Jump to content

“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப்பிழைகள் கூட்டிக்கொண்டு செல்கிறது.....

பி.கு: நாங்கள் முற்றத்தில் தான் பொங்குவது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தாள் காசு பேசாமல் கிடக்கும். சில்லறையள்தான் துள்ளிக் குதிக்கிறது? -பொஸிற்றிவ் பொன்னம்பலம்

January 24, 2019

Positive-ponnar01.png?resize=683%2C800

இஞ்சை பல காரியம் புலம்பெயந்து போன ஆக்களாலைதான் நடக்கிது.இல்லை எண்ணேல்லை. ஆனால் அவையின்ரை பேரைக் கெடுக்கிறமாதிரி அலுவல் பாக்கிறதுக்கும் ஆக்கள் இருக்கினம்.கீழை எழுதியிருக்கிறதை வாசியுங்கோ அப்ப தெரியும்.

எல்லாருக்கும் கதிரையிலை ஆசையாக் கிடக்கு. எட இஞ்சை இருக்கிறவைக்குத்தான் உந்த வியாதி எண்டால் வெளிநாட்டிலை உள்ளவைக்கும் இப்ப உந்த வியாதி தொத்திப்போட்டுது எண்டுதான் சொல்ல வேணும். சண்டையோடை வெளிநாட்டுக்குப் போன கன பேர் சண்டை நடந்த அந்தக் காலத்திலை இஞ்சை வர ஏலாமை நிண்டவை. அப்ப புலியளும் இஞ்சை நிர்வாகம் செய்து கொண்டிருந்தபடியால் வந்தாலும் தங்களிட்டைக் காசு கழஞ்சி இல்லை எண்ணுற மாதிரிக் காட்டி நடந்திட்டுத்தான் போனவை. கண்டால் அவங்கள் காசைக் கீசைக் கேட்டுப் போடுவாங்கள் எண்டு பயம். பிறகு மகிந்தா இருந்த காலத்திலையும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிச்சவை.அப்ப கோத்தாவும் கொம்பேறிமூக்கனைப் போல இருந்து அவையை இவையை விட்டு கடத்திப் பறிச்சவரெல்லே?ஆனால் இப்ப இஞ்சை  ஒரு பயமுமில்லை. வந்து அவை எடுக்கிற படமும், பாட்டும், கூத்தும் சொல்லி மாளாது. அங்கை நிண்டு ஏதோ செய்து காசைச் சேத்துப் போட்டாங்கள். அதை அங்கை காட்டி ஒண்டும் நடவாது. ஆனபடியால் காசை இஞ்சை கொண்டு வந்து வைச்சுக் கொண்டு கோயிலுக்கை புகுந்து விறுசா காட்டுறது. இல்லாட்டி அரசியல்வாதியளின்ரை பின்னாலை வால் பிடிச்சுக் கொண்டு அவைக்குத் தாளம் போடுறது. தன்னா காட்டுறது. பிறகு அவைக்குக் கொஞ்ச நஞ்சத்தைக் குடுத்து மெல்ல அதுக்கை உள்ளிடுறது.இல்லாட்டி பள்ளிக்கூடங்களுக்கை உள்ளிட்டுச் சேட்டை. வாசிகசாலையளுக்கை போய் குழப்படி எண்டு அவையின்ரை காசு பலதையும் செய்யும்.

அப்பிடி ஒராள் வந்து மெல்லப் பொதுச் சேவை செய்யப்போறன் எண்டு ஒரு புவண்டேசன் தொடங்கினார். மலை நாட்டிலை துவங்கி மெள்ள மெள்ள வடக்குக்கும் வந்து தான் ஏழை எளியதுகளுக்கு நல்லது செய்யிறன் எண்டு துவங்கி கொஞ்சம் தலையை வெளியிலை காட்டிப் போட்டு , அடுத்த றவுண்டிலை அரசு அதிகாரியளோடை சிநேகிதமாகி அதுக்குள்ளாலை அதைச் செய்யிறன் இதைச் செய்யிறன் எண்டு பப்படா காட்டுறதே ஒழிய அந்தளவுக்குச் செய்யிறதில்லை. அவர் கிட்டடியிலை ஒரு விளையாட்டைக் காட்டினவர்.வட மாகாணத்தின்ரை பழைய கவர்னரை அரசாங்கம் மாத்திப் புது கவர்னரை  அறிவிச்சவுடனை இந்த ஆள் பழைய ஆளின்ரை சிநேகிதன்.உடனை “அவரைத் திருப்பி ஆளுநராக நியமிக்க வேண்டும். புதிய ஆளுநர் வேண்டாம் ” எண்டு கொடி பிடிச்சு ஆர்ப்பாட்டம் செய்தவர். மைத்திரியை உங்களுக்குத் தெரியுந்தானே? தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் எண்டு ஒற்றைக் காலிலை நிக்கிறவர். அவர் உதுக்கெல்லாம் மசியேல்லை. புது கவர்னரைப் போட்டாச்சு. பிறகு புது கவர்னர் வாற அண்டு பலாலியிலை வரவேற்கப் போய் மாலையோடை நிண்ட ஆக்களுக்கை உவர்தான் முதல் ஆள். எப்பிடி இருக்கும்?  அப்ப உந்தப் புலம் பெயந்ததைப் பற்றி என்ன நிளைக்கிறியள்?

அப்ப உதைப்பாத்தால் உங்களிலை பலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு வாறியளே ஒழிய நீங்கள் எங்களிலை உருகி வரேல்லை எண்டதுதான் என்ரை கணிப்பு. வெள்ளைக்காரன் காசை உழைச்சுப் போட்டான் எண்டால் அவன் ஒரு திட்டத்தைப் போட்டு முதுகிலை ஒரு பையையும் கொளுவிக் கொண்டு ஊர் உலகம் பாக்க எண்டு வெளிக்கிட்டிடுவன். தனியாவும் போவன். குடும்பத்தோடையும் போவன். இல்லாட்டித் தனக்கிசைவான ஒரு பெடிச்சியைப் பிடிப்பன் வடிவாச் சுத்துவன். அதாலை மற்றவனுக்கு ஒரு கேடும் இல்லை.இது என்னெடா எண்டால் உங்களிலை நான் எல்லாரையும் சொல்லேல்லை, பப்படாகாட்டுற கொஞ்சப்பேரைச் சொல்லுறன். நீங்கள் காசை உழைச்சுப்போட்டியள் எண்டால். மற்றவனைக் குழப்புறதுக்கு அந்தக் காசைப் பாவியாதையுங்கோ. பூனைக்கு விளையாட்டு. சுண்டெலிக்கு உயிர் போனதாம். எண்டமாதிரி அலுவலைப்பாராதையுங்கோ. மக்கள் சேவை எண்டால் மக்கள் சேவையோடை நில்லுங்கோ. அரசியலுக்கை போறதெண்டால் வந்து நேரை அரசியலுக்கை போங்கோ. மக்கள் சேவையை அரசியலின்ரை கதவா நினைக்காதையுங்கோ. அப்பிடி நினைச்சால் நீங்கள் சனத்தைப் பேக்காட்டுறதா அர்த்தம்.

உங்கை எனக்குத் தெரிஞ்ச எத்தினை சனம் வந்து தன்ரை மற்றக் கையுக்குத் தெரியாமல் தன்ரை அலுவலைப்பாத்திட்டுப் போகுதுகள். ஏழை எழியதுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுத்திட்டுப் போறான். வீடு திருத்தக் காசு குடுத்திட்டுப்போறான். சாமான் சக்கட்டுக் குடுத்திட்டுப் போறான்.படிக்க உதவி செய்திட்டுப் போறான். இது ஒண்டும் வெளியிலை தெரியாது. சில்லறைத்தனமானவைதான் துள்ளிக் குதிக்கிறது.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

 

http://globaltamilnews.net/2019/110956/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

தாள் காசு பேசாமல் கிடக்கும். சில்லறையள்தான் துள்ளிக் குதிக்கிறது? -பொஸிற்றிவ் பொன்னம்பலம்

January 24, 2019

Positive-ponnar01.png?resize=683%2C800

இஞ்சை பல காரியம் புலம்பெயந்து போன ஆக்களாலைதான் நடக்கிது.இல்லை எண்ணேல்லை. ஆனால் அவையின்ரை பேரைக் கெடுக்கிறமாதிரி அலுவல் பாக்கிறதுக்கும் ஆக்கள் இருக்கினம்.கீழை எழுதியிருக்கிறதை வாசியுங்கோ அப்ப தெரியும்.

எல்லாருக்கும் கதிரையிலை ஆசையாக் கிடக்கு. எட இஞ்சை இருக்கிறவைக்குத்தான் உந்த வியாதி எண்டால் வெளிநாட்டிலை உள்ளவைக்கும் இப்ப உந்த வியாதி தொத்திப்போட்டுது எண்டுதான் சொல்ல வேணும். சண்டையோடை வெளிநாட்டுக்குப் போன கன பேர் சண்டை நடந்த அந்தக் காலத்திலை இஞ்சை வர ஏலாமை நிண்டவை. அப்ப புலியளும் இஞ்சை நிர்வாகம் செய்து கொண்டிருந்தபடியால் வந்தாலும் தங்களிட்டைக் காசு கழஞ்சி இல்லை எண்ணுற மாதிரிக் காட்டி நடந்திட்டுத்தான் போனவை. கண்டால் அவங்கள் காசைக் கீசைக் கேட்டுப் போடுவாங்கள் எண்டு பயம். பிறகு மகிந்தா இருந்த காலத்திலையும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிச்சவை.அப்ப கோத்தாவும் கொம்பேறிமூக்கனைப் போல இருந்து அவையை இவையை விட்டு கடத்திப் பறிச்சவரெல்லே?ஆனால் இப்ப இஞ்சை  ஒரு பயமுமில்லை. வந்து அவை எடுக்கிற படமும், பாட்டும், கூத்தும் சொல்லி மாளாது. அங்கை நிண்டு ஏதோ செய்து காசைச் சேத்துப் போட்டாங்கள். அதை அங்கை காட்டி ஒண்டும் நடவாது. ஆனபடியால் காசை இஞ்சை கொண்டு வந்து வைச்சுக் கொண்டு கோயிலுக்கை புகுந்து விறுசா காட்டுறது. இல்லாட்டி அரசியல்வாதியளின்ரை பின்னாலை வால் பிடிச்சுக் கொண்டு அவைக்குத் தாளம் போடுறது. தன்னா காட்டுறது. பிறகு அவைக்குக் கொஞ்ச நஞ்சத்தைக் குடுத்து மெல்ல அதுக்கை உள்ளிடுறது.இல்லாட்டி பள்ளிக்கூடங்களுக்கை உள்ளிட்டுச் சேட்டை. வாசிகசாலையளுக்கை போய் குழப்படி எண்டு அவையின்ரை காசு பலதையும் செய்யும்.

அப்பிடி ஒராள் வந்து மெல்லப் பொதுச் சேவை செய்யப்போறன் எண்டு ஒரு புவண்டேசன் தொடங்கினார். மலை நாட்டிலை துவங்கி மெள்ள மெள்ள வடக்குக்கும் வந்து தான் ஏழை எளியதுகளுக்கு நல்லது செய்யிறன் எண்டு துவங்கி கொஞ்சம் தலையை வெளியிலை காட்டிப் போட்டு , அடுத்த றவுண்டிலை அரசு அதிகாரியளோடை சிநேகிதமாகி அதுக்குள்ளாலை அதைச் செய்யிறன் இதைச் செய்யிறன் எண்டு பப்படா காட்டுறதே ஒழிய அந்தளவுக்குச் செய்யிறதில்லை. அவர் கிட்டடியிலை ஒரு விளையாட்டைக் காட்டினவர்.வட மாகாணத்தின்ரை பழைய கவர்னரை அரசாங்கம் மாத்திப் புது கவர்னரை  அறிவிச்சவுடனை இந்த ஆள் பழைய ஆளின்ரை சிநேகிதன்.உடனை “அவரைத் திருப்பி ஆளுநராக நியமிக்க வேண்டும். புதிய ஆளுநர் வேண்டாம் ” எண்டு கொடி பிடிச்சு ஆர்ப்பாட்டம் செய்தவர். மைத்திரியை உங்களுக்குத் தெரியுந்தானே? தான் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால்தான் எண்டு ஒற்றைக் காலிலை நிக்கிறவர். அவர் உதுக்கெல்லாம் மசியேல்லை. புது கவர்னரைப் போட்டாச்சு. பிறகு புது கவர்னர் வாற அண்டு பலாலியிலை வரவேற்கப் போய் மாலையோடை நிண்ட ஆக்களுக்கை உவர்தான் முதல் ஆள். எப்பிடி இருக்கும்?  அப்ப உந்தப் புலம் பெயந்ததைப் பற்றி என்ன நிளைக்கிறியள்?

அப்ப உதைப்பாத்தால் உங்களிலை பலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு வாறியளே ஒழிய நீங்கள் எங்களிலை உருகி வரேல்லை எண்டதுதான் என்ரை கணிப்பு. வெள்ளைக்காரன் காசை உழைச்சுப் போட்டான் எண்டால் அவன் ஒரு திட்டத்தைப் போட்டு முதுகிலை ஒரு பையையும் கொளுவிக் கொண்டு ஊர் உலகம் பாக்க எண்டு வெளிக்கிட்டிடுவன். தனியாவும் போவன். குடும்பத்தோடையும் போவன். இல்லாட்டித் தனக்கிசைவான ஒரு பெடிச்சியைப் பிடிப்பன் வடிவாச் சுத்துவன். அதாலை மற்றவனுக்கு ஒரு கேடும் இல்லை.இது என்னெடா எண்டால் உங்களிலை நான் எல்லாரையும் சொல்லேல்லை, பப்படாகாட்டுற கொஞ்சப்பேரைச் சொல்லுறன். நீங்கள் காசை உழைச்சுப்போட்டியள் எண்டால். மற்றவனைக் குழப்புறதுக்கு அந்தக் காசைப் பாவியாதையுங்கோ. பூனைக்கு விளையாட்டு. சுண்டெலிக்கு உயிர் போனதாம். எண்டமாதிரி அலுவலைப்பாராதையுங்கோ. மக்கள் சேவை எண்டால் மக்கள் சேவையோடை நில்லுங்கோ. அரசியலுக்கை போறதெண்டால் வந்து நேரை அரசியலுக்கை போங்கோ. மக்கள் சேவையை அரசியலின்ரை கதவா நினைக்காதையுங்கோ. அப்பிடி நினைச்சால் நீங்கள் சனத்தைப் பேக்காட்டுறதா அர்த்தம்.

உங்கை எனக்குத் தெரிஞ்ச எத்தினை சனம் வந்து தன்ரை மற்றக் கையுக்குத் தெரியாமல் தன்ரை அலுவலைப்பாத்திட்டுப் போகுதுகள். ஏழை எழியதுக்குச் சாப்பாடு வாங்கிக் குடுத்திட்டுப் போறான். வீடு திருத்தக் காசு குடுத்திட்டுப்போறான். சாமான் சக்கட்டுக் குடுத்திட்டுப் போறான்.படிக்க உதவி செய்திட்டுப் போறான். இது ஒண்டும் வெளியிலை தெரியாது. சில்லறைத்தனமானவைதான் துள்ளிக் குதிக்கிறது.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

 

http://globaltamilnews.net/2019/110956/

 

யாராயிருக்கும் ஜீவன்சிவாவாக இருக்குமோ ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.