Jump to content

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்


Recommended Posts

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்

 

 

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்

இலங்கை பாராளுமன்றத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

எமக்கு தெரிந்த உண்மையான தகவல்களுக்கு அமைய இப்போது வரையில் வடக்கில் 39 இராணுவ முகாம்களை  நீக்க நடவடிக்கை எடுக்கபடுகின்றது

 வடக்கு கிழக்கில் மொத்தமாக 100 இராணுவ  முகாம்களை அகற்ற நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றது. 

இராணுவத்தில் இருக்கும் 25 வீத படையணியினரை நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்த நடவடிகைகள் மூலமாக இராணுவத்தை பலவீனபடுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

weerawansa.jpg

இதனை அரசியல் காரணியாக கருதக்கூடாது. இராணுவத்தின் உள்ளேயே பலவீனமாதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் மூலமாக தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். ஆகவே உரிய அமைச்சர்கள் உடனடியாக இந்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/36817

 

 

 

வடக்கில் முகாம்களை ஒருபோதும் நீக்க மாட்டோம் - விஜயவர்தன

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கில் இராணுவ முகாம்களை நீக்கக் கோரி அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. வடக்கின் முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படப் போவதுமில்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ruwan__wijeyawarthana.jpg

இராணுவ படையணி குறிப்புகள் உள்ளிட்ட நிருவாக தீர்மானங்களை இராணுவமே முன்னெடுக்கின்றது, இதில் எந்தவித அரசியல் தலையீடுகள் இல்லை. இதனை தெளிவு படுத்தியே இராணுவத் தளபதி பாதுகாப்பு அமைச்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இந்த நடவடிக்கைகள் மூலமாக தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபது தெரிவித்துள்ளார். 

யுத்தத்தின் பின்னர் சில படையணிகள் தனியாக இயங்குவது அவசியம் இல்லை என சுட்டிக்கட்டியுள்ள இராணுவம் அவ்வாறான படையணிகள் , குறைந்த படைகளை கொண்ட அணிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு அணியாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. அதை விடுத்து படையணியை இராணுவத்தில் இருந்து நீக்குவது நிக்கம் அல்ல. அவ்வாறு நீக்கப்படப்போவதும் இல்லை. இராணுவத்தின் எண்ணிக்கை அவ்வாறே இருக்கும். 

அதேபோல் வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படுவதாக இராணுவம் கூறவில்லை. அரசாங்கமாக நாமும் அவ்வாறன எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. எமக்கு எந்தத் தேவையும் இல்லாது நாம் இராணுவத்தை கட்டுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

http://www.virakesari.lk/article/36816

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.