Jump to content

"நான் அப்படிச் சொல்ல வரவில்லை": ரஷ்ய விவகாரத்தில் தலைகீழாக டிரம்ப்


Recommended Posts

"நான் அப்படிச் சொல்ல வரவில்லை": ரஷ்ய விவகாரத்தில் தலைகீழாக டிரம்ப்

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற அமெரிக்க உளவு நிறுவனங்களின் கருத்துக்கு மாறாக, ரஷ்ய அதிபரின் கருத்தை ஆதரித்துப் பேசிய டிரம்ப், அமெரிக்காவில், குறிப்பாக சொந்தக் கட்சியில் எழுந்த அதிருப்திகள், கண்டனங்களை அடுத்து, தான் அப்படிச் சொல்லவரவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

டிரம்ப்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஹெல்சின்கி செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப்.

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டு டிரம்புக்கு ஆதரவாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டனுக்கு எதிராக செயல்பட்டது என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் முடிவுக்கு வந்தன.

தேர்தல் நேரத்தில் ஹிலரி கிளிண்டனுக்கு எதிராகச் செயல்பட்டு இமெயில்களை ஹேக் செய்ததாக ரஷ்ய உளவுத்துறையைச் சேர்ந்த 12 பேரை கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தார் அமெரிக்க அட்டர்னி ஜெனரல்.

இந்நிலையில் ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி-யில் ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதினை திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்ப், பிறகு புதினோடு சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது என்ன சொன்னார்?

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிரம்ப்: அடடா போட்ட பால் தப்பா போச்சே...

அந்த சந்திப்பின் போது, "2016ல் நடந்த அமெரிக்கத் தேர்தலில் தலையிடவில்லை என்று அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். எல்லா அமெரிக்க உளவு நிறுவனங்களும் ரஷ்யா தலையிட்டதாக முடிவுக்கு வந்துள்ளன. என்னுடைய முதல் கேள்வி, இதில் யார் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள்" என்று கேட்டார் ஒரு செய்தியாளர்.

அவருக்குப் பதில் அளித்த டிரம்ப், "என்னுடைய அதிகாரிகள் என்னிடம் வந்து ரஷ்யா செய்ததாக கூறினார்கள். அதிபர் புதின் ரஷ்யா அப்படிச் செய்யவில்லை என்றார். (ரஷ்யா) அப்படிச் செய்திருக்கும் என்று கூறுவதற்கான காரணம் ஏதும் எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.

இந்த கருத்து தமது சொந்த நாட்டு உளவு நிறுவனங்களை மறுத்து, எதிராளி நாட்டின் அதிபரின் கருத்தை ஆதரித்த செயலாக அமெரிக்காவில் பார்க்கப்பட்டது. டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சி செனட்டர்கள் உள்ளிட்டோர், இதற்கு எதிரான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். துணை அதிபர் மைக் பென்ஸ் டிரம்பை ஆதரித்தார்.

முன்னதாக, செய்தியாளர் சந்திப்பில் நடந்த உரையாடல்களின் எழுத்தாக்கம் அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து வெளியாகி இருந்தது.

இப்போது என்ன சொல்கிறார்?

டிரம்ப்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES

செய்தியாளர் சந்திப்பு உரையாடல்களின் எழுத்தாக்கத்தை தாம் படித்ததாகவும், எனவே தாம் சொல்ல வந்ததது குறித்த விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் கூறிய டிரம்ப், "செய்தியாளர் சந்திப்பில் நான் சொன்ன முக்கியமான ஒரு வாக்கியத்தில் 'வுட்நாட்' என்று சொல்வதற்குப் பதிலாகத் தாம் 'வுட்' என்று கூறிவிட்டதாக" தெரிவித்தார். "(ரஷ்யா) அப்படி செய்திருக்காது என்பதற்கான காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை" அல்லது "அது ஏன் ரஷ்யாவாக இருக்காது?" என்பது போன்ற இரட்டை எதிர்மறை வாக்கியமாக அது இருந்திருக்கவேண்டும் என்றார் டிரம்ப்.

"2016 தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக நமது உளவு நிறுவனங்கள் முடிவுக்கு வந்துள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன். வேறு யாரும்கூட இதைச் செய்திருக்கலாம். நிறைய பேர் இருக்கிறார்கள்" என்று மேலும் தெரிவித்தார் டிரம்ப்.

ஆனால், அந்த தலையீடுகள் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார். இந்தத் தேர்தலில்தான் ஹிலரி தோற்று டிரம்ப் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இத்தனை சீற்றம்?

டிரம்ப்- புதின்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபேச்சு கை கொடுக்கல சார்....

ரஷ்யா அமெரிக்கா இடையே நீண்ட காலப் பகைமை நிலவுகிறது. முக்கிய உலகப் பிரச்சினைகளில் அவை நேரெதிர் நிலை எடுக்கின்றன. இருநாட்டு உறவில் நிலவும் பிரச்சனைகளுக்கு ரஷ்யாவை குற்றம்சாட்டாமல் இருநாடுகளுமே அதற்குக் காரணம் என்று டிரம்ப் கூறியது பல முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிருப்தியைத் தந்தது.

டிரம்பின் மிகத் தீவிரமான ஆதரவாளரான நீயூட் ஜிங்க்ரிச் என்பவர்கூட, ஹெல்கின்சியில் டிரம்ப் கூறிய கருத்துகள், "அவரது அதிபர் பதவிக்காலத்தின் மிக மோசமான தவறு" என்று விமர்சித்தார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @SenSchumer
 

It tells President Putin 'continue to take advantage of Donald Trump' because he doesn’t have the courage, the strength, maybe not even the conviction to say to Putin’s face what he tried to say a few minutes ago.

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @SenSchumer

டிரம்ப்பின் கருத்தை தீவிரமாக டிவிட்டரில் விமர்சித்து வந்த ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷும்மர் என்பவர், டிரம்ப் தன் கருத்தை மாற்றிக்கொண்டதை அடுத்து அதை கோழைத்தனம் என்பதாக விமர்சித்தார். "தற்போது சொல்ல முயல்வதை புதின் முகத்துக்கு எதிராகச் சொல்லும் துணிச்சல், வலிமை, தீர்மானம் டிரம்புக்கு இல்லாததால் அதை தொடர்ந்து சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் புதின்" என்று அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

https://www.bbc.com/tamil/global-44868737

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.