Jump to content

அரச தலை­வர் தேர்­த­லும் -சிறு­பான்­மை­யின மக்­க­ளும்!!


Recommended Posts

அரச தலை­வர் தேர்­த­லும் -சிறு­பான்­மை­யின மக்­க­ளும்!!

 

 

ranil-maithree.jpg

 
 
 

எதிர்­வ­ர­வுள்ள அரச தலை­வர் தேர்­த­லில் இம்­முறை சிறு­ பான்­மை­யின மக்­கள் அக்­கறை காட்­டு­வார்­க­ளென எதிர்­பார்க்­க­மு­டி­யாது.
கடந்த தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வு­ககு ஆத­ர­வாக வாக்­க­ளித்து அவரை வெற்­றிப் பாதைக்கு இட்­டுச் சென்­ற­வர்­கள் சிறு­பான்­மை­யின மக்­களே என்­பதை எவ­ருமே மறந்­தி­ருக்க மாட்­டார்­கள். ஆனால் இம்­முறை அவ்­வா­றா­ன­தொரு நிலை காணப்­ப­ட­வில்லை.

அடுத்த அரச தலைவர்
தேர்தல் வேட்பாளர்கள் குறித்து
இதுவரை முடிவு இல்லை
மகிந்த அணி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் அவ­ரது குடும்­பத்­தைச் சேர்ந்த ஒரு­வரே தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவது உறு­தி­யாகி விட்­டது. ஆனால் அந்த வேட்­பா­ளரை எதிர்த்­துப் போட்­டி­யி­டு­வோ­ரின் பெயர் விவ­ரங்­கள் இன்­ன­மும் வெளி­யா­க­வில்லை.

ஐ.தே.கட்சி தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­விட்ட போதி­லும், அதன் வேட்­பா­ளர்­தொ­டர்­பா­கத்­தெ­ரி­ய­வ­ர­வில்லை. ஐ.தே.கவின் தலை­வ­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க கள­மி­றங்­க­வி­ருப்­ப­தாக ஆரம்­பத்­தில் தெரி­விக்­கப்­பட்ட போதி­லும், தற்­போ­து­வ­ரை­அது உறு­தி­செய்­யப்­ப­ட­வில்லை. சில­வேளை வேறு எவ­ரா­வது களத்­தில் இறங்­கக்­கூ­டிய சூழ்­நி­லை­யும் உரு­வா­கி­வி­டக்­கூ­டு­மென்­பதையும் ­­­மறுத்­து­ரைக்க முடி­யாது.

 

மைத்­தி­ரி­பால சிறி­சேன இரண்­டா­வது தட­வை­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்பில் கள­மி­றங்­கு­வாரா? என்­ப­தைக் கூற­மு­டி­ய­ வில்லை. அவர் போட்­டி­யிட்­டா­லும் வெற்­றி­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு மிகக் குறை­வா­கவே உள்­ளது. ஏனென்­றால், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த பலர் மகிந்த அணி­யு­டன் இணைந்­து­விட்­ட­னர். ஆகவே மகிந்த அணி பல­மான நிலை­யில் காணப்­ப­ டு­கின்­றது.

சில­வேளை சிறி­சே­னா­வும் மகிந்த அணி­யு­டன் இணைந்து கொண்­டா­லும்­கூட அதில் ஆச்­ச­ரி­யப்­பட எது­வும் இருக்­காது. இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில், சிறு­பான்­மை­யின மக்­கள் பாது­காப்­பில்­லாத நிலை­யி­லேயே வாழ்ந்து வரு­கின்­ற­னர். பெரும்­பான்­மை­யி­னர் இட்­டதே சட்­டம் என்ற நிலை­யில் சிறு­பான்­மை­யி­ன­ரால் எது­வுமே செய்­ய­மு­டி­ய­வில்லை. அவர்­கள் வாய் திறந்து எதை­யா­வது கூறி­னா­லும், அதைப் பெரி­தாக்­கிப் பிரச்­சி­னை­யைக் கிளப்­பு­வதே பெரும்­பான்­மை­யி­ன­ரின் வாடிக்­கை­யாக மாறி­விட்­டது.

சமீப நாள்க­ளாக முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரான விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தொடர்­பான செய்­தி­கள் ஊட­கங்­க­ளில் முக்­கி­யத்­து­வம் பெற்று விளங்­கு­கின்­றன. அவர் பகி­ரங்க மேடை­யொன்­றில் தப்­பித்­த­வ­றிக் கூறிய வார்த்­தை­கள் அவ­ருக்கு வினை­யாக மாறி­விட்­டன. தமி­ழர்­கள் எதைக் கூறினாலுமே துள்­ளிக் குதிக்­கின்ற தென்­ப­குதி இன­வா­தி­கள்,விடு­த­லைப் புலி­க­ளின் நாமத்தை உச்­ச­ரிக்­கும்­போது சும்மா இருப்­பார்­களா? விஜ­ய­கலா மீது கண்­ட­னக் கணை­க­ளைத் தொடுத்து அவரை ஒருகை பார்த்­து­விட்­டார்­கள்.

இதைப் பொறுக்­க­மு­டி­யாத விஜ­ய­கலா தனது அமைச்­சர் பத­வி­யையே துறந்­து­விட்­டார். தற்­போது அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­விக்­கும் வேட்டு வைக்­கின்ற முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. அதற்­குப் பின்­ன­ரும் அவரை நிம்­ம­தி­யாக இருக்­க­வி­டு­வார்­க­ளென நம்­ப­மு­டி­யாது. சிறு­பான்­மை­யி­ ன­ரின் மதிப்பு இந்த நிலை­யில்தான் இங்கு காணப்­ப­டு­கின்­றது.

அரச தலைவர் தேர்தலில்
இம்முறை தமிழ்மக்கள்
ஆர்வம் காட்ட மாட்டார்கள்
அரச தலை­வர் தேர்­த­லில் இம்­முறை தமிழ் மக்­கள் அக்­கறை காட்­டு­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது. அவர்­கள் எதிர்­கொண்ட ஏமாற்­றங்­கள் அர­சி­யல்­வா­தி­கள் மீது வெறுப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது.கடந்த தடவை அவர்­கள் நம்­பிக்­கை­யு­டன் வாக்­க­ளித்த மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்­களை முற்­றா­கவே ஏமாற்­றி­விட்­டார். தமி­ழர்­க­ளின் வாக்­கு­க­ளால் தாம் பத­விக்கு வந்­த­து­கூட அவ­ரது நினைப்­பில் வரு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. அவ்­வாறு வந்­தி­ருந்­தால், இனப்­பி­ரச்­சினை மட்­டு­மல்­லாது தமி­ழர்­க­ளின் ஏனைய பிரச்­சி­னை­க­ளுக்­குமே தீர்­வைக் கண்­டி­ருப்­பார். ஆகவே தேர்­த­லில் அவர் போட்­டி­யிட்­டால் தமி­ழர்­கள் அவ­ருக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்­கள்.

வழமைபோன்று இம்முறையும்
ஆட்சியாளர்களால் தமிழர்கள்
ஏமாற்றப்பட்டனர்
ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் இணைந்து நல்­லாட்சி என்ற பெய­ரில் அர­சொன்றை அமைத்­துக்­கொண்­டது. ஆனால் தமி­ழர்­க­ளுக்கு எதை­யுமே செய்­ய­வில்லை. தலைமை அமைச்­சர் பொறுப்பை வகிக்­கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமி­ழர்­க­ளின் விட­யத்­தில் பாரா­மு­க­மா­கவே நடந்து கொள்­கின்­றார். அண்­மை­யில் கிளி­நொச்­சிக்கு அவர் வந்­த­போது இதை அவ­தா­னிக்க முடிந்­தது. ஆகவே ரணி­லுக்­கும் தமி­ழர்­க­ளின் வாக்­கு­கள் கிடைக்­கு­மென எதிர்­பார்க்க முடி­யாது.இறு­தி­யாக மகிந்த பக்­கம் பார்­வை­யைத் திருப்­பி­னால் அங்­கும் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான சக்­தி­கள் இருப்­ப­தைக் காண­மு­டி­கின்­றது.

விமல்­வீ­ர­ வன்ச, தினேஸ் கு­ண­வர்த்­தன, இடது சாரி­க­ளெ­னத் தம்­மைக் கூறிக் கொள்­ளும் திஸ்ஸ விதா­ரண போன்­ற­வர்­கள் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான கொள்­கை­க­ளைக் கொண்­ட­வர்­கள். இவர்­கள் மகிந்­த­வுக்கு எப்­போ­துமே தவ­றான ஆலோ­ச­னை­களை வழங்கி வரு­கின்­றார்­கள். அதை­விட ஏரா­ள­மான இன­வா­தி­க­ளும் அந்­தப் பக்­கம் உள்­ள­தால், மகிந்த தரப்­பி­லி­ருந்து பத­விக்கு வரு­ப­வர்­கள் தமி­ழர்­க­ளுக்­குச் சாத­க­மாக நடந்து கொள்­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது. மேலும் இறு­திப்­போ­ரின்­போது எதிர்­கொண்ட அவ­லங்­க­ளை­யும் தமி­ழர்­கள் மறந்­து­வி­ட­வில்லை. இத­னால் மகிந்த தரப்­புக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு அவர்­கள் தயங்­கவே செய்­வார்­கள்.

முஸ்­லீம் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் கட்சி ரீதி­யாக அவர்­கள் பிரிந்து காணப்­ப­டு­கின்­ற­னர். அவர்­க­ளது தலை­மை­கள் வெவ்­வேறு திக்­கு­க­ளில் பய­ணிப்­ப­தை­யும் காண­மு­டி­கின்­றது. இத­னால் இவர்­க­ளின் வாக்­கு­கள் எந்த அணிக்­குப் போய்ச்­சே­ரும் என்­பதை இப்­போது எதிர்வு கூற­மு­டி­யாது.

மலை­ய­கத் தமிழ் மக்­க­ளும் ஒரே அர­சி­யல் தலை­மை­யின் கீழ் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. அவர்­கள் அர­சி­யல் ரீதி­யில் பிள­வு­பட்­டுக் காணப்­ப­டு­கின்­றார்­கள். அவர்­க­ளது வாக்­கு­க­ளும் பல­த­ரப்­புக்­க­ளுக்­கும் பிரிந்து அளிக்­கப்­ப­டு­மென்­ப­தைக் கூற­மு­டி­யும். ஆகவே கடந்த தடவை போன்று சிறு­பான்­மை­யின மக்­கள் அரச தலை­வர் தேர்­த­லில் அக்­கறை காட்­டு­வார்­க­ளென எதிர்­பார்க்க முடி­யாது

http://newuthayan.com/story/19/அரச-தலை­வர்-தேர்­த­லும்-சிறு­பான்­மை­யின-மக்­க­ளும்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.