் கொடுப்­பது தான்.

இழுத்­த­டிப்புச் செய்­யாமல் வேலை­களை முடித்துக் கொடுக்கும் சீன நிறு­வ­னங்­களை பொது­வாக கட்­டு­மானப் பணி­களில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு பலரும் விரும்­பு­கி­றார்கள்.

அந்தக் கார­ணத்தை தான், அமைச்சர் சுவா­மி­நா­தனும் முன்­வைத்­தி­ருக்­கிறார்.

இந்த வீட­மைப்புத் திட்­டத்­தினால் வடக்கு -கிழக்கைச் சேர்ந்­த­வர்கள் 7000 பேருக்கு வேலை­வாய்ப்புக் கிடைக்கும் என்­பதும், அவ­ரது நியா­யங்­களில் ஒன்று.

இந்தத் திட்­டத்தை எப்­ப­டி­யா­வது, சீன நிறு­வ­னத்தைக் கொண்டு, நிறை­வேற்­று­வது என்ற உறு­தியில் அர­சாங்கம் இருக்­கி­றது என்­பதை அமைச்சர் சுவா­மி­நா­தனின் கருத்தில் இருந்து உணர முடி­கி­றது.

ஆனால் இந­தி­யாவோ, இதனை அவ்­வா­றான ஒன்­றாகப் பார்க்­க­வில்லை. வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­கான ஒரு திட்டம் முறை­யாக நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்ற கரி­ச­னையும், இந்­தி­யா­வுக்கு இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், இந்த விவ­கா­ரத்தை எப்­படி அணுகப் போகி­றது என்று தெரி­ய­வில்லை.

இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டு­களை எல்லா வழி­க­ளிலும் எதிர்த்து வரு­கி­றது இந்­தியா. அந்த வகையில், இந்த வீட­மைப்புத் திட்­டத்தில் சீனாவின் தலை­யீட்­டையும், இந்­தியா எதிர்க்­கி­றது.

பொது­வாக, இந்­தியா போன்ற நாடுகள் இத்­த­கைய விட­யங்­களை நேர­டி­யா­கவும் கையா­ளு­வது வழக்கம். மறை­மு­க­மா­கவும் கையா­ளு­வது வழக்கம்.

ஆனால் இந்­தியா இந்த விவ­கா­ரத்தை நேர­டி­யாக மாத்­தி­ரமே கையாள வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.

ஏனென்றால், இதனை மறைமுகமாக கையாளக் கூடிய தரப்பு ஒன்று ஏற்கனவே அரசாங்கத்தின் கையில் குடுமியைக் கொடுத்து விட்டது. அந்த தரப்புத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவசரப்பட்டு இந்தத் திட்டத்துக்கு பச்சைக் கொடி காண்பித்து விட்டது. 

இப்போது தான், இது சீனாவின் திட்டம் என்பது கூட்டமைப்புக்குத் தெரிய வந்திருக்கிறது. ஆரம்பத்தில் சீன நிறுவனத்தைக் கொண்டு இந்த திட்டத்தை செயற்படுத்தப் போவதாக அரசாங்கம், கூட்டமைப்பிடம் கூறவில்லை.

இப்போது, இது சீனாவின் திட்டம் என்றதும் தான், இந்தியாவை எப்படி எதிர்கொள்வது என்ற சிக்கல் கூட்டமைப்புக்கும் தோன்றியிருக்கிறது.

கூட்டமைப்பை வைத்து இந்தத் திட்டத்தை தடுப்பதற்கான வாய்ப்பை இந்தியா இழந்து விட்டதால் தான், நேரடியாகவே அது தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறது.

அனாலும், சீன நிறுவனத்தை கைவிடுவதில்லை என்பதில் அரசாங்கம் காட்டும் உறுதி, இந்தியாவுக்கு எரிச்சலைக் கொடுக்கலாம்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-01#page-1

Link to comment
Share on other sites

26 minutes ago, நவீனன் said:

வடக்­கிற்கும் பரவும் சீன ஆதிக்கம்

சீனாக்காரன் வந்தா ஆதிக்கம் அதே வேலையை  இந்தியாகாரன் செய்ய போவதாக கூறினால் வீரகேசரி எப்படி எழுதும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியா , அப்பாவி ஈழத்து தமிழர்களை அழிப்பதற்கு அமைதி படை வடிவில் ஆரம்பித்து , கேரளா நம்பூதிரி மாபியா மேனனின் மொழியில் சொல்வதனால் முகவரி அற்ற ராஜி காந்தி, தனக்கு முகவரி ஆக்கும் முயடர்ஸியில் ஓர் இனத்தை பணயம் வைத்து ஆடிய ஆட்டத்தில்  அந்த இனத்தில் வந்த தலைவனின் எதிர்ப்பாடத்தை எதிர்கொள்ளமுடியாது, கொல்லப்பட்டபோது அந்த கொலையை செய்தவர்களை தண்டிப்பது என்ற போர்வையிழும் நம்பிக்கையிலும் ஓர் இனப்படுகொலையில் முடித்து வைத்தது.

சீன சொறி சிங்கள லங்காவிடற்கு ஆயுதம் கொடுத்திருக்கலாம், ஆனால் அது முழுவதுமே வியாபாரம். ஒரு போதும் சீன கிந்தியா போன்று குழி பறித்ததில்லை.

கிந்தியவிடம் ஓர் இம்மியளவேனும் அக்கறை இருந்திருந்தால் ஒரு போதும் உலோகத்திலாலான பொருத்து  வீடுகளை தலையில் அரைக்க எண்ணியிருக்காது. அப்போது எங்கே போனது இந்த காலநிலை, மண் மற்றும் மண்ணாங்கட்டி ஆய்வுகள்? இரும்பின் விலை சந்தையில் வீழ்ச்சி அடைய, ஈழத்தமிழரின் பரிதாபத்தை முன்னிறுத்தி கழிவிரக்கம் காட்டுவது போல பாசாங்கு செய்து, ஈழத்தமிழரிடம்  கையகலாத் தன்மையை பயன்படுத்தி, சொறி சிங்கள லிங்காவின் இரும்பு சந்தையை  மிட்டலிற்கு திறந்து விடுவதே கிந்தியக் கள்ள மற்றும் குள்ள நோக்கம். அது நல்லவேளையாக முதலமைச்சர் போன்றவர்களின் உறுதியான (அதாவது கல் வீடுகளே வேண்டும்) நிலைப்பாட்டினால் கிந்தியவிற்கு கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனது.    

ஹிந்தியை தனக்கு கான் போனாலும் பறவாயில்லை, ஈழத்தமிழ் தேசத்திற்கு தலையும் போய்  அரசும் இருக்கக்கூடாது என்றே கிந்தியாவின் ஆரம்பத்தில் இருந்தே கிந்தியாவின் நோக்கம்.

கூட்டமைப்புக்கு என்ன கடமை இருக்கிறது கிந்தியவிற்கு?

கூட்டமைப்பு பதில் சொல்ல வேண்டியது இது இலங்கை தீவின் நலனுக்கு மிக உகந்தது ஆகும்.

மின்ஹயாவின் பாதுகாப்பு நலன் கிந்தியாவின் கைகளிலேயே உள்ளது. இப்படி கிந்தியா கேட்குமாகவிருந்தால் கூட்டமைப்பு "ஹிந்தியாவிற்கு இந்திய அரசை ஆள்வதற்க்கு கிந்தியவிடற்கு தகுதி இல்லை." என்று வலியுறுத்தலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.