Jump to content

பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் பொன்சேகா - உதயசாந்த


Recommended Posts

பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் பொன்சேகா - உதயசாந்த

 

 
 

(எம்.சி.நஜிமுதீன்)

அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா? என தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வி எழுப்பியுள்ளார்.

பொரள‍ை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

padma_udaya_santha.jpg

பாதாள உலகக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அமைச்சர் ஒருவர் பற்றி நேற்று ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. அது குறித்து பாராளுமன்றிலும் விவாதம் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச அது குறித்த தகவல்களை பாராளுமன்றில் எடுத்துரைத்தார். 

அத்துடன் முன்னாள் பொலிஸ் சேவையில் கடமையாற்றி தற்போது பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிப்பவர் ஒருவர் அமைச்சர் சரத் பொன்சேகா கலந்துகொள்ளும் வைபவங்களில் கலந்துகொண்டுள்ளார். அதற்கான ஆதராங்களும் உள்ளன.

மேலும் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக் குழுக்களில் அங்கம் வகிக்கும் ஐந்து உறுப்பினர் உள்ளதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் கேள்வி எழுப்பியதுடன் அது நிரூபிக்கப்பட்டாடல் தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஆகவே பாதாள உலகக் குழுக்களின் பின்னணியில் உள்ள அமைச்சர் ஒருவரை நாம் தற்போது வெளிப்படுத்தியுள்ளோம். எனவே அண்மையில்  கேரள கஞ்சாவுடன்  கைதுசெய்யப்பட்ட கிஹான் சந்தருவனை விடுவிக்குமாறு யார் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்தது? அத்துடன் அமைச்சர் ஒருவருக்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புள்ளதாக தகவல் வெளியிட்ட செய்தி இணையதளம் மீது குறித்த அமைச்சரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் எமக்குத் தெரியவருகிறது.

எனவே அமைச்சர் சரத் பொன்சேகாவுடன் இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரை கைதுசெய்வீர்களா என பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் அமைச்சர் சரத் பொன்சேகா பாதாள உலகக் குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருப்பாராயின் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா என சட்டம் ஒழுங்கு அமைச்சரிடமும், அமைச்சு பதிவிலிருந்து அவரை நீக்குவீர்களா என பிரதமரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். 

http://www.virakesari.lk/article/36822

பொன்சேகாவுடன் பாதாள உலக கோஷ்டி; ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது மஹிந்த அணி
 
 

வலுவாதார அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, தனக்கு கீழ் 5 பாதாள உலகு குழு கோஷ்டியினரை வைத்து செயற்படுவதோடு, அவர்களை பாதுகாத்து வருவதாகவும் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்களான முன்னாள் பொலிஸ் அதிகாரி அருன் அத்தநாயக்க, கியான் சந்தருவான், கிருஸ்டோபர் ஆகியோர் அமைச்சர் சரத்பொன்சேகா கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவருடன் கலந்துகொண்டிருப்பதாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் அவர் இதன்போது ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

image_26115662cc.jpgimage_14f755b012.jpg

http://www.tamilmirror.lk/செய்திகள்/பொன்சேகாவுடன்-பாதாள-உலக-கோஷ்டி-ஆதாரங்களோடு-அம்பலப்படுத்தியது-மஹிந்த-அணி/175-219221

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.