Jump to content

Recommended Posts

முகம் - போகன் சங்கர்

 

நான் அவளை உணர்வதற்குள் மிக நெருங்கியிருந்தேன். சப்பாத்துப் பாலத்தின் மீது அமர்ந்துகொண்டு, மெதுவாய் ஓடும் தாமிரபரணியில் கால்களை அளைந்து கொண்டு நேராகப் பார்க்கையில், ஓரங்கள் கசிந்து தெரிந்தவள் பக்கப் பார்வையில் மிகப் பிரகாசமாகத் துலங்கினாள். தெருவில் அவ்வப்போது யாராவது எச்சரிப்பது உண்டுதான்.

p44a_1530192525.jpg

“சார் ராத்திரியில அந்தியில சூச்சிச்சிப் போணும். அந்தப் பாலத்துலே ஒரு சூலி வாதை உண்டாக்கும்.’’

“சூலி வாதைன்னா?”

“நிறைகர்ப்பத்துல செத்துப்போன பொண்ணு.”

“செத்தா போனா? கொன்னு தாழ்த்தியது” என்பார் ஒருவர்.

“யார் கொன்னது?”

“யாரு கொல்வா?அவளோட தந்தையோ உடம்பிறந்தானோ பர்த்தாவோ காமுகனோ அரசனோ...”

“எப்போ நடந்தது இது?”

“அது இருக்கும் ஒரு நூறு வருஷம்.”

“யாரும் பார்த்ததுண்டா?”

“பார்த்திருப்பாங்க. பத்திரமா எழுதித் தர முடியும்? காலம் காலமா நடக்கறதுதானே?”

2

ழக்கம்போல நைட் ஷிப்டில் இருந்த அமலியிடம் பேசிப் பேசி இரவு வளர்ந்து போனது. ஆனால், வழக்கம்போல நாங்கள் கவிதை பற்றியோ இசை பற்றியோ பேசவில்லை. புகோவ்ஸ்கி பற்றியோ ரால்ப் எல்லிசன் பற்றியோ பேசவில்லை. நைட் வாட்ச் மேன் அதை நெரித்த புருவங்களுடன் பார்க்கவும் இல்லை.  “அவளுக்கு இப்போ சந்தேகம் போயிடிச்சு...” என்றாள் அமலி. “இனி நாம அக்கா தம்பியாத்தான் இருக்கமுடியும்னு ஒரு உரப்பு வந்திடுச்சு” என்றாள். தலையை இறுக்கக் கட்டியிருந்த துணிவாரைத் தடவியபடியே. “ஏன்... அப்படி இல்லைன்னா அவளுக்கு என்ன?” என்றேன். அவள் பதில் சொல்லவில்லை. “ராத்திரி முழுக்க ஒரே கனவு. குழந்தைங்க கனவு. வரிசை வரிசையா வந்து என் மாரை இழுத்துச் சப்பறாங்க” என்றாள். “காலைல எழுந்தா, ஒரே வலி மார்ல. இல்லாத மார்ல.”

நான் “phantom breast pain” என்றேன்.

“நடக்கக்கூடியதுதான்.”

“ஒருவகையில் நிம்மதிதான் இல்லே.இனிமே எங்க டாஸ்க் என்னன்னு தெளிவா வரையறுக்கப்பட்டிடுச்சு. இதில இருந்து தப்பிக்கறதுதான் எங்க வாழ்நாள் வேலை.”

“ரொம்ப நாடகத்தனமா இருக்கு அமலி.”

அமலி சட்டென்று உடைந்தாள். “உனக்கு எப்படியாவது இதை நான் விளக்க முடியுமா... எப்போதாவது?’’

நான் அமைதியாக இருந்தேன்.

“எனக்குத் தோணுது இந்தியாவில தாய்மையை மிகையா மதிக்கறாங்க”

அமலி  இதற்கும் பதில் சொல்லவில்லை.

“மதுரைல இருக்கப்போ பேச்சியம்மன் படித்துறைன்னு ஒரு கோயில். கண்ணகிக் கோயில். மதுரையை எரிச்ச பிறகு, மார்பிலே வழிகிற ரத்தத்தோட அவ அங்கே வந்து உக்கார்ந்திருந்தாளாம். அங்கே எனது தோழிகளோட போறதுண்டு. ஒரு தடவை அங்கே வெள்ளம்கூட வந்திருக்கு. யோசிச்சுப் பாரு. மதுரைல வெள்ளம்! அப்பாவுக்குப் பிடிக்காது. சத்தம் போடுவார். இன்னிக்குக் காலைல இருந்து அங்கே போகணும்னு ஒரே துடியா இருக்கு. கண்ணகிக்கு ஏன் மாரைப் பிடுங்கி வீசனும்னு தோணுச்சு? அவளைப் பொறுத்தவரை அது மத்த பொண்ணுங்க வாழற இயல்பான அமைதியான வாழ்க்கையின் அடையாளம். இல்லையா?’’

நான் அவளை மேசைக்கு மேலே இழுத்து முத்தமிட்டேன். அவள் கண்கள் விம்மி, ஒரு துளி அவள் நெஞ்சின் மீது சொட்டியது.
 
“ஏன்?” என்றாள்.

“அதுவும் இப்போ? இவ்வளவு காலத்துக்குப் பிறகு? எல்லாம் போன பிறகு? நேத்து கனவுல வந்த குழந்தைங்க மாதிரி? கல்லறைல வந்து நிக்கற காதலன் மாதிரி?’’

நான், “எதுவும் போகவில்லை” என்றேன்.

 “எல்லாம் திரும்ப வரும். மெதுவா உன்னோட சுவையுணர்வு, நிறங்கள், இன்னொரு உடலுக்கான இச்சை எல்லாம் திரும்பவரும்.’’

3

நா
ன் வேகமாக அவளைக் கடந்தேன்.இரவுதான் எனினும், ஒரு மிகப் பெரிய குளிர்ந்த பொந்துக்குள் புகுந்து வெளியேறுவதுபோல அப்போது இருந்தது.ஆற்று நீரில், அவள் மெள்ள எழுந்து என் பின்னால் வருவதைப் பார்த்தேன். முகம் நிறைய மஞ்சளும் பெரிய குங்குமமும். ரத்தம்போல சிவந்த அவள் இதழ்களும் மேடிட்ட அவள் வயிறும். சிறிய பாலம்தான் எனினும் அது நீண்டுகொண்டே இருந்தது. என் பிடரியில் ஒரு குளிர்ந்த தொடுகை, “சேட்டா...” நான் திரும்பிப் பார்க்கவில்லை.

“சேட்டா நான்தான்...” ஒரு விம்மல்.

“சேட்டா இது கோமதி. உனக்க காமுகி.”

நான் திரும்பவில்லை.

குரல் உடைந்தது. “ஏய்...’’

குரலில் சீற்றம். நான், அவள் உருவம் கலைந்து வேறோர் உருவமாகத் தன்னை அடுக்கிக்கொள்வதைப் பார்த்தேன்.இப்போது அவள் முகம் சிறுத்து ஒரு புள்ளி  போலாகிவிட்டது. மார்புகள் வீங்கி இரண்டு உருளைகள் போலாகின. அவள் இடுப்பு விரிந்துவிரிந்து புடைத்தன. அவள் ஒரு பெண்ணின் கேலிசித்திரம் போலானாள்.வினோதமாக அந்த கார்ட்டூன் போன்ற உருவத்தைக் கண்டதும் நான் மிகுந்த கிளர்ச்சி அடைந்தேன். நானல்ல என் உடல். என் உடல், அது என்னை மீறிக்கொண்டு அவளை நோக்கித் திரும்பியது. ஒரு கணம்தான். நான் முற்றிலும் அவளுக்குள் கரைந்திருப்பேன். 

p44b_1530192714.jpg

அப்போது, சரியாக மீனவர் தெரு  மாதாகோயில் மணி ஒலித்து, ஒரு வசனமும் சொன்னது. “நேரம் சரியாக ஒரு மணி. நீ தண்ணீரைக்  கடக்கும்போது, நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவை உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன் பேரில் பற்றாது.’’

ஒரு நீண்ட மௌனம். நான் திரும்பி “அம்மா...’’ என்றேன்.

ஒரு கிறீச்சிடும் ஒலியுடன் அவள் பிம்பம் கலைந்துபோனது.

4

“ஆ
வந்துடு பிள்ளை” என்று ஒரு குரல் கேட்டது. பாலத்தின் மறுகரையில் பெட்டிக்கடை வைத்திருக்கும் கிழவி. அவள், இரவுகளில் சில நேரம் அங்கேயே படுத்துக்கொள்வதுண்டு. நான் அந்தியில் சிகரெட் பிடிக்க ஒதுங்கும் இடம் அது.

“உனக்க கோளு  இன்னிக்குக்  காப்பாத்திடுச்சு” என்றாள் அவள்.

நான், “நீங்க பார்த்தீங்களா” என்றேன்.

அவள், “பின்ன?” என்றாள்.

“ரொம்ப நாள் கழிச்சி  இன்னிக்கு எந்திரிச்சி வந்திருக்கா பாவம்” என்றாள். “அவ உன் பின்னால அழுதுகிட்டே வரும்போது, ஒரு கணம் ஒரு குடிகாரனோட ஓடிப்போன என் மக நினைப்பு வந்து வயித்தைக் கலக்கிப்போட்டது! வீட்டுல இருந்த குடிகாரத் தாயோளிக்கிட்டே இருந்து தப்பிச்சி போறேன்னு அவன் கையிலக் கிடந்து சீரழியறா. ஒரு நிமிஷம் பகவதியே! இன்னும் என் மக்களுக்கு என்னென்ன துயரத்தை நீ வச்சிருக்கேனு தோணிப்போட்டது. உலகத்து அநீதியை நீ அழிக்க நினைச்சா மதுரையை மட்டுமா நீ அழிக்கணும்? சொந்த தந்தையும் சோதரனையும் பர்த்தாவையும் முதல்ல கொன்னுபோடணுமே” என்றாள்.

“அது சரி நீ திரும்பி அவகிட்டே என்ன சொன்னே?” என்றாள்.

நான் பதில் சொல்லவில்லை. “சரி பிள்ளே நீ போ... இனிமே இங்கே ரொம்ப நிக்காத. போகும்போது, இடைத்தெரு வழியா போ என்னா...’’

நான் “ஏன்?” என்றேன்.

“இன்னிக்கு இவ இங்கே நின்னான்னா அங்கே அநேகமா பெருந்தெருவில இருக்கற அக்கா தங்கச்சி இரண்டு முத்தாரம்மனும்  எந்திரிச்சி நிக்கத்தான் செய்வாங்க. அவங்க மத்தில அது ஒரு கணக்கு. யட்சிக்குத்  தப்பி இசக்கி வாயில வுழுந்துடப் படாது” என்றவள், “அதுக்காக ரொம்ப பயப்பட வேணாம். யட்சியும் இசக்கியும் நாம உருவாக்குறதுதான் என்னா? நம்மளோட தள்ளையும் பிள்ளையும்தான் என்னா?’’

5

நான், அவள் சொன்னதுபோலவே பெருந்தெரு சந்திப்பிலிருந்து விலகி, இடைத்தெரு  திருப்பில் நடந்தேன். அங்கே மூத்த முத்தாரம்மன் கோயில் சந்திப்பில்   யாருமில்லை. ஏன் சுற்றிப்போக வேண்டும் என்று தோன்றிய அந்த கணத்தில் அதனைப் பார்த்தேன். ஏழு எட்டு அடி உயரத்தில் உயர்ந்தெரியும் ஒரு நெருப்புக்கோளம். அது அங்குமிங்கும் உலவுவதுபோல நடந்துகொண்டிருந்தது. யாரோ உடலில் தீப்பற்ற வைத்துக்கொண்டு ஓடிவருவது போல ஓடிக்கொண்டிருந்தது.

நான் திடுக்கிட்டு “அது வீனஸ்” என்றேன். “அவள் வீனஸ்!” ஆப்பிரிக்கக் குகைகளில்  மில்லியன் ஆன்டுகளுக்கு முன்பு தொடர்ந்து வரையப்பட்ட பெண் சித்திரம். இன்னமும் ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

என்ன நடக்கிறது! கோமதி ஏன் அந்த வடிவத்தை அடைந்தாள்!

நான் அவளை, அம்மா என்று ஏன் அழைத்தேன்!

என் உடல் நடுங்குவதுபோலத் தோன்றியது. நான் தலையைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்தேன்.

அப்போது, “இரவாடி!” என்றொரு குரல் கேட்டது. விண்மீன்களின்  கண்காணிப்பின் கீழ் உறங்குகிற இமைகளை உடையவன்.

அந்த வீட்டின் நிழலிருந்து அவள் வந்தாள். “சிகரெட் வேணுமா தோழர்? அதுக்காகத்தான் இந்த ராத்திரில இங்குமங்கும் அலையறீங்களா?”

“தமிழ்! நீ எங்கே இங்கே?”

தமிழ்ச்செல்வி புன்னகைத்து வழக்கம்போல ஒளிச்சோட்டம். இம்முறை  ராஜஸ்தான் போலீஸிடமிருந்து. அங்கே ஓர் ஏமானைச் சுட்டுட்டேன் தோழர்.’’
 
நான் வியப்புடன் அந்த வீட்டைத் திருப்பிப் பார்த்தேன். “இவர் ஒரு இயக்க உறுப்பினர் என்று எனக்குத் தெரியவே தெரியாது.”

அவள் சிரித்து, “அவருக்கும் தெரியாது” என்றாள். மூணு நாளா இங்கேதான் இருக்கேன். பகல் முழுக்க அவர் வீட்டில இருந்த மலையாள பகவத் கீதையைப் படிச்சி மண்டை வறண்டுபோச்சி. அது செரி. நீங்க எங்கிருந்து சாடி வாரீக?’’

நான் பதில் சொல்லவில்லை.

அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. “ரொம்பப் புழுக்கமா இருக்கு பிரதர். உங்க ஊருக்கு வந்துட்டு ஆத்தில குளிக்காம போனா எப்படி?”

நான் “இப்போவா?’’ என்றேன்.

அவள் “இப்போ” என்றாள். நான் தயங்கினேன்.

பிறகு, அவளை மகாதேவர் கோயில் அருகே இருக்கும் படித்துறைக்கு அழைத்துப் போனேன். “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க தோழர்... பிசாசைப் பார்த்தாப்ல?’’

p44c_1530192806.jpg

படித்துறையில் வழக்கமாக எரியும் மஞ்சள் பல்பு எரியவில்லை. யாரோ குடிவிரும்பிகள் அதைக் கொன்றிருந்தார்கள்.மகாதேவரின் கோபுரம் நீண்டு, மௌனமாக நதியின் மீது தலைகீழாய்க் கிடந்தது. ஒட்டி நின்ற ஆலமரம் நீரோட்டத்தில் விரல்களை அளைந்துகொண்டிருந்தது. அதன் முனைகளிலிருந்து பனித்துளிகள் ஒரு தேம்பும் சப்தத்துடன் நதிக்குள் சொட்டின.தமிழ்ச்செல்வி தனது சட்டையைக் கழற்றிவிட்டு ஜீன்ஸ் பேண்டுடன் ஆற்றுக்குள் இறங்கினாள். நீரோட்டத்தில் அவள் மார்புகள், நதி பறித்துச் சென்றுவிட முயலும் இரண்டு நெய்தல் மலர்கள்போல அசைவதைப் பார்த்தேன். ‘மணிக்குலை கள் நெய்தல்’ என்று சொல்லிக்கொண்டேன்.ஆனால், நெய்தல் காலையில்தான் மலரும்.நீலமே இரவில் மலரும்.

தமிழ்ச்செல்வி திரும்பி “கவியே இறங்கி வா” என்றாள். “இறங்கி வாடோ”

நான் இறங்கவில்லை. அவள் பெருமூச்சுடன் மேலே கவிழ்த்துக் கொட்டியதுபோல கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி நீந்த ஆரம்பித்தாள். அவற்றின் மெலிந்த ஒளியில் அவள் உடல் ஒரு படகுபோல் அசைந்தது.

“நீ எப்போதும் பிசாசுகளை அருவங்களைக் கண்டதில்லையா தமிழ்” என்றேன் நான். பிறகு சற்று தயங்கி, “நீங்கள் கொன்றவர்கள் உங்களைத் தேடி வருவதில்லையா?”

அவள் நீருக்குள் நின்றுகொண்டே என்னைக் கூர்ந்து பார்த்தாள்.

“எனக்கு அதற்கு நேரமில்லை தோழர். உயிரோடு இருப்பவர்களையே என்னால் சில சமயங்களில் பார்க்க முடிவதில்லை.உதாரணமாக நான் உதய்ப்பூரில் சுட்டுக் கொன்ற நபரை, கொல்லும் முன்பு அவன் கண்களைப் பார்த்தேன். உண்மையில் அவன் எப்போதோ இறந்து போயிருந்தான்.எனக்கு ஒரு கணம் இரக்கம்கூட தோன்றிவிட்டது. அவனை யாரோ எதுவோ எப்போதோ கொன்றிருந்தது. அது அவன் மதமாக வர்க்கமாக சாதியாக இருக்கலாம். ஆனால், அப்போது அவன் உயிரோடு இல்லை. ஆனாலும், நான் அவனைக் கொன்றாக வேண்டும். அவன் இரண்டு சிறுவயது சகோதரிகளைக் கற்பழித்துக் குடிசையோடு எரித்துக் கொன்றிருக்கிறான். நியாயம் கேட்கப்போன அவர்களின் தந்தையையும். அவனை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. போலீஸ், பத்திரிகைகள், நீதிமன்றம்... நான் அவனைக் கொன்றேன். ஆனாலும், நான் ஒரு சவத்தை மீண்டும் கொல்லும் அருவருப்பையே  அன்று அடைந்தேன். ஹா! உங்கள் கீதையும் அதைத்தானே சொல்கிறது. உங்கள் கீதைக்கு ஒருநாள் நக்சல் உரை ஒன்றை நான் எழுதக் கூடும் தோழர்” என்று சிரித்தாள்.

“காலனிய நீக்கம் எப்போதும் வன்முறையாகத்தான் இருக்கும் தோழர். உன் கையிலிருக்கும் என் துப்பாக்கி, அது ஒரு போலீஸ்காரன் கையில் இருந்தது. அவன் அதை உத்திரப்பிரதேசத்தில் ஆசம்காரில் கள்ளத்தனமாகப் பெற்றான்.ஆசம்காரில் உலகின் எல்லா ஆயுதங்களும் கிடைக்கும். அவன் ஒரு புகழ்பெற்ற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட். அவனைப் பத்தாண்டுகளுக்கு முன்பு அடிக்கடி செய்தியில் காட்டிக்கொண்டிருந்தார்கள்.பிறகு, ஒருநாள் அவன் மறைந்துபோனான்.நான் அவனைச் சில வருடங்களுக்கு முன்பு காசியில் பார்த்தேன். காசியில் தேவ் தீபாவாளிப் பண்டிகை அன்று. தேவ் தீபாவளி, காசியின் உச்சகட்ட பண்டிகை. நீ ஒருநாள் அதைக் காண வேண்டும்” என்றாள் அவள்.

“நீ ஒரு கொண்டாட்டங்களின் மனிதன் அல்லவா? தேவ் தீபாவளி, கொண்டாட்டத்தின் உச்சம். நமது தீபாவளிக்கு 15 நாள்கள் கழித்து வரும். அன்றைக்கு தேவர்கள், பூமிக்கு இறங்கி கங்கையில் நீராடுகிறார்கள். இந்தியக் காவல்துறை, அதை தியாகிகளின் தினமாகவும் கொண்டாடுகிறது. உண்மையில் நான் அங்கு அன்றிருந்தது மடத்தனம். காசி முழுக்க போலீஸும் பட்டாளமும் நிறைந்திருக்கும். ஆனால், எனக்குள் இருக்கும் ஒரு தஸ்தாயெவ்ஸ்கி அரிப்பின் காரணமாக நான் அங்கு போனேன்.அங்குதான் நான் அவனைப் பார்த்தேன்.தனியாக கங்கைக்கரையில் விலகி நின்றுகொண்டிருந்தான். காசியின் வானில் வெடித்துச் சிதறும் வாணவேடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு. ஒவ்வொரு படித்துறையின் மடியிலும் ஒளிரும் லட்சக்கணக்கான விளக்குகளைப் பார்த்துக்கொண்டு. நான் அவன் பின்னால் போய் நின்றேன். பெயர் சொல்லி அழைத்தேன். அவன் திரும்பினான்.காதோரம் மட்டும் லேசாக நரைத்திருந்தது.அவனது கூரிய விழிகள் நான் அவனைக் கண்டுகொண்டதுபோலவே என்னையும் கண்டுகொண்டன. நாங்கள் இருவரும் ஒரு படகை நிறுத்தி ஏறி, கங்கையின் ஒவ்வொரு காட்டாகப் பார்த்தோம். அவன்தான் சொன்னான், “இன்று தியாகிகள் நாள்கூட.இன்று காலையில் நான் கொன்ற ஒவ்வொருவருக்கும் திதி அளித்தேன்.”

 நாங்கள் இறங்கும்போது, விடிகாலை மூன்றுமணி. கங்கையின் குளிர், தாங்க முடியாதபடி ஏறிவிட்டிருந்தது. அவன் இறங்குகையில் ஒருமுறை என்னைக் கட்டியணைத்து, “நாம் எல்லோருமே செய்ய வேண்டியதைச் செய்யவேண்டி இருக்கிறது அவ்வளவுதான்.” என்றான்.

தமிழ்ச்செல்வி இதைச் சொல்லிவிட்டு, சற்றுநேரம் மெளனமாக இருந்தாள். “அவன் அதைச் சொல்லியிருக்கக் கூடாது. எனக்குள் ஏதோ கிளர்ந்தது. நான் சட்டென்று எனது துப்பாக்கியை உருவி அவனைத் தலையில் சுட்டுக் கொன்றேன்.”

நான் அதிர்ந்துபோய் எழுந்துவிட்டேன். “ஹா’’

அவள் “ஆமாம் தோழர். காலனி நீக்கம் ரத்தமும் சகதியுமாகத்தான் இருக்கும். அது உங்கள் அழகியல் உணர்வுகளை அதிகம் சீண்டாது, நறுவிசாக இருக்கும் என்று நினைக்காதீர்கள்.”

நான் “பிராண்ட்ஸ் பனான்” என்றேன்.

அவள், “ஹா! நீங்கள் கவிஞர் அல்லவா? பனான் பிடிக்காது. வன்முறையாளன்.உங்கள் மென்உணர்வுகளைச் சமன்படுத்த உங்களுக்காக ஒரு கவிதை சொல்கிறேன்.  “கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு சிட்டுக்குருவி முழுப் பிரபஞ்சத்தையும் பதற்றத்தில் ஆழ்த்துகிறது.”

நான் “வில்லியம் பிளேக்” என்றேன்.

அவள் சட்டென்று கோபமடைந்து, “உன்னை... உங்களை... ஏன் அதன் அவலக்குரல் ஒன்றுமே செய்யவில்லை தோழர்?’’ என்று கத்தினாள்.

“நீ ஏன் செத்தவர்களைப் பற்றியே கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாய்?’’

நான் மவுனமாக இருந்தேன். அவள் ஆங்காரத்துடன் நீந்தி, கரையின் மறுபுறத்துக்குப் போனாள். நான், ‘அங்கே பெரிய கயங்கள் உண்டு’ என்று எச்சரிக்க நினைத்து தடுத்துக்கொண்டேன். சற்று நேரம் பதற்றத்துடன் அவள் வருகைக்காகக் காத்திருந்தேன். லேசாக மழை பொழிய ஆரம்பித்தது. உறக்கத்தில் ஒரு குழந்தை எழுப்பும் ஓசைகளைப்போன்ற ஒலிகளை மட்டும் நதி எழுப்பிக்கொண்டிருந்தது.

அவள், ஏறக்குறைய ஒரு யுகம் போன்ற இடைவெளிக்குப் பிறகு திரும்ப வந்தாள்.அப்போது அவள், நடன அரங்கின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மிக நளினமாக, ஒரு செளந்தர்யப்பிழையும்  இல்லாது நகரும் தேர்ந்த நடனமாது போலத் தோன்றினாள். வர்க்க எதிரியைக் கொல்லும்போதும் அவள் முகத்தில் உடலில் இதே சாவதானம் இருக்கும் என்று தோன்றியது.

அவள் ஒருமுறை, ‘புளிச்’ என்று நீரைத் துப்பினாள்.

“அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு விவிலிய வசனம் இருந்தது, ‘செத்தவர்கள்  செத்தவர்களைப் புதைக்கட்டும்.’ அவள் கண்கள் தூரத்தில் நிலைத்தன. பாலத்தில் ஒரு வாகனம் சென்றது. “மதுரை வீதியில் ஆற்று மணல் கொள்ளைக்காரர்களால்  அவர் கொல்லப்பட்டுக் கிடந்தபோது, நான் அதையே நினைத்துக்கொண்டேன். நான் உயிரோடிருப்பேன். உயிரோடு இருக்கிற இறுதிநொடி வரைக்கும் நான் உயிரோடிருப்பேன். இறந்தவர்கள் இறந்தவர்களுக்காக அழட்டும்.’’

“மற்றவர்கள் போகட்டும். நீ ஒருமுறைகூட அப்பாவின் நெருக்கத்தை உணர்ந்ததே இல்லையா?”

“அவர் தனது இயக்கத் தோழர்களுக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும்  அப்பாவை  நான் உணர்ந்திருக்கிறேன். அவரது நாட்குறிப்புகளில் தென்படும் அதே இடதுபக்க சாய்வெழுத்து எனது கையெழுத்திலும் வருகையில்...” என்றாள் அவள்.

நான் அதைக் கேட்கவில்லை.

“ஆ! எப்போதும் விண்ணிலிருந்தே  அதிசயங்களை நாடும் விரியன் பாம்புக்குட்டிகள்!’’

அவள் கரையேறி தனது சட்டையை உதறி அணிந்துகொண்டாள். “ஒருமுறை கோட்டயம் சிறையில் பிளாச்சிமடா சமரத்தின்போது , சன்னல் வழியாக வானில் பெரும் குவியலாகத் திரியும் குருவிக் கூட்டத்தைப் பார்த்தேன். அவை உருமாறி உருமாறி ஏதோ ஒரு கணத்தில் அப்பாவின் முகத்தை அடைந்தன. அப்பாவின் இதழ்க்கோடி அதே அலட்சியப் புன்னகையுடன். இதுவாணோ நீ வேண்டி நிக்குன்ன வானத்து அதிசயம் கவியே?’’

நான் பேசாதிருக்க, அவள் நெருங்கி என்னை முத்தமிட்டாள். “உனக்குக் கோபம் வந்துவிட்டது! ஹவ் ஸ்வீட்!’’

“போலாம் தோழர்” என்றாள்.

“ஒண்ணு சொல்லணும். கோட்டயம் ஜெயிலில் கிடைப்பதுபோல சுவையான கஞ்சியை நான் எனது அம்மை கையில்கூட குடித்ததில்லை. என் வாழ்வில் நான் கண்ட மிகப்பெரிய அற்புதம் அது. அன்று நான் அடைந்த நல்ல சோறும் உறக்கமும் இதுவரை எனக்கு மீண்டும் கிட்டியதில்லை. ஆம்.மனிதனின் அடிப்படைத் தேவை அதுதானே.சோறும் உறக்கமும். இதில்கூட விஷத்தைக் கலப்பவர்களைத்தான் நான் கொல்கிறேன்.ஆனால், கவலைப்படாதே... காந்திஜி இரவுகளில் தன்னை அறியாமல் விந்து வெளியேறியதற்காக வருந்தியதைவிட நான் என்னால் கொல்லப்பட்டவர்களுக்காக அதிகம் வருந்துகிறேன்.’’

அவள் தனது துப்பாக்கியைக் கேட்டு வாங்கிக்கொண்டாள். “எனது வாழ்வில் நான் அடைந்த இன்னொரு அற்புதம் இது.நீ என்றாவது ஒருநாள், நீதியே பெரிய அற்புதம் என்றும் அழகு என்றும் உணர்வாய்.அன்று இதைத் தேடி நீயும் வருவாய்.”

6

தெ
ருவில் வழக்கத்துக்கு எதிராக நாய்களையே காணவில்லை. காம்பவுண்டு போட்ட வீட்டுக்குளிருந்த ஒரு வெளிநாட்டு நாய் மட்டும் போர்டிகோவில் முனகிக் கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் ஈனஸ்வரத்தில் பரிதாபமாக ஊளையிட்டது. பிள்ளையார் கோயில் அருகே ஒரு வாகனம் நின்றிருந்தது. அதனுள் யாரோ உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

பலமுறை கதவு தட்டிய பிறகே, சித்தி கதவைத் திறந்தாள். “எய்யா வா என்ன இத்தினி நேரமாயிடுச்சி?”

உள் அறையில் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். அறை  முழுவதும் பால் வீச்சம் அடித்தது. “நீ சாப்பிட்டியா?” என்றாள் சித்தி. அடுக்களையில் புகுந்தவளைத் தடுத்தேன். ஹாலின் மத்தியில் தொங்கிய தொட்டில் அசைந்தது. சிறிய சதங்கைகளின் ஒலி. சித்தி  உள்ளே எட்டிப் பார்த்து, “அடடே அப்பா வந்துட்டாங்கன்னு பொண்ணுக்குத் தெரிஞ்சிடுச்சோவ்?” என்றாள். மெள்ள ஒரு மலர்போல எடுத்து, “ஈரமாக்கிட்டாபோல. கொஞ்சம் பிடி” என்று என் கையில் அவளைத் தந்துவிட்டுப் போனாள்.

குழந்தை கண்ணை மலர்த்தி என்னைப் பார்த்தாள்.

நான் ஒருகணம் திடுக்கிட்டேன். ரொம்பப் பரிச்சயமான கண்கள் இவை. பிறந்து முப்பது நாள்களே ஆன ஒரு குழந்தையின் புதிய கண்களே அல்ல இவை. இந்தக் கண்களை இந்த வாழ்க்கை முழுவதும் இந்த நாள் முழுவதும் இந்த இரவு முழுவதும் நான் பார்த்திருக்கிறேன்.

மிகச் சமீபத்தில் சப்பாத்துப் பாலத்துக்கு மேல் அவற்றைப் பார்த்தேன். அமலியின், கிழவியின், தமிழ்ச்செல்வியின் கண்களும் அவைதான்.

குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு அறைக்குள் வந்து சன்னலைத் திறந்தேன்.வானில் நிலவில்லை. ஆனால், நட்சத்திரங்கள் இறைந்து கிடந்தன. அதில் ஒரு நட்சத்திரம் மட்டும் இங்குமங்கும் அலைவதுபோலத் தோன்றியது. அது நட்சத்திரம்தானா?

அது ஒரு போலீஸ் வாகனம்! என் வீட்டுக்கு வெளியே நின்றுகொண்டிருந்தது ஒரு போலீஸ் வாகனம்.

அதை உணர்ந்த அந்த நிமிடத்திலேயே  நான் அந்த ஒலிகளைக் கேட்டேன். ஒரு வேட்டுச் சத்தம். வேகமாகச் சிலர் ஓடும் சப்தம். மீண்டும்  ஒரு வேட்டுச் சத்தம். பிறகு  அமைதி.

7

கா
லையில் அந்த வாகனத்தைக் காணவில்லை. இரவு காலடிகள் பாவிச் சென்ற பாதையிலேயே கொஞ்ச தூரம் நான்  நடந்தேன். சிறிய மழை ஒன்று எவ்வித அறிவிப்புமில்லாமல் பொழிய ஆரம்பித்தது. வடக்கு முத்தாரம்மன் கோயிலுக்கு வெளியே சாலையில் கொஞ்சம் குருதி பரவிக் கிடந்தது. அதை மழை கலைத்துக்கொண்டிருந்தது.

நான் அங்கே நின்று அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு சிட்டுக்குருவியின் துன்பம், பிரபஞ்சத்தைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது.”

8

வா
னில் பெரிய குருவிக் கூட்டம்  ஜப்பானிய விசிறியைப்போல மடிந்து மடிந்து வெவ்வேறு உருவங்களைக் காட்டிக்கொண்டிருந்தது.

அவற்றில்  ஓர் உருவமாக தமிழ்ச்செல்வியின் முகமும் இருந்தது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகம் .....பல முகங்களைக் காட்டும் கதையாக இருக்கிறது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Popular Now

  • Topics

  • Posts

    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
    • தனிப்பட்ட செல்வாக்கு? அதே போல் கன்யாகுமரியில் பொன் ராதா வுக்கும் வாய்பிருப்பதாக தெரிகிறது.    
    • எங்களுடைய கட்சியின் பலம் பலவீனங்களை நாங்கள் சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S.Shritharan) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது தமிழரசுக் கட்சிக்குள்ளே பல இடைவெளிகள் அதிகரித்திருக்கின்றன என்பது உண்மைதான். திகதியை மறுத்த சுமந்திரன் அடுத்தடுத்த கலந்துரையாடல்கள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி நாங்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் ஒன்றினை கொழும்பில் உள்ள சம்பந்தன்(R.Sampanthan) ஐயாவின் வீட்டிலே நடத்தியிருந்தோம்.                                சில முரண்பாடான நிலைகள் தொடர்பில் இதன்போது கலுந்துரையாடப்பட்டது. இதனையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M.A.Sumanthiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் உள்ளிட்டோர் மறுதினம்(11 ஜனவரி) என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தில் கலந்துரையாடியிருந்தோம். அதன் பின்னர் மத்திய செயற்குழு கூட்டம் தொடர்பில் நான் ஒரு திகதி கூறியிருந்தேன். சுமந்திரன் அதனை மறுத்து மற்றுமொரு திகதி குறிப்பிட்டார். எனினும் மத்திய செயற்குழு கூட்டம் நிறுத்தப்பட்டது. மாவை சேனாதிராஜா தான் நிறுத்தவில்லை என்று தெரிவித்ததுடன், மருத்துவர் சத்தியலிங்கம் பேசும் நிலையிலேயே இல்லை. இதற்கிடையில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தார்.    https://tamilwin.com/article/ilangai-tamil-arasuk-katchi-current-issues-1713545072
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.