Jump to content

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்


Recommended Posts

இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல்

 

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது.

யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார்.

 

 

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்று ஒருவருடம் ஆகியுள்ளதால் இன்று சிலாபம் - சின்னவத்தையில் உள்ள சரத் ஹேமச்சந்திரவின் இல்லத்திற்கு சென்று நீதிபதி இளஞ்செழியன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், ஹேமச்சந்திரவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கும் இளஞ்செழியன் சென்று அஞ்சலியை செலுத்தியுள்ளார். அவரின் இந்த செயற்பாடுகள் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

சரத் ஹேமச்சந்திரவின் உயிரிழப்பிற்கு பின் அவரின் குடும்பத்திற்கு தொடர்ச்சியாக நீதிபதி இளஞ்செழியன் உதவிகளை செய்து வருகிறார்.

இதேவேளை ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்திருக்கும் சின்னவத்தை பகுதியில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வந்ததையடுத்து இளஞ்செழியன் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகைகளை செய்துள்ளார்.

பல அரசியல்வாதிகள் கூட தம்முடைய மெய்ப்பாதுகாவலர்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் உயிரிழந்தால் தேவையான உதவிகளை செய்து விட்டு அத்துடன் மறந்து விடுகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

ஆனால் நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்களாக தன்னுடனிருந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தின் மீது அக்கறை கொண்டு தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஹேமச்சந்திரவின் இல்லம் அமைந்துள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கும் உதவியுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இளஞ்செழியனின் இந்த செயற்பாடுகளானது இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், இதனை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயல்கள் மூலம் நீதிபதி இளஞ்செழியன் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது தென்னிலங்கை உட்பட நாட்டிலுள்ள அனைத்து மக்களின் மனங்களிலும் நீங்கா இடம்பிடித்துவிட்டார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/188760?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா தெற்கு மக்களை நெகிழ வைக்கும்பணியில் தொடர்ச்சியாக மும்முரமாய் நிற்கிறார்..

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, valavan said:

ஐயா தெற்கு மக்களை நெகிழ வைக்கும்பணியில் தொடர்ச்சியாக மும்முரமாய் நிற்கிறார்..

தனது குடும்பத்தில் ஒருவராக வீட்டோடு இருந்து பதினேழு வருடமாக தன்னை பாதுகாத்த ஒருவர் மீது இனவேறுபாடுபாட்டுக்கு அப்பால் உருவாகும் நட்பு அது. நீங்கள் அதை இனவெறியோடு பார்க்கிறீர்கள். 

 

3 hours ago, valavan said:

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

நீங்கள் அபரீதமான சுயலாபம் இல்லாமல் எதுவும் செய்வதில்லை போலும். உங்களை போலவே மற்றவர்களும் என்று நினைத்து எழுதுவது தெரிகிறது. உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு நீங்கள் எது செய்தாலும் நிச்சயமாக உங்களுக்கு அபரீதமான இலாபம் வைத்து தான் செய்கிறீர்கள் இல்லையா? நான் உங்கள் நண்பர் அல்லது உறவினாரானால் உங்களை விட்டு தூர விலகி இருப்பேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

ஐயா தெற்கு மக்களை நெகிழ வைக்கும்பணியில் தொடர்ச்சியாக மும்முரமாய் நிற்கிறார்..

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

மனச்சாட்சி அதிகம் உள்ள மனிதராய் இருப்பாரோ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2018 at 12:30 PM, Jude said:

தனது குடும்பத்தில் ஒருவராக வீட்டோடு இருந்து பதினேழு வருடமாக தன்னை பாதுகாத்த ஒருவர் மீது இனவேறுபாடுபாட்டுக்கு அப்பால் உருவாகும் நட்பு அது. நீங்கள் அதை இனவெறியோடு பார்க்கிறீர்கள். 

 

நீங்கள் அபரீதமான சுயலாபம் இல்லாமல் எதுவும் செய்வதில்லை போலும். உங்களை போலவே மற்றவர்களும் என்று நினைத்து எழுதுவது தெரிகிறது. உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு நீங்கள் எது செய்தாலும் நிச்சயமாக உங்களுக்கு அபரீதமான இலாபம் வைத்து தான் செய்கிறீர்கள் இல்லையா? நான் உங்கள் நண்பர் அல்லது உறவினாரானால் உங்களை விட்டு தூர விலகி இருப்பேன்.

 

ஒரு வருடத்தின் முன்னர் எதற்கும் கலங்காமல் தீர்ப்பு வழங்கும் ஒரு துறையில் இருக்கும் நீதிபதிக்கு  காவலாய் இருந்தவர் கொல்லப்பட்டபோது , அந்த காவலரின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுததும், அவர் குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காய் உதவியதும் நெகிழ்வான விஷயமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர்...

அவரின் நடமாட்டங்கள் ,நடவடிக்கைகள் எதுவும் ரகசியமாய் வைக்கப்பட்டு,, விஷேட அதிரடிப்படையின் பாதுகாப்பில்... இலங்கையில் இருக்கும் நீதிபதிகளில் அதி உச்ச பாதுகாப்பு கொண்டவராக இருக்கும் இளஞ்செழியன் ஐயா அவர்களின்...

வருகையும் , அவர் பாதுகாவலருக்கு ஓராண்டின் பின்னரும் வழங்கிய உதவிகளும் சராசரி ஊடகங்களில்,படங்களாகவும் செய்தியாகவும் எப்படி வருவதற்கு இலங்கை அரசும், ஐயாவும் வழிவிட்டார்கள்,ஏன் வழிவிட்டார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா?

கிடைத்திருந்தால் சொல்லுங்கள், என் கருத்தை மீள பெறுவதில் எந்த தயக்கமும் இல்லை!

On 7/22/2018 at 12:30 PM, Jude said:

நான் உங்கள் நண்பர் அல்லது உறவினாரானால் உங்களை விட்டு தூர விலகி இருப்பேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கும், பலகோடி மக்களை சுற்றி வாழும் நாங்கள் எல்லாம் ஒருவரின் கருத்துக்கு பதில் சொல்லும் சகிப்பு தன்மை இன்றி வாழ்பவர்களாய் இருந்தால் நாங்கள் தூர விலகி இருக்க வேண்டியதில்லை...நம்மை சூழ இருக்கும் சமூகமே எங்களை தூர விலக்கி வைக்கும்,!

சமூக தளத்தில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது என்னால் புரிந்துகொள்ளகூடியதாகவே உள்ளது...

ஆனால் உங்களை தூரவிலக்கி வைக்கும் ஐடியா எனக்கு இல்லை, நீங்களும் இந்த சமூகத்தின் ஒரு அங்கம்!

 

On 7/22/2018 at 12:37 PM, ரதி said:

மனச்சாட்சி அதிகம் உள்ள மனிதராய் இருப்பாரோ

மனசாட்சிக்கு ஊடக வெளிச்சம் ஏன் தேவைபடுகிறது என்பதற்கு உங்களிடம் ஏதாவது விளக்கம் இருக்குமா? அறிந்துகொள்ள ஆசை அவ்வளவுதான்!

Link to comment
Share on other sites

22 hours ago, valavan said:

ஒரு வருடத்தின் முன்னர் எதற்கும் கலங்காமல் தீர்ப்பு வழங்கும் ஒரு துறையில் இருக்கும் நீதிபதிக்கு  காவலாய் இருந்தவர் கொல்லப்பட்டபோது , அந்த காவலரின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுததும், அவர் குடும்பத்தின் எதிர்கால வாழ்விற்காய் உதவியதும் நெகிழ்வான விஷயமே அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

ஆனால் அந்த சம்பவத்தின் பின்னர்...

அவரின் நடமாட்டங்கள் ,நடவடிக்கைகள் எதுவும் ரகசியமாய் வைக்கப்பட்டு,, விஷேட அதிரடிப்படையின் பாதுகாப்பில்... இலங்கையில் இருக்கும் நீதிபதிகளில் அதி உச்ச பாதுகாப்பு கொண்டவராக இருக்கும் இளஞ்செழியன் ஐயா அவர்களின்...

வருகையும் , அவர் பாதுகாவலருக்கு ஓராண்டின் பின்னரும் வழங்கிய உதவிகளும் சராசரி ஊடகங்களில்,படங்களாகவும் செய்தியாகவும் எப்படி வருவதற்கு இலங்கை அரசும், ஐயாவும் வழிவிட்டார்கள்,ஏன் வழிவிட்டார்கள் என்று உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைச்சிருக்கா?

கிடைத்திருந்தால் சொல்லுங்கள், என் கருத்தை மீள பெறுவதில் எந்த தயக்கமும் இல்லை!

அதிக சந்தேகத்தோடு சிந்திக்கிறீர்கள். பெரும்பாலான ஊடகங்களின் செய்தியாளர்கள் செய்திகளை சேகரித்தால் தான் அவர்களுக்கு வருமானம். இந்த நீதிபதியை பற்றிய செய்தியை முன்னர் வெளியிட்ட செய்தியாளர்கள் அவரை தொடர்ந்தும் அவதானித்து வருவதும் அவர் பற்றிய செய்திகளை சேகரித்து வெளியிடுவதும், செய்திக்கான தகவல்களை தரக்கூடியவர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருவதும் செய்தி வழங்கும் துறையில் சாதாரணமான செயற்பாடுகள். இந்த வகையில் நீதிபதி இளம்செழியனின் மறைந்து போன மெய்ப்பாதுகாவலரின் குடும்பம் பற்றிய செய்தியை வெளியிட்ட செய்தியாளர் அந்த குடும்பத்து உறவினர் ஒருவருடன் தொடர்புகளை பேணி தனக்கு மட்டும் உடன் செய்தி தர வேண்டும் என்று உடன்பாடு செய்து இருக்கலாம்.  குடும்பத்துக்கு புகைப்படம் எடுத்தவர் இந்த புகைப்படங்களை செய்தியாளருக்கு விற்றிருக்கலாம். 

இன்று போரும் பயங்கரவாதமும் இல்லாத நிலையில், சிங்கள பகுதியில், ஒரு சிங்கள குடும்ப நிகழ்வில், ஒரு சிங்கள செய்தியாளர், இவ்வாறன செய்தி சேகரிப்பதை அரசு தடுக்க முனையாது. சம்பவம் முடிந்து நீதிபதி வீடு திரும்பிய பின் செய்தியை வெளியிடுவதால் நீதிபதிக்கு ஆபத்து இல்லை.

ஆனால் அதை நீதிபதி இளம்செழியனே ஒரு அரசியல்வாதியாக கமராக்களை ஏற்பாடு செய்து பகிரங்க படுத்தினார் என்று நீங்கள் சொல்லும் போது அது ஆதாரம் இல்லாத, ஆனால் குறைந்த அளவில் சாத்தியமான நிகழ்வு பற்றிய ஒரு கருத்தாகும். போர்க்காலத்திலேயே கிருஷாந்தி குமாரசாமி வழக்கு முதல் வேறு வழக்குகளில் கூட குற்றவாளிகளான இராணுவ வீரருக்கு நீண்ட தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கியவர் இளம்செழியன். இவரது துணிச்சலான செயற்பாடுகளை மெச்சி அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் இவரது வீடு தேடிச் சென்று இவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கினார்கள். ஆனால் அவர் இலங்கையிலேயே தனது பயனுள்ளது என்று கூறி அங்கே இருக்கிறார். அரசியல் பழிவாங்கலுக்கு  அஞ்சாமல் வித்தியா கொலைவழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனில் பங்கு பற்றி தீர்ப்பில் பகிரங்கமாக குறிப்பிட்டு இருந்தார். அவர் இன்றுவரை அரசியலில் நாட்டம் காட்டவில்லை.  இவர் போன்றவர்கள் அங்கே மக்களுக்கு இன்று மிகவும் தேவையானவர்கள். எதுவித ஆதாரங்களும் இல்லாமல் இவர் போன்றவர்களை வெறுத்து ஒதுங்க செய்வதால் மக்களின் அழிவு மேலும் அதிகரிக்குமே அன்றி குறையாது. நீங்களுமா அதற்கு பங்களிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Jude said:

அதிக சந்தேகத்தோடு சிந்திக்கிறீர்கள். பெரும்பாலான ஊடகங்களின் செய்தியாளர்கள் செய்திகளை சேகரித்தால் தான் அவர்களுக்கு வருமானம். இந்த நீதிபதியை பற்றிய செய்தியை முன்னர் வெளியிட்ட செய்தியாளர்கள் அவரை தொடர்ந்தும் அவதானித்து வருவதும் அவர் பற்றிய செய்திகளை சேகரித்து வெளியிடுவதும், செய்திக்கான தகவல்களை தரக்கூடியவர்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணி வருவதும் செய்தி வழங்கும் துறையில் சாதாரணமான செயற்பாடுகள். இந்த வகையில் நீதிபதி இளம்செழியனின் மறைந்து போன மெய்ப்பாதுகாவலரின் குடும்பம் பற்றிய செய்தியை வெளியிட்ட செய்தியாளர் அந்த குடும்பத்து உறவினர் ஒருவருடன் தொடர்புகளை பேணி தனக்கு மட்டும் உடன் செய்தி தர வேண்டும் என்று உடன்பாடு செய்து இருக்கலாம்.  குடும்பத்துக்கு புகைப்படம் எடுத்தவர் இந்த புகைப்படங்களை செய்தியாளருக்கு விற்றிருக்கலாம். 

இன்று போரும் பயங்கரவாதமும் இல்லாத நிலையில், சிங்கள பகுதியில், ஒரு சிங்கள குடும்ப நிகழ்வில், ஒரு சிங்கள செய்தியாளர், இவ்வாறன செய்தி சேகரிப்பதை அரசு தடுக்க முனையாது. சம்பவம் முடிந்து நீதிபதி வீடு திரும்பிய பின் செய்தியை வெளியிடுவதால் நீதிபதிக்கு ஆபத்து இல்லை.

ஆனால் அதை நீதிபதி இளம்செழியனே ஒரு அரசியல்வாதியாக கமராக்களை ஏற்பாடு செய்து பகிரங்க படுத்தினார் என்று நீங்கள் சொல்லும் போது அது ஆதாரம் இல்லாத, ஆனால் குறைந்த அளவில் சாத்தியமான நிகழ்வு பற்றிய ஒரு கருத்தாகும். போர்க்காலத்திலேயே கிருஷாந்தி குமாரசாமி வழக்கு முதல் வேறு வழக்குகளில் கூட குற்றவாளிகளான இராணுவ வீரருக்கு நீண்ட தண்டனை அல்லது மரண தண்டனை வழங்கியவர் இளம்செழியன். இவரது துணிச்சலான செயற்பாடுகளை மெச்சி அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் இவரது வீடு தேடிச் சென்று இவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கினார்கள். ஆனால் அவர் இலங்கையிலேயே தனது பயனுள்ளது என்று கூறி அங்கே இருக்கிறார். அரசியல் பழிவாங்கலுக்கு  அஞ்சாமல் வித்தியா கொலைவழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனில் பங்கு பற்றி தீர்ப்பில் பகிரங்கமாக குறிப்பிட்டு இருந்தார். அவர் இன்றுவரை அரசியலில் நாட்டம் காட்டவில்லை.  இவர் போன்றவர்கள் அங்கே மக்களுக்கு இன்று மிகவும் தேவையானவர்கள். எதுவித ஆதாரங்களும் இல்லாமல் இவர் போன்றவர்களை வெறுத்து ஒதுங்க செய்வதால் மக்களின் அழிவு மேலும் அதிகரிக்குமே அன்றி குறையாது. நீங்களுமா அதற்கு பங்களிக்கிறீர்கள்?

மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்...

இளஞ்செழியன் மரண தண்டனை தீர்ப்பு வழங்கினார் என்றால் அது என்ன அவரின் தனிப்பட்ட முடிவா?

இலங்கையின் நீதி நிர்வாக சட்ட பிரிவுகளின் அடிப்படையில் அவர் வழங்கிய தீர்ப்பு...

அங்கே தனிப்பட்ட முடிவுகளுக்கு இடமில்லை...அதுபோக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றும் சட்டம் வேண்டுமென்று இப்போதான்  மைத்திரி முயற்சிக்கிறார்...அதுக்கு பலமான தடை போடுகிறது  EU & US ...

அதுபோக ஒரு நாட்டின் நீதிபதியாய் நிகழ்காலத்தில்  இருப்பவருக்கு அமெரிக்கா வந்து எங்க நாட்டுக்கு வாருங்கள் என்று குடியுரிமை கொடுக்குமா? ஆச்சரியமாக இருக்கிறது, அந்த முயற்சிபாடின் இணைப்புகள் ஏதாவது உங்கள் கைவசம் இருக்கிறதா? தயவு செய்து தாருங்கள்...

பலர் அந்த... அரசுகளின் நிர்வாகத்திலிருப்பவர்களுக்கு அமெரிக்கா சிற்றிசன் கொடுக்க விளைவதை அறிய ஆவலாய் இருப்பார்கள்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2018 at 6:33 PM, valavan said:

ஒருவேளை பதவிக்கால ஓய்வின் பின்னர் தேசிய கட்சிகளில் ஒன்றில் இணைந்து அகில இலங்கை ரீதியில்  செல்வாக்கு பெற்ற பெரிய அரசியல் தலைவராகும் முயற்சியோ தெரியவில்லை.

தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டலாம் காட்டாமலும் போகலாம்  ஐயா விக்கியரும் நீதி அரசர் தானே:34_rolling_eyes: 

Link to comment
Share on other sites

22 hours ago, valavan said:

மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்...

செய்தி எப்படி வெளிவந்தது என்பது தான் உங்கள் கேள்வி. அதற்கான உங்கள் எதிர்வு கூறல், இந்த செய்தியை நீதிபதி இளஞ்செழியனே தான் அரசியலில் ஈடுபடும் நோக்கத்துடன் காமராக்களுக்கு முன் நின்று வெளிவிட்டு இருக்கலாம் என்பதாகும். அதற்கு ஆதாரமாக, இளஞ்செழியனுக்கு உள்ள பாதுகாப்பையும் அதை மீறி செய்தியாளர்கள் செய்தியை சேகரித்து இருக்கமுடியாது என்ற வாதத்தை முன் வைத்தீர்கள். எனது வாதம், இந்த நிகழ்வு முடிந்த பின் செய்தி வருவதால் நீதிபதி  இளஞ்செழியனுக்கு ஆபத்து இல்லை என்பாதாலும், முன்னர்  இளஞ்செழியன் பற்றி செய்தி சேகரித்தவர்கள் தமக்கு செய்தி வழங்குபவருடன் செய்த உடன்பாட்டின் படி செய்தியை பெற்று வெளிவிட்டு இருக்கலாம் என்பதே.

அதற்கு உங்கள் எதிர் வாதம் எங்கே? மேலே உள்ள "மிக சிறந்த சமாளிப்பு ஆனால் பொருந்தி வரவில்லை .. மீண்டும் முயற்சிக்கவும்..." என்பதா உங்கள் எதிர்வாதம்?

நீதிபதி இளஞ்செழியன் தனது அமெரிக்க குடியுரிமை பற்றி சொன்ன வாசங்கள்:

“Recognition of his contribution to judicial independence. Recalling the award, Ilancheliyan said: “When I was told by US officials that I could stay back in the US as a citizen, I said I would like to continue to serve the Lankan judiciary. Thereupon, a State Department official remarked that their choice was right!”

கீழே உள்ள இணைப்புகளில் இதை கண்டேன்.

https://www.ipetitions.com/petition/requesting-legal-action-against-to-jaffna-high
http://www.newjaffna.net/?p=30313

நாங்கள் இங்கே நீதிபதி இளஞ்செழியனின் அமெரிக்க குடியுரிமை பற்றி விவாதிக்கவில்லை. அவரின் சிறப்பான பணி பற்றி விபரிக்கவே அதை குறிப்ப்ட்டேன். மேலும் நீதித்துறை, சட்டங்கள், இலங்கையில் மரணதண்டனை பற்றிய விடயங்களையும் நாம் இங்கு விவாதிக்கவில்லை. மரணதண்டனை இலங்கையில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் நிறைவேற்ற படுவதில்லை. இப்போது நிறைவேற்ற விரும்புகிறார்கள். நீதித்துறை, சட்டங்கள், இலங்கையில் மரணதண்டனை பற்றிய விபரங்களை நான் தேடி உங்களுக்கு தருவதிலும் பார்க்க நீங்களே தேடி அறிந்து கொண்டால் அந்த அறிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டலாம் காட்டாமலும் போகலாம்  ஐயா விக்கியரும் நீதி அரசர் தானே:34_rolling_eyes: 

அரசியல்வாதிகள் இல்லாமல் ஒரு ஜனநாயக நாடான இலங்கை இயங்க முடியாது. கொலைகாரர், பயங்கரவாதிகள், கொள்ளையர், மற்றும் சண்டியர்கள் அரசியல்வாதிகளாக இருந்து இலங்கையை ஆள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு ஆபத்தான ஆவா கும்பல் போன்றவற்றுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளை வழங்கியவர் என்று பெயர் எடுத்த ஒரு நீதிபதி அரசியலுக்கு வருவது எம்மில் சிலருக்கு பிடிக்கவில்லை. இது முட்டாள்தனமாக படவில்லையா? நாட்டை ஆளும் சட்டத்தை உருவாக்குவதற்கு நல்ல நீதிபதி என்று பெயர் எடுத்தவர் வேண்டாம், பலரையும் கொன்ற முன்னாள் கொலைகாரர் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு வாக்கும் போட்டு அவர்களை தெரிவு செய்து அந்த ஆட்சியில் தொடர்ந்து அழிந்து போகும் மக்கள் வாழத்தக்க இனமாக தெரியவில்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/28/2018 at 12:19 AM, Jude said:

அரசியல்வாதிகள் இல்லாமல் ஒரு ஜனநாயக நாடான இலங்கை இயங்க முடியாது. கொலைகாரர், பயங்கரவாதிகள், கொள்ளையர், மற்றும் சண்டியர்கள் அரசியல்வாதிகளாக இருந்து இலங்கையை ஆள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு ஆபத்தான ஆவா கும்பல் போன்றவற்றுக்கு எதிராக கடுமையான தீர்ப்புகளை வழங்கியவர் என்று பெயர் எடுத்த ஒரு நீதிபதி அரசியலுக்கு வருவது எம்மில் சிலருக்கு பிடிக்கவில்லை. இது முட்டாள்தனமாக படவில்லையா? நாட்டை ஆளும் சட்டத்தை உருவாக்குவதற்கு நல்ல நீதிபதி என்று பெயர் எடுத்தவர் வேண்டாம், பலரையும் கொன்ற முன்னாள் கொலைகாரர் வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு வாக்கும் போட்டு அவர்களை தெரிவு செய்து அந்த ஆட்சியில் தொடர்ந்து அழிந்து போகும் மக்கள் வாழத்தக்க இனமாக தெரியவில்லை. ?

பாவம் மக்கள் இது தெரியாமல் அவர்களையே இன்னமும் விரும்புகிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.