Jump to content

பதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்


Recommended Posts

பதநீர் விற்பனையை மேம்படுத்திய புலம்பெயர் தமிழர்

 
 
IMG-5bd50e25a9ec4cd3475f2c92afa083b5-V.jpg




இலங்கையில் கடுமையாக போர் இடம்பெற்ற சமயத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி நாட்டைவிட்டு வெளியேறிய புலம்பெயர் தமிழர்களில் மிகச் சொற்பமானோருக்கு மட்டும் தான் எம் தேசத்தின் மீதான கரிசனை இருக்கிறது. இந்த மாத இதழில் நாங்கள் பார்க்க இருப்பதும், புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் தேசத்தின் மீதான கரிசனை, மக்கள் மீதான ஈடுபாடும் அக்கறையும் எள்ளளவும் குறையாத ஒரு நல்ல மனிதத்தை பற்றித் தான். அழகாக பேசுகிறார் சண்முகநாதன் சுகந்தன்.

நாட்டு சூழ்நிலைகள் மோசமடைய 1989 ஆம் ஆண்டு இங்கிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து இருந்தேன். பின் 2014 ஆம் ஆண்டு பிள்ளைகளை கூட்டி வந்து ஊரை, உறவுகளை காட்ட வேண்டும் என்கிற காரணத்தால் தான் இங்கு வந்தேன். இங்கே பிஞ்சு வாழைக்குலையை கூட ஒரு ஆபத்தான மருந்தை அடித்து ஒன்றிரண்டு நாட்களுக்குள் பழுக்க வைத்து விடுகிறார்கள். உயிருக்கே ஆபத்தான இந்த முறைகள் தான் இப்போது எம் தேசத்தில் பெருகியுள்ளன.  இயற்கையிலிருந்து நாம் வேறுபட்டு நாம் எங்கேயோ பயணிக்கிறோம்.  இந்நிலை மிகவும் ஆபத்தானது.
 
4188-0-2a73c6945b2e2b1fbcc4def69e99fa73.jpg

வரணியில் உள்ள தென்மராட்சி பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணி நடாத்தும் வடிசாலையில் இருந்து பனஞ்சாராயம் விநியோகிக்கும் பொறுப்பை செய்து தருமாறு கேட்டார்கள். அதனை நான் எடுத்து செய்யவேண்டிய முக்கிய காரணம் என்னவெனில், 15 முன்பள்ளிகளுக்கு குறித்த சங்கம் உதவி வருவதோடு 3000 குடும்பங்கள் அதனால் பலன் பெற்று வருகின்றன. வடமாகாணத்தின் தனிச் சொத்தான பனையிலிருந்து வரும் பொருட்களை சரியான முறையில் சந்தைப்படுத்தினால் ஒரு அரசை இயக்குவதற்கு தேவையான வருமானத்தையே அதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற உண்மை எனக்கு தெரிய வந்தது. ஆனால்,  இங்கே அந்த வளத்தை சரியான முறையில் உபயோகிக்கவில்லை என்கிற உண்மையும் தெரிய வந்தது.

கள் உற்பத்தியை சரியான முறையில் விநியோகித்தாலே பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். கள்ளை பெரியதொரு கொள்கலன் ஊர்தியில் எடுத்துச் சென்று வெளிமாவட்டங்களில் விநியோகம் செய்தோம். நல்லபடியாக விற்பனை அமைந்தது. அந்த நேரம் என் மருத்துவ நண்பர் சுரேந்திர குமார் என்னிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு "அமெரிக்காவில் இருந்தும்இ இந்தியாவில் இருந்தும் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் பதநீர் கேட்கிறார்கள். அதனை எடுத்து தர முடியுமா எனக் கேட்டார் " அப்போது பதநீர் இங்கு இல்லை. அப்போது பனை அபிவிருத்தி சபையை சேர்ந்த மூத்த அலுவலர் ஒருவரை அணுகிய போது அவர் கிளிநொச்சியில் இருந்து எடுத்து தந்தார். 15 போத்தல் எடுத்து கொடுத்த போதுஇ அதன் சுவையை அவர்கள் ரசித்து ருசித்து  கடைசி சொட்டு வரை குடித்துவிட்டு நாளைக்கும் கிடைக்குமா எனக் கேட்டார்கள். அதிலுள்ள போசனைக் கூறுகளை மருத்துவர் விளங்கப்படுத்தினார். அதனை பின் இணையத்தில் தேடிப் பார்த்த போது ஒரு குழந்தைக்கு தேவையான போசனைக் கூறுகளில் பெரும்பாலானவை பதநிரில் இருப்பதனை அறிய முடிந்தது. அந்த நேரம் தான் நாங்கள் இதனை எவ்வாறு வர்த்தக நோக்கில் விற்கலாம் என யோசிக்க தொடங்கினோம்.
 
20228648_1484529784930455_7032427739368927125_n.jpg

பனை அபிவிருத்தி சபையின் ஓய்வுபெற்ற அதிகாரியான தியாகராஜா பன்னீர்செல்வம் அவர்கள் தொழிநுட்ப வழிகாட்டியாக விளங்கினார். அவரது அனுபவங்கள் தான் இன்று சீரிய முறையில் பதநீர் உற்பத்தி செய்ய காரணமாக உள்ளது. பல்வேறு மேம்படுத்தல்களை அவர் செய்து தந்துள்ளார். பதநீரை விநியோகம் செய்வது என முடிவெடுத்த பிற்பாடு பல்வேறு சிக்கல்களையும் எதிர்நோக்கினோம். முதலாவது பதநீரை பதப்படுத்தி சந்தைப்படுத்த சரியான போத்தல்கள் இல்லை. போத்தல்களை வைத்து அனுப்பும் சரியான பெட்டிகள் இல்லை. முன்னைய காலங்களில் வேறு தேவைகளுக்கு பயன்படுத்திய போத்தல்களை தான் மீள உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அவற்றை மீள பயன்படுத்தும் போது கூட அதனை சரியான முறையில் கழுவுவதில்லை. இந்தக் குறையைப் போக்குவதென்றால் பதநீரை புதிய போத்தல்களில் அடைக்க வேண்டிய  கட்டாயம் இருந்தது. உடனே கொழும்பு சென்று அதற்கான இடத்தை கண்டுபிடித்து புதிய போத்தல்களில் அடைத்து பதநீரை விற்பனை செய்யக் கூடியதாக இருந்தது. சரியான விதத்தில் தகவல்கள் அடங்கிய மக்களைக் கவரும் லேபிள்களும் உருவாக்கினோம்.

தற்பொழுது பதநீரை பண்டத்தரிப்பு பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கம் மாத்திரமே உற்பத்தி செய்து வருகின்றது. மேலும் வடக்கிலுள்ள ஐந்து பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கங்கள் பதநீரை. உற்பத்தி செய்ய முயற்சித்து வருகின்றன. பதநீருக்கான விளம்பர மேம்படுத்தல்கள், விற்பனைகளை எங்கள் குழுவினர் கவனித்து செய்து வருகின்றார்கள்.  இங்கு ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஒரு கடையில் பதநீரை கிடைக்க வழிவகை செய்திருக்கிறோம். சிங்கள ஊர்களில் பதநீருக்கு கடும் கிராக்கி உள்ளது. பெரிய பெரிய ஹோட்டல்களில் எல்லாம் பதநீரை அறிமுகப்படுத்தி உள்ளோம்.  அடுத்த வருட இறுதிக்குள் எல்லா ஊரில் உள்ள பெரும்பாலான கடைகளில் பதநீர் கிடைக்கும். பதநீரை வருடாந்தம் 8 மாதங்கள் தான் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். குறித்த 8 மாதங்களில் பதநீரை சரியாக பெற்றாலே மீதி 4 மாதங்களையும் பூர்த்தி செய்ய முடியும். சில சங்கங்களில் பதநீர் உற்பத்தியை மேம்படுத்த புதிய இயந்திரத் தொகுதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். எங்களிடம் நல்லதொரு குழுவினர் உள்ளார்கள். அதனால் இந்த விநியோகத்தையும் சிறந்த முறையில் மேற்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. தற்போது பதநீர் vs என்னும் வர்த்தக நாமத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

p59a_1521114877.jpg

இங்கு பலர் கள்ளில் இருந்து தான் பதநீர் வருவதாக நினைக்கிறார்கள்.   பதநீர் தான் மணித்தியாலங்கள் ஆக ஆக நொதித்து கள்ளாகும். இப்பொழுது நாங்கள் பதநீரை சில பாடசாலைகளுக்கும் விநியோகித்து வருகிறோம். அது மாணவர் மத்தியில் நல்ல மதிப்பை பெற்று வருகிறது. பதநீரில் உள்ள போசனைக் கூறுகளை ஒருவர் நன்கு அறிவாரானால் எங்களுக்கு இயற்கை தந்த கொடையை ஒரு போதும் வீணாக்க விரும்ப மாட்டார்.

பதநீரைப் போன்று கள்ளுக்கும் மருத்துவ குணமுள்ளது. போதியளவு வழங்கலும் உள்ளது. 1972 ஆம் ஆண்டு 27000 சீவல் தொழிலாளிகள் இருந்துள்ளார்கள். தற்போது அந்த எண்ணிக்கை குறைந்து குறைந்து வந்து, தற்போது 12000 அளவிலான சீவல் தொழிலாளிகளே இருக்கிறார்கள்.  அதில் 8000 பேருக்கே வேலை உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எங்கள் மண்ணின் முக்கிய தொழில்துறை ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது தொடர்பில் யாரும் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. கூட்டுறவு சங்கங்கள் இவ்வளவு நாளும் என்ன முறைகளில் கள்ளை பொதியிடுகிறார்கள், விநியோகம் செய்கிறார்கள் என்பதை கவனித்த போது பல பிழையான நடவடிக்கைகளும் சில சரியான நடவடிக்கைகளும் இருந்தன. ஆனால், கள்ளிலோ, பதநீரிலோ கலப்படம் செய்யக்கூடாது என்ற தனிக் கொள்கை வடமாகாணத்தில் இருந்தது. கள்ளில் நாங்கள் மூன்று அளவுகளிலாலான 200 ml, 330 ml, 625 ml போத்தல்களில் அடைத்து சந்தைப்படுத்தி வருகிறோம். அதிலும் இருவகைகள் உள்ளன. அல்ககோல் 3 பிளஸ் அல்லது மைனஸ், 5 பிளஸ் அல்லது மைனஸ். (கள்ளிறக்கும் கால அளவுகளை பொறுத்து இது மாறுபடும்.) சாதாரண கடைகளில் இருந்து சூப்பர் மார்க்கெட்டுக்கள் வரையும் இதற்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. ஆடம்பர ஹோட்டல்களிலும் கள்ளுக்கு தனி வரவேற்பு உள்ளது.

இன்று வரைக்கும் கள்ளை பெரிதாக யாரும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் குடித்ததில்லை. இங்கே நாங்கள் பதநீரை, கள்ளை பலரிடம் குடிக்க கொடுத்து அவர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டுள்ளோம். அவை தான் எங்களுக்கு தொய்வில்லாமல் செய்வதற்கான ஊக்கியாக அமைந்துள்ளது. திடீரென வெப்பப்படுத்தி பின் திடீரென குளிர்விக்கவேண்டும். 80 பாகையில் 30 நிமிடம் அவிக்க வேண்டும். பிறகு குளிர் நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஒருநாளைக்கு பனையிலிருந்து 3 லீட்டர் இலிருந்து 5 லீட்டர் கள்ளு எடுக்க முடியும். இங்கு அரச சேவையில் இருக்கும் ஒருவர் கூட ஆயிரம் ரூபாயில் இருந்து மூவாயிரம் ரூபாய் வரையே பெரும்பாலும் உழைக்கின்றனர். ஆனால் சீவல் தொழிலாளிகள் பலர் 3000 ரூபாயில் இருந்து 7000 ரூபாய் வரைக்கும் ஒரு நாள் உழைக்கின்றனர். பனை ஏறும் தொழிலை சாதிக்கானதாக மட்டும் பார்க்காமல் இதனை ஒரு உயர் பொருளாதாரம் மிக்க தொழிலாக அனைவரும் பார்க்க வேண்டும். முன்னைய காலங்களில் பாரம்பரிய முறைப்படியே பனைகளில் ஏறி வந்தனர். ஆனால் தற்போது பனை ஏறுவதற்குரிய இயந்திரங்கள் வந்துள்ளன. அதன்மூலம் பனை ஏறும் தொழிலை நவீன முறையில் மேற்கொள்ள முடியும். இதனால் இன்னும் கூடுதலான பனைகளில் இருந்து கள்ளைஇ பதநீரை விரைவாக இறக்க முடியும்.     அடுத்து பனம் பாணியை விநியோகம் செய்ய இருக்கிறோம். அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உண்டு என்றார்.

உடலுக்கு குளிர்ச்சியும், வலிமையும், ஊட்டச்சத்தும் நிறைந்த பதநீர் பனையின் மிக முக்கிய பொருளாகும்.  அந்த காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதநீர் எப்படி உருவாகுகிறது என்பது தெரியும். ஆனால் இக்கால தலைமுறையினருக்கு தெரியவாய்ப்பில்லை. பதநீரில் சுக்ரோஸ் அதிக அளவு காணப்படுவதால் விரைவில் நொதித்து விடும். இலங்கையின் யாழ்குடாநாட்டிலும் தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் சுட்ட சுண்ணாம்பின் நீர் பதநீர் சேகரிக்கத் தொங்க விடப்பட்டுள்ள மண் பானைகளின் உட்புறம் தடவப்படுகிறது. 1 லீட்டர் பதநீர் எடுப்பதற்கு 2.5 கிராம் சுண்ணாம்பு பானையில் தடவினால் போதுமானது.   இதன் மூலம் நொதித்தல் தடுக்கப்படுகிறது. கலப்படமற்ற பதநீரில் சுண்ணாம்பு கலந்திருப்பினும் பதநீர் பருகலாம். சுண்ணாம்பு சேர்ப்பதால் சுவை கூடுகிறது.

பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி  வலுவாக்குகிறது. கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேற்று பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கல்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் நோய்களையும் நீக்குவதுடன் கண் நோய், இருமல், கசநோய் இவைகளையும் நீக்குகிறது. மேலும் பதநீரானது சலரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது. என்று இயற்கை மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.

இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் பொங்கல்; கொழுக்கட்டை தயாரிக்கலாம். “பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான்.” இது எங்கள் புதுமொழியாகும். பனை விதையிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.

                                                                                 தொடர்புக்கு-0763131973
 

தொகுப்பு-அமுது
நிமிர்வு யூன் 2018 இதழ்

http://www.nimirvu.org/2018/06/blog-post_30.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பணியைத்தான் பதனீர் என்று குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்....., எனக்கு கருப்பணி மிகவும் பிடிக்கும். அதுக்காகவே கீரிமலைக்கு போய் நீந்தி முழுகி விட்டு பக்கத்து கிராமம் கூவிலுக்கு சென்று கருப்பணி வாங்கிக் குடிப்பதுண்டு.அதோடு மாங்காய் பிஞ்சும் கையில் இருந்தால் சொல்லி வேல இல்ல.......!  ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
    • Published By: RAJEEBAN    18 APR, 2024 | 03:14 PM   2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். காசாவிற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு சவாலாக அமையக்கூடிய விதத்தில் காணப்பட்ட அவரது படங்கள் காசாவில் என்ன நடைபெறுகின்றது என்பதை உலகிற்கு தெரிவித்தன. அவர் பெரும் ஆபத்தின் மத்தியிலேயே தனது பணியை முன்னெடுத்தார். ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் 98 பத்திரிகையாளர்கள் காசாவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1992ம் ஆண்டுமுதல் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு பதிவுசெய்ய தொடங்கியது முதல்  பத்திரிகையாளர்களிற்கு மிகவும் ஆபத்தான ஆண்டாக இந்த ஆண்டே காணப்பட்டுள்ளது. காசாவிலிருந்து ஜனவரியில் வெளியேறியது முதல் அவரது பணி இந்த நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதாகவும் மாறியுள்ளது. காசாவில்  நடைபெறுவது உங்களின் ஊடங்களிற்கான ஒரு உள்ளடக்கடம் இல்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாங்கள் உங்கள் விருப்பங்களை கருத்துக்களை பெறுவதற்காக தெரிவிக்கவில்லை. நாங்கள் நீங்கள் செயற்படுவதற்காக காத்திருக்கின்றோம், இந்த யுத்தத்தை நாங்கள் நிறுத்தவேண்டும் என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/181378
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.