Jump to content

2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்!


Recommended Posts

2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்!

 

``2019 உலகக்கோப்பை வரை நான் சர்வைவ் ஆவேன் என நினைக்கிறீர்களா?'' என்று தோனி மீண்டும் கேட்க, ``ஆமாம்... நிச்சயமாக'' என்றார் பத்திரிகையாளர். ``நீங்களே சொல்லிவிட்டீர்கள். நான் இனி எதுவும் சொல்வதற்கில்லை'' என்று ஓய்வுபற்றி எழுந்த கேள்வியை மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு, ஓய்வுபற்றிய கேள்விகளுக்கு அப்போது முற்றுப்புள்ளிவைத்தார் தோனி. ஆனால், கடந்த ஓராண்டாகவே தோனியின் பர்ஃபாமென்ஸ் கேள்விக்குள்ளாகிவருகிறது.

2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்!
 

``2019 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் தோனி தன்னுடைய ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். அவர் இன்னிங்ஸை பில்ட் செய்ய வேண்டும். ஆனால், கடந்த ஓராண்டாகவே அவர் இதைச் சரிவரச் செய்யவில்லை'' - இந்திய அணியில் தோனியின் இருப்பு குறித்து இப்படிச் சொல்லியிருக்கிறார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. 

2016 மும்பையில் நடைபெற்ற 20/20 உலகக்கோப்பை  அரை இறுதிப்போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தது இந்தியா. கேப்டன் தோனி ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் ``இனி தொடர்ந்து விளையாட விரும்புகிறீர்களா?'' எனக் கேட்க, சிரித்துக்கொண்டே அந்தப் பத்திரிகையாளரை தன் அருகில் உள்ள இருக்கையில் உட்காரவைத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். ``நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா" என தோனி கேட்க, பத்திரிகையாளர் ``இல்லை... ஓய்வுப்பற்றி தெரிந்துகொள்ள கேட்டேன்'' என்றார். ``இந்தக் கேள்வி இந்தியப் பத்திரிகையாளர்களிடம் இருந்துதான் எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் கேட்டுவிட்டீர்கள்'' என்றவர், ``நான் ஓடுவதைப் பார்த்தீர்களா... நீங்கள் என்னை அன்ஃபிட் என நினைக்கிறீர்களா'' எனக் கேட்க, ``இல்லை'' என்று மறுத்தார் பத்திரிகையாளர். ``2019 உலகக்கோப்பை வரை நான் சர்வைவ் ஆவேன் என நினைக்கிறீர்களா?'' என்று தோனி மீண்டும் கேட்க, ``ஆமாம்... நிச்சயமாக'' என்றார் பத்திரிகையாளர். ``நீங்களே சொல்லிவிட்டீர்கள். நான் இனி எதுவும் சொல்வதற்கில்லை'' என்று ஓய்வுபற்றி எழுந்த கேள்வியை மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு, ஓய்வுபற்றிய கேள்விகளுக்கு அப்போது முற்றுப்புள்ளிவைத்தார் தோனி.

ஆனால், 2019 உலகக்கோப்பையில் தோனி விளையாடுவாரா என்கிற கேள்விகள் இப்போது மீண்டும் எழ ஆரம்பித்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் மிகவும் பொறுமையாக விளையாடினார் என்பதனால் மட்டுமே இந்தக் கேள்விகள் எழவில்லை. கடந்த ஓராண்டாகவே இவரின் பர்ஃபாமென்ஸ் கேள்விக்குள்ளாகிவருகிறது.  

 

 

2019 உலகக்கோப்பையில் தோனி விளையாட வேண்டுமா... ஏன் விளையாட வேண்டும்.... ஏன் விளையாடக் கூடாது?

 

dhoni

தோனி ஏன் விளையாட வேண்டும்!

1. 2017 ஜூலை முதல் 2018 ஜூலை வரை தோனியின் பர்ஃபாமென்ஸை கணக்கில் எடுத்துக்கொள்வோம். கடந்த ஒரு வருடத்தில் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தோனி. இதில் மொத்தமாக 604 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 79 ரன்கள். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் 88 பந்துகளில் 79 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார் தோனி. கடந்த ஒரு வருடத்தில் 4 அரை சதங்கள் அடித்திருக்கிறார். 8 போட்டிகளில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். நான்காவது, ஐந்தாவது டவுனில் வந்து இவ்வளவு ரன்கள் அடிப்பது என்பதே சாதனைதான். அதுவும் பல போட்டிகளில் 30-40 ரன்கள் என முக்கியமான நேரத்தில் ரன்கள் சேர்த்திருக்கிறார். அதனால் 2019 உலகக்கோப்பை அணியில் ஆறாவது டவுன் பேட்ஸ்மேனாக தோனி இருப்பது அணிக்கு பலமாகவே இருக்கும்.  

 

 

2. தற்போதைய இந்திய அணியில் சீனியர் வீரர் தோனிதான். 2011 உலகக்கோப்பையை வென்ற அனுபவம், 2015 உலகக்கோப்பையில் அரை இறுதிவரை அழைத்துச்சென்ற அனுபவம் எனத் தற்போதைய கேப்டன் விராட் கோலியை வழிநடத்த அணிக்குள் தோனியைத் தவிர வேறு ஆள் இல்லை. முன்னாள் கேப்டனாகவும், சீனியர் வீரராகவும் ஃபீல்டிங் பொசிஷன்ஸ், பெளலிங் ரொட்டேஷன், இக்கட்டான நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் என எல்லாவகையிலும் கோலிக்கு ஃபீல்டில் உதவியாக நிற்கக்கூடிய அத்தனை தகுதிகளும் தோனிக்கு மட்டுமே இருக்கிறது. 

 

dhoni

 

3. தோனியின் பேட்டிங் வேகம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின் ஸ்டம்ப்பிங் வேகமும், எகிறி துடித்துப் பிடிக்கும் கேட்ச்களின்  வேகமும் ஒரு மில்லி செகண்ட்கூட குறையவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வின்சியை அவர் ஒற்றைக்கையால் ரன் அவுட் செய்த வேகமே தோனியின் பர்ஃபாமென்ஸுக்கு சமீபத்திய நல் உதாரணம். இன்றுவரை இந்தியாவின் பெஸ்ட் விக்கெட் கீப்பர் தோனிதான். இதை யாரும் மறுக்கமுடியாது. அதேபோல ஸ்டம்ப்புக்குப் பின்னாலிருந்து எதை ரிவியூ கேட்கவேண்டும், எதைக் கேட்கவேண்டாம் என்பதைச் சரியாகக் கணித்து சொல்வதிலும் தோனியை மிஞ்ச ஆள் இல்லை. டிசிஷன் ரிவியூ சிஸ்டம் என்பதை தோனி ரிவியூ சிஸ்டம் என்று சொல்லும் அளவுக்கு தோனியின் கணிப்புகள் என்றுமே பொய்யானதில்லை. இது கோலிக்கு மிகப்பெரிய ப்ளஸ். 

4. கிரிக்கெட் வாழ்க்கையில் தனது கடைசி வருடத்தில் இருக்கிறோம் என்பதை தோனியும் உணர்ந்தே இருக்கிறார். இன்னும் ஒரு வருடத்தில் 2019 உலகக்கோப்பை முடிந்திருக்கும். அதுவரை தன்னை ஃபிட்டாக வைத்துக்கொள்ளத்தான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தோனி. யோ-யோ டெஸ்ட் உட்பட அத்தனை ஃபிட்னஸ் தேர்வுகளிலும் தோனி ஆல் பாஸ்தான். தோனிக்கு ஃபிட்னஸ் தடையாக இருக்காது என நம்பலாம்.

5. இதுவரை 321 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தோனி. நான்காவது அல்லது ஐந்தாவது டவுனில் விளையாட வந்து 10,000 ரன்களுக்கும் மேல் ஒருநாள் போட்டிகளில் அடித்திருக்கிறார். இந்தியாவின் மிகச்சிறந்த ஃபினிஷர் தோனி எனக் கொண்டாடப்பட்டவர். இங்கிலாந்தில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வேகமாக ஆடவில்லை என்பதற்காக அவரைக் கடுமையாக விமர்சிப்பது என்பது சரியான முடிவாக இருக்காது. உலகக்கோப்பை வென்று தந்த கேப்டனுக்கு பிரஷரைக் குறைத்து அவரை ஆட்டத்தில் கவனம் செலுத்தவைக்கவேண்டும்.

 

dhoni

2019 உலகக்கோப்பையில் தோனி ஏன் விளையாடக் கூடாது?

1. மேனேஜ்மென்ட் மந்திரங்களில் தோனி சொன்ன முக்கியமான ஒன்று `ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்' தியரி.  2011 உலகக்கோப்பை முடிந்து அந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி. சச்சின், ஷேவாக், கம்பீர் என உலகக்கோப்பையில் விளையாடிய அத்தனை சீனியர்களும் அந்த அணியில் இருந்தனர். ஆனால், 2015 ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையை காரணம் காட்டி, அதற்கு ஏற்றாற்போல் அணியைத் தயார் செய்ய விரும்புகிறோம் என்றார் தோனி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த சீரிஸில் சச்சின், ஷேவாக், கம்பீர் என மூவரையுமே ரொட்டேஷன் பாலிசி, ஹார்ஸஸ் ஃபார் கோர்சஸ் தியரிப்படி விளையாடவைப்பதாக குறிப்பிட்டார். அதாவது மூன்று சீனியர் பேட்ஸ்மேன்களுமே ஒரே மேட்சில் விளையாட மாட்டார்கள். பிட்ச்சின் தன்மையைப் பொறுத்து ஒரு போட்டியில் சச்சின், ஒரு போட்டியில் ஷேவாக் என மாற்றப்பட்டார்கள். 100 சதங்கள் அடித்த, உலகிலேயே அதிக ரன்கள் குவித்த சச்சினை உட்காரவைப்பதற்கு தோனி சொன்ன காரணம் 2015 உலகக்கோப்பை. அதேபோலத்தான் தோனிக்கு 2019 உலகக்கோப்பை முன் வந்து நிற்கிறது. 2019 உலகக்கோப்பைக்குத் தகுதியான முழுமையான அணி இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தால், அவர் 2012-ல் எடுத்தே அதே பரீட்சார்த்த முறைகளை கோலி எடுப்பதற்கும் முழு  ஒத்துழைப்பைத் தரவேண்டும். 

2. 2019 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் முகமே தோனிதான். அதனால் அவர் கட்டாயம் சென்னை விளையாடும் அத்தனை ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட வேண்டியிருக்கும். அதில் அவருடைய பர்ஃபாமென்ஸ் மிகவும் கவனிக்கப்படும். அதில் சொதப்பினால் அவர் பாசிட்டிவ் எனர்ஜியை இழக்க நேரிடும். அதேசமயம் இரண்டு மாதம் தொடர்ந்து விளையாடுவது என்பது 38 வயதில் அவருக்கு ஓவர் பிரஷராகவே இருக்கும். ஐபிஎல் முக்கியமா, உலகக்கோப்பை முக்கியமா என்று யோசிக்கவோ, உலகக்கோப்பைக்காக ஐபிஎல்-லை விட்டுத்தரும் இடத்திலோ தோனி இல்லை என்பதே உண்மை. 

 

தோனி

3. கடந்த ஓர் ஆண்டாகவே தோனியின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்துவிட்டது. கடந்த வாரம் லார்ட்ஸ் மைதானத்தில் ஏன் அப்படி விளையாடினார் என்று தோனியாலேயே இன்றுவரை காரணம் சொல்லமுடியவில்லை. இந்த ஆண்டில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஸ்பின்னர்களை சிறப்பாகச் சமாளிக்கக்கூடிய அவர், இங்கிலாந்தில் மொயின் அலி, ரஷித்தின் பந்துகளை எதிர்கொண்ட விதம் பல கேள்விகளை எழுப்புகிறது. அடுத்த ஆண்டு இதே இங்கிலாந்து ஆடுகளங்களில்தான் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த ஸ்லோ ஆட்டம் நிச்சயம் அவருக்குக் கைகொடுக்காது. 

4. இந்தியாவின் டாப் 4 பேட்ஸ்மேன்களில் எந்த சர்ச்சையும் இல்லை. ஐந்து, ஆறாவது இடங்கள்தாம் இன்னும் செட் ஆகாமல் இருக்கின்றன. தோனிக்கான சரியான ரீப்ளேஸ்மென்ட்டாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். ஃபிட்டாக இருக்கிறார், ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்து கண்டிஷனில் விளையாட சரியான பேட்ஸ்மேனும்கூட. அதனால் தோனி சொன்ன ரொட்டேஷன் பாலிசிபடியே இனி அடுத்துவரும் ஒருநாள் போட்டிகளில் தோனியையும், தினேஷ் கார்த்திக்கையும் மாற்றி மாற்றி கோலி பயன்படுத்தலாம். இந்த பர்ஃபாமென்ஸின்படி 2019 உலகக்கோப்பை அணியில் தோனி நீடிக்கவேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டும்.

5. ரிஷப் பன்ட், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மூன்றுபேர் வரிசையில் காத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வழிவிடவேண்டிய பொறுப்பு தோனிக்கு இருக்கிறது. ரிஷப் பன்ட் அல்லது கே.எல் ராகுலுக்குக் கூடுதல் பொறுப்பாக விக்கெட் கீப்பர் இடத்தைக் கொடுக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயரை போன்ற சாலிட் பேட்ஸ்மேன்களை ஐந்தாவது டவுன் பேட்ஸ்மேனாக முயற்சி செய்து பார்க்கலாம்.

 இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய சீரிஸ் தோனிக்கு மிகப்பெரிய சோதனையாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளிலிருந்து முறையாக ஓய்வை அறிவித்து வெளியேறவில்லை என்றாலும் சரியான நேரத்தில் முடிவெடுத்துவிட்டார் தோனி. ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வை அறிவிக்கவேண்டிய காலம் இப்போது நெருங்கிவிட்டது. 

விமர்சனங்களுக்குத் தன் பர்ஃபாமென்ஸால் பதில் சொல்பவர் தோனி... இந்தமுறையும் பர்ஃபாமென்ஸால் பதில் சொல்வார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்!

https://www.vikatan.com/news/sports/131407-2019-worlcup-why-dhoni-should-play-why-dhoni-shouldnt-play-the-worldcup.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.