கருத்துக்கள உறவுகள் colomban பதியப்பட்டது July 13, 2018 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது July 13, 2018 - ஜெயபாலன் த - 28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. இப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும் ‘குருக்கள் மடத்துப் பையன்” என்ற நூலை சையது பஷீர் எழுதி உள்ளார். நிச்சாமம் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் யூலை 14 சனிக்கிழமை தேசம் வெளியிட்டு வைக்க உள்ளது. கிழக்கு லண்டன்; ஈஸ்ற்ஹாமில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தலைமைதாங்க உள்ளார். இந்நிகழ்வில் அரசியல் மற்றும் சமூக விமர்சகர் எஸ் சிறிதரன் (முத்து), தேசம் த ஜெயபாலன், நூல் திறனாய்வாளர் விமர்சகர் மு நித்தியானந்தன் ஆகியோர் நூல் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் நூலாசிரியர் சையது பஷீர் அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும். இலங்கை முஸ்லீம் இனத்தவர்களுக்கு 1990ம் ஆண்டு குருதி தோய்ந்த ஆண்டு என்றால் மிகையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் அதன் உச்சத்தைத் தொட்ட காலம் அது. இத்தொடர் படுகொலைகளின் முதல் களம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கீழ்வரும் கூட்டுப் படுகொலைகள் தொடர்ந்தது. தமிழீழ விடுதலை இயக்கங்கள் அனைத்துமே முஸ்லீம்களுக்கு எதிரான தங்கள் ஆயுதங்களை ஆங்காங்கே திருப்பிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகத் திட்டமிட்ட வகையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை தங்கள் அரசியல் இராணுவக் கட்டமைப்புக்குள் கொண்டிருந்தனர். வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு வசதியாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் கூட்டுப்படுகொலைகள்: 1990 யூலை – 12 மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 முஸ்லீம் பயணிகள் படுகொலை 1990 ஆகஸ்ட் – 01 மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம் 1990 ஆகஸ்ட் – 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை 1990 ஆகஸ்ட் – 05 அம்பாறை முல்லியன்காடு 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை 1990 ஆகஸ்ட் – 06 அம்பாற 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை 1990 ஆகஸ்ட் – 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை 1990 ஒக்ரோபர் – 30 வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம் 1992 ஒக்ரோபர் – 15 பலியகொடல்லா 285 கிராம வாசிகள் படுகொலை ._._._._._. சையது பஷீரின் “குருக்கள் மடத்துப் பையன்” நூல் வெளியீடு யூலை 14 2018 மாலை 4:00 மணிக்குTrinity CentreEast AvenueEasthamLondon E12 6SG அனைவரையும் நட்புடன் வரவேற்கின்றோம்!07800596786த ஜெயபாலன்தேசம் https://www.madawalaenews.com Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நந்தன் Posted July 13, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted July 13, 2018 ஜப்பசி 1990 க்கு முதல் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை Link to comment Share on other sites More sharing options...
கற்பகதரு Posted July 13, 2018 Share Posted July 13, 2018 46 minutes ago, நந்தன் said: ஜப்பசி 1990 க்கு முதல் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை ஜப்பசி 1990 க்கு முதல் மன்னாரிலும் வேறு பிரதேசங்களிலும் விடுதலை புலிகள் அமைப்பை கட்டி எழுப்புவதில் முஸ்லிம்களும் தமிழராக இணைத்து செயற்பட்டனர். மற்ற தமிழ் அமைப்புகளை அழித்ததால் உண்டான பகைமையால் விடுதலை புலிகளை அழிப்பதில் தமிழரே முஸ்லிம்களிலும் பார்க்க பெரும் பங்கு ஆற்றினர். இதில் தலைவரின் பாசறையில் வளர்ந்த கருணா அம்மானின் பங்களிப்பு அளப்பெரியது. முஸ்லிம்களை இந்த ஜப்பசி 1990ல் வெளியேற்றியது போல் தமிழரையும் விடுதலை புலிகள் ஒட்டுமொத்தமாக உடுத்த உடையுடனும் ஐந்நூறு ரூபா பணத்துடனும் வெளியேற்றி இருந்தால் முஸ்லிம்கள் அழியாது தப்பியது போல் தமிழரும் தப்பி பிழைத்து இருப்பர். Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted July 17, 2018 Share Posted July 17, 2018 On 7/13/2018 at 5:44 AM, Jude said: முஸ்லிம்களை இந்த ஜப்பசி 1990ல் வெளியேற்றியது போல் தமிழரையும் விடுதலை புலிகள் ஒட்டுமொத்தமாக உடுத்த உடையுடனும் ஐந்நூறு ரூபா பணத்துடனும் வெளியேற்றி இருந்தால் முஸ்லிம்கள் அழியாது தப்பியது போல் தமிழரும் தப்பி பிழைத்து இருப்பர். அப்படியா? எப்படி 1983 இனப்படுகொலையில் அவ்வளவு மக்களூம் கொல்லப்பட்டனர்?? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted July 17, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted July 17, 2018 7 minutes ago, nunavilan said: அப்படியா? எப்படி 1983 இனப்படுகொலையில் அவ்வளவு மக்களூம் கொல்லப்பட்டனர்?? அரைச்ச மாவையே அரைக்கிற கொம்பனிக்காரர் உதுக்கும் மூட்டைக்கணக்கிலை மா வைச்சிருப்பினம். Link to comment Share on other sites More sharing options...
கற்பகதரு Posted July 18, 2018 Share Posted July 18, 2018 10 hours ago, nunavilan said: அப்படியா? எப்படி 1983 இனப்படுகொலையில் அவ்வளவு மக்களூம் கொல்லப்பட்டனர்?? 1983 இல் சிங்கள பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழர்களிலும் பார்க்க தமிழ் ஈழத்தில் விடுதலை புலிகளின் காலத்தில் கொல்லப்பட்ட தமிழரின் தொகை பல மடங்கானது. மனிதர்கள் இறப்பைதையும் கொல்லப்படுவதையும் நாம் குறைக்க பார்க்கிறோம், எந்த நாட்டிலே மனிதர்கள் இறப்பதில்லை அல்லது கொல்லப்படுவதில்லை? Link to comment Share on other sites More sharing options...
பழுவூர் கிழான் Posted July 18, 2018 Share Posted July 18, 2018 அவர்களுக்கு “குருக்கள்மடத்து பையனை” போல் நம்மவர்க்கு “உடும்பன்குளம், திராய்க்கேணி,வீரமுனை,சத்துருக்கொண்டான்” எனப் பல “பெடியன்கள்” இருக்கின்றார்கள்.... Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted July 18, 2018 Share Posted July 18, 2018 13 hours ago, Jude said: 1983 இல் சிங்கள பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழர்களிலும் பார்க்க தமிழ் ஈழத்தில் விடுதலை புலிகளின் காலத்தில் கொல்லப்பட்ட தமிழரின் தொகை பல மடங்கானது. மனிதர்கள் இறப்பைதையும் கொல்லப்படுவதையும் நாம் குறைக்க பார்க்கிறோம், எந்த நாட்டிலே மனிதர்கள் இறப்பதில்லை அல்லது கொல்லப்படுவதில்லை? "தமிழரும் தப்பி பிழைத்து இருப்பர்" என்பதற்கு பதிலை காணோம். பிறகு எண்ணிக்கையை புகுத்தி ஒரு சுத்துமாத்து ஏன்? Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தனிக்காட்டு ராஜா Posted July 19, 2018 கருத்துக்கள உறவுகள் Share Posted July 19, 2018 On 7/18/2018 at 9:38 AM, பழுவூர் கிழான் said: அவர்களுக்கு “குருக்கள்மடத்து பையனை” போல் நம்மவர்க்கு “உடும்பன்குளம், திராய்க்கேணி,வீரமுனை,சத்துருக்கொண்டான்” எனப் பல “பெடியன்கள்” இருக்கின்றார்கள்.... நம்மளுக்கு நடந்தால் சம்பவம் அவர்களுக்கு நடந்தால் சரித்திரம் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அதைக்காவிக்கொண்டு திரிய காம்புகளும் இருக்கு இருக்கணும் அப்பதான் நமக்கும் ந்டந்த சம்பவங்கள் ஞாபகத்திலிருக்கும் Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.