Jump to content

அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்


Recommended Posts

அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்
 
 

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார்.  

 வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் குழப்பங்கள் குறித்து, ஆராய்வதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசேட சபை அமர்வொன்று நடாத்தப்பட்டது. அங்கு பேசும் போதே, அஸ்மின் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார்.   

கூட்டமைப்புக்குள் இருக்கும், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிரான அணியில் அங்கம் வகிப்பவர்களில் அஸ்மினும் ஒருவர். அவர், முதலமைச்சர் ஆதரவு அணியிலுள்ள அனந்தியை நோக்கியே, கைத்துப்பாக்கி பெற்றதான விடயத்தை முன்வைத்திருக்கின்றார்.   

இதைச் சபை அமர்வொன்றின், வாதப்பிரதிவாதங்களில் முன்வைக்கப்பட்ட விடயமாக மாத்திரம், கடந்து சென்றுவிட முடியாது.   

ஏனெனில், இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு எதிராக, நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களில் அனந்தியும் ஒருவர். குறிப்பாக, இறுதி மோதலின் இறுதி நாட்களில், இராணுவத்திடம் கையளித்த தன்னுடைய கணவரான சசிதரனின் (எழிலன்) நிலை என்ன என்று கோரி, நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நீதிமன்றத்தை நாடியவர் அவர்.   

அப்படியான நிலையில், யாருக்கு,  எந்தத் தரப்புக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றாரோ, அந்தத் தரப்பிடமே தன்னுடைய பாதுகாப்புக்காகக் கைத்துப்பாக்கியைப் பெற்றிருப்பதாக, அனந்தியை நோக்கிக் கூறும் விடயம், பாரதூரமானது.   

அவ்வாறான கட்டத்தில், அஸ்மின் தன்னுடைய கூற்று தொடர்பில், ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாது. அது மாத்திரமின்றி, அவர் தன்னுடைய, அரசியல் வகிபாகம் குறித்து உணர்ந்து, இயங்குவதும் அவசியமானது.   

கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில், மன்னாரில் போட்டியிட்ட அஸ்மின் 1,009 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார்.   

ஆனாலும், தமிழ்- முஸ்லிம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைந்து, இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்பும் தேவைப்பாடுகளின் போக்கில், கூட்டமைப்பால் நியமனப்பட்டியலினூடாக மாகாண சபை உறுப்பினராக்கப்பட்டார் அஸ்மின்.  

 முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான இணைப்பாளராகவும் முதலமைச்சரால் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அஸ்மின் வந்த வழியையும் செல்ல வேண்டிய வழியையும் மறந்து நின்று, அல்லாடுகிறார்.   

தன்னுடைய தாய் இயக்கமான, நல்லாட்சி மக்கள் இயக்கத்தோடு முரண்பட்டுவிட்ட அஸ்மின், தமிழரசுக் கட்சியோடு இணைந்து கொள்வது சார்ந்து, அதிக ஆர்வம் காட்டுகிறார். அதற்காக அவர் மிகுந்த பிரயத்தனங்களை எடுக்கின்றார். எனினும், அவர் இதுவரை, தமிழரசுக் கட்சி உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.   

அஸ்மின், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொள்ள விரும்புவதோ அல்லது தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதோ தவறில்லை. அதற்கான உரிமை அவருக்கு உண்டு.   

ஆனால், அவர் என்ன காரணங்களைக் கூறிக்கொண்டு அரசியலுக்கு வந்தாரோ, அதன்போக்கில் அவருக்கு என்ன பொறுப்புகள் வழங்கப்பட்டதோ, அதையெல்லாம் மறந்து நின்று, செயற்படுகின்ற தன்மையானது, குழப்பங்களையும் முரண்பாடுகளையும் அதிகப்படுத்திவிடும். அதன்போக்கிலேயே அனந்தி கைத்துப்பாக்கியைப் பெற்றதான விடயத்தையும் பார்க்க வேண்டும்.   

முதலமைச்சருக்கு எதிரான அணியில், குறிப்பாக எம்.ஏ. சுமந்திரன் அணியில், தன்னை முக்கியஸ்தராக நிலைநிறுத்தும் தேவைப்பாடொன்றின் போக்கில், கடந்த சில ஆண்டுகளாக அஸ்மின் இயங்குவது வெளிப்படையானது. ஆனால், அதற்காக அவர் தேர்தெடுத்த வழியும், வெளிப்படுத்தும் விடயங்களுமே சிக்கலானவை.   

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டது. அது, இயல்பாகவே இலங்கை அரசாங்கத்துக்கும், அதன் நிறுவனங்களுக்கும் எதிரான மனநிலையைக் கொண்டது.   

அப்படியான கட்டத்தில், பொலிஸ் பாதுகாப்பைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரோ, மாகாண சபை உறுப்பினரோ பெறுவதையே, ஒருவித ஒவ்வாமையாக நோக்கும் தன்மையொன்று உண்டு. அதிலும், சுமந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, நீதிமன்ற உத்தரவின் பேரில் வழங்கப்பட்டிருக்கின்ற விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பைத் தமிழ் மக்கள் சிறிதளவும் ஏற்றுக்கொள்ளவில்லை.  

அதைப் பெரும் விடயமாகத் தமிழ்த் தேசிய அரசியல் களம் பேசியும் வருகின்றது. அப்படியான நிலையில், அதையும் தாண்டிய நிலையொன்றை நோக்கி, அனந்தி சென்றிருக்கின்றார்; கைத்துப்பாக்கியைப் பாதுகாப்பு அமைச்சிடம் பெற்றிருக்கின்றார் என்கிற கூற்று, எந்த அடிப்படையில் வருகின்றது என்பதை, நோக்க வேண்டிய தேவை உண்டு.   

இது, அஸ்மின் என்கிற மாகாண சபை உறுப்பினருக்கும் அனந்தி என்கிற அமைச்சருக்கும் இடையிலான விடயம் மாத்திரம் அல்ல. மாறாக, இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைமை தலையிட வேண்டிய விடயம்;  ஆதாரங்களைக் கோர வேண்டிய விடயம். 

இல்லாது போனால், இந்தப் பாராதூரமான விடயம் சார்ந்து, அஸ்மின் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கோரப்பட வேண்டியது அவசியம்.   

இன்னொரு கட்டத்தில், அஸ்மின் முன்வைக்கும், கைத்துப்பாக்கியை அனந்தி பெற்றதான விடயம், பொய் என்று நிருபணமாகும் பட்சத்தில், தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான முரண்பாடுகளின் அளவை அதிகரிக்கும்.   

ஏனெனில், அனந்தி மீது, அமைச்சர் என்கிற அடையாளம் மாத்திரம் இருக்கவில்லை. மாறாக, போராளி ஒருவரின் மனைவி என்கிற அடையாளமும் உண்டு. அப்படியான நிலையில், அனந்தியை நோக்கியதான இந்தக் குற்றச்சாட்டு, தமிழ் மக்களைக் கோபப்படுத்தும்.   

அதுவும், இனமுரண்பாடுகளின் போக்கில் பிளவுண்டிருக்கின்ற சமூகம், அஸ்மின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத கட்டத்தில், அந்தக் கோபத்தை, அஸ்மின் மீது மாத்திரமல்ல, அவர் சார்ந்த சமூகத்தின் மீதும் காட்டும்.   

ஏனெனில், நினைத்துப் பார்க்க முடியாத முரண்பாடுகளின் கட்டத்தில், தமிழ்- முஸ்லிம் உறவு இருக்கின்றது. அதனை, மெல்ல மெல்லச் சரி செய்வதற்கான முயற்சிகளைப் பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் எடுக்கும் போது, அதன் போக்கில் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட நபரே, அதற்கு உலை வைப்பதான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பாரிய பின்னடைவையே ஏற்படுத்தும்.   
தான், பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி பெற்றதான குற்றச்சாட்டுகளை, அனந்தி உடனடியாக மறுத்துரைத்து விட்டார். அவர் அதற்கு மேல், தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையும் தற்போதைக்கு இல்லை.

ஏனெனில், குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களே, ஆதாரங்களையும் முன்வைக்க வேண்டும். அதுதான் சட்டநெறி. அதன்போக்கில், அஸ்மின் தன்னுடைய சட்டத்துறை நண்பர்களுடன் பேசி, விடயங்களை வெளிப்படுத்த வேண்டும்.   

அரசியலில், தங்களது வகிபாகங்கள் சார்ந்து, எந்தத் தெளிவும் இல்லாமல், மற்றவர்களின் தயவில் வளர நினைக்கும் தன்மையானது, ஒரு கட்டம் வரையில் வேண்டுமானால், ஒருவரை வளர்க்கலாம்.   

ஆனால், அது நிரந்தர வெற்றியையோ, சுய ஆளுமையின் வெற்றியையோ பதிவு செய்யாது. அப்படியான நிலையில், மற்றவர் நிழலில் அஸ்மின் வளர்வதற்காக, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டு, உணர்ச்சிகர அரசியலைச் செய்ய நினைத்தால், அது அவரை மாத்திரமல்ல, அவரை வளர்த்துவிட நினைப்பவர்களையும் வெட்டி வீழ்த்திவிடும்.   

கடந்த சில நாட்களுக்கு முன்னர், முதலமைச்சர் தொடர்பில், அவதூறுக் கருத்தொன்று ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அந்த அவதூறைப் பரப்பியவர்களுக்கு, எந்தவிதமான சமூக ஒழுக்கமும், அரசியல் நெறியும் கிடையாது.   

மாறாக, முதலமைச்சருக்கு எதிரான மனநிலையை, வெளிப்படுத்துவது மாத்திரமே குறிக்கோளாக இருந்தது. ஆதாரங்கள் இன்றி அவதூறுகளைப் பரப்புவதும், குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும், ஒரு வகையில் மனப்பிறழ்வின் நிலை.   

அதையே வேலையாகப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றது.   

 அப்படியான நிலையில், தங்களது மனக்கிலேசங்களையும் அவாக்களையும் சமூக ஊடக மனநிலையின் போக்கில், அரசியலாக வெளிப்படுத்த ஆரம்பிப்பதும், அதுவே இறுதி வரை சரியென நம்புவதும் அபத்தங்களின் உச்சம்.  

ஏனெனில், சமூக ஊடகங்களின் ஆரோக்கியமான கட்டங்களைத் தாண்டி, அவதூறின் கட்டங்களே இன்றைய சூழலில் கோலோச்சுகின்றன. அது, பலரையும் சூனிய வெளிக்குள் தள்ளியும் விட்டிருக்கின்றது.   

அப்படியானதொரு கட்டத்தில், அனந்தி கைத்துப்பாக்கி பெற்றமை தொடர்பிலான தன்னுடைய கூற்று தொடர்பில், அஸ்மின் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.   

இல்லையென்றால், அவர் முன்வைத்திருக்கும் விடயம், அவதூறின் வடிவமாகவும் அபத்தமான அரசியல் கூச்சலாகவும் கொள்ளப்பட வேண்டியது; மன்னிக்கப்பட முடியாதது.     

  •  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அஸ்மினும்-ஒரு-கைத்துப்பாக்கி-குற்றச்சாட்டும்/91-219177

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.