Jump to content

அவளது வீடு


Recommended Posts

அவளது வீடு - சிறுகதை

 
நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு...எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

'வீடு வாடகைக்கு விடப்படும்’ என்ற விளம்பரத்தைப் பேப்பரில் பார்த்ததும், அதன் தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டாள் அகல்யா. அலுவலகம் முடிந்து போகும் வழியில், 'அந்த வீட்டைப் பார்த்துவிட வேண்டும்’ என்று நினைத்தபடியே, லன்ச் பாக்ஸையும் குடிநீர் பாட்டிலையும் எடுத்து ஹேண்ட்பேகில் வைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள்.

அவள் வேலை செய்யும் ஆடிட்டர் அலுவலகம், மந்தைவெளியில் இருக்கிறது. மறைமலைநகரில் இருந்து கிளம்பி அலுவலகம் போவதற்கு எப்படியும் 1.30 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 'நேரத்துக்குள் போகாவிட்டால், அரை நாள் சம்பளத்தைப் பிடித்துக்கொள்வார்கள்’ என நினைத்தபடியே சாலையில் செல்லத் தொடங்கினாள். பேப்பர்களில் வெளியாகும் வாடகை வீடு பற்றிய விளம்பரங்களை, அகல்யா தினமும் தவறாமல் படிப்பாள். பல நேரங்களில் விளம்பரத்தில் உள்ள வீட்டுக்கு, நேரிலேயே சென்று விசாரிப்பது அவளது வழக்கம்.

மறைமலைநகரில், இரண்டு படுக்கைகள் கொண்ட ஃப்ளாட் ஒன்றை லோன் போட்டு வாங்கிக் குடியேறி நான்கு வருடங்கள் கடந்துவிட்டபோதும், அவளுக்குள் வீடு தேடும் ஆசை வடிந்தபாடு இல்லை. திருமணத்தைப் பற்றி கனவு காணத் தொடங்கிய நாட்களிலேயே, வீடு பற்றிய கனவும் அவளுக்குள் உருவாக ஆரம்பித்துவிட்டது. சொந்த வீட்டைப் பற்றி கனவுகொள்ளாத பெண் யார் இருக்கிறார் உலகில்?

பெண்களுக்கு வீடு என்பது, வெறும் வசிப்பிடம் அல்ல; ஒரு மாயத்தோட்டம். வீட்டுக்குள் போனதும் பெண் உருமாறிவிடுகிறாள். ஆண்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாத விநோதமும் ரகசியமும் சுகந்தமும் வீட்டினுள் இருக்கின்றன. ஆண்கள் வீட்டைப் பயன்படுத்துகிறார்கள்; பெண்கள் வளர்த்தெடுக்கிறார்கள்.

p74.jpg

கல்யாவின் அப்பா மின்சாரத் துறையில் பணியாற்றியவர் என்பதால், அவள் சிறு வயதில் இருந்தே கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸில் தான் வாழ்ந்திருக்கிறாள். பழுப்படைந்து காரை உதிரும் சுவர்களும், மூட முடியாத ஜன்னல்களும், தவளைகள் நுழைந்துவிடும் குளியல் அறையும், புகை போக வழியற்ற சமையல் அறையும் கொண்ட அரசுக் குடியிருப்புகளில் வாழ்வது சகிக்கவே முடியாதது.

அரசுக் குடியிருப்பைக் கட்டியவன், அது மனிதர்கள் குடியிருப்பதற்கானது என்ற நினைப்பே இல்லாமல் கட்டியிருப்பான் போலும். வீடு என்ற பெயரில் சற்று உயரமான, பெரிய கல்லறையைப் போலத்தான் அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, விசாலமான வீட்டில் குடியிருந்ததே இல்லை. லோயர் கேம்ப்பில் குடியிருந்தபோது, அவர்கள் வீட்டுக்குள் அடிக்கடி பாம்பு நுழைந்துவிடும். அம்மா, பயந்து அலறுவாள். மழை பெய்யத் தொடங்கினால், வீட்டுக்குள் தண்ணீர் சொட்டும். உறங்கும் குழந்தைகளின் முகத்தில் தண்ணீர் சொட்டாமல் இருக்க, அவர்களைத் தள்ளிப் படுக்கவைத்துவிட்டு அலுமினியச் சட்டிகளைக் கொண்டுவந்து வைப்பாள்.

அலுமினியச் சட்டியினுள் மழை பெய்யும் சத்தத்தைக் கேட்டபடியே, அகல்யா பல நாட்கள் படுத்துக்கிடந்திருக்கிறாள். சட்டியின் விளிம்பில் பட்டுத் தெறிக்கும் மழைத்துளி, அவள் கையில் பட்டு சிலிர்ப்பை உண்டாக்கும். அதுபோன்ற நாட்களில், ஒழுகாத அறைகள்கொண்ட பெரிய வீட்டையும், கதகதப்பான படுக்கையையும் பற்றி கனவு காணத் தொடங்குவாள். வீடு பற்றிய கனவு, அவள் கூடவே வளர்ந்துகொண்டிருந்தது.

ஒழுகும் வீட்டைப் பற்றி அம்மா எவ்வளவு சலித்துக்கொண்டாலும், அப்பா அதைக் கேட்டுக்கொண்டதே இல்லை. அப்பா, தன் வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ளவே இல்லை. மதுரையில் வீடு வாங்குவதைப் பற்றி அம்மா எத்தனையோ முறை சொல்லியபோதெல்லாம், 'முதுமையில் பூர்வீக கிராமத்தில் உள்ள வீட்டில் போய்த் தங்கிவிடுவோம்’ என்று சொல்லி அப்பா அடக்கிவைத்துவிடுவார்.

அதன் அவசியமே இல்லாமல், 53 வயதில் அப்பா இறந்துவிட்டார். அம்மா பாடுதான் திண்டாட்டம். அவளுக்கு இப்போது வயது 65. மகள் வீட்டில் வந்து தங்கியிருக்க மாட்டேன் என ஒவ்வொரு மகன் வீடாக அலைந்து அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறாள். 'வீடு அற்றவர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடையாது’ என்பார்கள். அம்மா, இதுவரை ஆழ்ந்து உறங்கியவளே இல்லை. இருட்டில் ஓர் இலை உதிரும் சத்தம் கேட்டால்கூட, சட்டென்று எழுந்துவிடுவாள்.

அந்தப் பழக்கம் அகல்யாவுக்கும் இப்போது வந்துவிட்டது. யோசித்துப் பார்த்தால், ஹாஸ்டலில் படிக்கும் நாட்களில் மட்டுமே அகல்யா ஆழ்ந்து உறங்கியிருக்கிறாள். அதுவும் அவளது ஹாஸ்டல், மலையின் அடிவாரத்தில் இருந்தது. ஆகவே, காலையில் ஜில்லெனக் காற்றடிக்கும். படுக்கையைவிட்டு அவளால் எழுந்துகொள்ளவே முடியாது.

அப்போது எல்லாம், 'இதுபோன்ற மலை அடிவாரத்தில்தான் வீடு கட்டிக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்துக்கொள்வாள். அப்படி நினைக்கத் தொடங்கியதும் அந்த வீடு எப்படி இருக்க வேண்டும், அதன் சுவர்களின் நிறம் என்ன, எந்த மாதிரியான சோபா வாங்கிப் போட வேண்டும் என்றெல்லாம் யோசிப்பாள். மேலும், சமையலறையை, ஹால் சைஸில் விசாலமாகக் கட்ட வேண்டும். அடுப்பின் முன்னால் சுழல் நாற்காலி ஒன்றைப் போட வேண்டும். அப்போதுதான் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திரும்ப வசதியாக இருக்கும். அந்த அறையில், பெரிய ஜன்னல் கட்டாயமாக இருக்க வேண்டும். பாட்டு கேட்பதற்கு வசதியாக, ரேடியோ ஒன்று வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்குப் பின்னாடியே காய்கறி, கீரைத் தோட்டம் போட்டுக்கொள்ள வேண்டும். இப்படி, அவள் தனது கனவு வீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியபடியே ஹாஸ்டல் அறையில் படுத்துக்கிடப்பாள்.

சில சமயம், 'இது என்ன பைத்தியக்காரத்தனம்?’ என அவளுக்கே தோன்றும். ஆனால், அப்படியான ஒரு வீட்டை தன் வாழ்நாளில் நிச்சயம் உருவாக்க முடியும் என்று அவள் ஆழமாக நம்பினாள்.

அவளது கனவு, இன்று வரை நிறைவேறவே இல்லை. இப்போது அவள் வீடு வாங்கிவிட்டாள். ஆனால், அது 620 சதுர அடி கொண்ட சிறிய ஃப்ளாட். அவ்வளவுதான் அவளால் பணம் புரட்ட முடிந்தது. அதையாவது வாங்கிவிட்டோமே எனச் சமாதானம் ஆனபோதும், கனவில் உருவாக்கிய வீடு, அவளை ஆறாத ரணம் போல வதைத்தது.

கல்யாவுக்குத் திருமணமாகி 21 வருடங்கள் கடந்துவிட்டன. அவளது மூத்த பையன் நந்து, இன்ஜினீரியங் படித்துக்கொண்டிருக்கிறான். இளையவள் சுபத்ரா, இப்போது ஒன்பதாம் வகுப்பில். அடுத்தவன், ஆறாம் வகுப்பு.

திருமணத்துக்கு முன்பாகவே இரண்டு விஷயங்களில் அகல்யா உறுதியாக இருந்தாள். ஒன்று, அரசு ஊழியரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. சொந்தத் தொழில் நடத்துபவரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அவரால்தான், சம்பாதித்து பெரிய வீடு கட்ட முடியும்; ஒரே ஊரில் வாழ முடியும்.

இரண்டாவது, தான் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து வாழ வேண்டும். ஐந்து ரூபாய்க்குகூட அப்பாவின் கையை எதிர்பார்த்து நின்ற அம்மாதான் அதிலும் அவளுக்கு முன்னுதாரணம். இரண்டுமே அவள் நினைத்தது போலத்தான் நடந்தேறின.

கல்யாவுக்கு, ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் கணக்காளராக வேலை கிடைத்தது. அவளது கணவன், அம்பத்தூரில் தவணை முறையில் வீட்டுப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். பெண் பார்க்க அவர்கள் வந்திருந்தபோது, 'உங்களது வீடு சென்னையில் எங்கு உள்ளது?’ என்றுதான் அகல்யா கேட்டாள். பட்டாபிராமில் சொந்த வீட்டில் வசிப்பதாகச் சொன்னார்கள். அந்த ஒன்றுக்காகவே அவள் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.

p74a.jpgதிருமணமாகி வந்தபோதுதான் தெரிந்தது, அது அவள் ஆசைப்பட்ட வீடு அல்ல; பழைய காலத்து ஓட்டு வீடு என்பது. தலைகுனிந்துதான் நுழைந்து வர வேண்டும். வீட்டில் உள்ளவர்கள், ஹாலில்தான் படுத்துக்கொள்வார்கள். பழைய மரக்கட்டில் போட்ட சிறிய படுக்கை அறை. கையைத் தூக்கினால், மின்விசிறி தட்டும். வீட்டுக்குள் கழிப்பறை கிடையாது. வெளியே தென்னை மரத்தை ஒட்டி டெலிபோன் பூத் போல ஒன்றைக் கட்டிவைத்திருந்தார்கள். கிணற்றில் தண்ணீர் இறைத்துதான் குளிக்க வேண்டும். சமைக்க ஆரம்பித்தால், வீடு முழுவதும் புகை நிரம்பிவிடும். திருமணமாகி வந்த மூன்று நாட்கள், இவற்றை நினைத்துக் கொண்டு அகல்யா அழுதாள். அதை யாரும் 'ஏன்?’ என்றுகூடக் கேட்டுக்கொள்ளவில்லை.

வீடு சிறியது என்பதைவிடவும் அந்த வீட்டுக்குள் ஐந்து ஆண்களும், மூன்று பெண்களும், நான்கு குழந்தைகளும் ஒன்றாக வாழ வேண்டும் என்பது ஆத்திரமாக இருந்தது.

திருமணமான முதல் வாரத்தில் சினிமா பார்க்கப் போகும்போது அகல்யா, தன் கணவனிடம், ''நாம் டவுனுக்குள் வீடு பார்த்துக் குடிபோகலாம்'' என்று சொன்னாள். அகல்யாவின் கணவன், வெறுமனே தலையை மட்டும் ஆட்டினான்.

மறுநாள் காலையில், சமையல் அறையில் இருந்த அவளது மாமியார், ''என்னடி... வந்து 10 நாள்கூட ஆகலை. அதுக்குள்ளே 'தனி வீடு பார்த்துக்கிட்டுப் போகலாம்’னு சொன்னயாமே?! ஒழுக்கமா வீட்டுக்கு அடங்கியிருக்க மாட்டியா?'' எனச் சண்டையிட்டாள்.

அகல்யாவுக்கு, அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தான் ரகசியமாகச் சொன்ன விஷயத்தை ஏன் இப்படி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி, தன்னை அவமானப்படுத்தினார் என கணவன் மீது ஆத்திரமாக வந்தது. அன்று முழுவதும் அவரோடு பேசவில்லை. தன் கணவன், ஒரு தலையாட்டும் பொம்மை என்பதை ஆறே மாதங்களில் அகல்யா புரிந்துகொண்டாள். அதன் பிறகே அகல்யா வேலைக்குப் போகத் தொடங்கினாள்.

மந்தைவெளிக்கு வேலைக்குப் போகத் தொடங்கியபோது, அவளுக்குக் கைக்குழந்தை இருந்தது. அதைக் காரணம் காட்டி, முதன்முறையாக வீடு மாறினாள். மிகச் சிறிய வீடு, படுக்கை அறை எனத் தனியாகக் கிடையாது, குறுகலான சமையல் அறை, அதன் ஒரு பக்கம் கழிப்பறை.

ஒவ்வொரு நாளின் இரவும், சுழலும் மின்விசிறியை வெறித்துப் பார்த்தபடியே, 'ஏன் இப்படியான ஒரு வீட்டில் வசிக்கிறோம்?’ என நினைத்து அழுவாள். அவள் கணவனோ, படுத்த உடனேயே உறங்கிவிடுவான். 'குழந்தைக்குத் தொட்டில் போட ஓர் இரும்பு வளையம்கூட இல்லாத வீடு எதற்கு?’ என ஆத்திரமாக இருக்கும். சேலையை மடித்துப் போட்டு, அதில்தான் குழந்தையை உறங்கவைப்பாள்.

அப்போது வீட்டில் ஒரு நாற்காலிகூடக் கிடையாது. யாராவது விருந்தினர் வந்தால் பாயைப் போட்டுதான் உட்காரச் சொல்ல வேண்டும். அதுபோன்ற நேரங்களில் அவள் கூனிக் குறுகிவிடுவாள். விருந்தினர்கள் வெளியேறியதும் தனியே உட்கார்ந்துகொண்டு அழுவாள். அவளுக்கு, யாரைக் குற்றம் சொல்வது எனப் புரியாது.

சுபத்ரா பிறந்தபோது, அந்த வீட்டில் இருந்து அடையாறுக்கு மாறினாள். அது மாடி வீடு. வீட்டின் முன்னால் பூந்தொட்டிகள் வைத்துக்கொள்ளும் அளவுக்குக் கொஞ்சம் இடம் இருந்தது. அதில் நாலைந்து பூச்செடிகள் வாங்கிவைத்ததோடு, வீட்டு ஓனர் பயன்படுத்தாமல் போட்டிருந்த மரநாற்காலியைச் சரிசெய்து போட்டுக்கொண்டாள். வேலைவிட்டு வந்தவுடன் அந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே வீதியைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

உயர உயரமாக அடுக்குமாடி வீடுகள் உருவாவதையும், பெரிய பங்களாக்களையும் கடந்து போகும்போது, அவளது மனம் அடித்துக்கொள்ளும். சில சமயம், சாலையில் நடக்கும்போது மூடப்பட்ட பெரிய இரும்பு கதவுகொண்ட வீடுகளின் முன்பு போய் நின்றபடியே அது தன்னுடைய வீடு என்று கற்பனை செய்துகொள்வாள். 'எப்போது இதுபோன்ற வீட்டில் வாழப்போகிறோம்?’ என மனம் அடித்துக்கொள்ளும். இயலாமை, அது உன்னால் முடியாது என்ற உண்மையைச் சொல்லி, அவளைப் பரிகாசம் செய்யும். விசாலமான எந்த வீட்டைக் கண்டாலும் அவளிடம் இருந்து ஒரு பெருமூச்சு வருவதைத் தடுக்கவே முடியாது.

சைதாப்பேட்டை, வடபழநி, கிண்டி, நந்தனம், குரோம்பேட்டை, ராமபுரம்... என அகல்யா 15 வீடுகளுக்கும் மேல் மாறியிருந்தாள்.

றைமலைநகரில் சொந்த வீடு வாங்கி பால் காய்ச்சிய நாளில் வீட்டைப் பார்த்த அம்மா, ''என்னடி... புறாக்கூடு போல இருக்கு?'' என்று கேட்டதற்கு, ''உன் புருஷன் அதைக்கூட வாங்க முடியாமல்தானே செத்துப்போனான்...'' என்று ஆத்திரத்துடன் அகல்யா சண்டையிட்டாள். அத்தனை பேர் முன்னிலையில் அம்மா அழுதபோது, அகல்யா அவளைச் சமாதானப்படுத்தவில்லை. அம்மா அழுவது மனதுக்குச் சந்தோஷம் தருவதாகவே உணர்ந்தாள்.

அன்று இரவு, சொந்த வீட்டில் படுத்தபோதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. இது இல்லை நாம் நினைத்த வீடு. நமக்கு வாய்த்து இருப்பது இவ்வளவுதான். இந்த வீட்டில் இருந்துகொண்டு நகருக்குள் பெரிய வீடு ஒன்றை வாங்கிவிட வேண்டும் என மனதுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டாள். பிறகு, அது நடக்கவே நடக்காது என உணர்ந்தவள் போல அழுதாள்.

''ஏம்மா அழறே?'' என மகள் கேட்டபோதும், அவள் பதில் பேசவில்லை.

மனதுக்குள் அவள் கட்டிய கற்பனை வீடு, அவளைச் சத்தமாகக் கேலி செய்யத் தொடங்கியது. அதை அடக்க வேண்டும் என்பதற்காகவே, பேப்பரில் வரும் விளம்பரங்களைப் பார்த்து வாடகைக்கு வீடு தேடுவதை தனது விருப்பமாக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.

வீட்டை வாடகைக்குக் கேட்பது போல சும்மா விசாரித்துச் சுற்றிப் பார்ப்பது, அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது. சில சமயம், வீட்டு உரிமையாளர் சாவியை அவளிடமே தந்து, 'நீங்களே பார்த்து வாருங்கள்’ எனும்போது, அவள் அந்த வீடு தன்னுடையது என்பது போலவே உணருவாள்.

காலியாக உள்ள வீட்டின் தரையில் படுத்துக்கொள்வாள் அல்லது பாத்ரூம் குழாயைத் திறந்துவிட்டு போதும் போதுமென முகம் கழுவுவாள். சில வீடுகளில்,  ஹேர்பின்னால் தனது பெயரை எழுதிவைத்துவிட்டு வருவாள். விஸ்தாரமான வீடு, விஸ்தாரமான மனத்தை உருவாக்கிவிடும் என நம்பினாள் அகல்யா. இப்படியாக மாதம் 10, 20 வீடுகளை வெறுமனே பார்த்து வருவதை வழக்கமாக்கிக்கொண்ட பிறகு, அவளது இயல்பு மாறியது.

ஒவ்வொரு வீட்டு உரிமையாளர் தன்னைப் பற்றி கேட்கும்போதும், அவள் புதிதாக ஒரு கதை சொல்ல ஆரம்பித்தாள். தனது கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார். தனக்கு ஒரே பெண் என்று சொல்வாள். சில சமயம், இப்போதுதான் முதன்முறையாக சென்னைக்கு வருகிறோம். இதுவரை திண்டுக்கல்லில் குடியிருந்தோம் எனப் பொய் சொல்வாள். ஒரு வீட்டில், 'நாங்கள் சிங்கப்பூரில் 15 வருடங்கள் வாழ்ந்துவிட்டு, இப்போது சென்னை திரும்பியிருக்கிறோம்’ என்று பொய் சொன்னாள். இந்தப் பொய்கள் அவளுக்குப் பிடித்திருந்தன. ரசித்துச் சொன்ன பொய்கள் எல்லாம், நிஜமாக இருக்கக் கூடாதா என ஆசைப்பட்டாள்.

பிடித்தமான சில வீடுகளை, தனது செல்போன் கேமராவில் புகைப்படம் எடுத்தும் வைத்துக்கொண்டாள். அதை, தனியே இருக்கும்போது பார்த்துக்கொண்டே இருப்பாள். இந்த ரகசியத் தேடுதல், அவளுக்குள் இனம் புரியாத சந்தோஷத்தை உருவாக்கியது.

ப்படித்தான் அன்று மாலையிலும், அசோக் நகரில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்குக் கேட்க, தேடிச் சென்று காலிங் பெல்லை அழுத்தினாள். நிறைய மாமரங்கள் உள்ள வீடு. ஒரு முதியவர், கதவைத் திறந்து விசாரித்தார். அவள் விளம்பரத்தைப் பற்றி சொன்னதும், வீட்டுக்குள் வரச்சொன்னார்.

தூண்கள் கொண்ட பழைய காலத்து வீடு. உள்ளே ஓர் அறையில் ஆண்கள் சட்டை அணிந்த வயதான ஒரு பெண், படுக்கையில் சோர்வுடன் எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

''அந்தப் பெண் யாரு?'' என, பலவீனமான குரலில் கேட்டார்.

''வீடு பார்க்க வந்திருக்காங்க'' என்று குரல் கொடுத்தபடியே முதியவர் சாவியைத் தேடிக்கொண்டிருந்தார். படுக்கையில் இருந்த பெண் கிழே இறங்கப் பார்த்துத் தடுமாறுவதைக் கண்டாள் அகல்யா.

கையில் சாவியோடு நின்றிருந்த முதியவர் சொன்னார், ''என் வொய்ஃப்க்குக் கிட்னி பிராப்ளம். 10 வருஷங்களா படுக்கையில் கிடக்குறா. பிள்ளைகள், அமெரிக்கா போயிட்டாங்க. நானும் இவளும்தான் இருக்கோம். அதனாலதான் மாடியை வாடகைக்கு விட்டிருக்கேன். பார்த்துட்டு வாங்க'' என்று சாவியை அவளிடம் தந்தார்.

அகலமான படிக்கட்டுகள். மாடி ஏறிப் போனதும் மாமரத்தின் கிளை, வீட்டு ஜன்னலை உரசிக்கொண்டிருப்பது, சந்தோஷமாக இருந்தது. ஒரு மாவிலையைப் பறித்து முகர்ந்தபடியே அவள் கதவைத் திறந்தாள். ஹாலில் சிறிய மர ஊஞ்சல். அகலமான ஹால். சுவரில் பதிக்கப்பட்ட ஆளுயரக் கண்ணாடி. யார் இங்கே வசித்தார்கள் எனத் தெரியவில்லை. ரசனையாகக் கட்டப்பட்டிருந்தது.

குளியல் அறையைத் திறந்து பார்த்தாள். சந்தன நிறத்தில் பெரிய குளியல் தொட்டி இருந்தது. திரைப்படங்களில்தான் இதுபோன்ற குளியல் தொட்டியில், நுரை வழிய கதாநாயகி குளிப்பதைக் கண்டிருக்கிறாள். குளியல் அறையே ஒரு ஹால் போல பெரிதாக இருந்தது. சமையல் அறைக்குள் போய்ப் பார்த்தாள்.

ஒரு பக்கச் சுவரில் கிருஷ்ணன் வெண்ணெய்ப் பானையை உருட்டுவது போன்ற அழகிய ஓவியம் வரையப்பட்டு இருந்தது. பெரிய மர அலமாரி, உள்ளே இழுப்பறைகள். உட்கார்ந்து சமைக்க வசதியாக உயரமான முக்காலி. கிழக்கு பார்த்த பூஜை அறை. இளம்பச்சை நிற வண்ணம், வீடு முழுவதும் அடிக்கபட்டிருந்தது.

அந்த வீட்டின் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடும்போது, வாசலில் கையில் ஒரு காபி டம்ளருடன் முதியவர் நிற்பது தெரிந்தது. அவள் ஊஞ்சல் ஆடுவதை நிறுத்திவிட்டு, கூச்சத்துடன் எழுந்துகொண்டபோது முதியவர் சொன்னார், ''நல்லா ஆடுங்க... என்ன கூச்சம்? காபி எடுத்துக்கோங்க'' என்றபடி சிரித்தார்.

''வீடு அழகா இருக்கு'' என்றாள் அகல்யா.

''டான்சர் ரேவதி சுப்ரமணியம் குடியிருந்தாங்க. இப்போ பெசன்ட் நகர்ல வீடு கட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்... எங்க வேலை?'' என்று கேட்டார்.

என்ன பொய் சொல்வது என அகல்யா யோசிக்கத் தொடங்கினாள். பிறகு சொன்னாள், ''கனரா வங்கில வேலை பார்க்கிறேன். ஹஸ்பண்ட் மதுரையில் இன்ஜினீயர். ஒரே பையன், மெடிக்கல் படிக்கிறான்.''

''மாச வாடகை 20,000. அட்வான்ஸ் ரெண்டு லட்சம்'' என்றார் முதியவர்.

''என்னாலே உடனே அட்வான்ஸ் தர முடியாது. ஹஸ்பண்ட் அடுத்த மாசம் அஞ்சாம் தேதிதான் வர்றார். டோக்கன் அட்வான்ஸ் வேணும்னா தர்றேன்'' என்றாள்.

''அதுக்கு என்ன பரவாயில்லை. உங்களை எனக்குப் பிடிச்சுப்போச்சு. வீடு பிடிச்சிருக்கா?'' என்றார்.

சந்தோஷத்துடன் தலையாட்டினாள் அகல்யா.

''டோக்கன் அட்வான்ஸ் குடுத்துட்டு, சாவி வாங்கிக்கோங்க'' என்றார் முதியவர்.

தலையாட்டியபடியே வெளியே வந்தாள்.

p74b.jpgந்த வீட்டை எப்படியாவது வாடகைக்கு எடுத்துவிட வேண்டும் என மனம் அடித்துக்கொண்டது. 'எதற்காக அந்த வீடு, யார் குடியிருப்பது?’ என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது. அன்று இரவு முழுவதும் அதைப் பற்றியே யோசித்தாள்.

மறுநாள் வங்கியில் இருந்து 20,000 பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வீட்டுக்குப் போய் டோக்கன் அட்வான்ஸ் கொடுத்தாள்.

முதியவர், சாவியை அவளிடம் தந்து, ''வீட்டுச் சாமான்கள் எப்போ வருது?'' எனக் கேட்டார்.

''10 நாள் ஆகும்'' என்றாள் அகல்யா.

''மாடிக்குப் போறதுக்கு தனி கேட் இருக்கு. எங்களாலே உங்களுக்கு ஒரு தொல்லையும் வராது. ஏதாவது தேவைனா, கூச்சப்படாமல் கேளுங்க'' என்றார்.

வீட்டுச் சாவியைக் கையில் வாங்கியபோது, 'இது என்ன பைத்தியக்காரத்தனம்!’ என்று தோன்றியது. சாவியோடு மாடிக்குப் போனபோது, இது தன்னுடைய வீடு என சந்தோஷமாக இருந்தது.

அவள் ஆசை தீர ஊஞ்சல் ஆடினாள். பிறகு அருகில் உள்ள கடைக்குப் போய், ஒரேயொரு பாய் மட்டும் வாங்கி வந்தாள். ஹாலில் பாயைப் போட்டு படுத்துக்கொண்டாள். இது தனது வீடு. தனக்கு மட்டுமேயான வீடு. இப்படி ஒரு வீடு தனக்கு இருப்பது யாருக்கும் தெரியக் கூடாது. இந்த வீட்டில் தன்னோடு யாரும் குடியிருக்கப்போவது இல்லை. இங்கே தான் மட்டுமே வாழப்போகிறேன் என அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.

அன்று முதல், அவள் அலுவலகம் விட்டதும் நேராக இந்த வீட்டுக்கு வந்துவிடுவாள். ஒரு பையில் மாற்று உடைகள் சிலவற்றைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டாள். இரண்டு ஸ்பூன், ஒரு ஃப்ளாஸ்க், டம்ளர், பழம் வெட்டும் கத்தி ஒன்று... என அவசியமான சில பொருட்களை மட்டும் கொண்டுவந்து வைத்துக்கொண்டாள்.

வீடு, பொருட்களால் நிரப்பப்படாமல் இருப்பது சந்தோஷம் தருவதாக இருந்தது. ஆப்பிள் வாங்கி வந்து, சிறிய துண்டுகளாக்கி வைத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே சாப்பிடுவாள். தனி ஆளாகச் சோழிகளை உருட்டிப்போட்டு தாயம் ஆடுவாள். சிறிய மண்பானை வாங்கிவைத்து, அதில் தண்ணீர் குடித்தாள். பாக்கெட் ரேடியோ வாங்கிவந்து பாட்டு கேட்டாள்.

ஒருநாள், குளியல் தொட்டியில் சோப்பு நுரைகளை நிறைத்து அதில் ஆசை தீரக் குளித்தாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, வயது கரைந்துபோய்விட்டது போல அவளுக்குத் தோன்றியது. வீட்டுக்குத் தெரியாமல், தனியாக ஒரு வீடு எடுத்துக்கொண்டு ரகசியமாக வாழ்வது அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது. அதே நேரம், எங்கே கண்டுபிடித்துவிடுவார்களோ என பயமாகவும் இருந்தது.

வீட்டில் யாருமே அவளது மாற்றத்தைக் கண்டுகொள்ளவில்லை. ஞாயிறு அன்றுகூட தனக்கு ஆபீஸ் வேலை இருக்கிறது என்று சொல்லி, தன் வீட்டுக்குப் போய்ப் புழங்கத் தொடங்கினாள்.

ருநாள், அலுவலகம்விட்டு வரும்போது சந்தன மணமுடைய ஊதுவத்திக் கட்டு ஒன்றை வாங்கிக்கொண்டு போனாள். வீட்டில் ஊதுவத்திக் கொளுத்தி வைத்துவிட்டு, ஊஞ்சலில் சுருண்டு படுத்துக்கொண்டாள். அந்த வாசனை வீடு முழுவதும் பரவி நிரம்பியது. எவ்வளவு அற்புதமான சுகந்தம் என நுகர்ந்தபடியே அவள் படுத்துக்கிடந்தாள். தனக்கு, புதிதாகச் சிறகு முளைத்திருப்பது போல அவள் சந்தோஷம் கொண்டாள். அன்றைக்கு, சந்தோஷத்தில் அழ வேண்டும் போல் இருந்தது.

20 நாட்கள், அவள் தன் இஷ்டம் போல அந்த வீட்டை ஆண்டாள். சிறுமியைப் போல வீட்டில் உருண்டு படுத்து உறங்கினாள். அதிக நேரம், தனக்கான வீட்டில் கழிக்க வேண்டும் என்பதற்காகவே பொய் காரணங்களைச் சொல்லத் தொடங்கினாள்.

தனக்கென அவள் உருவாக்கிக்கொண்ட வீட்டுக்கு, ஒருநாள் தனது மகளை மட்டும் அழைத்துக்கொண்டு வந்தாள் அகல்யா.

''யார் வீடும்மா இது?'' எனப் புரியாமல் கேட்டாள் சுபத்ரா.

''என் வீடு'' என்றாள் அகல்யா.

''நாம இங்கே மாறப்போறோமா?'' எனக் கேட்டாள் சுபத்ரா.

''இல்லை. எனக்குனு ஒரு வீடு வேணும்னு தோணுச்சு. அதான் பிடிச்சிருக்கேன்'' என்றாள் அகல்யா.

''எதுக்கு?'' என்றாள் சுபத்ரா.

''அது உனக்கு இப்போ புரியாது. வீடு நல்லா இருக்கா?'' எனக் கேட்டாள் அகல்யா.

அம்மா ஏதோ தப்பு செய்கிறாள் என உணர்ந்தவளைப் போல முறைத்தபடியே, ''உனக்கு எதுக்கு வீடு... இங்கே என்ன செய்யப்போறே?'' எனக் கோபத்துடன் கேட்டாள் சுபத்ரா.

''ஒண்ணும் பண்ண மாட்டேன். ஆனா, இது என் வீடு. நான் மட்டும் இருக்கிற வீடு. அந்த நினைப்பு தர்ற சந்தோஷத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது'' என்றாள் அகல்யா.

''நான் கிளம்பறேன்'' என, படி இறங்கினாள் சுபத்ரா.

தனது ரத்தம் என்றபோதும் அப்பாவின் குணம்தான் அவளுக்கும் இருக்கிறது என்ற நினைப்போடு, ''உங்க அப்பாகிட்ட சொல்லாதே'' என்றாள் அகல்யா.

சுபத்ரா, பதில் சொல்லவில்லை!

ன்று இரவு அகல்யாவின் கணவன் ஆங்காரமான குரலில் கேட்டான், ''உனக்கு என்ன பைத்தியமாடி? எவ்வளவு திமிர் இருந்தா தனியா வாடகைக்கு வீடு பிடிச்சிருப்பே? தனியா இருக்கியா... இல்லை கூட எவனாவது இருக்கானா?''

''அது ஆம்பளைங்க பழக்கம். நான் தனியாத்தான் இருக்கேன்'' என்றாள் அகல்யா.

''என்னடி... சம்பாதிக்கிறோங்கிற திமிரா? இந்த வீட்ல உனக்கு என்னடி குறைச்சல்?'' எனக் கேட்டான்.

''எனக்குனு ஒரு வீடு வேணும். அதை என்னாலே கட்ட முடியலை. இது உங்க வீடு. இதுல நான் ஒரு வேலைக்காரி, சமையல்காரி அவ்வளவுதான்'' என்றாள்.

p74(1).jpgபளார் என அவளுக்கு ஓர் அறை விழுந்தது. காதில் கேட்கக் கூசும் வசைகளுடன் கத்திக்கொண்டிருந்தான் அகல்யாவின் கணவன்.

பதிலுக்குச் சண்டையிட முடியாமல் விம்மியபடியே சொன்னாள், ''ஒரு வீடுகூட நான் நினைச்சபடி அமைச்சுக்க முடியலே. இப்பவே எனக்கு வயசு 44. பாதி வாழ்க்கை முடிஞ்சுபோச்சு. எனக்குனு நான் எதையும் ஆசைப்படக் கூடாதா... அது தப்பா?''

''எப்போ நீ புக்கு படிக்க ஆரம்பிச்சியோ, அப்பவே இப்படிப் புத்தி கெட்டுப் போகத்தான்டி செய்யும். உனக்கு எதுக்குடி புருஷன், பிள்ளைகள்?'' எனக் கத்தினான். பிள்ளைகளும் சேர்ந்துகொண்டு அவளைத் திட்டினார்கள்.

''முதல்ல அந்த வீட்டைக் காலி பண்ணிட்டு வந்தாத்தான், இந்த வீட்ல இடம். இல்லே... வெளியே போ'' என அவளது துணிகளை அள்ளி வெளியே வீசினான் கணவன்.

வீட்டில் அவளுக்காக யாரும் பரிந்து பேசவில்லை. அகல்யா, தான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுச் சாவியைத் தூக்கி எறிந்தாள்.

ன்றிரவு அவள் கணவன், வாடகைக்கு வீடு கொடுத்த முதியவரிடம் தரக்குறைவாகப் பேசி சண்டையிட்டு, அகல்யா கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு வந்திருந்தான்.

''அம்மாவுக்கு, மனநலம் கெட்டுவிட்டது. இனி வேலைக்குப் போக வேண்டாம்'' என்றாள் மகள்.

மூத்த மகன், அம்மாவை ''லூஸு'' எனத் திட்டினான்.

படுக்கையில் சுருண்டபடியே அகல்யா அழுதாள். எதை எதையோ நினைத்துக்கொண்டு அழுதாள்.

10 நாட்களுக்குப் பிறகு, அவள் சமாதானம் அடைந்து அலுவலகம் கிளம்பியபோது, அவளது ஸ்கூட்டியை விற்றிருந்தான் கணவன்.

''பஸ்ல போயிட்டு வந்தாத்தான் குடும்பக் கஷ்டம்னா என்னன்னு தெரியும்'' என்றான்.

பஸ் பிடித்துப் போய் வரத் தொடங்கிய அகல்யா, திடீரென ஒருநாள் மாலை, தான் வாடகைக்குப் பிடித்த வீட்டைப் பார்ப்பதற்காக ஆட்டோவில் போய் இறங்கினாள். யாரோ அந்த வீட்டுக்குக் குடிவந்திருந்தார்கள். குழந்தைகளின் ஆடைகள் கொடியில் உலர்ந்துகொண்டு இருந்தன. வெளியே நின்றபடியே அந்த வீட்டை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த வீட்டில் இருந்து வாசனை கசிந்து வந்துகொண்டிருந்தது. அது அவள் வாங்கி வைத்த சந்தன மணம் கமழும் ஊதுவத்தி. அந்த வாசனை அவளுக்குள் ஆழமான பெருமூச்சையும் அழுகையையும் ஏற்படுத்தியது. கர்சீஃப்பால் கண்களைத் துடைத்தபடியே தெருவில் நடக்க ஆரம்பித்தாள்.

சாவு வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பி வருவதுபோல் இருந்தது அவளது நடை!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சமயத்தில பிள்ளைகளை நம்பக் கூடாது, புருஷனை நம்பவே கூடாது.இது முட்டாள் அகல்யாவுக்கு தெரியாமல் போய் விட்டது...!   tw_blush:

பி. கு:  சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துக்கள் அந்தந்தக் கதைகளுக்கு மட்டுமே பொருந்தும். பின் வேறொரு சந்தர்ப்பத்தில் அதைக் காவிக் கொண்டு வந்து காண்பிக்கக் கூடாது......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/24/2018 at 1:39 PM, suvy said:

சமயத்தில பிள்ளைகளை நம்பக் கூடாது, புருஷனை நம்பவே கூடாது.இது முட்டாள் அகல்யாவுக்கு தெரியாமல் போய் விட்டது...!   tw_blush:

பி. கு:  சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துக்கள் அந்தந்தக் கதைகளுக்கு மட்டுமே பொருந்தும். பின் வேறொரு சந்தர்ப்பத்தில் அதைக் காவிக் கொண்டு வந்து காண்பிக்கக் கூடாது......!

சரியாகத்தானே சொல்லியிருக்கிறீர்கள் அண்ணா ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.