Jump to content

தோல்வி என்றால் உண்மையில் என்ன?


Recommended Posts

தோல்வி என்றால் உண்மையில் என்ன?

1. தோல்வி என்றால் நீங்கள் தோற்றபின் என்று பொருள் அல்ல!!

நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்று தான் பொருள் படும்!!

2. தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல!1

சில பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று தான் பொருள்!!

3. தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் அல்ல!1

முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறது என்பது பொருள்!1

4. தோல்வி என்றால் உங்களிடம் அறிவு இல்லை என்று பொருள் அல்ல!!

வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தினை உணர்ந்துவிட்டீர்கள் என்பது தான் பொருள்!!

5. தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் அல்ல!!

மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது என்பது தான் பொருள்!1

6. தோல்வி என்றால் விட்டு விட்டு ஓட வேண்டும் என்பது பொருள் அல்ல!!

இனிமேல் தான் உண்மையாக உழைக்கத்தொடங்க வேண்டும் என்பது தான் பொருள்!!

7. தோல்வி என்றால் உங்களால் பிரபல்யமாக மிகச் சிறந்த இடத்தினை அடையமுடியாது என்று பொருள் அல்ல!!

அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்பது தான் பொருள்!1

8. தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கைவிட்டுவிட்டார் என்று பொருள் அல்ல!!

உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தினை நிர்ணயம் செய்து வைக்கிறார் என்பது தான் பொருள்.

உங்கள் வாழ்க்கை உங்களை தனிமையில் ஊங்சலாட வைக்கும் போது வாழ்க்கையினை வெறுத்து ஒதுங்காதீர்கள்.

வாழ்க்கையில் எந்நேரத்தில் எதுவும் நடக்கலாம். அது உன்னை எனி இல்லை என்ற இடத்துக்கும் கொண்டு போய்விட்டுவிடும் ஆகவே

1. வாழ்க்கையில் எந்தப் பிரச்சைனையாகிலும் வளைந்து கொடுங்கள். முறித்து விடாதீர்கள்.

2. உங்களின் திறமையினை தட்டி எழுப்பி அதனினை மேல் கொண்டு வரப்பாருங்கள். அயர்ந்து விடாதீர்கள்.

3. உங்களுக்கு என்று வாழ்க்கையில் ஒரு அடையவேண்டிய குறிகோளினை ஏற்படுத்தி அதற்கேற்ப துடுப்பினை களைக்காது சலிக்காது முயன்று வெற்றி அடையவேண்டும் என்ற குறிகோளினூடு கப்பலை பெரும் காற்றின் வழியே நகர்த்துங்கள்.

4. முயற்ச்சி உடையவர்களே இதிலே வெற்றிபெறுகிறார்கள். கடைமையை செய்யுங்கள் பலனை எதிர்பாராது செய்யவேண்டிய வேலையில் கண்ணும் கருத்தும்மாய் இருங்கள்.

5. இதற்காக ஒரு முன்னோரின் வாழ்க்கையினை ஒன்றிப்போகக்கூடியவாரு ஒருவரினை பின்பற்றுங்கள்.

6. தோல்விகள் வந்தால் மேற்சொன்னதற்கமைய மீண்டும் மீண்டும் ஆயிரம் தடைவையாயினும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உங்கள் படகினைச் செழுத்துங்கள். பின்னாலே திரும்பிப்பார்க்காதீர்கள். முடிந்தவை மீண்டும் வரப்போவதில்லை.

7. உமக்கொன்று ஒரு சிந்தனை, கொள்ளைகளினை, ஒழுக்கமான வாழ்க்கை முறைகளினை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதனினை நாளாந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கப் பாருங்கள்.

8.உங்களினை நீங்கள் உயர்வாக கருதி உங்களினை நீங்களே மதியுங்கள். பெருமையாக உங்கள் செய்கைகளினை கருதுங்கள்.

9. முயற்ச்சி செய்தும் வெற்றி கிடைக்கவில்லை என்றால் இன்னும் சிறிது கூட ஆழமாக தோண்டுங்கள்.

10. வெற்றியைத்தேடி நீங்கள் கதவினைத்தட்டித்தட்டி ஏறி இறங்குங்கள். வெற்றி உங்களினை தேடி வராமல்.

11. பிழைகள் விடுவது எல்லாம் பிழைகள் எப்படி நடக்கின்றன என்று அறிவதற்கே. ஆகவே ஏன் இப்படியாக நடக்கிறது என சிந்தித்து உங்கள் பாதையினை சரியான பாதையில் செலுத்துங்கள்.

12. பொஸிடீவாக இருந்து உங்கள் செயல்களால் வருவன நல்லவையோ, கஸ்டமோ சந்தோசமாக அவையினை ஏற்றுக்கொண்டு பாடம் படித்து எனி சரியான வழியினை தேர்ந்தெடுங்கள்.

13. இந்த உலகத்தில் கஸ்டப்பட்டு பின்பு அடைவது தான் காலம் காலமாக் உங்களுடன் நிற்கும். ஆகவே ஒரு பொருளும் ஈசியாக வருவதேயில்லை. அப்படி வருவது உங்களிற்கு பெருமதியாக இராது.நீங்களே அதை மதிக்க மாட்டீயள்.

14. பிரச்சைகள் வருகிறது என்றால் நீங்கள் போகும் மார்க்கத்தில் ஏதோ தவறுகள் இருக்கின்றன. ஆகவே எங்கே தப்பு நடக்கின்றது என்று பார்த்து திருந்திக்கொள்ளுங்கள். ஏன் இப்படி நடக்கிறது என்று தெளிவாக பிழையான வழிகளினை கண்டு பிடியுங்கள்.

15. உங்களினையே பார்த்து கேளுங்கள். நீங்கள் எங்கே என்னும் ஒரு அடுத்த பத்து ஆண்டுகளின் பிற்பாடு எப்படி இருக்கப்போகிறீர்கள் அதற்கு இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று யோசியுங்கள். பத்து வருடங்களின் பின்பு உங்கள் உடல் பலம், மனோ பலம் மாறிவிடாலாமில்லையா?

16. உங்களின் கடந்தகால அனுபவங்கள் தான் உங்கள் வழிகாட்டிகள். தேவையானவற்றை எதிர்காலதிற்கு தேவைப்படும் போது அனுபவத்தினூடே ஆராய்ந்து புத்திசாலித்தனமாக, விவேகமாக முன்னேறுங்கள். வாழ்க்கை உங்கள் நண்பன். வரலாறு உங்கள் வழிகாட்டி.

17. உங்களுகென்று வகுத்துவிட்ட கொள்கைகளில் எப்பவும் உறுதியாக இருங்கள்.

18. உங்கள் வாழ்க்கை வட்டத்தின் வெளியே வந்து நின்று உங்களினை ஆராயுங்கள். உங்கள் குறுகிய சிந்தனையை விட்டு வெளியில் வந்து ஆராயுங்கள்.

19. எப்ப, எங்க, என்ன கதைக்கவேண்டும், எதைச்செய்யவேண்டும், எப்படிச்செய்யவேண்டும் என்று தெளிவாய் இருங்கள்.

20. கஸ்டப்பட்டு வேலை செய்யாது திறமையாய் விரைவாய் சரியாக செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

21. எல்லா வழிகளினையும் பயன் படுத்துங்கள்.

22. நீங்கள் நினைத்தால் நினைத்ததை நடத்தி முடிக்க முடியும்.

23. தேவையான போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.