Jump to content

உலகை உலுக்கும் 'மோமோ' சவால். பின்னணி என்ன?


Recommended Posts

உலகை உலுக்கும் 'மோமோ' சவால். பின்னணி என்ன?

அவளது பெயர் ''மோமோ''. மனதை பாதிக்கும் வகையில் தோன்றும் அவள் வெளிர் தோலுடன், வீங்கிய கண்களுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கிறாள்.

'மோமோ' சவால்படத்தின் காப்புரிமைPOLICÍA NACIONAL DE ESPAÑA

அவளது முகம் தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வழியாக பிரபலமானதாக மாறியிருக்கிறது.

யார் இந்த மோமோ?

அவள் உங்களது ஸ்மார்ட்ஃபோன் திரையில் திடீரென தோன்றக்கூடும் மேலும் தைரியமிருந்தால் சவாலில் பங்கெடுங்கள் என ஓர் சவாலையும் விடலாம். இதில் பங்கெடுத்தால் உங்களை மன ரீதியாக பாதிக்கும் வகையிலான விஷயங்கள் நடக்கக்கூடும். லத்தீன் அமெரிக்க அதிகாரிகள் இது போன்ற செய்திகளை மக்கள் தங்களுக்குள் பரப்ப கூடாது என அறிவுறுத்தியுள்ளது மேலும் இந்த ஆன்லைன் விளையாட்டு எல்லையை மீறக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

''இது எல்லாமே ஒரு பேஸ்புக் பக்கத்தில் இருந்துதான் துவங்கியது. ஒரு குழுவைச் சேர்ந்த சிலர் முன் தெரிந்திராத ஒரு எண்ணில் இருந்து அழைப்புவிடுக்க முடியுமா என ஒருவொருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டனர்'' என்கிறது மெக்சிகோ யுஐடிஐ காவல்துறை.

''மோமோவுக்கு நீங்கள் செய்தி அனுப்பினால் பதிலுக்கு அவள் வன்முறையை சித்தரிக்கும் விதமான படங்களை அனுப்புவாள் என பல பயனர்கள் கூறுகின்றனர். சிலர் அச்சுறுத்தும் செய்திகளை மோமோ அனுப்பியதாகவும் மேலும் சம்பந்தப்பட்ட தனிநபரின் தகவல்கள் அதில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்'' என்கிறது மெக்சிகோ காவல்துறை.

'மோமோ' சவால்படத்தின் காப்புரிமைTWITTER / @UIDIFGETABASCO

மோமோ சவாலானது தற்போது அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் வரை, அர்ஜென்டினாவில் இருந்து நேபாளம் வரை உலகம் முழுவதும் பரவிவருகிறது. ஸ்பெயினில் ''சமூக ஊடகத்தில் புதுப்போக்காக உருவெடுத்துவரும் இது போன்ற ஆபத்தமான சவால்களை மக்கள் தவிர்க்க வேண்டும்'' என அந்நாட்டு காவல்துறை மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

மெக்சிகோவின் பாணியில் ஸ்பெயின் காவல்துறையும் டிவிட்டரில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த சவாலில் பங்கெடுப்பதை கைவிடுங்கள் என ஊக்கமிழக்கச்செய்யும் பணியை செய்து வருகிறது.

#PasaDeChorradas எனும் ஹேஷ்டேகை பயன்படுத்தி இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. முட்டாள்தனத்தை புறக்கணியுங்கள் #IgnoreNonsense என்பதே இந்த ஹேஷ்டேகின் பொருள்.

காவல்துறையின் இந்த எச்சரிக்கைகள் ஒருபக்கமிருக்க, மோமோ என்பது என்ன? அது எங்கிருந்து துவங்கியது என்பதில் இன்னமும் நிறைய குழப்பங்கள் இருக்கவே செய்கிறது.

எங்கிருந்து வந்தது?

Where did it come from? எனும் கேள்வி ஆன்லைன் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. ஆன்லைன் தளமான ரெட்டிட்டில் சமீபத்தில் அதிகம் படிக்கப்பட்ட இக்கேள்வி இது. ''நான் ஒரு காணொளியை கண்டேன். அது விரும்பத்தகாத வகையில் காணப்படுகிறது. நான் இது ஒரு சேட்டைத்தனமான விஷயம் என நினைக்கிறேன். ஆனால் என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை'' என ஒரு பதிவு இருக்கிறது.

'மோமோ' சவால்படத்தின் காப்புரிமைTWITTER

அதற்கு பயனர்கள் மத்தியில் பிரபலமான விடை : '' ஸ்பானிஷ் மொழி பேசும் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்ட்டாகிராமில் இருந்து இந்த புகைப்படத்தை அவர் விரும்பியவாறு வெட்டி சுருக்கிவைத்துக் கொண்டார் (Crop).

மேலும் ஒரு வாட்ஸ்அப் கணக்கையும் துவங்கிவிட்டார். மக்கள் அந்த எண்ணை கண்டுகொண்டவுடன் வதந்திகள் பரவத்தொடங்கின. அதோடு நீங்கள் தொடர்பில் இருந்தால் அவள் வன்முறையான, மனதை பாதிக்கும் விதமான செய்திகளையும் படங்களையும் அனுப்புவாள்'' என்பதாகும்.

சில பயனர்கள் ''அவள் உங்களது அந்தரங்க தகவல்களை அணுகுகிறாள்'' என்றும் தெரிவித்துள்ளனர்.

ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டிருக்கும் யூடியூப் பிரபலம் ரெயின்போட் இந்த நூதன நிகழ்வு குறித்து ஜூலை 11 அன்று ஒரு காணொளியை வெளியிட்டார். 15 லட்சத்துக்கும் அதிகாமானோரால் அக்காணொளி பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரெயின்போட்டிற்கு இந்த மோமோ சவால் உருவாக்கியது யார் என்பது குறித்து தெரியவில்லை.

நமக்குத் தெரிந்தது என்னவெனில் இந்த வாட்ஸ்அப் சவாலானது மூன்று மொபைல் நம்பரோடு தொடர்புடையதாக இருக்கிறது .

ஜப்பான் நாட்டின் குறியீடு (+81), கொலம்பியா நாட்டின் குறியீடு (+52) மற்றும் மெக்சிகோ (+57) ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது .

'மோமோ' சவால்படத்தின் காப்புரிமைRFE/RL

இந்த சவால் எங்கிருந்து துவங்கியது என்பதைச் சொல்வது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. ஆனால் இந்த மோமோ என அறியப்படும் அந்த புகைப்படம் ஜப்பானில் இருந்து வந்திருக்கிறது.

மோமோவின் விரும்பத்தகாத முகமானது 2016-ல் டோக்கியோ நகரத்திலுள்ள வெண்ணிலா கேலரியில் நடந்த கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிலை ஒன்றுக்குச் சொந்தமானது.

  •  
  •  

விசித்திரமான மற்றும் அவலட்சணமான சிலை, ஓவியம், புகைப்படங்கள் போன்றவைகளின் சேகரிப்புகளை வெண்ணிலா கேலரி விரும்புகிறது.இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பேய்கள், ஆவிகள் குறித்த கண்காட்சியில் அனைவரையும் ஈர்க்கும் ஒன்றாக 'மோமோ' இருந்தது.

அப்போது நிறைய பேர் மோமோவுடன் படம் எடுத்துக்கொண்டனர். இன்ஸ்ட்டாகிராமில் இப்படங்கள் நிறைய காணப்பட்டன.

யாரோ ஒருவர் இன்ஸ்ட்டாகிராமில் இருந்து அப்படங்களை அவர்களிடம் ஏற்றவாறு திருத்தி முற்றிலும் வேறான ஒன்றாக மாற்றியமைத்தனர்.

'மோமோ' சவால்படத்தின் காப்புரிமைINSTAGRAM / MOMOSOY

அபாயங்கள் என்ன?

மோமோவுடன் விளையாடுவதிலுள்ள அபாயங்கள் என்ன?

முன்பின் அறியாத எண்ணுடன் தொடர்பு கொள்வது நல்ல யோசனை அல்ல. ஆனால் நீங்கள் ஏன் மோமோவை தவிர்த்து கடந்துபோக வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்கள் இருக்கிறது என்கிறது மெக்சிகோ யுஐடிஐ காவல்துறை.

  • உங்கள் தனிப்பட்ட தகவல் மற்றும் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளது
  • இது வன்முறையை தூண்டும். ஏன் தற்கொலை செய்யக் கூட தூண்டும்
  • பயனர்கள் தொந்தரவுக்கு உள்ளாகலாம்
  • பயனர்களை பயமுறுத்தி பணம் பறிப்பு செய்யப்படலாம்
  • மன அழுத்தம், பதட்டம் மற்றும் இன்சோம்னியா எனும் தூக்கமின்மை நோய் உள்ளிட்டவற்றால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படலாம்.

புது ''புளூ வேல்''

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு வைரலான குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய புளூ வேல் சவாலுடன் மோமோ சவால் ஏற்கனவே ஒப்பிடப்பட்டு வருகிறது .

புளுவ வேல் சவால் ரஷ்யாவிலிருந்து துவங்கினாலும் விரைவிலேயே சமூக வலைதளம் வாயிலாக உலகம் முழுவதும் பரவியது.

''மோமோ''' வாட்ஸ்அப் வாயிலாக பரவத்தொடங்கினாலும் குழந்தைகளுக்கான விளையாட்டான மைன்கிராஃப்ட் மூலமாக அதிகளவு கவனம்பெற்றுள்ளது.

அறியப்படாத எண்ணுடன் தொடர்பு கொள்ளவோ, அதனுடன் குறுஞ்செய்தி இணைப்புகளில் இணையவோ வேண்டாம் என அறிவுறுத்துகிறார்கள் இணைய குற்றவியல் வல்லுனர்கள்.

https://www.bbc.com/tamil/global-45032831

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.