Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

இந்திய அணி திணறல்: அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு

 

 
kohli5

 சவுத்தாம்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் சேர்க்கத் தடுமாறி வருகிறது.

இன்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி கூடுதலாக 5 ஓவர்கள் மட்டுமே களத்தில் இருந்த நிலையில் மீதம் இருந்த 2 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 271 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

 

இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெற 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சவுத்தாம்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானம் கடைசி இரு நாட்களுக்குப் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடுவது கடினமாகும் என்று ஆடுகளப் பராமரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் 150 ரன்களுக்கு மேல் இலக்கு இருந்தாலே வெற்றி பெறுவது கடினம் என்ற ரீதியில் இங்கிலாந்து அணி 245 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயித்தது. ரோஸ்பவுல் போன்ற பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகும் ஆடுகளத்தில் இலக்கை எட்டுவது எளிதான காரியம் இல்லை.

அதை இந்திய பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் உணர்ந்துவிட்டனர். ஷிகர் தவண், ராகுல் ஆடத் தொடங்கினார்கள். 3 ஓவர்கள் மட்டுமே இருவரும் சமாளித்து ஆடினார்கள். பிராட் வீசிய 4-வது ஓவரை கே.எல்.ராகுல் சந்தித்தார். தாழ்வாகச் சென்ற அந்த முதல் பந்து ராகுலின் ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. ராகுல் டக்அவுட்டில் வெளியேறினார். இந்தத் தொடரில் இதுவரை ராகுல் ஒரு இன்னிங்ஸில்கூட 40 ரன்களைக் கூட எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து புஜாரா களமிறங்கினார். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததால், இவரைக் களத்தில் நிலைக்கவிடக்கூடாது என்று இங்கிலாந்து வீரர்கள் திட்டமிட்டனர்.

ஆன்டர்ஸன் வீசிய 7-வது ஓவரின் கடைசிப் பந்து நல்ல இன்கட்டராக வந்தது. புஜாராவும் காலை முன்னே தூக்கி ஆட முற்பட்ட நேரத்தில் அது கால்காப்பில் பட்டது. கள நடுவர் அவுட் அளித்தபோதிலும், புஜாரா அப்பீல் செய்தார். ஆனால், அப்லீலில் புஜாரா தனது கால்பகுதியை உள்ளே இழுத்து ஸ்டெம்பை மறைத்துப் பந்தை தடுத்தது தெரிந்ததால், ஆவுட் அளிக்கப்பட்டது. இதையடுத்து, புஜாரா 5 ரன்களில் வெளியேறினார்.

ஆன்டர்ஸன் வீசிய 9-வது ஓவரில் தவண் விக்கெட்டை இழந்தார். தவணுக்கு இன்கட்டராக வந்த அந்தப் பந்தை தடுக்க முற்பட்டபோது, பந்து பேட்டில் பட்டு கல்லிபாயிண்டில் நின்றிருந்த ஸ்டோக்ஸ் கைகளில் தஞ்சமடைந்தது. தவண் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுவரை 8 இன்னிங்ஸ்களிலும் தவணும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ரன்களை ஸ்கோர் செய்யவில்லை.

அடுத்துத்து விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது. ரஹானே 4 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் பேட் செய்து வருகின்றனர்.19 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் இந்திய அணி சேர்த்துள்ளது.

முன்னதாக, சவுத்தாம்டனில் இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 246 ரன்களுக்கும், இந்திய அணி 273 ரன்களுக்கும் ஆட்டமிழந்து, 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் பேட் செய்த இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. சாம்கரன் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில், 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 3-வது நாளான நேற்று 91.5 ஓவரை ஷமி வீசும் போது ஆட்டம் நிறுத்தப்பட்டதால், மீதிருந்த ஒரு பந்தை வீச ஷமி ஆயத்தமானார். சாம் கரன், பிராட் களமிறங்கினார்.

முகமது ஷமி வீசிய அந்தப் பந்தை பிராட் எதிர்கொண்டார்.

காலைக் குளிர், ஈரப்பதம், புதிய பந்து காரணமாகப் பந்து பிராடின் பேட்டின் விளிம்பில் பட்டு விக்கெட்கீப்பரின் கைகளில் சென்றது. இதனால் பிராட் டக்அவுட்டில் வெளியேறினார்.

அடுத்து வந்த ஆன்டர்சன், கரனுடன் இணைந்தார். அஸ்வின், ஷமி பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை சாம் கரன் அடித்தார். அஸ்வின் வீசிய 97-வது ஓவரின் முதல் பந்தை சாம் கரன் அடித்துவிட்டு ஓட முயன்றார். ஆனால், இசாந்த் சர்மா தடுத்து வீக்கெட் கீப்பரிடம் எறியவே ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், சாம் கரன் 46 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 96.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

https://tamil.thehindu.com/sports/article24848016.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

6.png&h=42&w=42

273 & 46/3 * (20 ov, target 245)
 
Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

நான்காவது டெஸ்டில் இந்தியா தோல்வி - தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

 
அ-அ+

சவுத்தாம்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. INDvsENG

 
 
 
 
நான்காவது டெஸ்டில் இந்தியா தோல்வி - தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து
 
லண்டன் :

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.

புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் வழக்கம் போல கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சற்றே பிரகாசமாக தெரிந்தது.
 
ஆனால் தேனீர் இடைவேளைக்கு இரண்டு ஓவர்கள் முன் மோயின் அலி வீசிய பந்தை கோலி தடுப்பாட்டம் ஆட முயற்சிக்க பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் இருந்த குக் வசம் சென்றது. இதனால், 58 ரன்களுக்கு விராட் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார்.
 
201809022154566358_1_cook2._L_styvpf.jpg

அடுத்து களமிறங்கிய பாண்டியா வந்த வேகத்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறிய நிலையில் சிறிது நேரம் அதிரடி காட்டிய ரிஷப் பந்த் 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்த நிலையில் மொயின் அலியின் சுழலில் சிக்கி ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய இஷாந்த் ஷர்மா 0, ஷமி 8, அஷ்வின் 24 அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 69.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அதிகபட்சமாக கோலி 58 ரன்கள், ரகானே 51 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெடுக்களையும், ஆண்டர்சன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது. INDvsENG

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/02215256/1188457/India-lost-4th-test-against-england.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ் கெயிலுக்கு வாய்க்குள் சீனி அள்ளி போடணும்.

இங்கிலாந்துகாரர் வெல்லுவார்கள் என்று முதலே அடித்த சொன்னவர் இவர் ஒருத்தர் தான்.

Link to comment
Share on other sites

எனது தலைமைத்துவத்தில் கிடைத்த மிக சிறப்பான வெற்றி- ஜோ ரூட்

 

 
 

இந்திய அணியுடனான நான்காவது டெஸ்டில் வெற்றிபெற்றதே  அணித்தலைவர் காலத்தில் நான் பெற்ற மிகவும் இனிப்பான வெற்றியாகும் என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

அணித்தலைவராக பணியாற்றிய காலத்தில் நீங்கள் பெற்ற சிறப்பான வெற்றியிதுவா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி மிகவும் ருசிகரமானதாக காணப்பட்டது பல விடயங்களை  என்னால் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு குழுவாக நாங்கள் மிகச்சிறப்பாக விளையாடினோம் என நினைக்கின்றேன்,அழுத்தமான சூழ்நிலை நிலவிய தருணங்களில் அதனை வெற்றிக்கொள்ள முடிந்ததும் மகிழ்ச்சியளிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொயீன் அலி மிகவும் அற்புதமாக பந்து வீசினார் எனவும் குறிப்பிட்டுள்ள ஜோ ரூட் சிலவேளைகளில் போட்டிகளில் விளையாடாமல் சில நாட்கள் விலகியிருப்பது கூட சிறந்த விடயம்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக அவர் மிகச்சிறப்பாக பந்துவீசிய தருணம் இதுவென குறிப்பிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ,

virat2.jpg

சாம் கரான்  இந்த போட்டியில் மாத்திரமல்ல தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார், இளம் வீரர் ஒருவர் இவ்வளவு தாக்கம் செலுத்துவது மிகவும் சிறப்பான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/39619

Link to comment
Share on other sites

கடினமான சூழ்நிலைகளில் எங்களை விட இங்கிலாந்து அச்சமின்றி விளையாடியது: விராட் கோலி கருத்து

 

 
Virat-Kohli

விராட் கோலி : கோப்புப்படம்

இந்தத் தொடரின் முக்கிய அம்சமாக இங்கிலாந்தின் கீழ்வரிசை பேட்ஸ்மென்கள் காட்டிய முதுகெலும்பை இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கூடக் காட்ட முடியவில்லை என்பதே தொடரை இழந்ததற்கு முக்கியக் காரணம்.

பவுலர்கள் நான் நன்றாக வீசினேன், விக்கெட்டுகள் வீழ்த்தினேன் என்று கூறுவது போல் தெரிகிறதே தவிர நோக்கத்துடனும் குறிக்கோளுடனும் வீசியதாகத் தெரியவில்லை, கில்லர் இன்ஸ்டிங்க்ட் இல்லை. அதனால்தான் இங்கிலாந்தை 3 டெஸ்ட் போட்டிகளில் முழுதும் ஆல் அவுட் செய்தும் கடைசியில் தோல்வியடைந்த அணியாக இந்தியா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓர் அணியாக குறிக்கோளுடன் ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணியினருக்கு ஒரு கெட்ட பெயர் உண்டு, ‘வேட்டை நாய்கள்’ என்பதே அது. அத்தகைய மனநிலை இருந்தால்தான் இங்கிலாந்தை இங்கிலாந்தில் வீழ்த்த முடியும்.

 

இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

''எங்களுக்கு 245 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்ததன் மூலம் இங்கிலாந்து உண்மையில் சிறப்பாக ஆடினர் என்றே நான் கருதுகிறேன்.

பிட்சின் நிலை, பந்துகள் திரும்பிய விதம் எங்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. கடந்த இரவு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கருதினோம், ஆனால் நாங்கள் விரும்பிய தொடக்கம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணி ஓய்வு ஒழிச்சலின்றி எங்களுக்கு தொடர்ச்சியாக டெஸ்ட் முழுதும் நெருக்கடி கொடுத்தது.

அவர்களுக்குப் பாராட்டுகள். நானும் ரஹானேவும் ஆடும் போது மனதில் அந்தக் குறிப்பிட்ட பந்து, ஒரு பந்து ஒரு கணத்தில் என்றவாறு கவனம் செலுத்தினோம். நானும் ரஹானேவும் களத்தில் இருந்த போது விரட்டல் வெற்றிகரமாக முடியும் என்று நம்பினோம். ஆனால் அவர்கள் ஏற்கெனவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டதால் இன்னும் 2 விக்கெட்டுகள் விழுந்தால் ஆட்டம் கை நழுவி விடும் என்ற நெருக்கடி எனக்கும் ரஹானேவுக்கும் இருந்தது.

நாங்கள் கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடினோம், ஆனால் நம்மிடமிருந்து இங்கிலாந்து ஆட்டத்தைப் பறித்துச் சென்றது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு. இருப்பினும் ‘இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால்கள்’ இருக்கவே செய்யும். அவை அப்படியிருந்திருந்தால் ஆட்டம் எங்கள் வழிக்குத் திரும்பியிருக்கும்.

முதல் இன்னிங்சில் இன்னும் கொஞ்சம் பெரிய முன்னிலை பெற்றிருக்கலாம், ஆனால் குறைந்த முன்னிலைக்கு புஜாராவின் ‘பிளைண்டர்’ இன்னிங்ஸ்தான் காரணம். புஜாராவின் ஆட்டம் தனிச்சிறப்பு வாய்ந்தது.

நிறைய காரணங்களைக் கூறலாம். ஆனால் அதிகம் எதிர்மறைகள் இல்லை. இங்கிலாந்து எங்களை விட சிறப்பாக ஆடியது. ஆகவே அவர்கள் வெற்றிக்குத் தகுதி பெற்றவர்களாகின்றனர். சாம் கரன், மொயின் அலி போன்ற கீழ் வரிசை பேட்ஸ்மென்கள் அடித்து ஆடுவது உண்மையில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அனுகூலமாகும். அந்நிலையில் கூட்டணி அமைத்து எதிரணியினரைக் கதற விடலாம்.

இங்கிலாந்து அணியிடம் பயமற்ற அணுகுமுறையுடன் திறமையும் உள்ளது. கடினமான சூழ்நிலைகளில் எங்களை விடவும் தைரியமாக இங்கிலாந்து ஆடியது. கீழ்வரிசை வீரர்களிடமிருந்து ரன்கள் மிக மிக முக்கியமானவை. சாம் கரனுக்கு நான் வாழ்த்துகளைக் கூறுகிறேன், அவர் மிக அருமையான ஒரு கிரிக்கெட் வீரராக வருவார்.

லார்ட்ஸ் டெஸ்ட்டைத் தவிர எங்களை இங்கிலாந்து முழுவதும் ஆட்கொண்டது என்று கூற முடியாது. இரு அணிகளும் தரமான கிரிக்கெட்டை ஆடுகிறோம். ஓவலிலும் இதே தீவிரத்துடன் ஆடுவோம். நெருக்கடி தருணங்களில் ஆட்டத்தை எப்படி ஸ்திரப்படுத்துவது என்ற ஒரு விஷயத்தைச் சரிசெய்ய ஆர்வமாக உள்ளோம், அனைவருமே இது குறித்து யோசித்துப் பயிற்சி எடுத்து வருகிறோம்’’.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24852972.ece

Link to comment
Share on other sites

2 ஆண்டுகளில் 8 டெஸ்ட் விரட்டல்களில் 5 தோல்விகள்: வங்கதேசத்தை விடவும் இந்திய அணி மோசம்- எப்படி?

 

 
rahuljpg

படம். | ஏ.பி.

இந்திய அணி கடந்த 2 ஆண்டுகளில் குறைந்த வெற்றி இலக்குகளைக் கூட விரட்ட முடியாமல் தோல்வியடைந்துள்ளது. இதில் வெற்றி இலக்கை நோக்கிய 8 விரட்டல்களில் 5-ல் தோல்வி கண்டுள்ளது இந்திய அணி.

4வது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டுக்கான ரன் சராசரி இந்திய அணிக்கு மிகக்குறைவான 18.68தான் உள்ளது, இந்த விஷயத்தில் மற்ற டெஸ்ட் அணிகளை விட ஒரு விக்கெட்டுக்கான ரன் சராசரியில் இந்திய அணி கடைசி நிலையில் உள்ளது.

 

அதாவது 4வது இன்னிங்சில் வங்கதேசம் கூட விக்கெட் ஒன்றுக்கான ரன் சராசரி 19.42 வைத்துள்ளது. இதில் இலங்கை அணிதான் 30.42 என்ற சராசரியில் முதலிடம் வகிக்கிறது, 2வது இடத்தில் 30.35 என்ற சராசரியுடன் மே.இ.தீவுகள் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 21.00, இங்கிலாந்து 21.80, பாகிஸ்தான் 23.60, ஆஸ்திரேலியா 23.75, ஜிம்பாப்வே 24.50. நியூஸிலாந்து 29.04,

ஆகவே மற்ற அணிகளை விட டெஸ்ட் 4வது இன்னிங்சில் இந்திய அணியின் சராசரி மற்ற மோசமான அணிகளை விடவும் மோசமாக உள்ளது.

மேலும் 2 ஆண்டுகளில் 8 விரட்டல்களில் 5-ல் தோல்வி அடைந்தது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 194 ரன்களை எடுக்க முடியாமல் தோல்வி, 208 ரன்களை விரட்டும் போது கேப்டவுனில் 72 ரன்களில் தோல்வி என்று குறைந்த இலக்குகளை விரட்ட முடியாமல் தோல்வி அடைந்து வருகிறது இந்திய அணி.

இந்திய அணியின் டாப் 3 வீரர்களின் 4வது இன்னிங்ஸ் சராசரி இந்த ஆண்டில் 9.91

டெஸ்ட் 4வது இன்னிங்ஸ்களைப் பார்த்தால் கடைசி 12 இன்னிங்ஸ்களில் இந்திய அணியின் டாப் 3 எடுத்த ரன்கள் 119 மட்டுமே. ஒருவரும் 20-ஐத் தாண்டவில்லை.

4வது இன்னிங்சில் மட்டும் மொயின் அலியின் விக்கெட்டுகள் எண்ணிக்கை 43.

2011-க்குப் பிறகு துணைக்கண்டத்துக்கு வெளியே இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று தோல்வி அடைகிறது.

சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுலில் 2 டெஸ்ட் போட்டிகளில் மொயின் அலி 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

8ம் நிலையில் இறங்கி சாம் கரன் இந்தத் தொடரில் 251 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன்னர் டேனியல் வெட்டோரிதான் இதேடவுனில் ஒரு தொடரில் 220 ரன்கள் எடுத்துள்ளார்

https://tamil.thehindu.com/sports/article24853080.ece

 

 

எத்தனை நாளைக்குத்தான் நன்றாக ஆடுகிறோம், சவால் அளிக்கிறோம் என்று கூறிக்கொண்டிருக்கப் போகிறோம்: : விராட் கோலி ஏமாற்றம்

 

 
kohli

கெட்டி இமேஜஸ்.

அயல்நாடுகளில் சவால் அளிக்கிறோம், போட்டிபோட்டு ஆடுகிறோம் என்று எத்தனை நாளைக்குக் கூறி கொண்டிருக்கப் போகிறோம் எப்போது இதனைக் கடந்து தொடரை வெல்லப் போகிறோம் என்று சதாம்ட்ப்டன் தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய வீரர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

4வது டெஸ்ட் போட்டியில் 245 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 184 ரன்களில் மடிந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதோடு இங்கிலாந்தை தொடரைக் கைப்பற்ற அனுமதித்தது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியிருப்பதாவது:

நாம் ஸ்கோர்போர்டைப் பார்த்து விட்டு 30 ரன்கள் அல்லது 50 ரன்கள் குறைவாக இருக்கிறோம் என்று கூறலாம், ஆனால் அத்தகைய சூழ்நிலையை முன்னமேயே கண்டுணர வேண்டுமே தவிர ஆட்டம் முடிந்தவுடன் அல்ல. நாம் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை ஆடுகிறோம் என்பது நமக்குத் தெரியும் ஆனால் நாம் நமக்கு நாமே திரும்பத் திரும்ப இதையே கூறி கொண்டிருக்க முடியாது, அயல்நாடுகளில் போட்டிப் போட்டு ஆடுகிறோம், சவாலாக திகழ்கிறோம் என்று எத்தனை நாளைக்குக் கூறிக் கொண்டிருக்கப் போகிறோம்

இலக்குக்கு, வெற்றிக்கு நெருக்கமாக வந்த பிறகே அந்தக் கோட்டைக் கடக்க வேண்டும், அதனை நாம் கற்க வேண்டும். நெருக்கடி ஏற்படும் போது நாம் எப்படி எதிர்வினையாற்ருகிறோம் என்பது குறித்து நாம் இன்னும் கொஞ்சம் செயல்பட வேண்டியுள்ளது.

ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட ஆதிக்கம் செலுத்தும் நிலையை விட்டு விடாமல் தொடர்ந்து நாம் அதனை நமக்குச் சாதகமாக்க வேண்டும் என்று பேசியிருக்கிறோம், எதிரணியினரை போட்டிக்குள் வர அனுமதிக்கக் கூடாது என்று பேசியிருக்கிறோம். அவர்கள் போராடிப் போராடி உள்ளுக்குள் வருகிறார்கள், அவர்களின் இந்தப் புத்தகத்திலிருந்து நாம் ஒரு பக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த டெஸ்ட் போட்டியில் 3 நாட்களுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆதிக்கம் செலுத்தினோம் டாப்பில் இருந்தோம். தொடரையே அப்படி ஆரம்பிப்பது குறித்து நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஒரு அணியாக நாம் தொடரின் ஆரம்பத்திலேயே நம்மை கொஞ்சம் வெளிப்படுத்திக் கொள்வது அவசியம், தைரியமாக பயமற்ற முறையில் நாம் ஆடியிருக்க வேண்டும்.

குறிப்பாக நீண்ட தொடரில் நாம் மீண்டெழுந்தாக வேண்டும், அதுவும் மீட்டெழுச்சி தைரியமான கிரிக்கெட் மூலம் வந்ததாக இருக்க வேண்டும். நாம் எதிரணியினரை அதிகம் எட்டிப் பிடிக்க வேண்டியதாக இருக்கக் கூடாது.

டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முக்கியக் கணம் எது என்பதை அறிவது கடினம். ஆனால் நான் ஆட்டமிழந்த பிறகு நான் இன்னும் கொஞ்சம் அதிக நேரம் களத்தில் நின்றிருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். அன்றைய தினம் முன்னிலை பெரிய அளவில் இருந்திருக்கும்.

ஆனால் அதன் பிறகும் கூட இன்னும் 2 கூடுதல் கூட்டணியில் பெரிய முன்னிலை பெற்றிருக்கலாம். அதிர்ஷ்டவசமாக புஜாரா ஒரு அசாதாரண இன்னிங்ஸை ஆடி ஓரளவுக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

இது தவிர ஒரு கேப்டனாக எனக்கு ஒன்றும் பெரிய எதிர்மறை அம்சங்கள் தெரியவில்லை, எங்களால் முடிந்த அளவு முயன்றோம்.

உள்நாட்டில் நாங்கள் ஆடும்போது பல அணிகள் நமக்கு நெருக்கமாகக் கூட வந்ததில்லை, ஆனால் இங்கு வந்து அவர்கள் நாட்டில் அவர்கள் தங்கள் வெற்றியை கடினமாக உழைத்துப் பெறச் செய்கிறோமே இது நமக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது.

அஸ்வின் அவரால் இயன்றதை முயன்றார். நல்ல இடங்களில்தான் பந்தை பிட்ச் செய்தார். ஆனால் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. நன்றாகத்தான் ஆடுகிறோம் ஆனால் எங்கோ சறுக்குகிறது.

மட்டை பிட்சில் பேட்ஸ்மென்களை அவுட் ஆக்க முடியும், அஸ்வின் அதனால் இந்த பிட்சில் தனக்கு அதிகம் கிடைக்கும் என்று உணர்ந்திருபார். ஆனால் பேட்ஸ்மென் நன்றாக ஆடினார். நிறைய காரணிகள் உள்ளன.

ஆனால் மொயின் நன்றாக வீசினார், அவர் நல்ல பகுதியிலும் வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் மிகச்சரியாக வீசினார். அதனால் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்ற தகுதியானவரே, அதனால்தான் அவருக்கு விக்கெட் கிடைத்தது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24854521.ece

Link to comment
Share on other sites

கோலியைத் தூக்கி விட்டால் போதும் மற்ற வீரர்கள் பொல..பொல..: நாசர் ஹுசைன் கிண்டல்

 

 
kohli2

படம். | ஏ.பி.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஓரிரு வீரர்களை நம்பியே இந்திய அணி குறிப்பாக அயல்நாட்டுத் தொடர்களில் இருந்து வந்துள்ளது.

இந்தத் தொடரிலும் விராட் கோலி ரன்கள் எண்ணிக்கையில் எங்கோ இருக்க மற்றவர்கள் சில மைல்கள் தள்ளி இருக்கின்றனர்.

 

இந்நிலையில் இங்கிலாந்து தொடரை வென்றதையடுத்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு கூறியதாவது:

“இந்தத் தொடர் நடுவரிசை வீரர்களால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது பட்லர், ஸ்டோக்ஸ், வோக்ஸ் என்று கூறுகிறேன், வோக்ஸ் லார்ட்சில் ஒரு சதம் மற்றும் விக்கெட்டுகள். இந்தப் போட்டியில் மொயின் அலி, சாம் கரன், மிடில் ஆர்டர் பிரமாதமாக இருக்கிறது.

மாறாக இந்திய மிடில் ஆர்டர், கோலியை கழற்றிவிட்டால் அவ்வளவுதான் பொலபொலவென்று உதிர்ந்து விடுகிறது. ஆனால் பேர்ஸ்டோ மிடில் ஆர்டரில் ஆடும்போது நன்றாக ஆடுகிறார். இதுதான் இங்கிலாந்தின் பலம். இதனால்தான் 2014க்குப் பிறகு இங்கிலாந்து உள்நாட்டில் தொடரை இழக்கவில்லை.

ஆனாலும் இங்கிலாந்துக்கு இன்னும் கொஞ்சம் மேம்பாடு தேவை. நாம் உள்நாட்டில் வெல்கிறோம், பிரமாதமாக வெல்கிறோம் நம்மை இங்கு வீழ்த்துவது கடினம் எல்லாம் சரி...ஆனால் ஆஸ்திரேலியா செல்லும் போது மொயின் அலியை முன்னணி ஸ்பின்னராக அழைத்துச் செல்ல முடியுமா? முடியாது.

பவுலிங் ஆல்ரவுண்டராக கிறிஸ் வோக்ஸை ஆஸி. முன்னால் நிறுத்த முடியுமா? முடியாது. இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் தேவை, இடது கை வேகம் தேவை. இன்னும் சில கேள்விகள் இங்கிலாந்து அணி மீது உள்ளது.

மொயின் அலியை குறை கூற முடியாது, அஸ்வினை விடவும் அபாரமாக வீசினார் மொயின். மிகவும் அபாரமான கிரிக்கெட் வீரர் அவர், ஆனால் வெளிநாடுகளில் இன்னமும் கூட அவர் தன்னை இன்றியமையாதவராக ஆக்கிக் கொள்ள வேண்டும்” என்றார் நாசர் ஹுசைன்.

https://tamil.thehindu.com/sports/article24855457.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இங்கிலாந்து அணியினருக்கு...இந்தியாவை ஓட, ஓட விரட்ட வேண்டும் 

Link to comment
Share on other sites

ஐந்தாவது டெஸ்ட் – இங்கிலாந்து அணிக்குள் புதிய மாற்றம்!

 

oli-pope-woakes.jpg

இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிற்கான இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், ஒலி போப் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்குமிடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி 3-1 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் இறுதி டெஸ்ட் போட்டியையும் கைப்பற்றும் முனைப்புடன் இங்கிலாந்து அணி எதிர்பார்த்துள்ள நிலையில், மீண்டும் அணிக்குள் கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஒலி போப் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்தியா அணிக்கு சவலாளிக்கும் வகையில் இங்கிலாந்து விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://athavannews.com/ஐந்தாவது-டெஸ்ட்-இங்கிலா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

வாழ்த்துக்கள் இங்கிலாந்து அணியினருக்கு...இந்தியாவை ஓட, ஓட விரட்ட வேண்டும் 

ம்ம் அவைக்கும் கொஞ்சம் தலைக்குள்ள ஏறிட்டுது.

Link to comment
Share on other sites

5-வது டெஸ்டில் இந்தியா-இங்கி. இன்று மோதல்

 

 
kohli

விராட் கோலி : கோப்புப்படம்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 1-3 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல்மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சவுத்தாம்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியால் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ள இந்திய அணி, அதில் இருந்து மீண்டு வரும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

 

வேகப்பந்து வீச்சில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வரும் நிலையில் அணியின் பேட்டிங் சீரற்ற நிலையில் உள்ளது. விராட் கோலியை தவிர மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த தவறியுள்ளனர். புஜாரா, ரஹானே ஆகியோர் ஒரு சில இன்னிங்ஸில் கைகொடுத்தனர். ஆனால் வெற்றிக்கான இன்னிங்ஸ் அவர்களிடம் இருந்து வெளிப்படவில்லை.

தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் விதமாக இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவண் அல்லது கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு அறிமுக வீரராக பிருத்வி ஷா இடம்பெறக்கூடும். அதேபோல் மற்றொரு இளம் வீரரான ஹனுமா விஹாரிக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும் என தெரிகிறது. அவர், களமிறங்கும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா தனது இடத்தை இழக்கக்கூடும்.

மேலும் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் சேர்க்கப்படக்கூடும்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை தொடரை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேனான அலாஸ்டர் குக் இந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இதனால் அவர், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும்.

https://tamil.thehindu.com/sports/article24889780.ece

Link to comment
Share on other sites

பாண்டியா, அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா, விஹாரி சேர்ப்பு: இங்கிலாந்துக்கு ஒரு விக்கெட் இழப்பு: குக் நிலையான ஆட்டம்

 

 
cook

இங்கிலாந்து வீரர் குக்குக்கு கை குலுக்கி வரவேற்பு அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி   -  படம்உதவி: ட்விட்டர்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ்வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து உணவு இடைவேளை வரை 28 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் சேர்த்துள்ளது. குக் 37 ரன்களுடனும், மொயின் அலி 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

   
 

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வென்று ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்திய ஒருபோட்டியில் மட்டும் வென்று இந்தப் போட்டியை ஒருமுறைக்காகவே எதிர்கொள்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து வீரர் அலிஸ்டார் குக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆதலால், போட்டி தொடங்கியவுடன் இந்திய வீரர்கள் அனைவரும் குக்கை கைகுலுக்கி வரவேற்றனர். ஓவல் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று குக் களமிறங்கும் போது கைதட்டி வரவேற்பு அளித்தனர்.

cook1jpg
 

அதேபோல, இந்திய வீரர் ஹனுமா விஹாரி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக இந்த போட்டியில்அறிமுகமானார். ஹனுமா விஹாரிக்கு இந்திய அணியின் தொப்பியை வழங்கி கேப்டன் விராட் கோலி வரவேற்றார். இதன் மூலம் இந்திய அணிக்குக் களமிறங்கும் 292-வது வீரர் எனும் பெருமையை ஹனுமா விஹாரி பெற்றார்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா வாஹிரியும், அஸ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஓவல் மைதானமும், சவுத்தாம்டன் மைதானமும் ஏறக்குறைய ஒரேமாதிரியான மைதானமாகும். இங்கு பந்துகள் கடைசி இருநாட்களில் நன்கு சுழலும் என்பதால், அனுபவம் நிறைந்த சுழற்பந்துவீச்சாளர் இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் அஸ்வின் அணியில் இருந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

அஸ்வினுடைய பந்துகள் நன்கு சுழலும், கடைசி நாட்களில் எதிரணயினருக்கு விளையாடுவதற்குக் கடினமாக இருக்கும். ஆனால், அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டு, ரவிந்திர ஜடேஜாவை அணியில் எடுத்திருப்பது அணியை இன்னும் பலவீனப்படுத்தும்.

அஸ்வினுக்கு கடந்த 4-வது போட்டியின்போது இடுப்பு வலி இருந்ததன் காரணமாக போட்டியில் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், உடற்தகுதி முழுமையாக குணமடையாத நிலையிலும்கூட அஸ்வின் உடற்தகுதி பெற்றுவிட்டார் என்றுகூறி போட்டியில் பங்கேற்றார்.

இப்போதுள்ள நிலையில், டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துவிட்டாலும் கூட இந்தப் போட்டியில் கவுரவமான வெற்றியைப் பெறுவது அவசியம். அதற்காக அனுபவமிக்க சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினை அணியில் நீடித்து வைத்திருக்கலாம்.

jadegajpg

ஜென்னிங்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ரவிந்திர ஜடேஜா

 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. குக், ஜென்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். கடைசி சர்வதேச போட்டி என்பதால் குக் பதற்றமில்லாமல், மிகவும் கூலாக பந்துகளை எதிர்கொண்டு விளையாடினார். வழக்கமாக விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிடும் இங்கிலாந்து அணி 60 ரன்கள் வரைவிக்கெட்டுகளை இழக்கவில்லை.

ஜென்னிங்ஸ், குக் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்களைச் சேர்த்தனர். ஜடேஜா வீசிய 24-வது ஓவரில் ஜென்னிங்ஸ் 23 ரன்கள் சேர்த்திருந்தபோது ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 60 ரன்களுக்கு முதல்விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.

https://tamil.thehindu.com/sports/article24894795.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

1.png&h=42&w=42

93/1 * (41.3 ov)
 
Link to comment
Share on other sites

பிரியாவிடை காணும் குக்கிற்கு ரஹானேவின் ‘ட்ரீட்’

 

 
cook1

கடைசி டெஸ்ட் போட்டியில் களம் காணும் குக் இறங்கும் காட்சி. | ஏ.பி.

லண்டன் ஓவலில் நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டியில் கவுரவ வெற்றிக்காக இந்திய அணி போராடி வருகிறது, கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடும் குக்கிற்கு வெற்றியையே பிரியாவிடை பரிசாக அளிக்க இங்கிலாந்து நிச்சயம் முனைப்புடன் ஆடும்.

அலிஸ்டர் குக்கே இந்தத் தொடரின் அதிகபட்ச தனிப்பட்ட ரன்னை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது 95 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 3 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

 

உலகம் முழுதும் குக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன, மைதானத்தில் குக்கின் ஒவ்வொரு ரன்னும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நம் ரஹானே அவருக்கு எதிர்பாராத விதமாக ‘பரிசு’ ஒன்றை அளித்து ‘ட்ரீட்’ கொடுத்தார்.

உணவு இடைவேளை முடிந்த கையோடு இஷாந்த் சர்மா பந்து வீசினார். அது ஒரு அருமையான பந்து, வலது கை வீச்சாள்ர் ஓவர் த விக்கெட்டிலிருந்து இடது கை பேட்ஸ்மெனுக்கு வீசும் ஒரு கோணமான பந்து அது, குட் லெந்தில் பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆக, குக் மட்டையில் பட்டு பந்து வைடு ஸ்லிப்பில் தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஹானேவின் கைக்கு வந்தது, கொஞ்சம் தாழ்வாக வந்தது, பிடித்திருக்கக் கூடிய அளவில் வாகாக வந்ததுதான்.

பிரதிநிதித்துவ படம்.
 

ஆனால் தவறவிட்டார் ரஹானே. கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் காணும் முனைப்புடன் ஆடிவரும் குக்கிற்கு இது ரஹானே கொடுத்த ட்ரீட்தானே!!

இஷாந்த் சர்மா மிகச்சிறப்பாக வீசி 10 ஓவர்கள் 6 மெய்டன்கள் 12 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளார். ஒரு விக்கெட்டுக்கு அதுவும் குக்கின் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட்டை வீழ்த்துவதற்குத் தகுதியானவரே இஷாந்த் சர்மா. ஆனால் ரஹானே கையில் வந்த கேட்சை விட்டு ஒரு நல்ல பரிசை வழங்கினார்.

இது நடந்து சிறிது நேரத்துக்கெல்லாம் மொயின் அலி 2 ரன்களில் இருந்த போது பும்ரா பந்து எட்ஜ் ஆக கோலிக்கு இடது புறம் கடினமான வாய்ப்பு. அவரும் டைவ் அடித்தார் ஆனால் கேட்ச் ஆக்க முடியவில்லை.

ஆகவே குக்கிற்கு ரஹானே ட்ரீட் கொடுத்ததையடுத்து அவரது பார்ட்னருக்கும் விராட் கோலி ஒரு வாய்ப்பைத் தவற விட்டு துணை ட்ரீட் அளித்தார்.

 

https://tamil.thehindu.com/sports/article24895336.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

`கருண் நாயருக்கு நீங்கள் பதில் அளித்தே ஆக வேண்டும்' - இந்திய அணி நிர்வாகத்தைச் சாடும் சுனில் கவாஸ்கர்!

3329_thumb.jpg
 

கடைசி டெஸ்ட் போட்டியில் கருண் நாயரை ஆடும் லெவனில் எடுக்கவில்லை என அணி நிர்வாகத்துக்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். 

கருண் நாயர் - சுனில் கவாஸ்கர்

இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று ஓவலில் தொடங்கியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெறும் இந்திய அணி களமிறங்கியது. முன்னதாக 4வது டெஸ்ட்டில் தோற்றபோது அணி நிர்வாகம் வீரர்கள் தேர்வில் சொதப்பியது என முன்னாள் இந்திய வீரர்கள் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது குற்றம் சுமத்தினர். இதனால் இந்தப் போட்டியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறே ஆடும் லெவனில் ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக அஸ்வின் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.  ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கருண் நாயர் அணியில் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது அந்த அணிக்காக முச்சதம் அடித்திருந்தார்  கருண் நாயர். அதேபோல் `ஏ' அணி சார்பாக உள்நாடு, வெளிநாடுகளில் நடந்த போட்டிகளிலும் கருண் நாயர் முத்திரை பதித்திருந்தார். இதனால் அவர் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர்கள் குரல் எழுப்பியிருந்தனர். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. 

 

 

அணி நிர்வாகத்தின் இந்த முடிவை முன்னாள் இந்திய அணி கேப்டன் சுனில் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``கருண் நாயர் உங்களுக்குப் பிடித்த வீரர் அல்ல. தேர்வாளர்கள் தான் அவரை இங்கிலாந்து தொடருக்கு அழைத்து வந்தனர். அதற்காக அணி நிர்வாகத்துக்கு அவரை பிடித்திருக்கிறது என எண்ண வேண்டாம். ஆடும் லெவனில் தான் சேர்க்கப்படாது குறித்து கேள்வி எழுப்ப கருண் நாயருக்கு முழு உரிமை உண்டு. அவருக்கு இந்த விவகாரத்தில் பதில் தேவை. கண்டிப்பாக கருணுக்கு அணி நிர்வாகம் பதிலளித்தே ஆக வேண்டும்" எனக் காட்டமாக கூறியுள்ளார். இங்கிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்துக்கும் வார்த்தைப் போர் முற்றிவரும் நிலையில் கவாஸ்கரின் கருத்து கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/sports/136329-karun-nair-has-every-right-to-ask-the-team-management-why-he-is-not-in-the-team-says-sunil-gavaskar.html

Link to comment
Share on other sites

ஒரே ஓவரில் குக், ரூட்டை வீழ்த்திய பும்ரா; இஷாந்த் சர்மா மிகப் பிரமாதம், மொயீன் ‘பீட்டன்’ அலி: இங்கிலாந்து சரிவு

ishant

கெட்டி இமேஜஸ்.

பிரியாவிடை ஓவல் டெஸ்ட் போட்டியில் அலிஸ்டர் குக் 71 ரன்கள் எடுத்த பிறகு பும்ரா ஒரே ஓவரில் இவரையும் ரூட்டையும் வீழ்த்த பிறகு இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

ஆட்ட முடிவில் பட்லர் 11 ரன்கள் எடுத்தும் ஆதில் ரஷீத் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

முன்னதாக டாஸ் வென்ற ரூட் முதலில் பேட் செய்ய முடிவெடுக்க ஜெனிங்ஸ், குக் கூட்டணி முதல் விக்கெட்டுக்காக 60 ரன்கள் சேர்த்தனர். அப்போது ஜடேஜா மிக அருமையாக ஓவர் த விக்கெட்டில் ஒரு பந்தை குட்லெந்தில் வீசி அதே கோணத்தில் செல்லுமாறு வீச பிளிக் ஆட முயன்ற ஜெனிங்ஸ் மட்டையில் பட்டு லெக் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது, ஒருவிதத்தில் ஜெனிங்ஸ் விக்கெட்டை கோலி, ஜடேஜா திட்டமிட்டு வீழ்த்தினர் என்றே கூற வேண்டும், அலிஸ்டர் குக் விக்கெட்டை ஜடேஜா இந்த முறையில் வீழ்த்தியதுண்டு. ஜெனிங்ஸ் 75 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 68/1 என்று இருந்தது.

உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரை இந்திய அணி அபாரப் பந்து வீச்சை வெளிப்படுத்தியது, ஆனால் விக்கெட்டுகள் மட்டும் விழவில்லை. அலிஸ்டர் குக்கிற்கு இஷாந்த் சர்மாவின் அருமையான பந்தில் வைடு ஸ்லிப்பில் ரஹானே கையில் வந்த கேட்சைத் தவற விட்ட போது குக் 37 ரன்களில்தான் இருந்தார்.

தொடர்ந்து குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து வந்த குக் இந்த டெஸ்ட் போட்டியில் சுறுசுறுப்பாக ஆடினார் பும்ராவை ஒரு கட் பிறகு ஒரு மெஜஸ்டிக் புல் ஷாட் அவரது இன்னிங்ஸின் மறக்க முடியாத ஷாட்களாகும்.

இதன் பிறகு உடனேயே பும்ரா பந்தில் விராட் கோலி, மொயின் அலிக்கு சற்றே கடினமான வாய்ப்பை தரையில் விட்டார்.

மொயீன் ‘பீட்டன்’ அலி:

இந்த 2 மணி நேரத்தில் மொயின் அலி குறைந்தது 30-35 பந்துகளாவது பீட்டன் ஆகியிருப்பார், பயங்கரமானத் தடவல் இன்னிங்ஸ். ஆனால் ஆட்டமிழக்கவில்லை, அலிஸ்டர் குக்கின் ரன் எடுக்கும் வேகமும் குறைந்தது.

உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேலை வரை 55 ரன்களையே எடுத்தனர், ஆனால் விக்கெட் விழவில்லை, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா இந்த 2 மணிநேரத்தில் இங்கிலாந்துக்கு வேகப்பந்து வீச்சு என்றால் என்னவென்று காட்டினர். குறிப்பாக மொகமது ஷமி ஏகப்பட்ட முறை மொயின் அலியை பீட் செய்தார். 22 ஓவர்கள் வீசிய மொகமது ஷமியை கடைசி வரை சரியாகவே மொயின் அலியினால் ஆட முடியவில்லை. ஷமி பந்தில் மட்டும் சுமார் 20 முறை பீட்டன் ஆனார், சில சமயங்களில் எட்ஜ்களும் ஆனது. இஷாந்த் சர்மா உண்மையில் வீசிய லெந்த், வேகம் பந்துகளின் எழுச்சி இங்கிலாந்துக்கு ஒரு கிளென்மெக்ராவைக் கண்ணில் காட்டியிருக்கும்.

moeen%20alijpg

மொயின் அலி. | படம்: ஏ.எஃப்.பி.

 

139 பந்துகளில் போராடி அரைசதம் கண்டார் அலிஸ்டர் குக். பிறகு 71 ரன்கள் எடுத்து இறுதி டெஸ்ட்டில் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா வீசிய அபாரமான பந்து ஒன்று உள்ளே வர சற்றே எதிர்பார்க்காத அலிஸ்டர் குக் மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

இதே ஓவரில் பும்ரா வைடு ஆஃப் த கிரீசிலிருந்து பந்தை உள்ளே செலுத்த ஜோ ரூட் கால்காப்பில் வாங்கினார், கொஞ்சம் பெரிய இன்ஸ்விங்கர்தான் பிளம்ப் எல்.பி. வழக்கம் போல் ரிவியூ விரயமாக ரூட் நடையைக் கட்டினார்.

பேர்ஸ்டோவுக்கு நன்றாக வீசிய இஷாந்த் சர்மா அவர் ரன் எண்ணிக்கையைத் தொடங்கும் முன்பே அருமையான ஒரு பந்தில் அவரது எட்ஜைப் பிடித்தார், பந்த் சரியாகப் பிடிக்க இங்கிலாந்து 1 ரன்னுகு 3 விக்கெட்டுகளை இழந்தது.

கடுமையாக தடவித் தடவி ஆடிய மொயின் அலி 164 பந்துகளில் அரைசதம் கண்டார். அதன் பிறகு 6 பந்துகளில் அவருக்கு ரன் வரவில்லை. 4 பவுண்டரிகள், 30-40 பீட்டன்கள், எட்ஜ்கள். 50 ரன்னில் அத்தனை நேரமாக எட்ஜை ஏமாற்றி வந்த பந்து ஒன்று எட்ஜ் ஆக பந்த் கேட்ச் எடுத்தார், இஷாந்த்தின் கடின உழைப்புக்கு மொயின் அலியின் விக்கெட் பரிசாகக் கிடைத்தது. இதே ஓவரில் இந்தியாவின் அச்சுறுத்தல் வீரர் சாம் கரன் இஷாந்த்தின் ’டீசிங்-டீச்சிங்’ லெந்த் பந்தை ஆடலாமா வேண்டாமா என்று இருதலைக்கொள்ளியாகி மட்டையை விலக்க நினைப்பதற்குள் எட்ஜ் ஆகி பந்த்திடம் கேட்ச் ஆனது டக் அவுட் ஆனார் சாம் கரன்.

முன்னதாக பென் ஸ்டோக்ஸ் 11 ரன்களில் துல்லியமாக, சிக்கனமாக சிக்கலில்லாத பவுலிங் செய்த ஜடேஜாவிடம் எல்.பி.ஆனார். ஒரு பந்து சரேலென ஷூட்டர் போல் வேகமாக வர காலை முன்னால் போடாத பென் ஸ்டோக்ஸ் பிளம்ப் எல்.பி.ஆனார்.

பட்லர் 11 ரன்களுடனும் ரஷீத் 4 ரன்களுடனும் களத்தில் இருக்க இங்கிலாந்து 198/7. இஷாந்த் சர்மா 22 ஓவர்கள் 10 மெய்டன் 28 ரன்கள் 3 விக்கெட். பும்ரா 21 ஓவர்கள் 9 மெய்டன் 41 ரன்கள் 2 விக்கெட். ஜடேஜா 57 ரன்களுக்கு 2 விக்கெட். ஷமிக்கு அதிர்ஷ்டம் இல்லை. மொயின் அலி விக்கெட்டை இவர்தான் வீழ்த்தியிருக்க வேண்டும்.

225 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்ட வேண்டும் 300 ரன்னெல்லாம் அடிக்கவிட்டால் இந்திய அணிக்குக் கஷ்டம்தான்.

https://tamil.thehindu.com/sports/article24900035.ece

Link to comment
Share on other sites

அஸ்வினின் உடல்நிலையுடன் ‘விளையாடியதா’ அணி நிர்வாகம்?: விராட் கோலி, ரவி சாஸ்திரி முரண்பட்ட பேச்சால் குழப்பம்

 

 
as

விராட் கோலி, அஸ்வின் : கோப்புப்படம்

சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் உடற்தகுதியில்லாமல் இருந்தநிலையில் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடச் செய்ததால் அவரின் காயம் மேலும் மோசமானது என்று கேப்டன் விராட் கோலி ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஆனால், அதை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மறுத்துள்ளதால் குழப்பமான நிலை உருவாகியுள்ளது

இந்திய அணி, இங்கிலாந்து பயணத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்துவிட்டது. கடைசி மற்றும் 5-வது போட்டி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

 

சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியின் போதே சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு முதுகுப்பிடிப்பு இருந்ததால், அவரால் பயிற்சியின் போது பந்துவீசாமல் இருந்தார். ஆனால், கடைசி இரு நாட்கள் மட்டும் பந்துவீசிய நிலையில் அவர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால், கடந்த 3 போட்டிகளில் துடிப்புடன் பந்துவீசிய அஸ்வின் 4-வது போட்டியில் எதிர்பார்த்த அளவுக்குப் பந்துவீசவில்லை.

சுழற்பந்துவீச்சில் அனுபவமில்லாத மொயின் அலி 9 விக்கெட்டுகளை சவுத்தாம்டன் மைதானத்தில் வீழ்த்திய நிலையில், அஸ்வின் விக்கெட் வீழ்த்தாதது பெரும் விமர்சனமானது. ஆனால், அதை சரியாகக் கண்டுபிடித்த இங்கிலாந்து வர்ணனையாளர்கள், முன்னாள் கேப்டன் மைக் பிரியர்லி, “அஸ்வின் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என்று நினைக்கிறோம். அவரின் முழுத்திறமையை இந்த பந்துவீச்சில் நாங்கள் பார்க்கவில்லை. அஸ்வினுக்கு அதிகமான ஓவர்கள் கொடுப்பதற்குப் பதிலாக மற்ற வீரர்களுக்கு விராட் கோலி அளிக்கலாம்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், ஓவலில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கேப்டன் விராட் கோலியிடம் கேட்டபோது, அஸ்வினுக்கு 3-வது டெஸ்ட் போட்டியின் போது முதுகுப்பிடிப்பு ஏற்பட்டு இருந்தது. அதனால் பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தார்.

ஆனால், 4-வது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யவேண்டாம் என நினைத்திருந்த நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் அறிவுறுத்தலின் பெயரில் அஸ்வின் பயிற்சியில் ஈடுபட்டார். அதன்பின் அணியில் அஸ்வின் இடம் பெற்றார்.

இப்போது அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமாகி இருக்கிறது. ஆதலால் ஓவல் டெஸ்ட் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது அவருக்குப் பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

RAVISHASTRIjpg
 

ஆனால், அஸ்வினுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை அவர் உடற்தகுதியுடனே இருந்தார் என்று துணைக் கேப்டன் ரஹானேவும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் தெரிவித்துள்ளது முரணாக இருக்கிறது.

கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின் உடல்காயத்தை பொறுத்துக்கொண்டுதான் விளையாடியுள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர்கள் மறுக்கின்றனர்.

அஸ்வின் முழுஉடல்தகுதியுடன் இருந்த காரணத்தில்தான் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட அழைத்தோம், உடற்தகுதியில்லாத ஒருவீரரை விளையாட அழைக்கமாட்டோம் என்று ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

அஸ்வின் உடல்நிலை குறித்து கேப்டன் விராட் கோலியும், துணைக் கேப்டன் ரஹானே, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒருவகையாகப் பேசுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீரரின் உடல்நிலையை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் அணிநிர்வாகம் பொறுப்பற்று செயல்பட்டுள்ளது இந்தச் சம்பவத்தின் மூலம் தெரிகிறது.

ஏற்கெனவே இதுபோன்று விக்கெட் கீப்பர் விர்திமான் சாஹாவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தை மறைத்துத் தொடர்ந்து அவரை டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தனர்.

சாஹவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி ஐபிஎல் தொடரில் நீக்கப்பட்டார். ஆனால் அதன்பின்பு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப்பரிசோதனையில்தான் தோள்பட்டை காயம் எனத் தெரியவந்தது. தற்போது பிசிசிஐ சார்பில் லண்டனில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விர்திமான் சாஹா வரிசையில் இப்போது ரவிச்சந்திர அஸ்வினையும் சேர்த்துவிட்டார்களா என்பது குழப்பமாக இருக்கிறது.

https://tamil.thehindu.com/sports/article24902076.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

கோலியின் தவறான களவியூகம்: மீண்டும் இங்கிலாந்தின் கடைசி வரிசை வீரர்கள் ஆதிக்கம்; ‘ஆல்அவுட்’ ஆனது இங்கிலாந்து

 

 
but

களத்தில் நிலைத்து நின்று பேட் செய்த ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர்   -  படம் உதவி: ட்விட்டர்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் 5-வது டெஸ்ட் போட்டியில், கேப்டன் விராட் கோலியின் தவறான களவியூகத்தால், மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தின் கடைசி வரிசை வீரர்கள் நிலைத்து பேட் செய்ய இந்திய பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் வாய்ப்பு அளித்தனர்.

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்று கைப்பற்றிவிட்டதால், இந்தப் போட்டியை கவுரவத்துக்காகவே இங்கிலாந்து அணியினர் எதிர்கொண்டு விளையாடி வருகின்றனர்.

     
 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் முதலில் பேட்டிங் செய்தார். முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்திருந்தது. பட்லர் 11 ரன்களிலும், ராஷித் 4 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்றைய 2-வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்தனர். சிறிது நேரம் மட்டுமே நிலைத்திருந்த ராஷித் 15 ரன்கள் சேர்த்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை பறிகொடுத்தார்.

8-வது விக்கெட்டுக்கு ஸ்டூவர்ட் பிராட், பட்லருடன் இணைந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதிக்கும் விதமாக விளையாடினார்கள். முகமது ஷமி மிகச்சிறப்பாகப் பந்துவீசியபோதிலும் அவருக்கு ஒத்துழைப்பு தரும் விதத்தில் களத்தில் பீல்டிங் வியூகத்தை கேப்டன் விராட் கோலி அமைக்கவில்லை. முகமது ஷமியின் பந்துகளைத் தொடமுடியாமல் ஏராளமான பந்துகளில் ஸ்டூவர்ட் பிராடும், பட்லரும் ‘பீட்டன்’ ஆனார்கள்.

engjpg

ஸ்டூவர்ட் பிராட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி

 

முகமது ஷமி வீசும் பந்துகள் நன்றாக ‘ஸ்விங்’ ஆகியதால், அதற்கு ஏற்றார்போல் ஸ்லிப்பில் 3 பேரை விராட் கோலி நிறுத்தி இருந்தால் விக்கெட்டுகளை விரைவாக வீழ்ந்திருக்கும். ஆனால், ஸ்லிப்பில் இரு வீரர்களை நிறுத்திவிட்டு, மற்ற வீரர்களை ‘டீப் விக்கெட்டிலும்’, ‘டீப் கவர்’ ‘மிட் விக்கெட்டிலும்’ பீல்டிங் செய்ய நிறுத்தினார். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அருகில் எந்த வீரர்களும் இல்லை.

இதனால், பட்லர் அடித்து ஆடுவதற்கும், ‘ஆப்-சைடில்’ பந்துகளைக் கட் செய்து விளையாடுவதற்குக் கோலி எளிதாக வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால், பட்லரும், பிராடும் எளிதாக சிங்கில் ரன்களை அதிகமாக எடுத்தனர். 3-வது ஸ்லிப் இல்லாததால், பேட்டிங் நுனியில் பட்டு சென்ற பந்துகளை தடுக்க முடியாமல் பவுண்டரிகளாகவும், உதிரிகளாகவும் மாறின.

butlerjpg

ஜோஸ் பட்லர் பந்தை ஸ்டிரைட் டிரைவ் செய்த காட்சி

 

ஸ்டூவர்ட் பிராட், பட்லர் கூட்டணி ஒரு மணிநேரத்தில் 45 ரன்களைக் குவித்து, மிக விரைவாக 250 ரன்களைக் கடந்தனர். பட்லர் 84 பந்துகளில் தனது 10-வது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றும் வகையில் இருபேட்ஸ்மேன்களும் கேட்ச் வாய்ப்புகளைத் தராமல் விளையாடி வெறுப்பானார்கள்.

ஆனால், சரியான களவியூகம் அமைக்கப்பட்டு ஸ்லிப்பில் பீல்டர்களை நிறுத்தியும், அருகே பீல்டர்களை நிறுத்தி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்திருந்தால், வித்தியாசமாக ஷாட் அடிக்க நினைத்து ஷமியின் பந்துவீச்சில் பட்லரும், ஸ்டூவர்ட் பிராடும் விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள். நீண்டநேரம் நிலைத்திருக்கமாட்டார்கள்.

இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் எந்தவிதமான கோளாறும் இல்லை சிறப்பாகவே பந்துவீசினார்கள், ஆனால், விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் ஏற்பட்ட கோளாறுதான் கடைசிவரிசை வீரர்கள் நிலைத்து பேட் செய்யக் காரணமாக அமைந்தது.

கடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்விக்கு முக்கியக் காரணமே கடைசிவரிசை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யமுடியாமல் திணறியதுதான். அதை தவற்றை இந்த முறையும் செய்தது.

தொடக்கத்தில் திட்டமிட்டு களவியூகத்தை அமைத்து விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டு, கடைசி வரிசை வீரர்கள் பேட் செய்யும்போது, கோலி எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் களத்துக்கு வந்ததை எதிரணியினர் பயன்படுத்திக்கொண்டனர்.

உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி 300 ரன்களைக் கடந்தது. ஒரு கட்டத்தில் 181 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணியை 300 ரன்கள்வரை சேர்ப்பதற்கு கேப்டன் விராட்கோலியின் திட்டமிடுதல் இல்லாத களவியூகமே காரணம். அதை பட்லரும், பிராடும் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

உணவு இடைவேளையின் போது, இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் சேர்த்திருந்தது. உணவு இடைவேளைக்குப்பின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஜடேஜா வீசிய ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து பிராட் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு இருவரும் 102 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

jadegajpg

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா

 

அடுத்த வந்த ஆன்சர்ஸன், பட்லருடன் இணைந்தார். ஜடேஜா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து ரன் வேகத்தை பட்லர் அதிகப்படுத்த எண்ணினார். ஆனால், ஜடேஜா பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து பட்லர் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 122 ஓவர்களுக்கு 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், பும்ரா, இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்

https://tamil.thehindu.com/sports/article24903371.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

மீண்டும் பேட்டிங் சொதப்பல்: இங்கிலாந்து பெரிய முன்னிலையப் பெறாமல் இந்திய அணியை மீட்பாரா அறிமுக வீரர் ஹனுமா விஹாரி?

 

 
anderson

படம். | ராய்ட்டர்ஸ்.

ஓவல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 332 ரன்கள் அடிக்கவிட்ட இந்திய அணி பிறகு மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

கொஞ்சம் தைரியம் காட்டிய அறிமுக வீரர் ஹனுமா விஹாரி ஒரு ஹூக் சிக்சுடன் 25 ரன்கள் எடுத்தும் ஜடேஜா 8 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.

 
 

முன்னதாக 196/7 என்று தொடங்கிய இங்கிலாந்து அணி ஜோஸ் பட்லரின் தலைமையில் கடைசி 3 விக்கெட்டுகளுக்கு 151 ரன்கள் சேர்த்தது. இதற்கு கோலியின் பவுலிங் தெரிவுகளும், பந்து வீச்சாளர்களைப் பலவீனப்படுத்தும் களவியூகமுமே காரணம். கேப்டன்சியில் தோனியின் வழி செல்லுபடியாகாது, அங்கு நிகழ்த்திக் காட்ட வேண்டும், விஷயம் தானாகவே நடந்து விடும் என்று விட்டு விடலாகாது.

கிளென் மெக்ராவைக் கடந்துசெல்லும் நிலையில் உலக சாதனைக்கு அருகில் இருக்கிறார். விராட் கோலி விக்கெட்டை இந்தத் தொடரில் கைப்பற்றாத ஆண்டர்சன் தீவிர முயற்சி செய்தார். கோலியின் மட்டை விளிம்பைக் கடந்து சென்றது பந்து. இன்ஸ்விங்கரில் கோலி பிளம்பாக வாங்கினார் ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை.

விக்கெட்டுகள் வந்தன, ஆனால் விராட் கோலி விக்கெட் அல்ல, புஜாரா (37), ரஹானே (0) ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார் ஆண்டர்சன்.

விராட் கோலி 6 பவுண்டரிகளுட 49 ரன்கள் எடுத்து நாள் முடிய அரைமணி இருக்கும் போது பென் ஸ்டோக்ஸ் வீசிய தொடக்கூடாத பந்தைத் தொட்டு கேட்ச் ஆனார்.

ஷிகர் தவண் உள்ளூர் புலி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. ஸ்டூவர்ட் பிராட் பந்தில் எல்.பி.ஆனார். நல்ல வேளை ரிவியூ செய்யவில்லை, ஏனெனில் அது பிளம்ப் எல்.பி. பந்தின் லைனை சரியாகக் கணிக்க முடியாமல் கால்காப்பில் வாங்கி 3 ரன்களில் வெளியேறினார்.

ராகுல் ஷாட்களை ஆடும் முனைப்பைக் காட்டினார், புஜாரா தன் பாணியில் நின்று ஆட முயற்சி செய்தார். இருவரும் பெரிய சிக்கலையெல்லாம் சந்திக்கவில்லை, ஆனால் மொயின் அலி வந்தவுடன் சிக்கல்கள் தோன்றின. புஜாரா 10 ரன்களில் இருந்த போது அலி பந்தை மட்டையின் உள்விளிம்பில் வாங்கினார், ஷார்ட் லெக்கில் குக் கேட்சைத் தவற விட்டார்.

4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுலுக்கு சாம் கரன் ஒரு அற்புத பந்தை வீசினார். விளையாட முடியாத பந்து ஸ்விங் ஆகி உள்ளே வந்து மிடில் ஆண்ட் ஆஃபில் பிட்ச் ஆகி சற்றே வெளியே எடுக்க ஆஃப் ஸ்டம்பின் மேல் பகுதியைத் தாக்கியது, விளையாட மிகவும் கடினமான பந்து. ராகுல் இதனை ஆடியிருக்கவே முடியாது. பவுல்டு ஆனார்.

பந்து இவ்வளவு ஸ்விங் ஆவதைப் பார்த்த ஜோ ரூட், ஸ்கோர் 94/2 என்று இருந்த போது ஜேம்ஸ் ஆண்டர்சனை பந்து வீச அழைத்தார். அதாவது ஆண்டர்சனின் கடந்த தொடர் செல்லப்பிள்ளை கோலி களத்தில் இருந்தார். இரண்டு அவுட் ஸ்விங்கர்களை வீசி பீட் செய்து விட்டு பிறகு ஒரு இன்ஸ்விங்கரை உள்ளே கொண்டு வந்தார், இதைக் கூட எதிர்பார்க்காதவர்தான் இன்று உலகிலேயே பெரிய பேட்ஸ்மென், காலில் வாங்கினார். தர்மசேனா அவுட் இல்லை என்றார், இங்கிலாந்து ரிவ்யூ செய்தது, ஆனால் அம்பயர்ஸ் கால் ஆனது. இதில் ஆண்டர்சன் கடுப்பானார், ஒரு சில வார்த்தைகளை அவர் கோலியை நோக்கிப் பிரயோகிக்க இவரும் ஏதோ சொல்ல நடுவர் தலையிட வேண்டியதாயிற்று.

ரத்தம் கொதிப்படைந்த ஆண்டர்சன், விராட் கோலியை இந்தத்தொடரில் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தார், ஆனால் அதற்காக புஜாராவை விட்டு விட முடியுமா? 37 ரன்களில் புஜாரா நன்றாக ஆடிவந்த போது நம் பேட்ஸ்மென்களுக்குப் பதற்றமான அவுட் ஸ்விங்கர் வந்தது தொட்டார் புஜாரா, வெளியேறினார். ரஹானே தன் உடலிலிருந்து தள்ளி மட்டையைத் தொங்க விட்டு ஆண்டர்சன் பந்தை குக்கிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.

kohlijpg
 

அறிமுக வீரர் ஹனுமா விஹாரி 6ம் நிலையில் இறங்கினார். ரன் எண்ணிக்கையைத் தொடங்கும் முன்பே இருமுறை அவுட் ஆகியிருப்பார். முதலில் ஒரு எல்.பி. முறையீடு, இங்கிலாந்து ரிவியூ செய்யத் தவறியது. இன்னொரு முறை எல்.பி தீர்ப்பளிக்கப்பட்டார், ஆனால் ரிவியூவில் பிழைத்தார், இருமுறையும் பிராட்தான் பவுலர்.

கோலி சில ஷாட்களை ஆட ஹனுமா விஹாரியுடன் இணைந்து 51 ரன்கள் அரைசதக் கூட்டணி அமைத்தனர். 49 ரன்கள் எடுத்த விராட் கோலி பென் ஸ்டோக்ஸ் வீசிய அவுட் ஸ்விங்கரை எட்ஜ் செய்து வெளியேறினார், மோசமான ஷாட். ரிஷப் பந்த் (5) 8 பந்துகளே தாக்குப் பிடித்தார். இவரது எட்ஜையும் ஸ்டோக்ஸ் சரியாகப் பிடித்தார், குக்கிடம் கேட்ச் ஆனது.

ஆட்ட முடிவில் ஹனுமா விஹாரி 25 ரன்களுடனும், ஜடேஜா 8 ரன்களுடனும் உள்ளனர், இந்திய அணி 174/6 என்று இங்கிலாந்துக்கு ஒரு பெரிய முன்னிலையை வழங்கும் போல் தெரிகிறது. ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் பிராட், கரன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

https://tamil.thehindu.com/sports/article24907205.ece

Link to comment
Share on other sites

விக்கெட் விழவில்லை, மட்டைவிளிம்பைக் கடந்து பந்துகள்.. வெறுப்பில் ஷமி..: கோலியிடம் ரஹானே கூறியது என்ன?

 

 

 
kohli2

செய்வதறியாது முடங்கிய கோலி. | ஏ.எஃப்.பி.

ஓவல் டெஸ்ட் போட்டியில் 181/7 என்ற நிலையிலிருந்து இங்கிலாந்து அணி பட்லர் (89), பிராட் ஆகியோரது அபார பேட்டிங்கினாலும் கோலியின் களவியூக உதவியினாலும் 332 ரன்களுக்கு உயர்ந்தது.

பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆகிக் கொண்டிருக்கும் போது 3 ஸ்லிப் ஒரு கல்லி, அல்லது 4 ஸ்லிப் என்று நிறுத்தி சிங்கிள்களை கட் செய்து, களவியூகத்தில் இடைவெளியைக் கொடுக்காமல் அமைத்திருந்தால் பதற்றத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்து பட்லரோ, பிராடோ அவுட் ஆகியிருப்பார்கள், ஆனால் பிராட் களத்தில் வந்தவுடனேயே பட்லர் அடித்து ஆடப்போகிறார் என்று கோலி அதீதக் கற்பனையில் 2 ஸ்லிப்புகளாக்கி டீப் பைன் லெக், ஸ்கொயர் லெக், டீப் கவர் என்று பீல்டை மாற்ற அவர்கள் இருவரும் சவுகரியமாக ரன்களை எடுத்து ஸ்ட்ரைக்கை சுழற்சியில் விட்டனர். ஷமியின் பந்துகள் குறைந்தது இந்த டெஸ்ட்டில் 50 முறையாவது மட்டையைக் கடந்து சென்றிருக்கும், ஆனால் கோலியின் பீல்டிங் செட்-அப் உதவவில்லை.

 
 

இந்நிலையில் கோலி வெறுப்படைய இந்திய வீரர்கள் உடல் மொழியில் எதிர்மறைத்தன்மை அதிகரித்தது, அப்போது அஜிங்கிய ரஹானே கோலியிடம் சென்று சில ஆலோசனைகளை வழங்கினார். அதாவது பட்லருக்கு பந்தை பிட்ச் செய்து வெளியே ஸ்விங் செய்யுமாறு ரஹானே தனது ஆலோசனையைக் கோலியிடம் கூறினார்.

ராகுல் இதனை ஷமிக்குத் தெரியப்படுத்தினார். பிராட் பேட் செய்யும் போது அவர் ஷாட்கள் ஆட இடம் கொடுக்க வேண்டாம் என்றும் ரஹானே அறிவுறுத்தினார். ஆனால் கோலி பேசாமல்தான் இருந்தார்.

பிராட் ஷார்ட் பிட்ச் பந்துகளில் பலவீனமானவர், ஒருமுறை வருண் ஆரோன் பந்தில் அடிவாங்கியது தன் பேட்டிங்கை எப்படி காலி செய்தது என்று பேட்டியெல்லாம் கொடுத்தார், ஆனால் நம் கேப்டனுக்கு அதெல்லாம் தெரியவில்லை, ஒரு முறை கூட பிராடுக்கு ஷார்ட் பிட்ச் முயற்சி செய்யுங்கள் என்று ஒரு கேப்டனாக கோலி பவுலர்களுக்கு அறிவுறுத்தவே இல்லை.

சூழ்நிலை கையை மீறிச் செல்லும் போது இந்திய ஓய்வறையிலும் இது உணரப்பட்டது. அப்போதுதான் உணவு இடைவேளைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் மைதானத்துக்குள் வந்து என்ன செய்ய வேண்டும் என்ற பயிற்சியாளர்களின் ஆலோசனைகளைச் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் இஷாந்த் சர்மாவை பந்து வீச அழைத்தார் கோலி.

எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல் பவுலர்களிடமே தெரிவுகள் விடப்படுவதால் அவர்கள் குழம்பினர், இதனால்தான் பிராடை ஷார்ட் பிட்ச் வீசி தாக்குவதற்குப் பதிலாக பும்ரா வெறுப்பில் பட்லரிடம் இதை முயன்று வாங்கிக்கட்டிக்கொண்டார், இரண்டு சிக்சர்கள் பறந்தன. பும்ரா தன் வெறுப்பை வெளிப்படையாகக் காட்டினார்.

கோலி நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது இந்தத் தொடரில் கிரிக்கெட் பண்டிதர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

https://tamil.thehindu.com/sports/article24907311.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்நியா இங்கிலாந்தை நெருங்கியது.ஜடேஜா மற்றும் அறிமுக வீரர் விகாரி அபாரம்.(நாங்களும் எழுதுவமல்ல.)?

Link to comment
Share on other sites

ஓவல் டெஸ்ட்- ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆட்டத்தால் இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட்

 
அ-அ+

புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் இந்தியா முதல் இன்னிங்சில் 292 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND

 
 
 
 
ஓவல் டெஸ்ட்- ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆட்டத்தால் இந்தியா 292 ரன்னில் ஆல்அவுட்
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 332 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்திருந்தது. ஹனுமா விஹாரி 25 ரன்னுடனும், ஜடேஜா 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஹனுமா விஹாரி 104 பந்தில் அரைசதத்தை தொட்டார். அறிமுக போட்டியிலேயே, கடுமையான ஸ்விங் பந்தை எதிர்த்து சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜடேஜே உடன் இஷாந்த் ஷர்மா ஜோடி சேர்ந்தார். இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்திருந்தது. ஜடேஜா 41 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201809091927331728_1_Vihari002-s._L_styvpf.jpg

மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இஷாந்த் ஷர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷமி 1 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

95 ஓவரில் 292 ரன்கள் எடுத்திருக்கும்போது பும்ரா ரன்அவுட் ஆக, இந்தியா ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 86 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது வரை இந்தியா 40 ரன்கள் பின்தங்கியுள்ளது.

https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/09192733/1190170/ENGvIND-Hanuma-Vihari-Jadeja-half-century-india-runs.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.