Jump to content

'தென்புலத்தார்' தமிழர் மூதாதையரே! ஆரியரின் பிதுரர் அல்லர்!! - குறள் ஆய்வு-6 பகுதி-1


Recommended Posts

'தென்புலத்தார்' தமிழர் மூதாதையரே! ஆரியரின் பிதுரர் அல்லர்!! - குறள் ஆய்வு-6 பகுதி-1

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"

- பாவேந்தர் பாரதிதாசன்

 

விருந்தோம்பல் என்னும் தமிழர் அறம் ஆரியப் பிராமணரின் சடங்கியல் அன்று!

தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras"  என்னும் நூலின் 93-94ம் பக்கங்களில் பின்வருமாறு கூறியுள்ளார்:

"The Dharma sastras speak of these tarpana and panca mahayajnas, one after the other, mentioning that they must be performed daily.

                The Tirukkural referring to these two forms of daily offering in the second and third Kural beginning with 'Illara Iyal', and Tenpulattar has these offerings in mind. This would show Valluvar is household, was no doubt listing these essential rituals of the Hindus so the view of modern scholars that Valluvar did not refer to any Hindu rituals is not correct.

The verse reads -

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தால் ஓம்பல் தலை.

(என்னும் குறளுக்கு, பின்வருமாறு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்கின்றார்.)

It means it is important to offer sacrifices to pitr, deivam(Gods), guests(athithi), okkal(all living beingsa, like man and Tan(one's own living)

This is a very important aspect of Hindu system, that has come down from Pre-Buddhist periods. The very fact that Valluvar emphasizes (ஓம்பல் தலை) the performance of these five sacrifices for the Grhasta is a pointer to the fact that Valluvar was a follower of the Hindu System. The Panca mahayajnas are mentioned in all the Dharma sastras of Manu, Yajnavalkya, Gautama, Apastamba, Bodhayana and others."

வருணத்திற்கு ஏற்ப மாறும் ஆரியச் சடங்கியல்!

ஆரியர்கள் இனத்திலேயே இவர் குறிப்பிடும் தர்ப்பணம், சிறுபான்மை எண்ணிக்கையிலான பிராமணர்களுக்கு மட்டுமே முழுவதும் பொருந்துவது; பிராமணர்களைவிட எண்ணிக்கையில் உயர்ந்த சத்திரியர்களுக்கு சில பகுதிகளும், இவர் இருவரையும் விட எண்ணிக்கையில் உயர்ந்த வைசியர்களுக்கு மிகச்சில பகுதிகளுமே பொருந்தும். இம்மூவரையும்விட அதிக எண்ணிக்கையில் வாழும் ஆரிய தேச சூத்திரர்களுக்கு இவை எதுவுமே பொருந்தாது.

தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை!

தமிழர்களில் வருணப்பாகுபாடு இல்லை என்பதால் தமிழர்களுக்குத் தர்ப்பணம் இல்லை. ஆரிய வேதமுறையைக் கைக்கொண்ட சிறுபான்மை தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே தர்ப்பணம் செய்வார்கள்.

ரிக் வேத 'சோமன்' முதலியோர், தமிழர்களின் 'பித்ரு அல்லர்

நாகசாமி அவர்கள் தமது நூலின் 93வது பக்கத்தில் பித்ரு என்பவர் யார் என்று பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

"3. The pitru mentioned are Soma, Pitruman, Agni, Yama, Angirasvan and Kavyavahana'

திரு.நாகசாமி குறிப்பிடும் பித்ருக்களான சோமன் முதலியோர், ரிக் வேதத்தில் கூறப்படும் ஆரியரின் மூதாதையர்கள். தமிழர்களின் மூதாதையர்கள் அல்லர். தமிழர்களுக்கு சோமன், பிதுர்மன், அன்கிரச்வான், காவ்யாவாகன என்பவர்கள் எவரென்றே தெரியாது.

மிகச் சிறுபான்மை எண்ணிக்கையிலான தமிழ்ப் பார்ப்பனர்கள் மட்டுமே ஆரிய வேதம் ஓதுபவர்கள். அறியாமையினால் அல்லது வேதவழிபாட்டுமுறையை ஏற்றுக்கொண்டமையினால், கடனே என்று தமிழ்ப் பார்ப்பனர்கள் சோமன் உள்ளிட்ட ஆரியமூதாதையருக்கு பித்ருக் கடன் செய்யலாம்.

ஆரிய மூதாதைக்குத் தமிழன் ஏன் 'பித்ருக்கடன்(?)' கழிக்க வேண்டும்?

வேதம் ஓதுதலோ, பூணூல் அணிதலோ செய்யாத 97 விழுக்காடு தமிழ் இல்லறத்தார்கள் பஞ்ச மகா யக்ஞங்களில் ஒன்றான இந்த 'பித்ருக்கடன்(?)' எவ்வாறு கழிக்க இயலும் என்பது திரு.நாகசாமிக்கும், சோமன் முதலான ஆரிய பித்ரு-மார்களுக்கே வெளிச்சம்! ஆரியரின் மூதாதையருக்குத் தமிழர்கள் ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதும் விளங்கவில்லை.

'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டை

பலநூறு ஆண்டுகளாக, பரிமேலழகர் உள்ளிட்ட ஆரியச்சார்பு கொண்ட உரையாசிரியர்கள் பூணூலே அணியாத 97 விழுக்காடு எண்ணிக்கையில் உள்ள தமிழர்களின் மரபுகளையும், வாழ்வியல் முறைகளையும் வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, ஆளுயர பூமாலையைக் காதில் சுற்றும் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர். 'அப்துல் கலாம்' அவர்களே அப்துல் கலாம் ஐயராகும்போது எதுவும் ஆரியர்களுக்கு சாத்தியமே! திரு.நாகசாமி கூறும் ஆரியரின் 'பஞ்சமகா யக்ஞம்' தமிழர்களைப் பொறுத்தவரை 'பஞ்ச மகாப் பெரும்புளுகு' மூட்டையே அன்றி வேறொன்றும் இல்லை.

தமிழர்களுக்கத் தென்புலத்தார் யார்?

இப்போது வள்ளுவர் தமது காலத்தில் வாழ்ந்த தமிழர்களை நோக்கிச் சொன்ன 'தென்புலத்தார்' உண்மையில் யாராயிருக்கக் கூடும் என்று நம் அறிவைச் செலுத்தி ஆய்வு செய்து அறிவோம்.

தொல்காப்பியம் முதற்சங்க இறுதிக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கண நூல் என்று மரபுரை கூறுகின்றது. தொல்காப்பியத்தை அரங்கேறியது பாண்டிய மன்னன் நிலந்தரு திருவிற் பாண்டியன்(மாகீர்த்தி என்றும் நெடியோன் என்றும் முடத்திருமாறன் என்றும் அறியப்படுபவனும் இவனே!). இம்மன்னன் முதற்கழக(சங்க) இறுதியில் இருந்தவன் என்றும், முதற் கடற்கோளுக்குபின் இடைச்சங்கம் தோற்றுவித்தவன் என்றும் மரபுரை சொல்கின்றது. கடைக்கழக(சங்க)த் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான பாடல்கள் இப்பாண்டியன் பஃறுழியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையில் ஆண்ட மிகப்பழமையான முற்கால மன்னன் என்றும்  புகழ்கின்றன. இடைக்கழகத்தை(இடைச்சங்கத்தை)த் தொடங்கிய இப்பாண்டிய மன்னனின் புகழ் தலைக்கழத்தை(தலைச்சங்கத்தை)ச் சேர்ந்ததாகும்.

தலைச்சங்க நூற்கள்

இத்தலைக்கழக(சங்க) நூல்களாக முதுநாரை, முதுகுருகு போன்ற இசை நூல்கள் குறிப்பிடப்படுகின்றன; முறுவல், சயிந்தம், குணநூல், செயிற்றியம், அவிநயம் உள்ளிட்ட நாடக நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இடைக்கழக(சங்க) நூலான இசை நுணுக்கம் போன்றவை கழக மரபுகளில் காணக்கிடைக்கின்றன. இத்தகைய நூல்கள் இருந்து, அழிந்துபோயின என்று சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளதை தாம் பதிப்பித்த சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரைநூலின் முன்னுரையில் தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் முனைவர் உ.வே.சா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடற்கோளினால் மறைந்த தென்புலத்தார்!

தலைச்சங்கத்தைப் பற்றியும், இடைச்சங்கத்தைப் பற்றியும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. இத்தகைய புகழ்பெற்ற பஃறுழியாற்றின் கரையிலிருந்த முதற்கழகம்(முதல் தமிழ்ச்சங்கம்) வளர்த்த தென்மதுரை கடல்கோளினால் அழிந்துபோனது என்பதும் பண்டைய இலக்கியங்களில் பேசப்பெறுகின்றது. இத்தென்புலத்தில் கடற்கோளினால் மறைந்த அறம்வளர்த்த தமிழர்களே திருவள்ளுவர் காலத்தில் தென்புலத்தார் எனப்பட்டனர்.

தென்புலத்தார் - தென்மதுரை மூதாதையர் நினைவேந்தல்!

தென்புலத்தார்,தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஐந்தாகத் திருக்குறள் கூறும்  பொருள், தென்புலமாம் குமரிக்கண்டத்தில் வாழ்ந்து, கடல்கோளால் மறைந்த தமிழ் மூதாதையர் நினைவேந்தல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச் சான்றோர்கள் நினைவேந்தல், தம்மைத்தேடிவரும் விருந்தினர்கள் பேணல், தம்மோடு ஒத்த உறவினர்கள் பேணல், தாம் என்னும் ஐந்து நிலையினரிடத்தும் அறவுணர்வைப் பேணிக் கடைப்பிடித்தல்  இல்லறத்தார்களுக்குத் தலையாய கடமையாகும் என்பதே. இதை இன்னும் சற்று ஆழமாக ஆய்வோம்.

தென்புலத்தார் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கடல்கோளினால் மறைந்துபோன குமரிக்கண்டத்து தமிழர் மூதாதையர்களையே என்பதை இப்போது காண்போம்.

'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்'

தமிழ் மொழியில் 'புலம்' என்றால் நிலம், இடம் என்பதே பொருள் வழக்கு. 'தென்புலம்' என்றால் 'தென்பகுதி நிலம்' என்றும் 'வடபுலம்' என்றால் 'வடபகுதிநிலம்' என்றும் வழங்குவதே தமிழர் வழக்கம் என்பதை பழந்தமிழ் இலக்கியங்களில் பரவலாக வழங்கப்படும் வழக்குகள் மூலம் எளிதில் அறியலாம். எடுத்துக்காட்டாக, சிலப்பதிகாரத்தில்

"மன்பதை காக்கும் தென்புலம் காவல்

என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்!" - சிலப்பதிகாரம்

"தென்புலமான பாண்டிய நாட்டில் வாழும் மக்களைக் காக்கும் அரசுமுறை பிழைபட்டதற்கு நான் முதற் காரணமாகிவிட்டேன்! என் ஆயுள் முடிந்துபோகட்டும்!"என்று ஆராயாமல் கோவலனைக் கொன்று கண்ணகிக்குச் செய்த தவறை தனது அரசவையில் இவ்வாறு கூறி ஆரியப்படை கடந்த  பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர்துறந்தான். இங்கு, பாண்டிய நாடே 'தென்புலம்' என்ற பெயரால் குறிக்கப்பட்டது வெளிப்படையாக விளங்கும்.

இனி, பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதாக வரும் சிறுபாணாற்றுப்படையில், கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய ஓய்மான் நாட்டு நல்லியக்கோடன் கொடைத்திறத்தைப் பாராட்டி, இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது. சேர மன்னனைக் குறிக்க

'குடபுலங் காவலர்' மருமா னொன்னார் 

'வடபுல' விமயத்து வாங்குவிற் பொறித்த

எழுவுறழ் திணிதோ ளியறேர்க் குட்டுவண்

வருபுனல்வாயில் வஞ்சியும் வறிதே யதாஅன்று  - சிறுபாணாற்றுப்படை:47-50

என்று பாடுகின்றார். இப்பாடலில், பாட்டுடைத்தலைவன் தரும் கொடை, வளமிக்க 'குடபுலம்' என்னும் சேரநாட்டின் வளத்தைக் காட்டிலும் அதிகமான வளத்தைத் தருவதாகப் பாராட்டிப்பாடியது.  வளமிக்க 'குடபுலம்' காக்கும் மரபில் வந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், 'வடபுல'த்தில் உள்ள தன் பகைவர்களை அடக்கி, அவர்களது 'வடபுல' எல்லையிலிருக்கும் இமய மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான்; கோட்டைக்கதவுக்குத் தாழ்ப்பாள் போடும் கணையமரம் போன்ற வலிய தோள் கொண்ட அந்தக் குட்டுவனின் வளம் மிக்க வஞ்சி நகரமே ஏழை-நகரம் என்று எண்ணும்படியாக நல்லியக்கோடன் பொருள் வளத்தை வாரி வழங்குவான் என்று பாராட்டுகின்றார். இங்கு 'குடபுலம்' சேரநாட்டையும், 'வடபுலம்' வடநாட்டையும் குறிக்கின்றது. 

தத்துநீர் வரைப்பிற் கொற்கைக் கோமான்

'தென்புலங் காவலர்' மருமா னொன்னார்

மண்மாறு கொண்ட மாலை வெண்குடைக்

கண்ணார் கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்       65

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நனைமறுகின் மதுரையும் வறிதே யுதாஅன்று  - சிறுபாணாற்றுப்படை: 62-67

"கடலலை மோதும் கொற்கையைத் துறைமுகமாக, மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு   'தென்புலம்' காக்கும் உரிமை பூண்டவர்களின் வழி வந்தவன் பாண்டியன் நெடுஞ்செழியன். அவன் தன் பகைவர்களின் நிலத்தைப் பொருள் வளத்தில் மாறுபடுமாறு செய்தவன். தன் நாட்டுக்கு நிழல் தரும் காவல் வெண்குடையின் கீழ் வீற்றிருப்பான். கண்ணைப் போன்ற வேப்பிலைக் கண்ணியைத் தலையில் சூடிக்கொண்டு தேரில் வருவான். தமிழ் நிலைபெற்றிருப்பதால் இவனது மதுரை பிறரால் தாங்க முடியாத மரபுப் பெருமையினைக் கொண்டது. அவனது மதுரைத் தெருவில் எப்போதும் மகிழ்ச்சித்தேன் பாய்ந்துகொண்டே இருக்கும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இவனது மதுரை நகரமே ஏழைநகரம் என்று எண்ணும்படியாக நல்லியக் கோடன் வளத்தை வாரி வழங்குவான்." என்கின்றது இப்பகுதி.

தண்பணை தழீஇய தளரா இருக்கைக்

'குணபுலங் காவலர்' மருமா னொன்னா

ரோங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியுந்.

தூங்கெயி லெறிந்த தொடிவிளங்கு தடக்கை

நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பிய

னோடாப் பூட்கை யுறந்தையும் வறிதே யதாஅன்று - சிறுபாணாற்றுப்படை: 78-83

குளிர்ந்த நீர் பாயும் வளவயல்களைக் (தண்பணை) கொண்ட உறையூரைத் தலைநகராகக் கொண்ட 'குணபுலம்' என்னும் சோழநாட்டின் மரபுரிமை மன்னன் ‘நற்றேர் செம்பியன்’ எனப் போற்றப்பட்டான். வானளாவ உயர்ந்து தொங்கிய கதவினைக் கொண்ட இவனது தூங்கெயில் கோட்டையில் மேகம் தன் முதுகைச் சொரிந்துகொள்ளும். அத்தகைய வளமிகு செம்பியனின் உறையூர் நகரமே ஒன்றுமில்லாத வறுமைக்கோலம் எய்திவிட்டது போல நல்லியக்கோடன் பரிசுகளை வழங்குவான், என்கிறார் பாணனை ஆற்றுப்படுத்தும் புலவர்.

மேற்கண்ட மூன்று பகுதிகளில் வரும் 'வடபுலம்' வடநாட்டையும், 'குடபுலங் காவலர்' சேரநாட்டு மன்னனையும், 'தென்புலங் காவலர்' பாண்டியநாட்டு மன்னனையும், 'குணபுலங் காவலர்' சோழமன்னனையும் தெளிவாகச் சுட்டுகின்றன. எனவே, 'தென்புலம்' என்றால் தென்னாடு என்பதே இலக்கிய வழக்கு. இன்னும் தேடுவோம்.

தெற்கே உள்ள கடல் 'தென்கடல்' என்றும், அங்குள்ள குமரி தெய்வம் தென்குமரி' என்றும் வழங்கப்படுவதை அனைவரும் அறிவர். முத்தொள்ளாயிரம் 94-3ல் 'தென் கொற்கை' என்று கொற்கைத் துறைமுகம் சுட்டப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரமோ 'தென் தமிழ்', 'தென் தமிழ்நாடு', 'தென் தமிழ்ப்பாவை' என்று பரக்கப் பேசுகின்றது. மணிமேகலையோ 'தென்தமிழ் மதுரை', 'தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்' என்கின்றது.

'தென்புலம்' என்னும் சொல் குறுந்தொகை(317-7), அகநானூறு(24-8), புறநானூறு(35-7, 388-1), சிலப்பதிகாரம்(10-103, 20-76) ஆகிய பழந்தமிழ் இலக்கியங்களில் எங்கும் பரந்து கிடக்கின்றது.

தென்புலமருங்கு என்னும் சொல்லாட்சி மதுரைக்காஞ்சி(202), நெடுநல்வாடை(52), நற்றிணை(153-5), சிலப்பதிகாரம்(27-133) ஆகிய தொன்மையான இலக்கியங்களில் பயின்றுவரும் சாட்சியங்கள். தமிழ்ப்பெருவெளி எங்கும் பரக்கக் காணும் 'தென்றல்' என்னும் சொல்லாட்சி 'தென்' என்னும் அடையின் தமிழ் அடையாளத்தையும், பொருளையும் சுட்டி நிற்கின்றது.

மேற்கண்ட சான்றுகள் காட்டும் உண்மை 'புலம்' என்னும் சொல்லின் வெளிப்படையான, இயல்பான, எளிமையான பொருள் 'இடம்' என்பதே. ஆக, 'தென்புலத்தார்' என்பதற்கு 'தென்பகுதி நிலத்தவர்' என்னும் பொருளே மிகவும் சரியான பொருத்தமான ஒன்று. தென்பகுதி நிலத்தவர் தமிழ் இனத்தவர் என்பதும் தெளிவு.

'தென்புலத்தார்'  அறிவிக்கும் திருவள்ளுவரின் இனம்-மொழி

திருக்குறளாசிரியர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'தென்புலத்தார்' என்னும் இவ்வொரு சொல்லே திருவள்ளுவரின் இனத்தையும், மொழியையும் குறிப்பால் அறிவிக்கும் சொல்லாக உள்ளது. திருவள்ளுவர் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேற்றினத்தவரான ஆரியர்கள் புகுந்து, அரசியல், சமுதாயம் என்பவற்றில் மேன்மையடைந்திருந்த தமிழரையும், அவர்கள் தாய் மொழியான தமிழையும், தமிழர்களின் உயர்மரபு வாழ்வியல் நலன்களையும், கலை, அறிவியல் பண்பாடுகளையும் சிறிது சிறிதாக அழிக்கவும், ஆரியர்தம் அரைச் செயற்கை மொழியாகிய சமஸ்கிருதத்தையும், ஆரியக் கருத்தியலையும் தமிழர்களிடம் புகுத்த முயன்ற காலம் என்பது தமிழின வரலாறு.

தமிழர் மூதாதையர் 'தென்புலத்தார்'

கழக(சங்க) இலக்கியங்கள் கூறும் தமிழரின் மூதாதையர் வாழ்ந்த இடங்களான 'குமரிக்கண்டம்', 'குமரியாறு, பஃறுழியாறு' என்பவை தற்போதுள்ள தமிழ் மண்ணுக்கும் தென்புலத்தில் உள்ளது. பன்நெடுங்காலத்துக்குமுன், கடற்கோளால் மறைந்துபோன தம் தென்புலத்துக் குமரிக்கண்டத்து மூதாதையரை நினைந்து, விருப்பமுடன் படையலிட்டுத் தமிழர்கள் நிகழ்த்திவந்த பயன்கருதா நன்றி செலுத்தும் வழிபாடே திருவள்ளுவர் காலத்துத் தமிழரின் தென்புலத்தார் வழிபாடு ஆகும்.

இல்லறத்தானின் ஐந்து தலையாய உறுப்புகள்

ஆக, வள்ளுவர் கூற்றுப்படி, இல்லறத்தான் ஓம்பவேண்டிய ஐந்து தலையாய உறுப்புகள் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்பன.

இவற்றுள், 'தான்' என்பது 'தலை'யாய் இருந்து பிற உறுப்புக்களைப் பேண வேண்டும் என்றே அறிவுறுத்துகிறார் வள்ளுவர். ஒக்கலை(தம்மோடு ஒத்த உறவினர்களை) 'உடம்பாக'வும், விருந்தைக் கைகளாகவும், தெய்வத்தை இதயமாகவும், தென்புலத்தாரைக் கால்களாகவும் உருவகித்துப் பேணவேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும்.

'தென்புலத்தார்' வழி நடக்கவேண்டும் என்பதால், அவர்களே இல்லறத்தானின் கால்கள்; தெய்வப்பண்புடன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதால், தெய்வமே இல்லறத்தானின் இதயம்; இருகைகளையும் ஒருசேரக்கொண்டு முழுநிறைவான ஈகையறம்மேற்கொள்ளவும், விருந்தினர்களைத் தம் கைகள்போல் உதவும் உறுதுணையாகக் கருதவேண்டும் என்பதால், விருந்தினரே இல்லறத்தானின் கைகள்; தம்மோடு ஒத்த உறவினர்களுடன் இணைந்து உழைத்து ஒருவருக்கொருவர் பயன்பட்டுக்கொள்ளவேண்டும் என்பதால் 'ஒக்கல்' இல்லறத்தானின் உடல்; காட்சி, கேள்வி, உயிர்ப்பு, மொழி, அறிவு ஆகிய அனைத்துக்கும் அடிப்படையான தலைபோல் 'தான்' இருந்து அனைவரையும் பேணி, அறவழியில் நடத்துதல் வேண்டும் என்பதால் இல்லறத்தானுக்கு அவனே தலை என்பதாக உருவகப்பொருள் கொண்டு வாழவேண்டும். இதுதான் இத்திருக்குறளுக்கு இயல்பான பொருளாக இருக்க இயலும்.

பஞ்சமகாப் பாதகம்

ஆரியப் பிராமணர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பஞ்சமகாயக்ஞம் என்ற ஆரியப் பிராமண சமயவியல் சடங்குச் செயலை, தமிழரின் அறநெறிப் பண்பாட்டு அசைவுகளின் விளைவாகத் தோன்றிய இத்திருக்குறளுக்குப் பொருத்துதல் அறமன்று. ஆரியரின் மொழியில் சொல்வதானால், இது ஒரு பஞ்சமகாப் பாதகம்! பஞ்சமகாப் பாபம்!! ஆரியச்சார்பு கொண்ட பரிமேலழகர் முதல் இக்கால திரு.நாகசாமி வரை, தொடர்ந்து இட்டுக்கட்டிக் கூறும் இப்பொய்யுரை, ஆரிய வேதத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பற்ற பெரும்பான்மை மக்களின் பண்பாட்டு மரபுகளை அவமதிக்கும் செயல். தமிழகத்தில் வாழும் ஆரியர்களும், ஆரிய வேதத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்ப் பார்ப்பனர்களும் பஞ்சமகாயக்ஞம் செய்ய முழுஉரிமை பெற்றவர்கள். இவ்விரண்டு குழுக்களும் அல்லாத தமிழர்களின் பொதுமறை திருக்குறளுக்கு 'Hindu System' என்ற பெயரில் ஆரியப் பிராமணர்களின் சடங்கியல் முலாம் பூச முயல்வது கடும் கண்டனத்துக்குரியது.

 

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்! வீரங்கொள் கூட்டம்!  அன்னார்

உள்ளத்தால் ஒருவரே! மற் றுடலினால் பலராய்க் காண்பார்!

கள்ளத்தால் நெருங்கொணாதே எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

 

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

 

Link to comment
Share on other sites

குறள் பீடம் என மதுரைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டு, அதில் 3 நூல்களை எழுதியவர் பேராசிரியர்.காமாட்சி சீனிவாசன் எனும் இலங்கை சேர்ந்த சைவர், இவர் கிறிஸ்துவராய் மதம் மாறி' திருக்குறளும்- விவிலியமும் எனும் ஆய்வில் விவிலியக் கதைகளின் தன்மை உணர்ந்து சைவராய் இறந்தார். இவர் தெளிவாய் கூறியது திருக்குறளில் உள்ள அனைத்து சொற்களுக்கும் நாம் பொருள் காண, வள்ளுவருக்கு முந்தைய சங்கத் தொகை நூல்களையும், பின்னரான இரட்டை இலக்கியங்கள் ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளதோ அதே பொருளில் தான் வள்ளுவரும் பயன்படுத்தி உள்ளார், அதற்கு கா.சு.பிள்ளையோ, தேவநேயனோ, தெய்வநாயகமோ, ந.கிருஷ்ணனோ தன்னிச்சையாய் உளறீ பொருள் செய்தால் அது அவர்கள் கருத்து திருக்குறளின் உரை அல்ல.

puram%2Bthenpula.jpg
பேராசிரியர் ஏன் தன்னை கிறிஸ்துவ வேசித்தன மதமாற்றத்திற்காக இந்தியரைப் பிரித்து கெடுக்க செய்த கட்டுக் கதை ஆரியர் - திராவிடர் ஊகத்துள்ளே மூழ்கி திருக்குறளை சிதைக்கும் வேலையில் ஈடுபடுகிறார் தெரியவில்லை. கிறிஸ்துவ மதவெறி மெட்ராஸ் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியும், சாந்தோம் சர்ச்சும், தேவநேயன் பாவாணரும் விதைத்த நஞ்சுப் பொய்கள் கீழ்த்தரமானவை விலகி - பேராசிரியர் நேர்மையாய் செயல்படவேண்டும்.

தொன்ம கதை மூட நம்பிக்கை  முச்சங்கக் கதைகள், முழுதும் பொய் எனத் தெளிவாக்கப் பட்ட குமரிக் கண்டம் போன்றவற்றை இன்று வரலாற்று ஆய்வாளர் சிறிதும் ஏற்காதவற்றை குறளிற்கு உரை செய்ய தேவையில்லை.

Link to comment
Share on other sites

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள வகையற்ற கருத்து வறட்சியுற்றவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம் வசைமொழி. நும் வசைமொழி நீவிர் பிறந்த குலப்பெருமையைப் பறைசாற்றுகின்றது; உம் கைவசம் செறிவான பதிலுரைக்க எதுவும்  இல்லை என்பதும் புரிகின்றது.. யாம் எழுதுவது நும் போன்றோருக்கு அன்று. இனி நுமக்குப் மறுமொழி உரைக்கப் போவதில்லை. நற்றமிழ் அறிஞர்களும் அறவோர்களும் இவருரைக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

https://ramanan50.wordpress.com/2018/01/30/twelve-castes-among-ancient-tamils/

2 minutes ago, ramanan50 said:

There have been concerted attempts to portray that the ancient Tamil Society did not have Caste system and Tamils did not have Caste system at all and all were treated equal.

A perusal of Ancient texts like Tholkappiyam and other Sangam Literature indicate that not only were there the the four Varnasrama of the Vedic period, Brahmana , Kshatriya, Vysya and Sudra, but there were seven castes.

The Tamil and Sanskrit Grammar are said to have been revealed simultaneously to Agasthya and Panini by Lord Shiva! Though the literary proof for this claim can be had only in the post 15th century AD period, it cannot be denied that both Tamil and Sanskrit grammar have commonality in many ways. Yet another information that I want the readers of this mail-chain to know is that this Tamil Grammar work does say that the 4 varnas were there among the Tamil speaking people and adds 3 more categories, making it a 7- class society. The additional three are – astrologers, sages andPorunar (kshatriya vratyas).There was a separate class of astrologer called by a generic term “ARivan” – which is a Tamil equivalent of Daivajna.

Jayashree Saranathan blog

 

‘ Greek Traveler and Historian Megasthanes records these seven castes in his book Indica.

The Link for the book. <a href=””>Ancient Indian History and Civilization by Surendranath Jain

‘ 1. Maruta makkal or tribes of ploughmen (ulavar) inhabiting fertile, well-
watered tracts (panai) and living in villages called ur,
2. Kuravar makkal (or hill people who are foresters, make charms, and tell
fortunes and may come out of the forest to work in the panai,
3. Mullai makkal (or pastoralists, also called ayar (cowmen), kovalar
(shepherds), and idaiyar (cowherd or shepherd),
4. Neytal makkal ( or fishing people living in large coastal villages called
pattinam or small ones called pakkam, and
5. Palai makkal or people of the dry plains called eyinar. maravar, and veIar
who are hunters of both the dry plains and the forest.’

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.