Jump to content

2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க!


Recommended Posts

2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க!

 
 
 

'ஹப்பிள் போன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் (Turing Robotic Industries) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க!
 

ன்றைய நிலவரப்படி சந்தையில் அதிகம் விலை கொண்ட ஸ்மார்ட்போன் எதுவென்று கேட்டால் பலரும் யோசிக்காமல் ஐபோனை கை காட்டுவார்கள். இறுதியாக வெளியான ஐபோன் x-ன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் லட்ச ரூபாயைத் தாண்டும். ஆனால் அதைவிட விலை அதிகமாக ஒரு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்? 

மீண்டும் வரும் பழைய வடிவமைப்பு

ஹப்பிள் போன்

 

 

அறிமுகமான புதிதில் ஒரே வடிவத்தில் வெளியாகிக்கொண்டிருந்த மொபைல்கள் சிறிது காலத்துக்குப் பிறகு விதவிதமான வடிவமைப்புகளில் வெளியாகத் தொடங்கியது. நோக்கியா, சோனி எரிக்ஸன் எனப் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய வடிவங்களில் மொபைல்களை அறிமுகப்படுத்தின. குறிப்பாக ஸ்லைடு, ஃபோல்டபிள் எனப் பல வடிவங்களில் வெளியான மொபைல்களுக்கு சந்தையில் வரவேற்பு அப்போது அதிகமாக இருந்தது. பின்னர் டச் ஸ்க்ரீன் மொபைல்கள் பிரபலமாகத் தொடங்கிய பிறகு மற்ற வடிவங்கள் அனைத்தும் மறைந்து போனது. தற்பொழுது ஒரே வடிவத்தில்தான் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மீண்டும் ஃபோல்டபிள் வடிவத்தை அடிப்படையாக வைத்துப் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். 

 

ஹப்பிள் போன்

'ஹப்பிள் போன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் (Turing Robotic Industries) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் அதிக வசதி கொண்ட, உயர்ந்த விலை ஸ்மார்ட்போன்களை மட்டுமே தொடக்கம் முதல் உற்பத்தி செய்து வருகிறது. 'ஹப்பிள் போன்' தோற்றத்தில் ஒரே மொபைல் போலத் தெரிந்தாலும் இரண்டு மொபைல்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. போனின் இரண்டாவது பகுதியை மடக்க முடியும். இதன் முதன்மை பகுதியில் வளையும் திறன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. மடக்கும் வகையில் மேலே இருக்கும் இரண்டாவது பகுதி முன்புறம் 5.44 இன்ச் பின்புறம் 5.41 இன்ச் என இரண்டு டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது. முதன்மை பகுதியின் திரை 11.81 இன்ச் அளவு கொண்டது. இது 4 K வசதியைக் கொண்டது. மேல் பகுதியில் இருக்கும் இரண்டு திரைகளும்  FHD ரெசுல்யூஷன் கொண்டவை. 

ஹப்பிள் போன்

இரண்டு மொபைல்களையும் இணைக்கும் பகுதியிலிருக்கும் மெயின் கேமரா 60 MP 15x optical zoom திறன் கொண்டது. மேலே இருக்கும் பகுதியில் முன்புறம் 12 MP டூயல் கேமராவும் பின்புறம் 12 MP கேமராவும் இருக்கிறது. இது தவிர முதன்மைப் பகுதியில் பின்புறம் 12 MP டூயல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதன்படி பார்த்தால் ஹப்பிள் போனில் மொத்தம் ஆறு கேமராக்கள் இருக்கின்றன. நீர், தூசி ஆகியவற்றால் இந்த ஸ்மார்ட்போன் பாதிக்கப்படாத வகையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு சிம் கார்டுகளை இதில் பயன்படுத்த முடியும். முதன்மைப் பகுதியில் 3,300 mAh பேட்டரியும், மேல் பகுதியில் 2,800 mAh பேட்டரியும் இந்த மொபைல் செயல்படத் தேவையான மின் சக்தியைத் தரும். ஹப்பிள் ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும்.

 

 

ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தில் இயங்கும் இதில் Snapdragon 855 என்ற புதிய பிராஸசர் பயன்படுத்தப்படலாம். AR (augmented reality), VR (virtual reality), மற்றும் MR (mixed reality) என மூன்று தொழில்நுட்பங்களும் இதில் பயன்படுத்தப்படுவதால் விளையாடும்போது புதிய அனுபவத்தை இந்தப் போன் தரும் என நிறுவனம் உறுதியளித்திருக்கிறது. $2,750 அமெரிக்க டாலர்கள் விலை கொண்ட இதன் மதிப்பு இந்திய ரூபாய் 1.80 லட்சத்தைத் தாண்டுகிறது. இங்கே விற்பனைக்கு வரும்போது இதன் விலை எப்படியும் இரண்டு லட்சத்தைத் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஹப்பிள் ஸ்மார்ட்போன்

ஹப்பிள் போனின் மாதிரிப் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 2020-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2020 ஜூன் மாதம் அமெரிக்காவிலும், ஆகஸ்ட் மாதம் சீனா மற்றும் ஐரோப்பாவிலும் மற்ற நாடுகளில் டிசம்பர் மாதத்துக்குள்ளும் இந்த ஸ்மார்ட்போனை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கு ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

https://www.vikatan.com/news/information-technology/133017-turing-robotic-industries-new-smartphone-hubble-phone-has-three-displays.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.