Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

இந்தியா தோற்றதற்கு கோலிதான் பொறுப்பேற்க வேண்டும்: நாசர் ஹுசைன் அதிரடி

 

 
kohli

படம். | ஏ.பி.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் கோலி, அஸ்வின், இசாந்த் சர்மா ஆகியோர் உயர்தரமாக ஆடி வெற்றிக்கு நெருங்கி வந்து தோற்றுள்ள நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கோலியைப் புகழ்ந்து கூறினாலும் கேப்டன்சியில் கோலி சோடைபோனதற்காக இந்திய தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸில் நாசர் ஹுசைன் கூறியதாவது:

 

இந்தப் போட்டியில் கோலி ஒரு பிரமாதமான ஆட்டத்தை ஆடினார், அதனால் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். டெய்ல் எண்டர்களுடன் ஆடி இந்திய அணியை டெஸ்ட் மேட்சிற்குள் கொண்டு வந்தார்.

ஆனால் அதே வேளையில் தோல்விக்கு அவர் பொறுப்பும் ஏற்க வேண்டும், காரணம் இங்கிலாந்து 87/7. கரனும் ஆதில் ரஷீத்தும் உள்ளனர் ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினை ஒரு மணி நேரம் ஆட்டத்தில் காணவில்லை.

இந்தியா அப்போது கட்டுப்பாட்டை இழந்தது. எனவே கோலி தன் கேப்டன்சி குறித்து திரும்பிப் பார்த்து சிந்திக்க வேண்டும். இடது கை வீரர்களுக்கு எதிராக அஸ்வினின் சராசரி 19. சாம் கரன் என்ற 20 வயது இளம் இடது கை வீரர் கிரீசில் இருக்கிறார், அவரை ஏன் பவுலிங்கிலிருந்து அகற்ற வேண்டும்?

இவ்வாறு கேள்வி எழுப்பினார் நாசர் ஹுசைன்.

https://tamil.thehindu.com/sports/article24607564.ece

Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

பேட்ஸ்மென்களை நீக்குவதற்கு முன்பாக போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும்: கங்குலி கருத்து

 

 
ganguly

கங்குலி, விராட் கோலி. | படம்: ஏ.எப்.பி.

மிகப்பெரிய, உலகத்தரம் வாய்ந்த இரண்டு இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியை தனிநபராக வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற விராட் கோலியிடமிருந்து கேப்டனாக தான் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

புஜாராவை உட்காரவைத்ததை நேரடியாகக் குறிப்பிடாமல், கங்குலி இன்ஸ்டாகிராமில் கூறும்போது, பேட்ஸ்மென்களை நீக்கும் போது போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் கூறியதாவது:

கேப்டனாக இருந்தால் வெற்றி பெற்றால் எப்படி வாழ்த்துகிறார்களோ அதே போல் தோல்வியடைந்தால் விமர்சிக்கவே செய்வார்கள். கோலி மீது ஒரு விமர்சனம் என்னவெனில் பேட்ஸ்மென்களை நீக்கும் முன் அவர்களுக்கு சீராக போதிய வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோமா என்பதை அவர் பரிசீலிக்க வேண்டும்.

கேப்டன் தான் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இது அவர் அணி, எனவே அவர்தான் வீரர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அவர்களுடன் அமர்ந்து தான் செய்ய முடியும் போது அவர்களாலும் முடியும் என்று ஊக்கமளிக்க வேண்டும்.

அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து அணியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று கூறி அவர்கள் மனதில் இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும் விராட் கோலி. எப்பப்பார்த்தாலும் வீரர்களை நீக்குவதும் எடுப்பதுமாக இருந்தால் அவர்கள் மனதில் பயம் வந்து சுதந்திரமாக ஆட முடிவதில்லை. இதனாலேயே சமீப காலங்களில் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போகிறது.

கடந்த காலங்களின் சிறந்த அணிகளின் வெற்றிக்கு ஒரு காரணத்தை நாம் அடையாளம் காண முடியும். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என்று எதுவாக இருந்தாலும் அல்லது இந்திய அணி (2007-ல் இங்கிலாந்தில் வென்றது)ஆக இருந்தாலும் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் ஆடினர். எனவே ஓரிரண்டு போட்டிகளில் சரியாக ஆடாவிட்டாலும் அடுத்த போட்டிகளில் மீண்டெழ வாய்ப்பு கிடைத்தது. முதல் தர கிரிக்கெட்டில் ஆடி 150 ரன்களைக் குவித்தாலும் அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஈடுகாணாது. விராட் கோலி தவிர மற்ற வீர்ர்கள் யாரும் 3 வடிவங்களிலும் ஆடுவதில்லை.

இவ்வாறு கூறினார் கங்குலி.

கங்குலி கூறியதற்கான காரணம்:

தென் ஆப்பிரிக்காவில் 2 இன்னிங்ஸ்கள் தவண் சரியாக ஆடாததால் உடனே ராகுல் கொண்டு வரப்பட்டார். ரஹானே இந்தியாவின் துணைத்தலைவர் ஆனால் 2 டெஸ்ட்களுக்கு உட்கார வைக்கப்பட்டார், 3வது டெஸ்ட் போட்டிக்குக் கொண்டு வரப்பட்டார். முன்னதாக இலங்கைக்கு எதிரான உள்நாட்டு தொடரில் கொல்கத்தாவில் முதல் டெஸ்ட்டுக்கு விஜய் இல்லை. பிறகு 2வது டெஸ்ட் போட்டிக்கு விஜய் வந்தார். எட்ஜ்பாஸ்டனில் புஜாரா நீக்கப்பட்டு 3 தொடக்க வீரர்கள் அணியில் இருந்தனர்.

இதற்கு முன்னதாகவும் புஜாரா நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டாப் 3 என்பதை அளவுக்கு அதிகமாக யோசித்து விஜய், தவண், புஜாரா என்று சீராக வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பது கங்குலியின் நியாயமான குற்றச்சாட்டாகவே படுகிறது.

https://tamil.thehindu.com/sports/article24608260.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் அதிரடி மாற்றம்: மலானுக்கு பதிலாக போப்;ஸ்டோக்ஸுக்கு பதிலாக வோக்ஸ்

 

 
ben

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸ்   -  படம் உதவி: ட்விட்டர்

லண்டன் லார்டஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் பேட்டிங்கிலும் சொதப்பி, கேட்ச்களையும் கோட்டை விட்ட டேவிட் மலானுக்கு பதிலாக இளம் வீரர், ஆலிவர் போப் அறிமுகமாகிறார்.

 

முதல் போட்டியில் கலக்கலாகப் பந்துவீசிய பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோக்ஸ் மீது வழக்கு உள்ளதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து அணி 2 மாற்றங்களைச் செய்துள்ளது.

முதலாவதாக, பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்து, பீல்டிங்கிலும் மோசமாக இருந்த டேவிட் மலானுக்கு பதிலாக உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் 20வயது வீரர் ஆலிவர் போப் வாய்ப்பு பெற்றுள்ளார்.

டேவிட் மலான் இரு இன்னிங்ஸிலும் முறையே 8, 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார், ஸ்லிப்பில் பீல்டிங் செய்து 3 கேட்சுகளை கோட்டைவிட்டார் என்பதால், அவருக்கு இங்கிலாந்து அணி நிர்வாகம் கல்தா கொடுத்துள்ளது.

அதேசமயம் புதுமுகமாக அறிமுகமாகும் ஆலிவர் போப் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் 684 ரன்கள் சேர்த்துள்ளார். இது 2-வது அதிகபட்சமாகும். மேலும், வலதுகை பேட்ஸ்மேன் என்பதால், இந்திய வீரர் அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொண்டு துவம்சம் செய்ய இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், வேகப்பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

Woakes-Chrisjpg

கிறிஸ் வோக்ஸ்

 

சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டல் நகரில் ஒரு மதுபான விடுதியில் தகராறில் ஈடுபட்டார். அது தொடர்பாக அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த ஒழுக்கக்குறைவான சம்பவத்தால், இங்கிலாந்து அணியிலும் சில போட்டிகளுக்கு ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நாளை வருகிறது. விசாரணை வேறு ஒரு தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டால், 2-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்படுவார். அல்லது விசாரணை நடந்து தண்டனை ஏதும் அளிக்கப்படும் பட்சத்தில் கிறிஸ் வோக்ஸ் அணியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.thehindu.com/sports/article24608662.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

கோலியை வீழ்த்த புதிய வியூகம்; அழுத்தம் மறைமுகமாக வரும்: கள யுத்தியை வெளிப்படையாகக் கூறிய இங்கிலாந்து பயிற்சியாளர்

 

 
trevor-bayliss-en

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ்   -  படம்: கெட்டி இமேஜஸ்

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்க உள்ள 2-வது டெஸ்ட் போட்டியின் போது கோலிக்கு எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்கமாட்டோம், மாறாக வேறுயுத்தியில் கோலிக்கு அழுத்தம் இருக்கும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் கேப்டன் விராட் கோலியைத் தவிர அனைவரும், இரு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சுக்கு இரையானார்கள். விராட் கோலி மட்டுமே இங்கிலாந்து வீரர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

 

இதற்கிடையே இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லாட்ஸ் மைதானத்தில் வரும் 9-ம் தேதி நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலானுக்குப் பதிலாக ஆலிவர் போப், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2-வது போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் எப்படி கள யுத்தியை செயல்படுத்தப் போகிறார்கள் என்பது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டிரிவேர் பேலிசிஸ் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மட்டும் சிறந்த பேட்ஸ்மேனாக இல்லாமல் இருந்திருந்தால், அவரை எப்போதோ எங்கள் வீரர்கள் ஆட்டமிழக்கச் செய்திருப்போம். முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் விராட் கோலியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. அதை வர்ணிக்க முடியாது.

ஆதலால், அடுத்துவரும் போட்டிகளில் எங்கள் யுத்தியை மாற்றிக்கொள்ள இருக்கிறோம். விராட் கோலிக்கு கொடுக்கும் நெருக்கடியை, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நாங்கள் கொடுக்கப் போகிறோம்.

அவர்களுக்குப் பந்துவீச்சில் நாங்கள் கொடுக்கும் நெருக்கடியால், அவர்கள் விக்கெட்டை எளிதாக இழப்பார்கள். அந்த அழுத்தம் முழுவதையும் கேப்டன் கோலி மீது சுமத்துவார்கள். இதனால், கோலிக்கு அழுத்தம் அதிகரிக்கும், விக்கெட்டை இழப்பார். இதுதான் எங்கள் யுத்தியாகும்.

மற்ற வீரர்களுக்கு மட்டுமே நெருக்கடி இருக்கும். விராட் கோலிக்கு மற்ற வீரர்களால் அழுத்தம் ஏற்படும்.

baylisjpg
 

முதல் டெஸ்ட்டின் இரு அணிகளின் 4 இன்னிங்ஸ்களிலும் லெக் சைட், ஆப் சைட், மிட் ஆப் என அனைத்துப் பகுதிகளிலும் விக்கெட்டுகளை வீரர்கள் இழந்தார். ஆனால், இங்கிலாந்து பந்துவீச்சுக்கு அசராமல் பேட் செய்தவர் கோலி. இந்தப் பந்துவீச்சில் பேட் செய்வது கடினம் எனத் தெரிந்தும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.

இந்திய அணி சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. ஆனால், பேட்ஸ்மேன்கள் அவசரப்பட்டு, பந்து வருவதற்கு முன்கூட்டியே பேட்டைக் கொண்டு சென்று தேவையில்லாமல் ஆட்டமிழந்தார்கள். அதுபோன்ற தவறைத் திருத்திக்கொண்டு விளையாடுவார்கள் என நம்புகிறேன்.

எங்கள் அணியினரும் சுழற்பந்துவீச்சைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆதலால், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து தீவிரமான பயிற்சி எடுத்து வருகிறோம்.

அஸ்வினின் வலது கை சுழற்பந்துவீச்சை சமாளிக்கத் திறமையான வலதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதால்தான் டேவிட் மலானை நீக்கிவிட்டு ஆலிவர் போப்பை 2-வது டெஸ்ட் போட்டியில் சேர்த்திருக்கிறோம்.

வழக்கு தொடர்பாக பென் ஸ்டோக்ஸ் சென்றுள்ளார் என்பதால், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வோஸ் சிறந்த ஆல்ரவுண்டர், வேகப்பந்துவீச்சாளர். வலைப்பயிற்சியில் 14 ஓவர்கள் வரை வீசிவிட்டு, களைப்படையாமல், டி20 போட்டியிலும் விளையாடக்கூடிய திறமை படைத்தவர் வோக்ஸ்.

இங்கிலாந்து, இந்திய அணிக்கு ஒரேமாதிரியான பிரச்சினைதான் இருக்கிறது. ஸ்லிப்பில் இருக்கும் பீல்டர்கள் சரிவர கேட்ச்களைப் பிடிப்பதில்லை. இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், இந்திய அணியில் ஷிகர் தவண், ரஹானே ஆகியோரும் கேட்சுகளைத்  தவறவிட்டனர். இதையும் வரும் போட்டியில் திருத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய அணியை 2-வது போட்டியிலும் வீழ்த்த பல்வேறு யுத்திகளோடு களமிறங்குவோம்.''

இவ்வாறு பேலிசிஸிஸ் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24614443.ece

Link to comment
Share on other sites

என்ன செய்யப்போகிறது இந்திய அணி? லார்ட்ஸில் நாளை 2வது டெஸ்ட்

 

 
rahane-kohli

ரஹானே, கோலி, லார்ட்ஸில் வலைப்பயிற்சியில். | ஏ.எப்.பி.

எட்ஜ்பாஸ்டனில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி தோற்றதன் மூலம் நிறைய அனுகூலங்களை பெற்றாலும் இறுதியில் முடிவு தோல்வி என்பது சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி, 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர்களுக்கு நிச்சயம் இருதயம் உடையும் அனுபவமாகவே இருக்கும்.

ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணி முன்னெப்போதும் இல்லாத தீவிரத்துடன் ஆடுகிறது, அதனால் தோல்விகள் நிச்சயம் இந்திய அணியை உலுக்கவே செய்யும்.

 

இங்கிலாந்து அணி தன் கேட்ச்களைப் பிடிக்க ஆரம்பித்தால் இந்திய அணியின் தோல்வி இன்னமும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கும், அல்லது இனி தீர்மானிக்கப்படும்.

2வது டெஸ்ட் போட்டிக்கு பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய நிம்மதி. ஏனெனில் அவர் மிடில் ஆர்டரைக் காலி செய்து விடும் திறமை கொண்டவர். அவருக்குப் பதில் கிறிஸ் வொக்ஸ் அல்லது மொயின் அலி வரலாம் இந்த ஓட்டையை இந்திய அணி நன்றாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்திய அணியும் பீல்டிங்கில் முன்னேற வேண்டியுள்ளது, எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஷிகர் தவண் மட்டும் வாய்ப்புகளை பிடித்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும். மேலும் சாம் கரன் என்ற இளம் வீரர் எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடும்போது கேப்டன் விராட் கோலி என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதுதான் நடந்தது.

இந்திய அணிக்குப் பெரிய அனுகூலம் என்னவெனில் பந்து வீச்சு அபாரமாக உள்ளது, அஸ்வினின் அயல்நாட்டுப் பிட்சில் திடீர் எழுச்சி இங்கிலாந்துக்கு இன்னும் கவலையளிக்கவே செய்யும். காரணம் லார்ட்ஸ் பிட்ச் இன்னமும் கூட வறண்ட பிட்சாகவே இருக்கும். அலிஸ்டர் குக், எப்போதும் எந்த வேகப்பந்து வீச்சை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற சிந்தனையிலிருந்து தற்போது அஸ்வினிடம் விக்கெட் கொடுக்காமல் இருப்பது எப்படி என்ற புதிய குழப்பத்தில் ஆட்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் இன்னொரு சாதக அம்சம் என்னவெனில் நம் பேட்டிங்கை தொடர்ந்து நெருக்கடியிலும் அழுத்தத்திலும் வைத்திருந்ததே. விராட் கோலி இன்னமும் கூட ஆண்டர்சனை தன்னம்பிக்கையுடன் ஆடுவது போல் தெரியவில்லை. ஆனாலும் அவரது பொறுமை மற்றும் உறுதி உலகத்தரம் வாய்ந்த இரண்டு டெஸ்ட் இன்னிங்ஸ்களை அவருக்கு எட்ஜ்பாஸ்டனில் அளித்தது.

விஜய், தவன், ரஹானே, ராகுல் ஆகியோர் தங்கள் உத்தியை மீண்டுமொருமுறை பரிசீலித்துக் கொள்வது நல்லது. புஜாரா அணிக்குள் வந்தால் நல்லது என்றே இப்போது இந்திய ரசிகர்களுக்குத் தோன்றலாம், ஆனால் ரசிகர்கள் பார்வை வேறு அணி நிர்வாகத்தின் பார்வை வேறு.

ரஹானே நிச்சயம் நிரூபிக்க வேண்டியுள்ளது, தேவையில்லாமல் அவரை உட்கார வைத்து செய்த பரிசோதனைகளினால் அவர் இந்திய பிட்ச்களில் ஸ்பின் பந்து வீச்சில் கூட திணறும் வீரராக மாற்றப்பட்டிருப்பதுதான் நடந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 7 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 10.72 என்பது அவரது தரத்துக்கு மிகவும் இழுக்கானது.

இங்கிலாந்து அணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வலது கை பேட்ஸ்மென் 20 வயது ஆலி போப் நாளை ஆடுவார் என்பது ஏறக்குறைய ஊர்ஜிதமாகி உள்ளது. இந்திய அணி பவுலர்கள் உண்மையில் பயப்பட வேண்டியது ஜானி பேர்ஸ்டோ என்ற அபாய வீரரின் பேட்டிங்கில்தான். விரைவில் எதிரணியிடமிருந்து ஆட்டத்தைப் பறித்துச் செல்வார்.

ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவன் தேவையா?

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு அடுத்த படியாக அதிக ரன்களை எடுத்தவர் பாண்டியா என்றாலும் அவரது ஆட்டத்தில் ஒரு முதிர்ச்சியில்லை. பவுலிங்கில் அவரை விராட் கோலி நம்பவில்லை.

பேசாமல் இவருக்குப் பதிலாக கருண் நாயர் போன்ற கூடுதல் பேட்ஸ்மெனைத் தேர்வு செய்துகொள்ளலாம். பவுலிங்கில் பிட்ச் வறண்டு காணப்பட்டால் உமேஷ் யாதவ்வை தூக்கி விட்டு குல்தீப் அல்லது ஜடேஜாவைக் கொண்டு வர வாய்ப்புள்ளது.

ஷிகர் தவண் மீது அவர் ஏதோ சேவாக் போல் நம்பிக்கை வைப்பது வீணே. எப்போது வேண்டுமானாலும் எட்ஜ் ஆகும் அவரது கால் நகர்த்தல்கள் சர்வதேச உயர்தர பந்து வீச்சுக்குப் பொருத்தமானதாக இல்லை.

ஆனால் நாம் என்ன மாற்றமெல்லாம் வேண்டும், விரும்பத்தக்கது என்று கூறுகிறோமோ அதையெல்லாம் கோலி ஒரு போதும் கவனிக்க மாட்டார், மாறாத அதே அணியுடன் கூட நாளை களமிறங்கலாம். கோலியின் ஸ்டைல் என்னவெனில் எப்போது மாற்றம் தேவையோ அப்போது செய்ய மாட்டார், எப்போதெல்லாம் மாற்றம் தேவையில்லையோ அப்போதெல்லாம் மாற்றம் செய்வார். கேட்டால் இது என் ஸ்டைல் என்பார். ஆகவே அதே அணியாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் தலா 4 கேட்ச்களை விட்டன. இதனால் இந்தியாவுக்குக் கூடுதலாக 154 ரன்களும் இங்கிலாந்துக்கு கூடுதலாக 86 ரன்களும் கிடைத்தன.

இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம் என்று ஆடுவதை புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவர், “பெரிய அளவில் நாங்கள் சிறப்பாக ஆடாமலேயே நெருக்கடியிலும் வெற்றி வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம்” என்று கூறியது இங்கிலாந்து அணி குறித்த அவரது கருத்தல்ல, மாறாக, இந்திய அணியைப் பற்றிய கருத்தாகும், அதாவது, “இந்திய அணி எவ்வளவு சிறப்பாக ஆடினாலும் எப்படியாவது அவர்களே தோற்று விடுவார்கள்” என்று கூறுவது போல் அவர் சுற்றிவளைத்து மறைமுக அர்த்தத்தில் இடக்கரடக்கலாகத் தெரிவிப்பது போல்தான் நமக்குப் படுகிறது.

https://tamil.thehindu.com/sports/article24634993.ece

Link to comment
Share on other sites

ஒரு தோல்வி என்றவுடனேயே முடிவு கட்டி விடாதீர்கள்; பிரச்சனை உத்தி அல்ல; மனரீதியானது: விராட் கோலி

kohli

படம். | ஏ.எஃப்.பி.

முதல் டெஸ்ட் தோல்வியையடுத்து உடனே அணியைப்பற்றி முடிவு கட்டிவிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அனுதாபிகளை கேப்டன் விராட் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை லார்ட்ஸில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று சமன் செய்யும் நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.

 

இந்நிலையில் டெஸ்ட்டுக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி கூறியதாவது:

“நாம் உடனடியாக அணியைப் பற்றி விரைவில் தீர்ப்புக்குத் தாவி விட வேண்டாம், ஒரு அணியாக நாம் பொறுமை காப்போம். தோல்விகளில், பேட்ஸ்மென் தோல்விகளில் எந்த ஒரு வகைமாதிரியையும் தொடர்ச்சியையும் நாங்கள் பார்க்கவில்லை. விக்கெட்டுகள் கொத்தாக விழுவதுதான் பிரச்சனை, இது உத்தி ரீதியான தவறுகளல்ல, இது மனரீதியான பிரச்சனையே.

முதல் 20-30 பந்துகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவான திட்டமிடுதல் வேண்டும். இந்தத் திட்டம் ஆக்ரோஷமாக ஆடுவதாக எப்போதும் இருக்க வேண்டியத் தேவையில்லை. இங்கு நமக்கு நிதானமும் பொறுமையுமே அவசியமே தவிர ஆக்ரோஷம் அல்ல.

வெளியிலிருந்து பார்க்கும்போது தோல்வி மோசமானதாகத் தெரியும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட், இங்கிலாந்தில் ஆடுகிறோம், இங்கு எப்படிப்பார்த்தாலும் கடினம்தான். ஆனால் பிழைகளை குறைக்க வேண்டும், இதைத்தாண்டி நாங்கள் பெரிதாக கவலையடைய வேண்டியதில்லை.

ஒரு கேப்டனாக நான் என்னால் முடிந்தவற்றைச் செய்கிறேன். நிர்வாகத்திடமிருந்தும் நிறைய பின்னூட்டங்கள், ஆலோசனைகள் வந்தவண்ணம்தான் உள்ளன. சிலர் ஆட்டத்தை பார்க்கும் விதம் வேறு மாதிரி இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான கருத்துக்கள் இருக்கும் குறிப்பாக கேப்டன்சி பற்றி, ஆனால் நான் வீரர்களுடன் நல்ல தொடர்புறுத்தலில்தான் இருக்கிறேன் என்று உணர்கிறேன்.

இரண்டு ஸ்பின்னர்கள்?

2 ஸ்பின்னர்களை அணியில் எடுப்பது ஆர்வமான சிந்தனை, பிட்சில் கொஞ்சம் நடந்து பார்த்தேன், கடினமாகவும் வறண்டும் உள்ளது. ஆனால் நல்ல புற்களும் முளைத்துள்ளன. புற்கள் இருந்தால்தான் பிட்ச் உடையாமல் இருக்கும் இல்லையெனில் உடைவதைத் தடுப்பது கடினமாக இருக்கும்.

2 ஸ்பின்னர்கள் ஆர்வமூட்டும் ஒரு சிந்தனைதான், ஆனால் அணியின் சமச்சீர் தன்மையைப் பொறுத்தே அந்த முடிவை எடுக்க முடியும். ஆனால் 2 ஸ்பின்னர்கள் ஆடும் முடிவு நிச்சயம் மனதில் உள்ளது.

ரன்கள் எடுக்கும் போது மட்டுமல்ல வெற்றி பெற முடியாத போதும் சரி ரன்களை எடுக்க முடியாத போதும் சரி கொஞ்சம் வேதனையாகவே இருக்கும்.

நான் ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி பெற முடியவில்லையே என்று நான் கருதவில்லை. நாங்கள் போட்டிகளை வெல்வதில்லை என்ற பொதுப்படையான வேதனையாகவே அது இருக்கும். நான் ரன்கள் எடுக்கவில்லை ஆனால் அணி வெற்றி பெறுகிறது எனும்போது எனக்கு முற்றிலும் வேறு உணர்வு ஏற்படும். அணியாக எந்த விளையாட்டை ஆடும்போதும் இது இயற்கையான உணர்வே.

நான் என் பேட்டிங் மூலம் என்ன சாத்தியமாகுமோ அதனை முயன்று ஆடுகிறேன். இது எப்போதும் நடக்காது, ஆனால் அது நடக்கும்போது நான் அதிகம் பங்களிப்பு செய்யவே விரும்புவேன். நெருக்கமாக வந்து தோற்றது துரதிர்ஷ்டவசமானது. எனவே எப்படி வெற்றியை அடைவது என்பது மட்டுமே நாங்கள் சிந்திக்க வேண்டியது. தோற்பதில் எந்த ஒரு தொடர்ச்சியான மாதிரியை நான் காணவில்லை.

ஒரு குறிப்பிட்ட பவுலரை இப்படித்தான் ஆடுவது என்பது தயாரிப்பின் மூலம் வருவது, என்னுடைய தயாரிப்பு மற்ற வீரர்களை விட வித்தியாசமானதாக இருக்கும். வீரர் களமிறங்கும் போது அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24635633.ece

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட்- ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

அ-அ+

இங்கிலாந்து - இந்தியா இடையிலான லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. #ENGvIND

 
 
லார்ட்ஸ் டெஸ்ட்- ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்க இருந்தது. டாஸ் சுண்டப்படுவதற்கு முன் மழை பெய்தது. தொடர்ந்து மழைத்தூறல் இருந்து கொண்டே இருந்ததால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.

201808092142357154_1_ENGvIND002-s._L_styvpf.jpg

அதன்பின்னரும் மழைத்தூறல் விட்டுவிட்டு தூவிக் கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதன்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/09214236/1182799/The-entire-first-day-play-has-been-abandoned-at-Lords.vpf

Link to comment
Share on other sites

தவான், உமேஷுக்குப் பதில் புஜாரா, குல்தீப்! - லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து ஃபீல்டிங் தேர்வு

 

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. முதல்நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் புஜாரா, குல்தீப் ஆகியோர் களமிறங்குகின்றனர்.

60_15209.jpg

Photo Credit: Twitter/@bcci

 

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20ஐ கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இழந்தது. இதன் பின்னர், 5 போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றியை நழுவவிட்டது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னரே, நேற்று காலை முதலே லேசான மழை தொடர்ந்தது. இதனால், டாஸ் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

 

 

இதற்கிடையே, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்று மழை பெய்யாததால் டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் புஜாராவுக்கு ஆடும் லெவனில் இடம் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர்களுக்குப் பதிலாக சொதப்பலாக ஆடிவந்த ஷிகர் தவான் மற்றும் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளனர். 

 

https://www.vikatan.com/news/sports/133587-england-wins-the-toss-and-elects-to-bowl-first-in-the-2nd-test-at-lords.html

Link to comment
Share on other sites

காப்பாற்றிய மழை; மோசமான தொடக்கம்: நகராத கால்கள்; விஜய் பவுல்டு, ராகுல் எட்ஜ்

 

 
vijay%20bowledjpg

ஆண்டர்சன் பந்தில் முரளி விஜய் பவுல்டு. | கெட்டி இமேஜஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது, ஆண்டர்சன் இந்திய தொடக்க வீரர்களின் நகராத கால்களைப் பயன்படுத்தி விஜய், ராகுலை வீழ்த்தினார்.

11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்று கடும் நெருக்கடியில் மழை வந்து இந்திய அணியைக் காப்பாற்றியுள்ளது. புஜாரா 19 பந்துகளில் 1 ரன்னுடனும், விராட் கோலி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் என்று மழையால் தற்காலிக நிம்மதியடைந்துள்ளது.

 

மிகவும் சாதாரணமான ஒரு உத்தியைத்தான் ஆண்டர்சன் முதல் ஓவரில் கடைபிடித்தார், 4 பந்துகள் 4வது ஸ்டம்ப் லைனில் வீசி வெளியே ஸ்விங் செய்தார். அடுத்த பந்து ஆண்டர்சன் வீசிய பந்தின் தையல் இன்ஸ்விங்கருக்கானது, ஃபுல் லெந்தில் பிட்ச் ஆனது, பந்து உள்ளே வருவதாக ஏமாந்து மட்டையைத் தாமதமாக இறக்கியதோடு தாமதமாக பிளிக்‌ஷாட்டையும் முயன்றார், ஆனால் பிட்ச் ஆன பந்து லேசாக வெளியே ஸ்விங் ஆகி பவுல்டு ஆனது. விஜய் டக் அவுட் ஆனார். கால்கள் சுத்தமாக நகரவில்லை.

ராகுலுக்கு பிராட் வீசிய ஓவரில் ஒரு பந்து கட் ஆகி உள்ளே வர கணிப்பில் தவறிழைத்து பந்தை ஆடாமல் ராகுல் விட்டுவிட ஸ்ட்ம்புக்கு அருகில் சென்றது. அடுத்த பந்து அவுட்ஸ்விங்கர் மட்டையைத் தொங்க விட்டு பீட்டன் ஆனார். அடுத்த ஓவரில் புஜாராவை அவுட்ஸ்விங்கரில் பீட் செய்தார் ஆண்டர்சன். பிறகு ராகுல், பிராடை ஒரு அபார கவர் ட்ரைவ் அடித்தார், ஆனால் இது பொறிதான். பிறகு ஆண்டர்சன் ராகுலின் கால்காப்பைக் குறைவைக்க தெளிவான பிளிக் ஷாட் பவுண்டரி ஆனது. அடுத்து பிராட் பந்தில் தடுமாற்றத்துடன் ஆடி மட்டை உள் விளிம்பில் வாங்கினார்.

அடுத்த ஆண்டர்சன் ஓவரில் மட்டையை தேவையில்லாமல் காலை நகர்த்தாமல் கொண்டு சென்ற ராகுல் எட்ஜ் ஆகி வெளியேறினார். கோலி இறங்கும் போது மைதானம் முழுதுமே ரசிகர்கள் கைதட்டி வரவேற்றனர்.

கோலி தன் முதல் ரன்னை எடுக்க மழை வந்தது ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்தியா தடவல் தொடக்கம்.

https://tamil.thehindu.com/sports/article24653984.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

மழை வருவதற்குள் அவசரம்: கிரீசில் புஜாராவின் வேதனையைத் தீர்த்து வைத்த ரன் அவுட்

 

 
pujara%20run%20out

ரன் அவுட் ஆகி வெளியேறிய புஜாரா. | கெட்டி இமேஜஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மழைக்கு இடையே சிறிது நேரம் கிடைத்து ஆட்டம் தொடங்கப்பட்ட போது புஜாரா தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி தனக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டார்.

கோலிதான் அவரை இழுத்துவிட்டார். இவர் ஓடியிருக்கக் கூடாது, பந்து மட்டையில் பட்டதும் ஆர்வமிகுதியில் ஓடிவிட்டார் பாவம்.

 
 

1 ரன்னில் அவர் ரன் அவுட் ஆன உடனேயே மழை கொஞ்சம் கனமாக விழ ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள்.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா இப்படியே ஆடினால் 2 முழு நாட்கள் ஆட்டமிருந்தாலே போதும் தோற்க வாய்ப்பு ஏற்படும்.

24 பந்துகளைச் சந்தித்த புஜாரா தட்டுத்தடுமாறினார், ஆண்டர்சன் இவரைப் படுத்தி எடுத்தார், அவுட் ஸ்விங்கர்கள் மட்டையைக் கடந்து செல்ல இன்ஸ்விங்கர்கள் இவர் உடலை இரண்டாக்கி பின்னால் சென்று கொண்டிருந்தன.

இந்நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு இன்னிங்ஸின் 9வது ஓவரை ஆண்டர்சன் வீச புஜாராவுக்கு ஒரு பந்து அதிசயமாக மட்டையில் பட பந்து பாயிண்ட் திசைக்குச் சென்றது, ஆஹா புஜாரா மட்டையில் பட்டுவிட்டது, இப்போது ஓடினால்தான் உண்டு என்று கோலி ரன்னுக்கு அழைக்க, புஜாரா பாதிதூரம் கடந்து ரன்னர் முனை நோக்கி ஓடி வர அங்கிருந்து வந்த கோலி திடீரென ரன் வேண்டாம் என்று திரும்பவும் தன் முனைக்கு ஓடிவிட்டார்.

புஜாரா நடுவழியில் திக்குத் தெரியாத நபர் போல் நின்றார், ரன் அவுட் ஆனார். நிச்சயம் கோலிதான் இந்த ரன் அவுட்டுக்குக் காரணம், அழைத்து விட்டு இழுத்து விட்டார்.

ஆனால் புஜாரா ஆடியது காலம் விரைவில் பதில் சொல்லும் என்பது போல்தான் இருந்தது, எப்போது வேண்டுமானாலும் அவர் ஒன்று பவுல்டு அல்லது எல்.பி.ஆகுவது போல் கிரீசிற்குள் நின்று கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்.

இவரை ரன் அவுட் செய்தது கோலியின் கோபத்தை உருவாக்கியிருந்தால் நிச்சயம் தன் தரப்பில் ஒரு இன்னிங்ஸை ஆடி ஈடுகட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

https://tamil.thehindu.com/sports/article24657471.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Live
2nd Test, India tour of Ireland and England at London, Aug 9-13 2018
Day 2 - Session 3: England won the toss and elected to field
  •  
 
Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது

 
அ-அ+

இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது. #ENGvIND

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட் - இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு சுருண்டது
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.
 
இந்நிலையில், இரண்டாவது நாளில் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 
 
இந்தியாவின் முரளி விஜய், லோகேஷ் ராகுல ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். விஜய் ரன்ஏதும் எடுக்காமலும், லோகேஷ் ராகுல் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்கள். புஜாரா ஒரு ரன்னில் அவுட்டானார். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது
 
அதன்பின் இறங்கிய கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
201808110017077665_1_eng-3._L_styvpf.jpg
 
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நேற்றும் மழையால் ஆட்டம் அடிக்கடி நிறுத்தப்பட்டது.
 
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து மண்ணில் 350 விக்கெட்டுக்களை கைப்பற்றிய ஆண்டர்சன், சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை அனில் கும்ப்ளே உடன் பகிர்ந்துள்ளார்.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/11001708/1183067/india-all-out-for-107-in-first-innings-at-lords-test.vpf

Link to comment
Share on other sites

உசைன் போல்ட் ஆக முடியாது, ஆனால் இன்சமாம் உல் ஹக் ஆகாமல் இருக்கலாமே: புஜாரா ரன் அவுட்டில் எழுந்த சிரிப்பலை

 

 

 
pujarajpg

புஜாரா பரிதாப ரன் அவுட். | ஏ.எப்.பி.

ரவிசாஸ்திரியிடம் புஜாராவின் ரன் அவுட் பழக்கம்பற்றி சமீபத்தில் கேட்ட போது, ‘நாங்கள் அவரை உசைன் போல்ட்டாக இருக்க விரும்பவில்லை, புஜாராவாக இருந்தால் போதும்’ என்றார்.

ஆனால் ஜனவரியில் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 முறை ரன் அவுட் ஆனார். ஆகவே இவர் உசைன் போல்ட்டாக இருக்க வேண்டாம் என்று ரவிசாஸ்திரி நக்கலாக கூறினாலும் உசைன் போல்ட்டெல்லாம் டூ மச், புஜாரா பாகிஸ்தான் ரன் அவுட் புகழ் இன்ஜமாம் உல் ஹக்காக மாறாமல் இருக்கலாமே என்றுதான் கிரிக்கெட் ரசிகர்கள் அபிப்ராயப் படுகின்றனர்.

 
 

நேற்று லார்ட்ஸ் இருமுறை சிரிப்பலையில் ஆழ்ந்தது. கொஞ்சம் மழை பெய்ததையடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தைக் கையில் வைத்துக் கொண்டு வெறியுடன் காத்திருக்கும் போது விராட் கோலி, புஜாரா மைதானத்தை விட்டு வெளியே சென்ற சமயம் திடீரென மழை நிற்க சூரியனும் வெளியே வந்தது, உடனேயே நடுவர்கள் புஜாரா, கோலியை திரும்பிவருமாறு செய்கை செய்தனர். அப்போது லார்ட்ஸ் ரசிகர்கள் சிரிப்பலைகளை ஏற்படுத்தினர்.

பிறகு மீண்டும் ஆண்டர்சன் பந்து ஒன்று புஜாரா மட்டையில் அதிசயமாகப் பட பந்து பாயிண்டில் சென்றது. 5 ஸ்லிப்களில் கடைசி ஸ்லிப்பில் ஆலி போப் நின்று கொண்டிருந்தார், பாயிண்டில் லேசாகத் தட்டிவிட்ட பந்துக்கு தயங்காமல் ஒற்றைக் குறிக்கோளுடன் ஓடியிருந்தால் ஒரு ரன் கிடைத்திருக்கும், ஆனால் கோலி, புஜாரா இருவரும் கபடி ஆட, போப் பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய கோலிக்கு கொஞ்சம் அருகில் ரன்னர் முனையில் இருந்தார் புஜாரா. ரன் அவுட்.

அவர் ரன் அவுட் ஆனவுடன் பெருமழை பெயதது, புஜாராவின் துரதிர்ஷத்தை நினைத்தா, அல்லது ரன் அவுட் ஆன விதத்தை நினைத்தா என்று தெரியவில்லை, லார்ட்ஸ் ரசிகர்கள் மீண்டும் ஒரு சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

ரவிசாஸ்திரி இறுகிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

லார்ட்ஸில் இந்திய அணி தோற்றால் அடுத்த 3 மைதானங்களும் இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராடுக்கு பிரமாதமான மைதானங்களாகும், இந்த டெஸ்ட்டை விட்டால் இந்திய அணி எழும்புவது கடினம், ஆனால் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனால் என்ன செய்வது? என்பதே தற்போது இந்திய அணி நிர்வாகத்தின் கவலையாக இருக்கும்.

https://tamil.thehindu.com/sports/article24663435.ece

Link to comment
Share on other sites

இங்கிலாந்து திணறல்; 4விக். இழப்புக்கு 89; தவறான கணிப்பில் 2 ரிவியூக்களையும் இழந்தது

 

 
joe%20root

ஷமியிடம் ஆட்டமிழந்து வெளியேறும் ஜோ ரூட். | ஏ.பி.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

மீதமுள்ள 6 விக்கெட்டுகளை குறைந்தது அடுத்த 50 ரன்களில் இந்திய அணி சுருட்ட வேண்டும். பிறகு 2வது இன்னிங்ஸில் ஒரு 280-90 ரன்களை எடுத்து இங்கிலாந்தை களமிறக்கினார்ல் 4வது இன்னிங்சில் இங்கிலாந்து தோல்வி அடைய வாய்ப்புள்ளது.

 

இங்கிலாந்து அணியில் ஜெனிங்ஸ் (11), அலிஸ்டர் குக் (21), ரூட் (19), ஆலி போப் (28) ஆகியோர் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினர். இந்திய அணியில் மொகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மிக முக்கிய விக்கெட்டான அலிஸ்டர் குக்கை வீழ்த்த ஹர்திக் பாண்டியா அறிமுக வீரர் போப் விக்கெட்டை எல்.பி.முறையில் கைப்பற்றினார், மொகமது ஷமி ஜெனிங்ஸ், ரூட் இருவரையும் அற்புதமாக ஒர்க் அவுட் செய்து எல்.பி.யில் வீட்டுக்கு அனுப்பினார்.

குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 15 ரன்கள் விக்கெட் இல்லை, மிக அதிசயமாக இந்தியாவின் கடந்த போட்டியின் சிறந்த பவுலரான அஸ்வின் இன்னமும் கொண்டு வரப்படவில்லை. உணவு இடைவேளைக்குப் பிறகு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் வீழ்த்தும் அஸ்வினைக் கொண்டுவராமல் குல்தீப் யாதவ்வைக் கொண்டு வந்தது நல்ல கேப்டன்சிக்கு அழகாகத் தெரியவில்லை மாறாக தன் தேர்வு குறித்து நிரூபிக்கும் ஈகோத்தனமான முடிவு என்ற ஐயம் எழுகிறது.

இங்கிலாந்து இன்று காலை தொடங்கிய போது இஷாந்த் சர்மா, மொகமது ஷமிக்கு சரியாக லெந்த் கிடைக்கவில்லை, லெக் திசையிலும் ஷார்ட் பிட்ச் ஆகவும் வீசினர், இதனால் பவுண்டரிகள் வந்தன, ஆனால் அதன் பிறகு மிக அருமையாக நிலைபெற்றனர். மொகமது ஷமி ஆண்டர்சனுக்கு நேர் மாறாக, இன்ஸ்விங்கர்களாக வீசி பிறகு அவுட் ஸ்விங்கர்களை வீசினார், குறிப்பாக அவர் பந்தை காற்றில் உள்ளே கொண்டு வந்து பிறகு சில பந்துகளை வெளியே ஸ்விங் செய்தார். சில வேளைகளில் அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி ஃபுல் லெந்தில் இன்ஸ்விங்கரையே வீசினார், இதனால்தான் ஜெனிங்ஸ், ஜோ ரூட் ஆட்டமிழந்தனர், பந்துகள் ஒரு முனையில் சில சமயம் தாழ்வாக வருவதும் நடைபெறுகிறது. ஜோ ரூட் எல்.பி.ஆன பந்து தாழ்வான பந்து.

அணித்தேர்வில் மீண்டும் கோலி சோடைபோயுள்ளாரோ என்று தோன்றுகிறது, உமேஷ் யாதவ் இருந்திருந்தால் இந்தப் பிட்சில் உதவிகரமாக இருக்கும் போல் தெரிகிறது, ஆனால் குல்தீப் யாதவ்வை தேர்வு செய்துள்ளார். பார்ப்போம். பிட்சில் ஸ்பின்னர்களுக்குக் கொஞ்சம் பவுன்ஸ் இருப்பது போல் தெரிகிறது.

ஜெனிங்ஸ் முதலில் 11 ரன்களில் ஷமியின் கிட்டத்தட்ட யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார், போகிற போக்கில் ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார். அலிஸ்டர் குக் அபாரமான 4 பவுண்டரிகளுடன் 21 ரன்களில் அஸ்வின் வராத தைரியத்தில் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் இஷாந்த் சர்மா ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஸ்டம்புக்கு நேராக வீசி வெளியே எடுக்க குக்கின் நிலையே மாறிப்போனது, ஸ்கொயர் ஆனார். கொஞ்சம்தான் ஸ்விங் என்றாலும் துல்லிய லெந்த்தில் எட்ஜ் எடுக்க கார்த்திக் கையில் கேட்ச் ஆனது.

ஜோ ரூட், ஆலி போப் இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்காக 45 ரன்களைச் சேர்த்து நன்றாகவே ஆடினர். 38 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்த போப் ஆஃப் ஸ்டம்பில் பாண்டியா வீசிய குட்லெந்த் பந்து ஒன்று சறுக்கிக் கொண்டு வர கால் காப்பில் வாங்கி வெளியேறினார், இவரும் தேவையில்லாமல் ரிவியூ ஒன்றை விரயம் செய்தார். உணவு இடைவேளை நெருங்கும் சமயத்தில் கேப்டன் ரூட் 19 ரன்களில் ஷமியின் இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். பந்து அவர் எதிர்பார்த்த உயரம் வராமல் தாழ்வாக வர எல்.பி.ஆனார். இங்கிலாந்து 89/4. ஜானி பேர்ஸ்டோ 4 ரன்களில் கிரீசில் உள்ளார்.

https://tamil.thehindu.com/sports/article24666171.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

1.png&h=42&w=42

197/5 * (48.3 ov)
 
Link to comment
Share on other sites

 

லார்ட்ஸ் டெஸ்ட்: சீட்டுக்கட்டுகள் போல சரிந்த இந்திய அணியின் விக்கெட்டுகள்! (விடியோ)

Link to comment
Share on other sites

லார்ட்ஸ் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 357/6

 
அ-அ+

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் கிறிஸ் வோக்சின் அபார சதத்தால் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 357/6
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது.
 
2ம் நாளான நேற்று டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
 
இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து இறங்கிய அஷ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அத்துடன் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.
 
201808112335396139_1_shami-2._L_styvpf.jpg
 
இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதலில் ஷமியின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதனால் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
 
அதன்பின், பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி நிதானமாக ஆடியது. இந்த ஜோடி 189 ரன்கள் சேர்த்தது. பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோவ் 93 ரன்களில் அவுட்டானார்.
 
மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில், இங்கிலாந்து அணி 81 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக விளையாடிய வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் கரன் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/11233539/1183303/lords-test-3rd-day-england-3576-against-india.vpf

Link to comment
Share on other sites

லார்ட்ஸில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச் -வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

 

இந்திய கிரிக்கெட் அணியினர் உண்ணும் உணவுகளின் வகைகளை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

உணவு

PhotoCredits: Twitter/@bcci

 

 

இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் மிகவும் போராடி இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் தற்போது நடைபெற்று வருகிறது. 

 

 

மெனு

PhotoCredits: Twitter/@bcci

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டுவாரியமான பிசிசிஐ தொடர்ந்து கடந்த மூன்று நாள்களாக இந்திய அணியினரின் அன்றைய உணவு வகைகளின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை பார்க்கும் அனைவரது வாயிலும் கண்டிப்பாக எச்சில் ஊறும் என்பது உண்மை. அந்த அளவுக்கு உள்ளது கிரிக்கெட் வீரர்களின் உணவு பட்டியல். ஸ்டஃபுடு லாம்ப், ரோஸ்டர்டு ஸ்டோன் பாஸ், சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா, சிக்கன் கார்போனரா பாஸ்தா, கிரில்டு சிக்கன், தால் மக்னி போன்ற உணவுகளுடன் இரால், உருளைகிழங்கு, பட்டாணி, சோளம், கேரட், ஆகியவை கலந்த சாலட், மேலும் ஆப்பிள், ராஸ்பெர்ரி, ஆலமண்ட், கொண்ட பழங்கள் சாலட் மற்றும் வெரைட்டி ஐஸ் கிரீம் போன்றவை அந்த மெனுவில் இடம்பெற்றுள்ளன. 

 

 

இந்திய கிரிக்கெட் வீரர்களின் லன்ச்

PhotoCredits: Twitter/@bcci

இந்த மெனுக்கள் சில உணவு பிரியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் இதற்கு பல எதிர்மறையான கருத்துகளும் எழுந்துள்ளன. இவ்வளவு உணவை உண்பதால் தான் வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் இந்த மெனுவுக்கு தொடர்ந்து லைக்குகளும் குவிந்துகொண்டே தான் வருகின்றன.
 

 

https://www.vikatan.com/news/sports/133729-bcci-share-a-lunch-menu-of-team-india-in-twitter.html

Don't tell me you go out to bat after a lunch like this!

Delicious and how.

Lunch menu for Day 1 here at @HomeOfCricket.#ENGvIND pic.twitter.com/WomcJwF4U8

 

Will they be able to play at all after eating that stuff. Just wondering though.

Link to comment
Share on other sites

விராட் கோலியை அவுட்டாக்க வானிலை கைக்கொடுத்தது - கிறிஸ் வோக்ஸ்

 
அ-அ+

விராட் கோலியை வீழ்த்தியதுடன், சதம் அடித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்த கிறிஸ் வோக்ஸ், வானிலை கைகொடுத்தது என்று தெரிவித்துள்ளார். #ENGvIND

 
 
 
 
விராட் கோலியை அவுட்டாக்க வானிலை கைக்கொடுத்தது - கிறிஸ் வோக்ஸ்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அதன்பின் 2-வது நாள் ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் செய்தது. அடிக்கடி மழை விட்டுவிட்டு பொழிய, மைதானத்தை சுற்றி மேகமூட்டாக காணப்பட, வானிலையை சரியாக பயன்படுத்தி இங்கிலாந்து வீரர்கள் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்தார்கள்.

இதனால் இந்தியா முதல் இன்னிங்சில் 35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 107 ரன்னில் சுருண்டது. ஆண்டர்சன், பிராட் பந்துகளை சமாளித்த விராட் கோலி கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவை ஆட்டமிக்க செய்த கிறிஸ் வோக்ஸ், முதல் இன்னிங்சில் சதம் அடித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார். ஏறக்குறைய போட்டியை இந்தியாவிடம் இருந்து பறித்து விட்டார்.

இந்நிலையில் விராட் கோலியை வீழ்த்த வானிலை நன்றாக ஒத்துழைத்தது என்று கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். இந்திய பேட்டிங் வரிசையில் அவர்தான் ராஜா.

201808121511439232_1_woakes001-s._L_styvpf.jpg

2-வது நாள் ஆட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால், பந்தை நன்றாக ஸ்விங் ஆனது. விராட் கோலியை முன்கூட்டியே அவுட்டாக்க இதுதான் நல்ல வாய்ப்பு என்று கருதினேன். அதன்படி நடந்தது.

ஒருமுறை அவர் களத்தில் நிலைத்துவிட்டால், அதன்பின் அவுட்டாக்குவது கடினமாகிவிடும். ஆகவே, அவரை வீழ்த்தியன் மூலம் மகிழ்ச்சியடைந்தேன்’’ என்றார்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/12151144/1183401/really-good-opportunity-get-virat-Kohli-chris-Woakes.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.