Jump to content

முக்கிய உலக நிகழ்வுகள்....முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு


Recommended Posts

முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

ராட்சத டைனோசர்

முப்பது மில்லியன் அண்டுகளுக்கு முந்தைய டைனோசர் கண்டுபிடிப்புபடத்தின் காப்புரிமைSPL

முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய, பத்து டன் எடை கொண்ட ராட்சத டைனோசரின் புதை படிவங்கள் அர்ஜென்டினாவில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு ஏற்கெனவே தெரிந்த டைனோசர்களுக்கு முந்தையது இது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

முப்பது மில்லியன் அண்டுகளுக்கு முந்தைய டைனோசர் கண்டுபிடிப்புபடத்தின் காப்புரிமைCECILIA APALDETTI

அதுமட்டுமல்லாமல், டைனோசரின் காலம் குறித்து நாம் கணித்த காலத்திற்கும் முன்பே இந்த புவியில் அவை வாழ்ந்துள்ளன என்பதை இந்த புதைபடிவங்கள் நிரூபிப்பதாக கூறுகிறார்கள் அவர்கள்.

Presentational grey line

அகதிகள் குறித்த நகைச்சுவை

ஜெர்மன் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹூஃபர் ஆஃப்கன் அகதிகள் குறித்து கேலி செய்திருக்கிறார்.படத்தின் காப்புரிமைAFP

ஜெர்மன் உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீஹூஃபர் ஆஃப்கன் அகதிகள் குறித்து கேலி செய்திருக்கிறார். அதாவது, தனது 69வது பிறந்தநாள் அன்று 69 அகதிகள் ஜெர்மனைவிட்டு வெளியேறியதாக கூறி உள்ளார். இந்த 69 அகதிகளும் விமானத்தில் ஜூலை 4 ஆம் தேதி அன்று ஆஃப்கன் அனுப்பப்பட்டனர். அகதிகள் குறித்து 'குடியேறிகள் சிறப்புத்திட்டம்' என்ற ஒரு திட்டம் குறித்து பேசும்போது இவ்வாறாக கூறி உள்ளார். ஆனால், இந்த திட்டமானது ஜெர்மன் எதிர்கட்சிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கன் இன்னும் பாதுக்காப்பற்ற நாடாகதான் விளங்குகிறது. தாலிபன், இஸ்லாமியவாத குழுக்கள் அரசு படைகளுக்கு எதிராக அங்கு சண்டையிட்டு வருகின்றன.

Presentational grey line

நிலவுக்குவிண்கலம்

நிலாவுக்கு விண்கலம்படத்தின் காப்புரிமைSPACEIL

இஸ்ரேலிய அரசுசாரா நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு இறுதியில் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. எலான் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபால்கன் 9 ஏவுகணை மூலம் டிசம்பர் 9 ஆம் தேதி ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து இந்த விண்கலத்தை செலுத்த இருப்பதாக ஸ்பேஸ்ஐஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த விண்கலம் 2019 பிப்ரவரி மாதம் நிலவில் தரை இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line

ஃபேஸ்புக்-குக்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்

ஃபேஸ்புக் 5 லட்சம் பவுண்டுகள் அபராதம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தரவுகள் திருட்டு விவகாரத்தில் பிரிட்டன் தகவல்கள் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு ஃபேஸ்புக்கிற்கு 5 லட்சம் பவுண்டுகள் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி அபராதம் விதிக்கப்படும்பட்சத்தில் இதுதான் ஃபேஸ்புக்கிற்கு எதிரான முதல் மிகப்பெரிய தண்டத் தொகையாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/global-44789923

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.