Jump to content

கடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்


Recommended Posts

கடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்

 
 

புவியின் அதிகாரபூர்வ வரலாற்றில் ஓர் அத்தியாயம் கூடியுள்ளது. நாம் தற்போது அந்த அந்தியாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பூமிபடத்தின் காப்புரிமைBARCROFT

கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியலாளர்கள்.

அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நாகரிகங்கள் அழிந்துபோன இந்தக் காலகட்டத்துக்கு 'மேகாலயன் யுகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் வளரும் புற்றுப் பாறைகளின் அடிப்படையில் இந்த யுகத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

காலவரிசையை அடிப்படையிலான சர்வதேச பாறைப்படிவியல் விளக்கப்படம்மும் (International Chronostratigraphic Chart) அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் புவியியல் வரலாற்றை காலவரிசைப் படி அந்த புகழ்பெற்ற விளக்கப்படம் பட்டியலிடுகிறது.

இந்த யுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆய்வுக் கட்டுரையில் 'மேகாலய யுகம்' பற்றிய முன்மொழிவு இருந்தாலும், இது குறித்து போதிய விவாதங்கள் நடத்தப்படவில்லை என்று சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

சுமார் 4.6 கோடி ஆண்டுகள் நீளும் பூமியின் வரலாற்றை காலத் தொகுதிகளாக அறிவியலாளர்கள் பகுக்கின்றனர்.

ஒவ்வொரு பகுப்பும், கண்டங்கள் பிரிந்தது, கால நிலையில் பெரும் மாற்றங்கள் உண்டானது, புதிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்கள் உருவானது என ஒவ்வொரு முக்கிய அறிவியல் நிகழ்வுடன் தொடர்புடையது.

மேகாலயன் யுகம்படத்தின் காப்புரிமைIUGS

நாம் தற்போது இருப்பது ஹோலோசீன் சகாப்தத்தில். (Holocene Epoch) பனி யுகம் முடிந்து வெப்பம் பரவத் தொடங்கிய கடைசி 11,700 ஆண்டுகளின் புவியியல் வரலாற்றை இந்த யுகம் உள்ளடக்கியது. இந்த ஹோலோசீன் சகாப்தத்தையும் பல கட்டங்களாகப் பிரிக்க முடியும் என்கிறது புவியியல் அடிப்படையிலான காலங்களை வரையறுக்கும் அதிகாரபூர்வ அமைப்பான சர்வதேச பாறைப்படிவியல் ஆணையம். (International Commission on Stratigraphy)

ஹோலோசீன் சகாப்தத்தையும் ஆரம்ப, மத்திய மற்றும் இறுதிக் காலகட்டங்களாகப் பிரிக்க முடியும் என்கிறது இந்த அமைப்பு.

இந்தக் காலகட்டங்கள் முக்கிய பருவ நிலை மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன. இவற்றில் மிகவும் சமீபத்தியதான மேகாலயன் யுகம் தற்போதுள்ள காலத்துக்கு 4,200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. அப்போது சுமார் 200 ஆண்டுகள் நீடித்த மிகவும் மோசமான வறட்சி எகிப்து, கிரேக்கம், சிரியா, பாலத்தீனம், மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் யாங்ட்சி நதிப் பள்ளத்தாக்கு நாகரிகம் ஆகியவற்றில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.

பெருங்கடல் நீரோட்டத்தின் திசை மற்றும் வளி மண்டலத்தின் காற்று வீசும் திசையில் உண்டான மாற்றங்களால் இந்த வறட்சி உண்டாகியுள்ளது.

மேகாலயன் யுகம்படத்தின் காப்புரிமைIUGS Image captionமேகாலயன் யுகத்தின் தொடக்கத்தைக் காட்டும் படம்

பருவ நிலை மாற்றத்தால் அதை ஒத்து பண்பாட்டு வழக்கங்கள் உண்டான காலகட்டத்துடன் ஒத்திசைந்து இருப்பதால் மேகாலயன் யுகத்துக்கென்று ஒரு தனித்துவம் இருப்பதாக லாங் பீச் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டேன்லி ஃபின்னி கூறுகிறார். சர்வதேச புவிசார் அறிவியல் அமைப்பின் பொதுச் செயலராக அவர் உள்ளார்.

ஹோலோசீன் சகாப்தத்தின் மத்திய பகுதியான நார்த்கிரிப்பியன் (Northgrippian) யுகம், மேகாலயன் யுகம் தொடங்குவதற்கு முந்தைய 8,300 ஆண்டுகளை உள்ளடக்கியது. உருகிவரும் பனியால் கடல் மட்டம் அதிகரித்து, பெருங்கடலின் நீரோட்டத்தின் திசை இந்தக் காலகட்டத்தில் மாற்றங்களைச் சந்தித்தது.

 

 

ஹோலோசீன் சகாப்தத்தின் மிகவும் பழைய காலகட்டமான கிரீன்லேண்டியன் (Greenlandian) யுகம் பனி யுகம் முடிவுக்கு வந்தபின் தொடங்கியது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை அறிவியலாளர்கள் தனி யுகமாகக் கருத வேண்டுமென்றால் அக்காலகட்டத்தில் புவி முழுமைக்குமான மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மாற்றம் பாறை அல்லது வண்டல் மண்ணுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரீத்தேசியக் காலத்திலிருந்து (Cretaceous) பேலியோஜீன் காலத்துக்கு (Palaeogene) மாற்றம் நிகழ்ந்தபோது இரிடியம் படிமங்கள் புவி முழுதும் பரவி இருந்தது. டைனோசர்களை இந்த பூமியில் இருந்து அழியக் காரணமான விண்கல் மோதலால், அதிலிருந்த இரிடியம் பூமி முழுதும் பரவியது.

சித்தரிப்புப் படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமேகாலயா

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள மாம்லு குகையில் வளர்ந்துள்ள புற்றுப் பாறைகளில் உள்ள ஆக்சிஜன் அணுக்கள் அல்லது அதன் ஓரிடத்தான்களில் (isotopes) கண்டறியப்பட்டுள்ள குவியலில் இந்த மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் மழைப் பொழிவு அந்த மாற்றம் நிகழ்ந்த சமயத்தில் குறைந்துள்ளது.

அந்த மாற்றம் நிகழ்ந்தபோது பருவ மழை பொழிவது 20% - 30% வரை குறைந்துள்ளது என்கிறார் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மைக் வாக்கர் கூறுகிறார்.

"மிகவும் முக்கியமான இரண்டு புவிசார் மாற்றங்கள் 4100 மற்றும் 4300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. எனவே இரண்டுக்கும் சராசரியாக 4200 ஆண்டுகளுக்கு முன்பு மேகாலய யுகத்தின் தொடக்கத்தை நிர்ணயித்தோம்," என்கிறார் அவர். இந்த காலகட்டத்தை தனி யுகமாக்க முன்மொழிந்த ஹோலோசீன் அறிவியலாளர்கள் குழுவுக்கு இவர் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/science-44893358

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.