Jump to content

‘சேக்ரட் கேம்ஸ்’ - வைரலாக பரவிய நிர்வாண காணொளியும், மாறவேண்டிய எண்ணமும்


Recommended Posts

‘சேக்ரட் கேம்ஸ்’ - வைரலாக பரவிய நிர்வாண காணொளியும், மாறவேண்டிய எண்ணமும்

 
 

ஒரு பெண் தன் ரவிக்கையின் பொத்தான்களை அவிழ்க்கிறார். அவளது மார்பகங்கள் வெளியே வருகின்றன. பின் தனது திறந்த மார்பகங்களுடன் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்கிறார். இந்த 40 விநாடி காணொளி வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவுகிறது. அந்த பெண் 'ஆபாசப் பட நடிகை' என்று அழைக்கப்படுகிறார்.

வைரலாக பரவிய நிர்வாண காட்சியும், மாறவேண்டிய எண்ணமும்படத்தின் காப்புரிமைNETFLIX

அந்த காட்சியின் மற்றொரு பத்து விநாடி காணொளி யு - டியூபில் பதிவேற்றப்பட்டு இருக்கிறது. அதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்து இருக்கிறார்கள்.

பின் அந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு, பின் அந்த காட்சியில் நடித்த நடிகைக்கே மீண்டும் வந்து இருக்கிறது. அதனை யாரோ ஒருவர் அந்த பெண்ணுக்கு அனுப்பி இருக்கிறார். "உங்களது காட்சி இப்படி பரவலாக வாட்ஸ் ஆப்பில் பகிரப்பட்டு இருப்பதை உங்களுக்கு தெரியபடுத்தவே உங்களுக்கு அனுப்பினேன்" என்று அவர் கூறி இருக்கிறார்.

சேக்ரட் கேம்ஸ்

அது ஆபாச வீடியோ எல்லாம் ஒன்றும் இல்லை. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான 'சேக்ரட் கேம்ஸ்' தொடரில் வரும் ஒரு காட்சி அது. அதுவும் அந்த கதையில் வரும் முக்கியமான திருப்புமுனை காட்சி அது.

நவாஸுதின் சித்திக்கும், ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டேவும் இதில் நடித்து இருக்கிறார்கள். நவாஸுதின் கலவியில் மிருகத்தனமாக நடந்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

 

 

ஆனால் மெல்ல நிலைமை மாறுகிறது. நவாஸுதின் சித்திக் ராஜ்ஸ்ரீ இடையே காதல் மலர்கிறது. இந்த நெருக்கம் வேறுமாதிரியான மெய்மறந்த இன்பமாக இருக்கிறது. அந்த கதையில் ஒரு நெகிழ்வும், உயிரோட்டமும் இருக்கிறது.

வைரலாக பரவிய நிர்வாண காட்சியும், மாறவேண்டிய எண்ணமும்படத்தின் காப்புரிமைRAJSHRI DESHPANDE

ஆனால், அந்த காட்சியிலிருந்து கதையை எடுத்துவிட்டு வெறும் ஆபாச வீடியோவாகதான் அந்த காட்சி பகிரப்பட்டு இருக்கிறது. எந்த உயிரோட்டமும் இல்லாத வெறும் விரசமாக மட்டும்தான் அந்த காட்சியை பகிர்கிறார்கள்.

இந்த ஒரு காட்சி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு பகிரப்படுவது, அதுவும் அவருக்கே அனுப்பப்படுவது ராஜ்ஸ்ரீக்கு வருத்தம் அளித்து இருக்கிறது.

ராஜ்ஸ்ரீ , "எனக்கு அவமானமாகவெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால்,மோசமாக உணர்கிறேன். நான் ஏன் அவமானமாக உணர வேண்டும்?" என்கிறார்.

அவருக்கு கதாபாத்திரம் மீது முழுமையான நம்பிக்கை இருந்து இருக்கிறது. அந்த காட்சி அந்த கதைக்கு எவ்வளவு முக்கியம் என்றும் அவர் உணர்ந்து இருக்கிறார்.

தான் எதுவும் தவறாக செய்யவில்லை என்று அவர் ஆழமாக நம்புகிறார். அந்த காட்சி பெண்களை பண்டமாக சித்தரிக்கவில்லை என்கிறார்.

கேமிரா அந்த பெண்ணின் அங்கத்தை மேயவில்லை. இரட்டை அர்த்த விரச வார்த்தைகள் அந்த பாடலில் இடம் பெறவில்லை. பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வண்ணம் அந்த பெண் தவறாக காட்டப்படவில்லை. ஆண் பெண் இருவருக்கு இடையிலான காதல்தான் அந்த காட்சியில் இடம் பெற்று இருக்கிறது.

வைரலாக பரவிய நிர்வாண காட்சியும், மாறவேண்டிய எண்ணமும்படத்தின் காப்புரிமைNETFLIX

"என்னுடைய நோக்கம் சரி. நான் எதுவும் தவறு செய்யவில்லை"என்கிறார் ராஜ்ஸ்ரீ.

ஆனால் ராஜ்ஸ்ரீ கவலையாக இருக்கிறார். அந்த காட்சி ஆபாசமாக அணுகப்படுவதால் அவர் கவலைக் கொள்ளவில்லை, இதை ஓரளவுக்கு உணர்ந்தே இருந்தார். தவறான நோக்கத்துடன் மட்டும் வெட்டி ஒட்டப்பட்ட அந்தக் காட்சி வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிரப்படுவது அவருக்கு கவலை அளிக்கிறது.

இந்த நாட்களில் பல விஷயங்கள் வைரலாகிறது. ஒரு பெண் கண் அடிப்பது கூட இந்நாட்களில் வைரல் ஆகி விடுகின்றது.

ஆனால், இந்த விஷயம் வேறுவிதமானது. உயிரோட்டமான ஒரு காட்சியில் கதையின் சாரத்தை எல்லாம் எடுத்துவிட்டு பாலுணர்ச்சிக்காக மட்டும் சிறு சிறு க்ளிப்புகளாக இந்த காட்சி பகிரப்படுகிறது.

எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல்

"உங்களுக்கு இதே மாதிரி காட்சி வந்தால் நீங்கள் யோசிக்க வேண்டும். தொழில்நுட்பம் ஒரு ஆயுதம், இதனை கொண்டு ஒருவரை அழிக்கவும் செய்யலாம் அல்லது காக்கவும் செய்யலாம்" என்கிறார் ராஜ்ஸ்ரீ.

திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் சில காலமாக பெண்களின் வெற்றுடல்களை காட்டுகின்றன.

வைரலாக பரவிய நிர்வாண காட்சியும், மாறவேண்டிய எண்ணமும்படத்தின் காப்புரிமைNETFLIX

சில சமயம் அந்த மாதிரியான காட்சிகள் கதைக்கு அவசியமாக தேவைப்படுகின்றன. சில சமயம் வலிந்து திணிக்கப்படுகின்றன. ஆனால், எப்போதும் அது பரவலாக பார்க்கப்படுகிறது.

கதையுடன் எந்த தொடர்பும் இல்லாமல், ஒரு முழு காட்சியின் சில க்ளிப்புகள் மட்டும் வெட்டப்பட்டு ஒரு ஆபாச வீடியோவாக இணையத்தில் பகிரப்படுகிறது, பார்க்கப்படுகிறது.

இதில் என்ன முரண் என்றால், இந்த காட்சியை பார்ப்பவர்கள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படுவது இல்லை.

ஆனால், இந்தக் காட்சியை பார்ப்பவர்கள், பார்ப்பதன் மூலம் சந்தோஷமடைபவர்கள், எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பகிர்பவர்கள், அந்த காட்சியில் வரும் பெண்ணை ஆபாச நடிகை என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.

ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே இதற்காக அமைதியாக இருக்கப் போவதில்லை. வெளிப்படையாக இது குறித்த உரையாடலை நடத்துகிறார்.

"மாற்றம் குறித்த நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், இது குறித்து பேசுவது மிக முக்கியம். இது குறித்த உரையாடலினால் ஐந்து பேர் தங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றிக் கொண்டால் கூட அது பெரும் வெற்றிதான்" என்கிறார் அவர்.

அவர் வெளிப்படையாக உரையாடலை நடத்த தொடங்கிவிட்டார். அதனால் நான் எழுதியும் விட்டேன். நீங்கள் படிக்கவும் செய்துவிட்டீர்கள். பெண்கள் குறித்த காட்சிகளை வெட்டி ஒட்டி ஆபாசமாக சித்தரிப்பவர்கள், அதில் குதூகலம் அடைபவர்கள் இதனால் கொஞ்சமேனும் யோசிக்க செய்யலாம்.

https://www.bbc.com/tamil/india-44879318

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.