Jump to content

நிலைமாறுகால நீதி கிடைக்குமா?


Recommended Posts

நிலைமாறுகால நீதி கிடைக்குமா? பி.மாணிக்கவாசகம்…

 

Transitional-justice.jpg?resize=764%2C47

நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளில் ஒன்றாகிய காணாமல் போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. அந்த அலுவலகத்தின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்து, சர்வதேச விசாரணையே தேவை என கோரி, அதற்கு எதிராக, காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றார்கள்.

 

இந்த மாவட்டங்களில் காணாமல் போனோருடைய உறவினர்களுடன் நடத்திய அமர்வின்போதே, காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கின்றது. .

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திலும், கிளிநொச்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்திலும் இந்த அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதத்தலைவர்கள் மற்றும் சமூக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட சந்திப்பும், காணாமல் போனோருடைய உறவினர்களுக்கான அமர்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மூன்றாவதாக செய்தியாளர்களுடனான சந்திப்பும் இடம்பெற்றிருந்தது.

முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முக்கியஸ்தர்கள் இந்த அலவலகத்தின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் காணாமல் போனோரின் உறவினர்களுக்கான அமர்வு சுமுகமாக அமையவில்லை. சுமார் ஆயிரம் பேரளவில் இந்த அமர்வுகளில் கலந்து கொண்டிருந்ததாகவும், ஒருசிலரே மண்டபத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றனர்.

யாழ்ப்பாணச் சந்திப்பு பயனுள்ளதாக அமைந்திருந்தது. எதிர்ப்பும் இருந்தது என்பதே காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளின் கூற்றாகும். ஆனால் கிளிநொச்சியில் நிலைமை மறுதலையாக இருந்தது. காணாமல் போனோருடைய ஒருசில குடும்பங்களே இந்த அமர்வில் கலந்து கொண்டதாகவும் பெரும் எண்ணிக்கையானோர் நிகழ்வில் கலந்து கொள்ளாமல், மண்டபத்;துக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் கட்டுக்கடங்காமல் நிகழ்வு நடந்த மண்டபத்திற்குள் பிரவேசிக்க முற்பட்டதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் பொலிசாரின் உதவியை நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இந்;த அலுவலத்திற்கு வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பானது, அதிகாரிகள் மத்தியில் சஞ்சலத்தையே ஏற்படு;த்தி உள்ளது. மீண்டும் மீண்டும் இந்த அலுவலகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் வலியுறுத்தி கூறியிருந்தனர். ஆயினும் எதிர்ப்புகள் காரணமாக, காணாமல் போனோர் அலுவலகத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது என்பது, மிக மிக கடினமான காரியம் என்பதை அதிகாரிகள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.

இந்த அலுவலகத்திற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவதற்கு ஒரு வருடமும், பிரேரணை நிறைவேற்றப்பட்டு, அந்த அலுவலகம் உருவாக்கப்பட்டு, அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அதனைச் செயற்படச் செய்வதற்கு மேலும் ஒரு வருட காலமும் கடந்துள்ளது. அதன் பின்னரே அந்த அலுவலகம் செயற்படத் தொடங்கியிருக்கின்றது.

வடக்;கில் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் நடத்தப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வுகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவோ அல்லது, அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பைப் பெறவோ முடியாமல் போயிருக்கின்றது. இது காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்கும், ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி நிலைநிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டைக் கடினமாக்கி உள்ளது. வேண்டும்.

முன்னைய குழுக்களைவிட அதிகாரம் வாய்ந்தது……..?

யுத்தத்தை முடிவுக்குக் கெண்டு வந்த முன்னைய அரசாங்க காலத்திலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அதன் பி;னனர் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவாகிய பரணகம ஆணைக்குழு ஆகியன நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்தியிருந்தன. ஆயினும் அந்த விசரணைகள் நடத்தப்பட்ட முறைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்திருந்தார்கள்.

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுக்களின் முன்னிலையில் தமது சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மக்கள் அவற்றில் கலந்து கொண்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளைப் பற்றிய விபரங்களைத் தெரிவித்திருந்தார்கள். தமது உறவுகள் காணாமல் ஆக்கப்படுவதற்கு முன்னால் யாரால் எங்கு வைத்து, எப்படி கொண்டு செல்லப்பட்டார்கள் என்பது பற்றியும், காணாமல் போனதன் பி;னனர் யாரோடு எங்கே இருந்தார்கள் என்பது பற்றியும் தாங்கள் அறிந்திருந்த துல்லியமான தகவல்களை, பலர் இந்த விசாரணைகளில் தெரிவித்திருந்தனர்.

இந்த விசாரணைகளின்போது கேட்கப்பட்ட பக்கசார்பான கேள்விகளும், அளிக்கப்பட்ட சாட்சியங்கள், சிங்கள மொழியில் திருப்தியற்ற வகையில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பும் இவற்றில் சாட்சியமளித்தவர்களின் நம்பிக்கையை சிதைத்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டு பிடிப்பதற்கு இந்த விசாரணைகள் ஒருபோதும் உதவமாட்டாது, ஆட்களைக் காணாமல் போகச் செய்தமைக்கு சரியான நீதி கிடைக்கமாட்டாது என்ற மனப்பதிவையே அந்த குழுக்களின் விசாரணைகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தன.

இந்த விசாரணைகளில் எங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. என்றாலும், அரசாங்கம் நடத்திய விசாரணைகளில் கலந்து கொள்ளவில்லை என்று எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே நாங்கள் உங்கள் முன்னிலையில் சாட்சியமளிக்க வந்துள்ளோம் என்று விசாரணையாளர்களிடம் பலர் நேரடியாகவே தெரிவித்திருந்தனர்.

இந்த இரண்டு குழுக்களின் விசாரணைகளின் முடிவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கத்தக்க வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் அந்த விசாரணைகள் பயனற்றுப் போயின என்ற முடிவுக்கே அந்த விசாரணைகளில் பங்குபற்றியவர்கள் வந்துள்ளனர்.

இத்தகைய பின்னணியில்தான் நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் ஓர் அம்சமாக காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு, அந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்டங்களில் சென்று சந்தித்து வருகின்றார்கள்.

காணாமல் போனோர் அலுவலகமானது, முன்னைய விசாரணை குழுக்களிலும் பார்க்க அதிக அதிகாரம் வாய்ந்தது என்று அந்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். தங்களுக்கு அளிக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், பதவி மற்றும் அந்தஸ்து நிலை பாராமல், அவர்களை விசாரணை செய்யும் அதிகாரம் இந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள சாலிய பீரிஸ், ‘இருப்பினும், ஆழமான, உச்சகட்ட விசாரணைகளை நாங்கள் நடத்துவோம்’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உறுதியளித்திருக்கின்றார்.

இந்த அலவலகத்திற்கென இப்போது நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மூன்று வருடங்கள் இந்தப் பதவியில் இருந்து செயற்படுவார்கள். இருப்பினும் ஏனைய விசாரணை குழுக்களைப் போலல்லாமல், இந்த அலுவலமானது, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் போன்று நிரந்தரமாகச் செயற்படும் என்பது விசேடமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார தத்துவம்

விசாரணைகளில் கண்டறியப்படுகின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட எவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு வழங்கப்படவில்லை. காணாமல் போயுள்ள ஒருவர் எங்கு இருக்கின்றார் அல்லது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது கண்டறியப்பட்டாலும்கூட, அவருடைய ஒப்புதல் இல்லாமல் அவரைப் பற்றிய தகவல்கள் குடும்பத்தினருக்குத் தெரிவி;க்கப்படமாட்டாது என்பதும் முக்கியமாக இந்த அலுவலகத்தின் நிலைப்பாடாகும்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்திருப்பதைப் போன்று அளிக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் எவராக இருந்தாலும், ஆழமாகவும் உச்சகட்ட நிலையிலும் விசாரணை செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இல்லாவிட்டால், அந்த விசாரணையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வாறு நீதி வழங்கப்பட முடியும் என்பது தெரியவில்லை. முன்னைய இரண்டு விசாரணை குழுக்கள் செய்ததைப் போன்று, இந்த அலுவலகமும் விசாரணைகளை நடத்தி சாட்சியங்களை அறிக்கைகளாகப் பதிவு செய்யுமேயானால், அந்த குழுக்களிலும் பார்க்க, இது அதிக அதிகாரம் தத்துவம் வாய்ந்தது என்று எப்படி கருத முடியும் என்பதும் தெரியவில்லை.

முன்னைய விசாரணை குழுக்களின் விசாரணைகளில் எந்தவிதமான பயனும் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே, நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் ஓர் அம்சமாக உள்ளுர் விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

நிலைமாறு கால நீதிக்கான பொறிமுறைகள் பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்தியதாக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பும், அவர்களுடைய எதிர்பார்ப்புக்களின் உள்ளடக்கமும் இந்தப் பொறிமுறைகளில் முக்கியமாக இடம்பெற்றிருக்க வேண்டும் என்று, பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளது. ஆனால், காணாhமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த மக்களின் சார்பில், இந்த அலுவலத்திற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டபோதே முன்வைக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என இந்தப் பொறிமுறைக்கு பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோள். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காணாமல் போனோருக்கான அலுவலகம் என்ற பெயரே சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், காணாமல் போனவர்கள் எவரும் எங்குமே இல்லை என்று ஜனாதிபதி வடமாகாணத்தக்கான விஜயம் ஒன்றின்போது தெரிவித்திருந்தார்.

காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பின்போது, காணாமல் போனவர்கள் எவருமே இல்லையென்று ஜனாதிபதி கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டி, இந்த நிலையில் காணாமல் போயுள்ளவர்களை உங்களால் எப்படி கண்டு பிடிக்க முடியும்? எதற்காக இந்த விசாரணை? என்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இல்லாத ஒன்றைத் தேடிக் கண்டுபிடிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு வருவது ஏமாற்று வித்தை அல்லவா என்பதே அந்தக் கேள்வியின் உள்ளார்ந்த கருத்தாகும்.

புறச்சூழல்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்;டவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பேற்று, அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் அல்லது எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து பதில் கூற வேண்டும் என வலியுறுத்தி, வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோரின் உறவினர்கள் வீதியில் இறங்கி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றார்கள். இந்தப் போராட்டம் 500 நாட்களைக் கடந்துள்ளது. இந்தச் சூழலிலேயே காணாமல் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தனது செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்து, அது தொடர்பி;ல் அவர்களுடைய கருத்துக்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் உண்மையிலேயே, அந்த அலுவலகம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே உள்வாங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அந்தப் பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. இதுபற்றி ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் அந்த அலுவலக அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுடைய கருத்துக்களைத் திரட்ட முற்பட்டிருக்கின்றார்கள்.

இந்த அலுவலகம் செயற்படத் தொடங்கியுள்ள சூழலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். தமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளமைக்கு நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்டுள்ள வீதிப் போராட்டம் ஒருபக்கம் இருக்க மறுபக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு நீதிமன்றத்தின் மூலம் நியாயம் தேட முற்பட்டிருப்பவர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். வழக்குத் தவணைகளுக்காக நீதிமன்றங்களுக்கு அவர்கள் செல்லும்போது சிவிலுடையில் உலவும் புலனாய்வாளர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து கண்காணித்தும் புகைப்படங்கள் எடுத்தும் அச்சுறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து, வட்டுவாகல் பகுதியில் அரசாங்கம் விடுத்த அறிவித்தலை ஏற்று இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளாரான எழிலன் தொடர்பாக அவருடைய மனைவி அனந்தி சசிதரனும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு, அவருக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இராணுவ புலனாய்வளார்களே இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்திருந்தார்கள் என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே அந்த அச்சுறுத்தலி கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் வழக்குத் தவணைகளுக்காக அனந்தி சசிதரன் பயணம் செய்த வாகனம் அடிக்கடி சிவிலுடை தரித்த புலனாய்வாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களினால் பின்தொடரப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

இத்தகைய நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் நாவற்குழி இராணுவ முகாமைச் சேர்ந்த துமிந்த கெப்பிட்டி வெலான என்ற இராணுவ அதிகாரியினால் 1996 ஆம் ஆண்டு கைது செய்து கொண்டு செல்லப்பட்ட 24 இளைஞர்கள் காணாமல் போயுள்ள சம்பவம் குறித்து யாழ் மேல் நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அக்காலச் சூழலில் இத்தகைய வழக்கு தாக்கல் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழல் இருக்கவில்லை. அதனாலேயே இவ்வாறு காலம் தாழ்த்தி ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்ய நேர்ந்தது என்று மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்திருந்தார்.

இரு தரப்பினருக்குமே பாதுகாப்பு இல்லையா…………….?

யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களில் 3 மனுக்களை மட்டுமே மேல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அதேநேரம் கடந்த 2002 ஆம் ஆண்டு 9 பேர் தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும்;, அந்த வழக்கு விசாரணைகளில் இராணுவத்தினர் கலந்து கொள்வதற்குப் பாதுகாப்பு இருக்கவில்லை எனக் கூறி, அந்த வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தொடர்பில் ஒத்துழைத்ததாகக் கூறப்படுகின்ற மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய 36 வயதுடைய பெண்ணும், அவருடைய 6 வயது மகனும் அடையாளம் தெரியாதவர்களினால் இரும்புக்கம்பி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை பகுதியில் அவர்கள் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் இடம்பெற்றிருக்கின்றது. இரும்புக்கம்பியினால் தலையில் தாக்கப்பட்டு, வீதியோரத்தில் கிடந்த இவரையும், அவருடைய மகனையும் கண்ட வழிப்போக்கர்கள், வட்டுக்கோட்டைகொட்டைக்காடு வைத்தியசாலையில் சேரத்துள்ளனர். அங்கிருந்து அந்தப் பெண் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் செயற்படுபவர்கள் மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதிகேட்டு போராடி வருபவர்கள் மத்தியிலும் இந்தச் சம்பவம் அதிரிச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

அதேவேளை, யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள 3 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் வழக்குத் தாக்கல் செய்துள்ளவர்கள் நீதிமன்ற பகுதியில் இராணுவ புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புலனாய்வாளர்கள் தொடர்பில் கருத்துரைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சைத்திய குணசேகர, அவர்கள் தனது பாதுகாப்புக்காகவே வந்திருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

யாழ் மேல் நீதிமன்றத்திற்கு வருவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரிக்கு பாதுகாப்பு இல்லை என்றே இதன் மூலம் தெரியவந்துள்ளது. அதேநேரம் காணாமல் போனோர் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்குகு; கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம். ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்கும் நடவடிக்கையில் நீதியை நாடி வருபவர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகுமாயின் அங்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதாகிவிடும். முதலில் சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போனோர் அலுவலகத்தின் முன் சென்று பாதுகாப்பாக சாட்சியமளிக்க முடியுமா என்பதே இப்போது கேள்விக்குறியாகி இருக்கின்றது.

பொறுப்பு கூறும் விடயத்தில் நான்கு விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. உண்மையைக் கண்டறிதல், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்குதல், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல், இத்தகைய நிலைமையொன்று மீண்டும் நிகழாமல் உறுதி செய்தல் ஆகிய நான்கு விடயங்களுக்கான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு அதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், என்ன நடந்தது என்ற உண்மையை;க கண்டறிவதற்கான ஆரம்பப் பொறிமுறையாகிய காணாமல் போனோர் அலுவலகம் என்ற பொறிமுறையே பல்வேறு சந்தேகக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது. அத்துடன் இந்த அலுவலகத்தை நம்பத் தயாரில்லை என காணாமல் போனோரின் உறவினர்கள் உரத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டத்;தக்க வகையில் உருவாக்கப்படுமா, அவற்றின் மூலம் நிலைமாறுகால நீதி கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மேலும் தாமதப்படுத்தப்படுவது என்பது நீதி முற்றாக மறுக்கப்படப் போகின்றது என்பதையே சுட்டிக்காட்டுவதாகக் கருத வேண்டியிருக்கின்றது.

http://globaltamilnews.net/2018/88393/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.