Jump to content

ராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர


Recommended Posts

ராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர

 

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) 

பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ விற்றுவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக தகவல் வெளியிட்டு நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக  பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

anura.jpg

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அவரே இங்கு வந்து விளக்கமளித்திருக்க  வேண்டும். ஆனால் தற்போதைய விவாதத்தின் போது அதற்கு செவிசாய்த்து அது தொடர்பாக பதிலளிக்காது ஊழல் மோசடிகளுக்கு பின்னால் இருக்கும் மக்களின் பொது பணத்தை நாசப்படுத்தியவர்கள் குழப்ப முயற்சித்துள்ளனர். 

பஷில் ராஜபக்‌ஷவின் மனைவியுடன் தொடர்புடைய சீ.ஐ.சீ.டி நிறுவனத்தை பற்றி கூற வேண்டும். அவர்களால் எச்.எஸ்.பீ.சி வங்கியில் அமெரிக்க டொலர் மற்றும் ரூபா அடிப்படையிலான கணக்குகளை பேணி வந்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு துரையடி திட்டம் குறித்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2012.05.21 ஆம் திகதி ஒரு இலட்சத்து 57ஆயிரம் டொலர் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அது  புஸ்பா ராஜபக்‌ஷ மன்றத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சீ.ஐ.சீ.டியின் 95 வீதம் சீன நிறுவனத்தினுடையது. இதன்படி 35 வருடங்களின் அந்த துறைமுக திட்டத்தை  அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் போது புஸ்பாவுக்கும் வழங்கப்பட்ட பணத்தை அரசாங்கமே மீள செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.  

சைனா ஹாபர் நிறுவனம் தேர்தல் காலத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கியுள்ளது. அடிக்கடி மில்லியன் கணக்கில் கசோலைகள் மாற்றப்பட்டுள்ளன. சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு செய்துள்ளது. அரச தலைவர்களை பணத்திற்கு வாங்கியுள்ளனர். இப்போது சில விடயங்களே வெளியாகியுள்ளன. மேலும் வெளியாகும். 

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை தேசப் பற்றாளர் என கதைக்க முடியாது.  தாய் நாடு என அவரால் கதைக்க முடியுமா? முன்னாள் ஜனாதிபதி என்றில்லாது பாராளுமன்ற உறுப்பினர் என கருதாது சாதாரண  பிரஜையாக கருதி மஹிந்த ராஜபக்‌ஷ ஏதேனும் நிறுவனத்தினால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்றால் அது தொடர்பாக அவர் விளக்கமளிக்க வேண்டும். 

மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் சர்வதேச ஊடகத்தில் வெளிவந்துள்ளது. என்ன காரணிக்காக வெளிவந்தது, எவ்வாறு வெளிவந்தது என்பதை விடவும் நடைபெற்ற ஊழல் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா - சீனா வின் அரசியல் எமக்கு அவசியம் இல்லை, சர்வதேச ஊடகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பதை எமக்கு முக்கியம் இல்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடம் வாங்கிய 7.6 மில்லியன் டொலர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் பாராளுமன்றத்தில் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்.  ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு உரிய  பதிலை கூற வேண்டியது எதிரணியின் கடமையாகும். 

ஆனால் இவர்கள் இந்த விவாதத்தை தடுக்க எடுத்த முயற்சிகள் வேடிக்கையாக இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற இவர்கள் எடுத்த முயற்சிகள் வேடிக்கையாகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைந்தது. மஹிந்த ராஜபக்ஷ இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். என்னிடம் பல கேள்விகள் உள்ளன. 

மக்களின் சொத்துக்களை பாரிய அளவில் கொள்ளையடித்து ஆட்சி செய்த அரசாங்கமே இதுவரை காலமாக இருந்து வந்துள்ளது. இதில் ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களை கணக்கெடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவர்கள்  தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருந்த போதே பல கோடி ரூபாய்களுக்கு கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட காசோலை மாற்றப்பட்டுள் தகவல்கள் கிடைத்துள்ளது.  எமது நாட்டில் சுயாதீனத்துவம் குறித்து பாரிய போராட்டம் உள்ளது. சிலர் வடக்குக்கு எதிரான தெற்கின் இனவாதம் தேசிய வாதம் என கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கும் ஊழலுக்கு எதிராக இந்த தேசிய வாதிகள் வாய்திறப்பதில்லை.  

பண நப்பாசையிலும் அதிகார பேராசையிலும் எமது நாட்டின் கொள்க‍ையையும் எமது சுயாதீனத்தையும் மஹிந்த ரஜாபக்ஷ  விற்றுவிட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்றுவிட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ் தரமான அரசியலில் ஈடுபட்டுவிட்டார்.  இந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் ஒரு ஜனாதிபதியாகவோ, எதிர்கால தலைவராகவோ அல்லாது ஒரு சாதாரண குடிமகனாக பதில் கூற வேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/36910

Link to comment
Share on other sites

பண நப்பாசையில் நாட்டின் கொள்கையை மஹிந்த ராஜபக் ஷ விற்றுவிட்டார்

CITY-PAGE-01-BLACKGMGPage1Image0010-da2d3e8cc6d3a30f7957b1a85d7ee76cc8310ecb.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சபையில் ஜே.வி.பி. தலைவர் கடும் சாடல் பண நப்பாசையில், அதிகார பேராசையில் எமது நாட்டின் கொள்கையை, எமது சுயாதீனத்தை மஹிந்த ராஜபக் ஷ விற்று விட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்று விட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ்த் தரமான அரசியலில் ஈடுபட்ட உண்மைகள் இன்று வெளியாகி வருகின்றன. ஆகவே முன்னாள் ஜனாதிபதியாகவோ, அடுத்த தலைவராகவோ 

 அல்லது இந்த நாட்டின் குடிமகனாக மஹிந்த ராஜபக் ஷ பதிலளிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்ன ணியின் தலைவர் அனுரகுமார திஸா நாயக தெரிவித்தார்.  

முன்னாள் ஜனாதிபதி

 மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளதாக நியூயோர்க டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியினரால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்

ஊழல் என்பது இன்று எமது நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு காரணியாக மாற்றம் பெற்றுள்ளது. அரசியலில் பிரதான கட்சிகள் இடையில் சர்வ சாதாரண காரணியாக கருத்தில்கொள்ளப்பட்டு வருகின்றது. சாதாரண ஊழல்கள், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் செய்த ஊழலை பற்றியெல்லாம் பெரிய விடயமாக பேசுவதும் கோடிக்கணக்கில் ஊழல் செய்த அரச தலைவர்கள் மீதான ஊழல்களை கருத்தில் கொள்ளாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அரச மாளிகையில்

 இன்று மிகப்பெரிய ஊழல் மோசடிகளால் இடம்பெற்று வருகின்றன. பிணை முறி விவகாரம் தொடர்பாக கதைக்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை கூறாது கதைக்க முடியாது. அதேபோன்று வீடமைப்பில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக கதைக்கும் போது அப்போது அமைச்சராக இருந்த குறித்த அமைச்சரின் பெயரை கூறாது கதைக்க முடியாது. அதேபோன்று இன்று நடைபெறும் இந்த விவாதத்தில் மகிந்த ராஜபக்‌ஷவின் பெயரை குறிப்பிடாது கதைக்க முடியாது. ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி வேலைத்திட்ட ஊழலால் ராஜபக் ஷவின் பெயர் உச்சரிக்கப்படாது கடந்து செல்ல முடியாது.

தற்போது நாடு கடன் மற்றும் தரகு பணத்தை வழங்கி அடிமைப்படுத்த முடியுமென்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. அன்று மத்தள விமான நிலையத்தை அமைக்கும் போது வருடாந்தம் 30,000 விமான சேவைகளை நடத்த முடியுமெனவும் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் வரை பொருட்கள் சேவைகளை நடத்த முடியுமெனவும் கூறப்பட்டது. ஆனால் பல வருடங்கள் ஆகியும் இன்னும் அது 100ஐயும் தாண்டவில்லை. பொய்களை கூறி ஆரம்பித்த வேலைத்திட்டங்கள் அனைத்துமே இன்று தோல்வியில் முடிவடைந்துள்ளன. அதேபோன்று அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சந்திரிக்கா அரசாங்கத்தில் யோசனை கொண்டு வரப்பட்ட போது அதனை சேவை வழங்கும் நிலையமாக அமைப்பது தொடர்பாகவே யோசனை இருந்தது. ஆனால் அது பொருட்கள் தொடர்பான துறைமுகமாக எப்படி மாறியது. இந்த வேலைத்திட்டம் எமது பொருளாதாரத்துடன் தொடர்புடையதா என பார்த்தால் அப்படியும் கிடையாது. இப்போது இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இலஞ்ச உடன்படிக்கைகள் அனைத்துமே அரச மாளிகளைளில் நடக்கின்றன என்பது உறுதியாகின்றது.

தற்போது இரண்டு தரப்பிலும் ஊழல்களில் சிக்கிக் கொண்டு ஒருவரை ஒருவரை பாதுகாத்துக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அமெரிக்க பத்திரிகையொன்றில் வெளியாகிய செய்தியொன்றை அடிப்படையாக கொண்டு இந்த விவாதம் நடக்கின்றது. எவ்வாறாயினும் நாங்கள் அதனை அடிப்படையாக கொண்டு விவாதிக்கவில்லை. எம்மிடம் இருக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த விவாதத்தில் தகவல்களை வெளியிடுகின்றோம். அதாவது மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சீன நிறுவனம் 7.6 மில்லியன் டொலர் நிதியை வழங்கியுள்ளமை தொடர்பாக அவரே இங்கு வந்து விளக்கமளித்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய விவாதத்தின் போது அதற்கு செவிசாய்த்து அது தொடர்பாக பதிலளிக்காது ஊழல் மோசடிகளுக்கு பின்னால் இருக்கும் மக்களின் பொது பணத்தை நாசப்படுத்தியவர்கள் குழப்ப முயற்சித்துள்ளனர்.

பஸில் ராஜபக்‌ஷவின் மனைவியுடன் தொடர்புடைய சீ.ஐ.சீ.டி நிறுவனத்தை பற்றி கூற வேண்டும். அவர்கள் எச்.எஸ்.பீ.சி வங்கியில் அமெரிக்க டொலர் மற்றும் ரூபா அடிப்படையிலான கணக்குகளை பேணி வந்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு துறையடி திட்டம் குறித்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2012 .05.21ஆம் திகதி ஒரு இலட்சத்து 57ஆயிரம் டொலர் இலங்கை ரூபாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் அது புஸ்பா ராஜபக்‌ஷ மன்றத்தின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சீ.ஐ.சீ.டியின் 95 வீதம் சீன நிறுவனத்தினுடையது. இதன்படி 35 வருடங்களின் அந்த துறைமுக திட்டத்தை அரசாங்கம் மீள பொறுப்பேற்கும் போது புஸ்பாவுக்கும் வழங்கப்பட்ட பணத்தை அரசாங்கமே மீள செலுத்த வேண்டிய நிலைமை உருவாகும்.

சைனா ஹாபர் நிறுவனம் தேர்தல் காலத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வழங்கியுள்ளது. அடிக்கடி மில்லியன் கணக்கில் காசோலைகள் மாற்றப்பட்டுள்ளன. சீனா தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறு செய்துள்ளது. அரச தலைவர்களை பணத்திற்கு வாங்கியுள்ளனர். இப்போது சில விடயங்களே வெளியாகியுள்ளன. மேலும் வெளியாகும். எமது பொருளாதார சுயாதீனத்துவம் இல்லாது போயுள்ளது. தரகு பெற்று இவர்கள் இதனை பொருளாதார சுயாதீனத்துவத்தை இல்லாது செய்துவிட்டனர். இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதன் மூலம் இந்தியா இலங்கையுடன் கோபத்தை கொண்டிருந்த நிலையில் மத்தள விமான நிலையத்தை வழங்க திட்டமிட்டுள்ளனர். தற்போது திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு கொடுக்கவும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இன்னும் தேசப் பற்றாளர் என கதைக்க முடியாது. தாய் நாடு என அவரால் கதைக்க முடியுமா?

 மஹிந்த ராஜபக் ஷவின் ஊழல் சர்வதேச ஊடகத்தில் வெளிவந்துள்ளது. என்ன காரணிக்காக வெளிவந்தது,எவ்வாறு வெளிவந்தது என்பதை விடவும் நடைபெற்ற ஊழல் குறித்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அமெரிக்கா- சீனா வின் அரசியல் எமக்கு அவசியம் இல்லை, சர்வதேச ஊடகம் எவ்வாறு செயற்படுகின்றது என்பது எமக்கு முக்கியம் இல்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷ சீனாவிடம் வாங்கிய 7.6 மில்லியன் டொலர் குறித்து விசாரிக்க வேண்டும். அவர் பாராளுமன்றத்தில் உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு உரிய பதிலை கூற வேண்டியது எதிரணியின் கடமையாகும். ஆனால் இவர்கள் இந்த விவாதத்தை தடுக்க எடுத்த முயற்சிகள் வேடிக்கையாக இருந்தன. மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்ற இவர்கள் எடுத்த முயற்சிகள் வேடிக்கையாகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைந்தன. மஹிந்த ராஜபக் ஷ இந்த கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். என்னிடம் பல கேள்விகள் உள்ளன.

மக்களின் சொத்துக்களை பாரிய அளவில் கொள்ளையடித்து ஆட்சி செய்த அரசாங்கமே இதுவரை காலமாக இருந்து வந்துள்ளது. இதில் ராஜபக் ஷ அரசாங்கத்தின் ஊழல்களை கணக்கெடுப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவர்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் இருந்த போதே பல கோடி ரூபாய்களுக்கு கோடிக்கணக்கான பெறுமதி கொண்ட காசோலை மாற்றப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன. எமது நாட்டில் சுயாதீனத்துவம் குறித்து பாரிய போராட்டம் உள்ளது. சிலர் வடக்குக்கு எதிரான தெற்கின் இனவாதம் தேசிய வாதம் என கூறுகின்றனர். ஆனால் ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கும் ஊழலுக்கு எதிராக இந்த தேசிய வாதிகள் வாய்திறப்பதில்லை. பண நப்பாசையில், அதிகார பேராசையின் எமது நாட்டின் கொள்கையை, எமது சுயாதீனத்தை மஹிந்த ராஜபக் ஷ விற்றுவிட்டார். மக்களையும் சொத்துக்களையும் சர்வதேசத்துக்கு விற்றுவிட்டு அதில் ஆட்சி செய்யும் மிகவும் கீழ் தரமான அரசியலில் ஈடுபட்டுவிட்டார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர் இந்த நாட்டின் குடிமகனாக பதில் கூற வேண்டும். முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அல்ல,எதிர்கால தலைவர் என்ற ரீதியில் அல்ல, ஒரு சாதாரண குடிமகனாக அவர் இந்த குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்க வேண்டும்.

பதில் கூற வேண்டும். ஒரு இலங்கை பிரஜை என்ற வகையில் அவர் மீதான பாரிய ஊழல் குற்றத்துக்கு பதில் கூறியாக வேண்டும். எந்தவொரு தேசிய வாதிக்கும் இந்த ஊழலை மூடி மறைக்க முடியாது. ராஜபக் ஷவின் பெயரில் அரசியல் செய்யும், ராஜபக் ஷாவின் கைக்குள் செல்லமாக அரசியல் செய்யும் நபர்களுக்கு மட்டுமே இந்த ஊழலை மறைக்க முடியும். மஹிந்த ஆட்டி வைக்கும் கை பொம்மை அரசியல் வாதிகள் இன்று அவர் அணியாக செயற்பட்டு வருகின்றனர். ஆகவே உண்மைகளை மக்களுக்கு வெளிபடுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.