Jump to content

அறுசுவையுடைய அச்சாறுகள்


Recommended Posts

அறுசுவையுடைய அச்சாறுகள்
 

 

1.jpg
இலையில் ஒரு சுண்டல், தேங்காய்ச் சம்பல், பருப்புக் கறி, மரக்கறி அச்சாறுடன் ஒரு சமவிகித உணவு

விபரம்: பவானி பாலா படங்கள்: தமித் விக்கிரமசிங்க


சுவையரும்புகளைச் சுண்டியிழுக்கும் புளிப்பும் காரமும் நிறைந்த வித விதமான அச்சாறுகள்! காய்கறிகளில்...பழங்களில்... பலவித நிறங்களில்...! பார்க்கும்பொழுதே நாவில் நீர் ஊறும். ஊறுகாயைப் போன்றே அச்சாறும் ஒருவகை உணவு பதனிடும் முறை. செய்முறைகளில் சற்றே வேறுபாடுகள் உண்டு. இலங்கையில் தயாரிக்கப்படும் அச்சாறு தனித்துவமானது.


மரக்கறி வகைகள் மட்டுமன்றி முற்றிய பழ வகைகளிலும் அச்சாறு செய்யும் வழமை இலங்கையில் மட்டுமே உள்ளது. மாங்காய் அச்சாறு, அம்பரெல்லா அச்சாறு, அன்னாசி அச்சாறு, வெரலு அச்சாறு, விளாங்காய் அச்சாறு மட்டுமன்றி அனைவரும் விரும்பும் பழக்கலவை அச்சாறும் உண்டு. மதியமோ மாலையோ நொறுக்குத் தீனியை உங்கள் நா தேடும்பொழுது பழக்கலவை அச்சாறு அதற்குச் சிறந்த உபசரிப்பாயிருக்கும். பலரும் தெரியாத விடயம் என்னவென்றால் பழமாக உண்ணும்பொழது கிடைக்கும் சுவையிலும் பார்க்க அவற்றை அச்சாறாகத் தயாரித்து உண்ணும்பொழுது கிடைக்கும் ருசியே அலாதி என்பது.


விற்பனை நிலையங்களில் கிடைக்கும் ரெடிமேட் அச்சாறைவிட வீட்டிலேயே தயாரிக்கும்பொழுது அதன் சுவை புதியதாக இருக்கும். அத்துடன் உங்களுக்கு விரும்பிய அளவில் சேர்மானப் பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அச்சாறு தயாரிக்கும்பொழுது இரண்டு முக்கிய விடயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது தண்ணீரோ அல்லது ஈரத்தன்மையோ இருக்கக்கூடாது.

இரண்டாவது பயன்படுத்தும் பாத்திரம் மட்பாண்டமாகவும் கரண்டிகள் மரத்தினாலானதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அச்சாறு நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். இலகுவில் தயாரிக்கக்கூடிய சுவை மிகுந்த அச்சாறு வகைகளின் செய்முறைகள் சிலவற்றை உங்களுக்காக இங்கே தருகின்றோம்.


அச்சாறு தயாரிக்கையில் தண்ணீரோ அல்லது ஈரத்தன்மையோ இருக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது, பயன்படுத்தும் பாத்திரம் மட்பாண்டமாகவும் கரண்டிகள் மரத்தினாலானதாகவும் இருக்க வேண்டும்.

 

image01

மரக்கறி அச்சாறு செய்யத் தேவையான பொருட்கள்

 

image01

image01

 

மரக்கறி அச்சாறு

சந்தையில் மரக்கறிகளின் விலை மலிவாக உள்ளவேளையில் பெரும்பாலான இல்லத்தரசிகள் அச்சாறு செய்யத் தவற மாட்டார்கள். தயாரிப்பதற்கு இலகுவானது மட்டுமன்றி மதிய உணவுக்கு விசேட கறி வகைககள் தயாரிக்க நேரம் கிடைக்காத பட்சத்தில் சுடு சோற்றுடன் பருப்புக் கறியுடனோ அல்லது தேங்காய்ச் சம்பலுடனோ சேர்த்து உண்ண அருமையாக இருக்கும். ஒரு நொடியிலேயே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மதிய உணவைத் தயார் செய்ய அம்மாக்களுக்குக் கைகொடுக்கவல்லது இந்த மரக்கறி அச்சாறு.

தேவையான பொருட்கள்
கரட் - 100 கி.
பயற்றங்காய் அல்லது பீன்ஸ் - 100 கி.
பப்பாசிக் காய் - 100 கி.
சின்ன வெங்காயம் - 100 கி.
பிஞ்சு மிளகாய் - 100 கி
கடுகு - 20 கி.
வினாகிரி - 50 மி.லீ.
உப்பு - தேவையான அளவு

செய்முறை
முதலில் காய்ந்த மண்பாத்திரம் ஒன்றில் பாதியளவு வினாகிரியில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதில் நறுக்கிய கரட் துண்டுகளைப் போட்டு ஒரு நிமிடத்துக்கு மேற்படாமல் வேக விட்டபின் பின் வடித்தெடுத்து ஆறவிடவும். தொடர்ந்து பயற்றங்காய் (விரும்பினால் பீன்ஸ்) பாப்பாசிக்காய், சின்ன வெங்காயம், பிஞ்சு மிளகாய் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அவிய விட்டு எடுக்கவும். இறுதியாக மீதம் வைத்திருந்த வினாகிரியை பாத்திரத்தில் விட்டு மரக்கறி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சில வினாடிகள் கொதிக்க வைக்கவும். இதனுடன் வினாகிரி கலந்து அரைத்து தனியாக எடுத்து வைத்த கடுகையும் சேர்த்தால் அச்சாறு தயாரித்து முடிந்துவிடும்.
இந்த அச்சாறை காற்றுப் புகாதவாறு இரு நாட்களுக்கு மூடிவைத்த பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம். முறையாகப் பேணி வைத்தால் மரக்கறி அச்சாறை ஒரு மாத காலம் வரை வைத்திருக்க முடியும்.

 

 

 

image01

பழ அச்சாறு செய்யத் தேவையான பொருட்கள்

image01

 

image01

 

image01

 

image01

 

 

பழக்கலவை அச்சாறு

நன்கு கனியாத முற்றிய பழங்களை மட்டுமே இந்த அச்சாறு செய்யத் தெரிந்தெடுங்கள். ஏனெனில் பழங்கள் நீர்த்தன்மை உடையவையாக இருந்தால் அச்சாறை முறையாகத் தயாரிக்க முடியாது.

தேவையான பொருட்கள்
ஜம்புக்காய் - 4
காமரங்கா நடுத்தர அளவு - 1
அம்பரெல்லா - 2
வெரலு - 4
மாங்காய் - 1
வறுத்த மிளகாய்ப்பொடி - 1 தே.க.
வறுத்த கறித்தூள் - 1 தே.க.
சீனி - 1 தே.க.
மிளகுத் தூள் - 1 தே.க.
வினிகர் - 2 அல்லது 3 மே.க.
உப்பு - தேவையான அளவு

செய்முறை
ஜம்புக்காய், காமரங்கா, அம்பரெல்லா, மாங்காய் அனைத்தையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெரலு காய்களை சிறு உரல் ஒன்றில் மெதுவாகத் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் மாங்காய் அச்சாறுக்குப் பயன்படுத்திய (எண்ணெய், கடுகு தவிர்ந்த) உள்ளீடுகளைக் கலந்து கொண்டதும் தான் தாமதம் அதனை ருசி பார்க்க ரெடியாக குட்டிக் குழந்தைகள் மேசையைச் சூழ்ந்திருப்பர். காமரங்கா, அம்பரெல்லா சேர்ப்பதனால் புளிப்புச் சுவை சற்று அதிகமாக இருக்கும். ஆகவே வினாகரியை தேவையான அளவு கலந்து கொள்ளுங்கள். பலவித சுவைகள் ஒன்றாகச் சேர்ந்து நாவின் சுவையரும்புகள் அனைத்தையுமே துள்ளியெழச் செய்யவல்லது இந்த பழக்கலவை அச்சாறு. காற்றுப் புகாதவாறு கண்ணாடிப் பாத்திரத்தில் அல்லது மட்பாத்திரத்தில் பாதுகாத்து வைத்தால் 2-3 நாட்களுக்கு வைத்திருக்கலாம்.


 

 

 

image01

 

அனைவரும் விரும்பும் மாங்காய் அச்சாறு

image01

 

image01

image01

 

மாங்காய் அச்சாறு

தேவையான பொருட்கள்
நன்கு முற்றிய மாங்காய் (பெரியது) - 1
சிவத்த மிளகாய்ப்பொடி - 1 தே.க.
வறுத்த கறித்தூள் - 1 தே.க.
சீனி - 1 தே.க.
மிளகுத் தூள்- 1 தே.க.
மரக்கறி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 மே.க.
வினிகர் - 2 அல்லது 3 மே.க.
கடுகு - 1 தே.க.
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கழுவி ஈரம் காய்ந்த முற்றிய மாங்காயைத் தோல் நீக்கி (விரும்பினால் தோல் நீக்காமல்) சிறு கீலங்களாக வெட்டிக் கொள்ளவும். பின் அதனுடன் ஒவ்வொரு தேக்கரண்டி மிளகாய்ப்பொடி, வறுத்த கறித்தூள், மிளகுத் தூள், கடுகு, சீனி, எண்ணெய் ஆகியவற்றையும் 2-3 மேசைக் கரண்டியளவு வினிகரையும் சேர்த்து கலந்தால் மாங்காய் அச்சாறு தயார். புளிப்பு, இனிப்பு, காரம் நிறைந்த உண்ண உண்ணத் தெவிட்டாத இந்த மாங்காய் அச்சாறுக்கு வயது வேறுபாடு இன்றி ரசிகர்கள் உள்ளனர். மாலை வேளைகளில் நண்பர்களுடன் குதூகலமாகச் சுவைத்து மகிழ, பிரயாணங்களின்போது பசியெடுத்தால் சிற்றுண்டியாக உண்ண மற்றும் திரைப்பட வேளைகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற உற்சாகம் ததும்பும் தருணங்களில் சிறந்த துணையாகவும் மாங்காய் அச்சாறு விளங்குகின்றது.

 

இந்த ஆக்கத்திற்கு வேண்டிய தகவல்களை Cinnamon Grand Colombo - 'Nuga Gama' உணவகத்தினர் வழங்கி உதவியிருந்தனர்.

http://serendib.btoptions.lk/tamilshow.php?issue=2&id=1435

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

அச்சாறு

தகவலுக்கு நன்றி நவீனன். மண்சட்டி கிடைத்தவுடன் அச்சாறு செய்ய ஆரம்பிக்கிறேன்.

Link to comment
Share on other sites

மண் சட்டி ஜேர்மனியிலும் வாங்கலாம்.

12 minutes ago, Kavi arunasalam said:

தகவலுக்கு நன்றி நவீனன். மண்சட்டி கிடைத்தவுடன் அச்சாறு செய்ய ஆரம்பிக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

 

மண்ட்டி ஜேர்மனியிலும் வாங்கலாம்

 

ஷோபாவுக்குள்ளை சுருண்டு இருக்கிறதாலை பல விசயங்கள் தெரியாமல் போயிடுது. விசாரிச்சுப் பார்க்கிறேன். மீண்டும் ஒரு தடவை நன்றி நவீன்ன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kavi arunasalam said:

ஷோபாவுக்குள்ளை சுருண்டு இருக்கிறதாலை பல விசயங்கள் தெரியாமல் போயிடுது. விசாரிச்சுப் பார்க்கிறேன். மீண்டும் ஒரு தடவை நன்றி நவீன்ன்

Sofa ஐ நீங்கள் ஷோபா என்று எழுதுவதால் நடிகை ஷோபா, ஷோபாசக்தி மற்றும் பல ஷோபா என்ற பெயரில் உள்ளவர்கள் எல்லாம் நினைவில் வருகின்றார்கள்?

எனவே சோபாக்கதிரை அல்லது சோபா என்று எழுதுமாறு விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

Sofa ஐ நீங்கள் ஷோபா என்று எழுதுவதால் நடிகை ஷோபா, ஷோபாசக்தி மற்றும் பல ஷோபா என்ற பெயரில் உள்ளவர்கள் எல்லாம் நினைவில் வருகின்றார்கள்?

 எனவே சோபாக்கதிரை அல்லது சோபா என்று எழுதுமாறு விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்?

 ஓகே கிருபன் நான் ‘ஷோபா’வை விட்டுவிடுகிறேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kavi arunasalam said:

 ஓகே கிருபன் நான் ‘ஷோபா’வை விட்டுவிடுகிறேன்?

முடிவெடுக்குமுன் மீண்டும் ஒருமுறை நன்றாக யோசிக்கவும்.......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

முடிவெடுக்குமுன் மீண்டும்ருமுறை நன்றாக யோசிக்கவும்.......!  tw_blush:

Suvy, நீங்கள் கொஞ்சம் லேற்.  முடிந்து போயிற்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.