-
Tell a friend
-
Topics
-
Posts
-
மேலதிக தரவு, உடலில் ஒரு பகுதி கடை நீக்கின் மரம் / உலகில் ஒரு பிரசித்தி பெற்ற தீவு நடு நீக்கின் அலகு கடையெழுத்து ஒரு உடல் உறுப்பு
-
By உடையார் · பதியப்பட்டது
நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கடத்தல் - பயங்கரவாதிகள் அட்டூழியம் நைஜீரியாவில் பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர். பதிவு: பிப்ரவரி 26, 2021 15:54 PM அபுஜா, நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ.எஸ், பண்டிட்ஸ், போகோ ஹராம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பயங்கரவாதிகள் அவ்வப்போது பள்ளிக்கூடங்களுக்குள் நுழைந்து அங்கு கல்வி பயின்று வரும் மாணவ\மாணவிகளை கடத்தி சென்று அவர்களை பயங்கரவாத செயல்களுக்கும், பிணைகைதிகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியின் சம்ஃபரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி பள்ளிக்கூடத்திற்கு அருகே அமைந்துள்ளது. அந்த விடுதிக்குள் இன்று ஆயுதங்களுடன் நுழைந்த பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் குழுவினர் அங்கு தங்கி இருந்த பள்ளிமாணவிகள் 300-க்கும் மேற்பட்டோரை கடத்திச்சென்றுள்ளனர். பள்ளிமாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்தை சம்ஃபரா மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் ஜிலானி பப்பா உறுதி செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.dailythanthi.com/News/TopNews/2021/02/26155429/Kidnappers-abduct-schoolchildren-in-northwest-Nigeria.vpf -
By உடையார் · பதியப்பட்டது
பிள்ளைகளைக் காட்டினாலே ஜனாதிபதியுடன் பேசத் தயார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிப்பு 34 Views துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி கோட்டபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “குறைந்த பட்சம் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன் அலரி மாளிகையில் சந்தித்தோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம். குறித்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகள்.ஜனாதிபதி அந்தபிள்ளைகளை காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் . அவரது மகளைக் காண்பிப்பதன் மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்”என்றனர். https://www.ilakku.org/?p=43227 -
மனைவி மீது அளவில்லாத பாசம்.. பிள்ளைகள் மீது அதை விட பாசம்... பேரப்பிள்ளைகள் மீது நிகரில்லா பாசம்... ஆனால் முதிர்ந்த வயதிலும் காலில் கல்லடி பட்டால் அம்மா என்றுதானே அலறுகின்றோம்.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.