Jump to content

யாழ்.கோட்டையினுள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்


Recommended Posts

யாழ்.கோட்டையினுள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்

 

யாழ்.கோட்டையினுள்  மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்

யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.குறித்த மனித எலும்புக்கூட்டு தொகுதி தொல்லியலுடன் தொடர்புபட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழியாவென தெரியவரவில்லை.

முன்னதாக யாழ்.கோட்டையினை அண்மித்த துரையப்பா விளையாட்டரங்கிலும் பாரிய மனிதபுதைகுழி கண்டறியப்பட்டிருந்த போதும் கால ஓட்டத்தில் அதுவும் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-கோட்டையினுள்-மனித-எ/

Link to comment
Share on other sites

யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டு எச்சங்கள் குறித்து புதிய தகவல் 

 

 
 

யாழ்.கோட்டையின் உட்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சம் போர்த்துக்கீசர் காலத்தினுடையதாக இருக்கலாம் என நம்புகின்றோம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

IMG_8040.JPG

யாழ்.கோட்டையின்  உட்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளின் போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

IMG_8046.JPG

அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது குறித்து மேலும் தெரிவிக்கையில் , 

IMG_8053.JPG

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான ஆதராங்கள் சில கிடைக்க பெற்றுள்ளன. 

கோட்டை அமைந்துள்ள பகுதிகளில் கடந்தவருடம் (ஸ்கானர் மூலம் ) ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கோட்டை அமைந்துள்ள பகுதிகளின் கீழ் போர்த்துக்கீசர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

IMG_8059.JPG

இந்நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைகழகம் , யாழ். பல்கலைகழகம் , தொல்லியல் திணைக்களம் , மத்திய கலாச்சார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாகவே இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

கோட்டையின் உட்புறமான மத்திய பகுதியில் முன்னதாக போத்துக்கீசர் காலத்து தேவாலயம் ஒன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளான. தேவாலயத்திற்கு அருகில் கிணறு ஒன்று இருந்தமைக்கான சான்றுகளும் , தேவாலய சுவர்கள் இருந்தமைக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

IMG_8086.JPG

இந்நிலையிலேயே நேற்றைய தினம் அகழ்வுப் பணியின் போது மனித எழும்பு எச்சம் மீட்கப்பட்டன. அது போத்துக்கீசர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்கள் என நம்புகின்றோம்.

ஏனெனில் போத்துக்கீசர் காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது மேற்கு நோக்கியவாறே அடக்கம் செய்யும் பழக்கம் இருந்தது. 

IMG_8091.JPG

அதன் பின்னரான கால பகுதியில் தான் இறந்தவர்களை கிழக்கு திசை நோக்கி அடக்கம் செய்யும் பழக்கம் வந்தது. ஆகவே அவை போர்த்துக்கீசர் காலத்திற்கு உரியவையாக இருக்கலாம் என நம்புகின்றோம். 

ஆய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முதல் நாம் எதனையும் உத்தியோகபூர்வமாக செல்ல முடியாது. 

மீட்கப்பட்ட எலும்பு எச்சம் தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆய்வுகளின் பின்னரே உத்தியோகபூர்வமாக தெரிவிக்க முடியும் என தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/36780

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான ஆதராங்கள் சில கிடைக்க பெற்றுள்ளன. 

போத்துகீசர் யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிகள் என்று சொல்லுற பிளான் போல இருக்கு....:)

Link to comment
Share on other sites

யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்! கொலை என சந்தேகம்

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் பகுதியில் கடந்த வாரம் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மோதிரத்துடன் மீட்கப்பட்ட இந்த எலும்புக் கூடு, ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த மோதிரத்தில் காணப்படுகின்ற எழுத்து பொறிக்கும் முறை 1995 ஆம் ஆண்டுக்கு பின்னரே நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், 1995 ஆம் ஆண்டுக்கு பிற்பாடே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

இதேவேளை, அமெரிக்க பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாச்சார நிலையம் என்பன இணைந்து யாழ். கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டு இருந்தது.

.ந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/community/01/188596?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய படை ஆக்கிரமிப்பு காலத்திலும்.. சொறீலங்கா இராணுவ ஆக்கிரம்பிப்பு காலத்திலும்.. பல அப்பாவி தமிழ் மக்கள் கொன்று அழிக்கப்பட .. புதைக்கப்பட காரணமான ஒரு இன அழிப்புச் சின்னம் தான் இது. அங்கு மனித புதைகுழிகள் இருப்பது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல. இந்த அழிவுகளுக்கு சொறீலங்காவும் நடைமுறை உலகும் நீதி வழங்க முன்வரும் என்று தெரியவில்லை.

அது சரி.. உந்தக் கோட்டையை கட்டினது.. ஒல்லாந்தர் என்றிச்சினம். நெதர்லாந்து.. போர் முடிஞ்ச கையோடு மக்களுக்கு உதவி செய்ய வந்ததைக் காட்டிலும்.. கோட்டையை புனரமைக்க வந்தது தான் முக்கியமாப் பட்டிச்சுது. இப்ப போர்த்துக்கீசர் கதை வருகுது. உதைப் பற்றி போர்ச்சுக்கல்.. ஒன்னும் சொல்லுறதில்லை.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆராய்ச்சியாளர்மார் தங்கடை கெட்டித்தனத்தை காட்டீட்டினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.