Jump to content

உங்களிடம் இருக்கும் காமதேனு


Recommended Posts

உங்களிடம் இருக்கும் காமதேனு

வாழ்க்கையில் முன்னேற ஒரே வழி உழைப்பு,உழைப்பு. இதை நிறையப்பேர் சொல்வார்கள் ஆனால் அப்படி கடுமையாக உழைத்தும் தாங்கள் நினைத்த இலட்ச்சியத்தினை அடைய முடியவில்லையே என்று வருத்தம் தெரிவிக்கும் நம்மில் பலரைப் பார்க்கின்றோம்.

ஆனால் வெற்றி பெற்ற பலரும் தாங்கள் அறிந்தோ அறியாமலோ தமக்குள் இருக்கும் ஒரு விந்தையான சக்தியைப்பயன் பயன் படுத்தி இருக்கிறார்கள். அதுதான் அவர்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணம்.

இந்த ஆச்சர்யமூட்டும் சக்தியினை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பயன் படுத்தலாம். வாழ்க்கையில் நீங்கள் நினைத்த வெற்றிகளையெல்லாம் பெற முடியும்.

ஒரு காமதேனு பசுவை கையில் வைத்திருப்பது போல. நாம் பார்த்த பலர் அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பதை நாங்கள் எல்லோரும் கண்களால் பார்க்கிறோம். நாம் எமக்குள் கேட்டுக்கொள்ளுகிறோம் ஏனடா அவன் மட்டும் ஏறியபடியே போகிறான். தொட்டதெல்லாம் வெற்றியாக முடித்துவிடுகிறானே என்று இல்லையா?

அந்த விந்தை என்ன? வந்து அடிக்கடை இதைக்கிளிக் பண்ணி வாசிச்சு நீங்களும் அப்படி சாதனை செய்யமுடியும் என்பதினை படியுங்க.

தொடரும்......

Link to comment
Share on other sites

நமக்குள் மனம் என்னும் மகாசக்த்தி இருக்கிறது என்பதைப் பலரும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் மேல் மனதினைத்தான் நாம் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும், திட்டங்கள் போடவும் உபயோகிக்கிறோம்.

அதற்கு கீழே ஆழ்மனம் என்ற சப் கான்சியஸ் என்ற ஒன்று இருக்கிறது. அதனைப்பயன் படுத்துவதன் மூலம் நாம் நினைத்த காரியங்களில் வெற்றி பெறமுடியும்.

அமெரிக்காவின் மிகப்பெரும் மனோ தத்துவ நிபுணர் பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ், " இன்றைய நவீன உலகின் மிகப்பெரும் கண்டுபிடிப்பே மனத்தின் உள்நிலையை மாற்றுவதன் மூலம் வெளிவாழ்க்கையில் மகத்தான வெற்றிகளை பெற முடியும் என்கிறார்.

திரும்பத்திரும்ப ஒன்றினையே ஆழ்ந்து நினைப்பதன் மூலமும் , நமக்குளேயே ஒரு திரைப்படம் போலக்காண்பதன் மூலமும் நம் ஆழ்மனதின் ஒரு செய்தியை ஆழமாகப்பதிக்க முடியும். அந்த ஆழ்மனப் பதிவே பிரமாண்டமான செயலாற்றலாக வெளிப்பட்டு எந்தத்தடையையும் மீறி வெற்றி பெறச் செய்கிறது. ஏனெனில் உள்ளிருக்கும் எமது எண்ணங்களின் பிரதிபலிப்பே, வெளியே நம்மைச்சுற்றி நிகழ்வுகளாக நடைபெறுகின்றன. இது சந்தேகம் இல்லாத உண்மை.

சரி இதை எப்படி நடைமுறையில் சாதிப்பது?

தொடரும். பதற்றப்படாம ஆத்திரப்படாம பிறகு வாங்க எனித்தான் விசயம் சொல்லப்போகிறேன்.

Link to comment
Share on other sites

தொடர்ந்த விஞ்ஞான ஆராட்ச்சிகளில் நிருபணம் ஆகியிருக்கும் ஒன்று-

நம்முடைய மனதில் ஒரு நொடிக்கு 14 முதல் 20 சுற்று எண்ணங்கள் சுழலுகின்றன. இதையே பீற்றா நிலை என்று சொல்லுகிறார்கள்.

அந்த மனதினை அமைதிப்படுத்தி வினாடிக்கு 8 ல் இருந்து 12 வரை எண்ணங்களினை சுழல்வதற்கு கொண்டு வருவது அல்பா நிலை.

இதைத்தான் தியான் நிலை என்று காலம் காலமாக எல்லோரும் சொல்லுகிறோம்.

ஏன் உங்கள் ரஜினி கூட ஒரு பொதுக்கூட்டத்தில் சொன்னார். ஒரு 5 நிமிடம் ஒவ்வொருநாளும் தான் தியானம் இருந்து தான் இப்படி அழுக்கு வாழ்க்கையில் இருந்து அதி உயர் வாழ்க்கையினை அடைந்ததாக.

இந்த அல்பா நிலையில் உள்ள மனமே காமதேனுவாக மாறுகிறது.

இந்த நிலைக்கு எம் மனதை எப்படிக் கொண்டு வருவது? இது ஒன்றும் பெரிய வித்தை இல்லை.

கண்களை மேல்நோக்கி மெதுவாகக் கொண்டு சென்று அமைதியாக மூடிக்கொள்ளுங்கள். நூறில் இருந்து ஒன்று வரை தலைகீழாக எண்ணுங்கள். அந்த அளவு தேவையில்லாதவர்கள், 50 லிருந்து கூட ஆரம்பிக்கலாம். மனதுக்கு பிடித்த மெல்லிய இசையை மெதுவாக பின்னனியில் இசைக்கச்செய்யலாம் தேவையென்றால்.

எண்ணிக்கை எண்ணும் போது முழுமையாக அதன் மீது கவனம் கொண்டு எண்ண வேண்டும்.

இப்போது உங்களின் எண்ண வேகம் குறைந்துவிடும், மூச்சும் நிதானப்பட்டு விடும். இதுவே அல்பா நிலை.

இந்த நிலையில் உங்கள் இலட்ச்சியத்தினை அப்படியே படமாகக் கொண்டு வாருங்கள்.( ஒவ்வொரு தமிழ் கள உறுப்பினர்களும் ஒரு 5 நிமிடம் உலகம் முழுவதிலும் தமிழீழம் கிடைக்கவேண்டும் என்ற இலட்ச்சியத்தினை இங்கே பாவிக்கலாம்) உங்களுக்கு அல்லது உங்கள் மேல் வெறுப்புக்கொண்ட மனிதரை( உதாரணமாக எனக்கு பண்டிதர்) முன்னிலையில் நிறுத்தி

அவருக்கு உங்கள் அபரீதமான் உங்கள் அன்பை கொடுங்கள். அதே நேரம் அவர் உங்களி அன்பு செலுத்துவதை நீங்கள் உணருவீர்கள்.

இது ஒரு மிராக்கிள் போல அவரது, உங்களது இலட்சியங்கள் சிறிது சிறிதாக உங்களை நோக்கி மாறுவதை நீங்கள் ஒரு மாதத்தில் உணருவீர்கள்.

இதைப்போல எதைவேண்டுமானாலும் ஆல்பா நிலையில் இருந்து உங்கள் மனத்தினூடு சாதிக்கமுடியும். எந்தப்பிரச்சனையையும் தீர்த்துக்கொள்ளலாம்.எந்த உயர் நிலைக்கும் ஏறலாம்.இந்த அல்பா நிலைக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் செல்வதினை கட்டாயம் உறுதிப்படுத்த வேண்டும். இதனை மேலும் வலுவாக்க

உங்கள் கனவுகளினை ஒரு பேப்பரில் எழுதி எடுத்து உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.அவை நிறைவேறிய பின் நீங்களும் ஒரு பெரிய பென்ஸ் காரில் போவது போலவும், உங்கள் வங்கிக்கணக்கில் கோடி டாலர்கள் இருப்பதாகவும் அதை நீங்கள் எண்ணுவதாகவும் நினைத்து ஆன்ந்தப்படுங்கள். உங்கள் தேவைகளினை செய்து தரும் உங்கள் மிக பெரும் சக்தியிற்கு மனப்பூர்வமாக நண்றி செலுத்துங்கள்.உங்கள் இலட்ச்சியத்தினை நனவாக்க அந்த அல்பா நிலையில் இருந்து விடுபட்ட கணமே செயல் பட தொடங்குங்கள்.உங்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் நீங்கள் நினைத்தபடி மாறுகின்றது என்பதினை நீங்களே ஆச்சரியத்தோடு பார்ப்பீர்கள்.

வாழ்க்கையில் உயர்வதற்கும், குடும்பச்சூழ்ந்விலைகளினை மாற்றுவதற்கும், கல்வி, வேலைகளில் மேலும் மேலும் வளர இந்த யுத்தியினை பாவித்துக்கொண்டு வாருங்கள். இமாலய வெற்றிகள் உங்களுக்கு பெரிய வெற்றியாகவே தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.