Jump to content

பிரிய சிநேகிதி...


Recommended Posts

பிரிய சிநேகிதி,

மன்னிப்பாய்...!

மெளனத் தவம்

கலைத்துச்

சகுனம் பார்க்காது

காதலென்னும் மாய

வார்த்தை சொன்னேன்!

உள்ளம் மூடி

வைக்காது...

பள்ளம் விழுந்ததடி

உன் பார்வை

பட்டென்றேன்

நீயும் பட்டென

பதில் சொன்னாய்

என்னைச் சட்டென

வெட்டி விட்டாய்

சட்டென

தேறிவிட்டேன்

வெளியில் சிரித்தவாறு

ஆனால் உள்ளம்

இன்னும்

வலியில் அழுதவாறு

வெள்ளமென

உவகை தோன்றுதடி

உன்னோடு இருக்கும்போது!

இதற்குப் பெயர்

காதலென்று

அர்த்தம் செய்தேன்!

கடைசிவரை

குற்றம் செய்தேன்!

உன் கனவுக்

கட்டிட வாசலில்

கூட நிற்கத்

தகுதியிருக்குமா எனக்கு?

நீ நுழைவுத் தேர்வு

நடத்தவில்லையே

சிநேகிதி...

ஆனாலும் சிநேகிதி

என் அன்புக்

கூட்டுக்குள் நீ

இன்னும்

சிட்டுக் குருவிதான்!

நீ அதிலிருப்பதும்

தூரப் பறப்பதும்

உன் சிறகுகளிடம்...

வாழ்க்கைப் பாதையில்

முகம் மறக்கலாம்

முகவரி மறக்கலாம்

என் அன்பு தடவிய

வார்த்தைகளை

நினைத்துப் பார்

நேரம் கிடைக்கும்

போதெல்லாம்

நேற்றைய

பொழுதெதற்கு

என்று

சாட்டையால்

அடிக்காதே...

கடந்த காலங்களின்

கனவுகள் முக்கியம்!

என் வார்த்தைகளில்

சில சமயம்

வாள்கள்

கட்டியிருப்பேன்

உன்னைக்

காயப்படுத்தவல்ல...

கடைசி வரை

என்னை

ஞாபகப்படுத்த...

பிரிய சிநேகிதி

நான் உன்னை நேசிக்கிறேன்

நீ நேசிக்காதபோது கூட

ஏனெனில்,

நீ மட்டும் தான்

என்னோடு

சிநேகிதம் செய்வாள்!

அழகில்லாதவன்

நான்!

உண்மை தான்

'அழகில்' ஆதவன்

இல்லை!

சிநேகிதி உன்போல்

இன்னும் பலர்

எனை வேண்டாம்

என்று வெறுக்கட்டும்

சோகமே எனக்குச்

சொந்தமாகட்டும்!

காயம்

பெருக்கட்டும்

முட்டாள் நான்

கூட கவி

புனைவேன்

என் கவிகளே

எனக்குத் தலைகோதி

விழி நீர் துடைக்கட்டும்

இதை நீ

'கவிதை' என்கிறாயா

சிநேகிதி..?

'ஆம்' எனில்

நீ 'வேண்டாம்'

என்றதில் கூட

அர்த்தமுண்டு

நல்லது

சிநேகிதி...

தயவுசெய்து

என்னை

மன்னித்துவிடு

மன்மதனுக்கு

ஒரு மரணம்

வராதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கவிகளே

எனக்குத் தலைகோதி

விழி நீர் துடைக்கட்டும் என்றே

அழகாய் உவமித்து வரித்த

கவிதை அழகு அழகு

Link to comment
Share on other sites

கவிரூபன் உங்கள் கவிதை அழகு.

உணர்ச்சிகளும் எண்ணங்களும் கைகோர்த்து நிற்க

வார்த்தைகளும் உவமைகளும் உயரப் பறக்கின்றனவே.

இது உங்கள் கற்பனையா இல்லை அனுபவமா?

Link to comment
Share on other sites

ஆங்... வெறுமனவே கற்பனை என்று சொல்ல முடியாது தான் (அப்ப....? )

அது சரி வானவில் ஆனால் என்று நிறுத்தினால் என்ன அர்த்தம்? கீறிட்ட இடத்தை நிரப்ப என்னால் முடியாது....

கருத்துகளுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி...

Link to comment
Share on other sites

ஆங்... வெறுமனவே கற்பனை என்று சொல்ல முடியாது தான் (அப்ப....? )

அது சரி வானவில் ஆனால் என்று நிறுத்தினால் என்ன அர்த்தம்? கீறிட்ட இடத்தை நிரப்ப என்னால் முடியாது....

கருத்துகளுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி...

அதெல்லாம் சொல்ல மாட்டேன் :lol:

Link to comment
Share on other sites

மெளனத் தவம்

கலைத்துச்

சகுனம் பார்க்காது

காதலென்னும் மாய

வார்த்தை சொன்னேன்!

உள்ளம் மூடி

வைக்காது...

பள்ளம் விழுந்ததடி

உன் பார்வை

பட்டென்றேன்

நீயும் பட்டென

பதில் சொன்னாய்

என்னைச் சட்டென

வெட்டி விட்டாய்

சட்டென

தேறிவிட்டேன்

வெளியில் சிரித்தவாறு

ஆனால் உள்ளம்

இன்னும்

வலியில் அழுதவாறு

அழகான கவிதை....

கவிதையில் என்னவோ சோகம் இழையோடுகின்றது...

பலரை கவர்ந்திருக்கின்றது இக் கவிதை ..கவி_ரூபன்!

இக் கவிதைக்கு வந்த கருத்துக்களை விட இதை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கு.

கவனித்தீர்களா? அதை வைத்தே சொன்னேன்.

அத்தோடு உங்கள் கவிகளை வாசித்ததில் பிடித்த இன்னொரு கவி:

காதல்

அடிக்கடி

விருந்துண்ண

அழைக்கின்றது

இலை விரித்து

பந்தி

பரிமாறும்

வேளையில்

அடுத்த

பந்தியில்

அமருமாறு

அறிவிக்கின்றது!

சிறு வரிகளில் பல அர்த்தங்கள் கொண்டு...எழுதுகிறீர்கள்...

தொடருங்கள் உங்கள் கவி பணியை... B)

Link to comment
Share on other sites

கவிதையைப் பார்த்து மேலே நண்பர் ஒருவர் குழம்பியதற்கான காரணம் குறிப்பிட்ட பெயரில் யாழ் களத்தில் ஒரு உறவு இருப்பதன் காரணமாக இருக்கலாம்? :P :P :P

Link to comment
Share on other sites

பிரிய சிநேகிதி,

மன்னிப்பாய்...!

இதற்குப் பெயர்

காதலென்று

அர்த்தம் செய்தேன்!

கடைசிவரை

குற்றம் செய்தேன்!

அழகிய கவிதை

ஹர்மோன்களின் யுத்தம்

அதிகமான முட்டாள்கள்

செய்யும் தவறு.

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க கவிதை நல்லா இருக்கு கவிரூபன். ;)

Link to comment
Share on other sites

உங்கள் ரசனைக்கும் நன்றி...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.