Jump to content

தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


அவரால் முடிந்திருக்கும். முடியாதிருந்திருக்கும்.
அதுவும் பிரச்சனையில்லை. எதுவுமே தேவையில்லை.
அன்று நாம் அவரிடமிருந்து எதிர்பாத்தது ஒன்றே ஒன்று   தான்.
அவருடைய உண்மையான, நேர்மையான,  தார்மீகமான ஆதரவு அன்று ஈழத்து தமிழர்கள் பக்கம் இருந்திருக்க வேண்டும்.  
எதுவுமே அவரால் நடக்காது என்று அவருக்குத் தெரியும். தெரிந்தும் எதற்காக உண்ணாவிரத நாடகம்.

எத்தனையோ தடவை தோல்வியிலிருந்து வெற்றிக்கான பாதையை அமைத்த கலைஞர்.....
இன்னொரு தடவை தான் நேசித்த தமிழுக்காக .... அவர் நேசித்த தமிழ்  இனத்திற்காக ,,,
அவர் ஆதரவால் வளர்ந்த தமிழ் ஈழத்திற்காக .... இன்னும் ஒரேயொரு தடவை .... தனது ஆதரவை .... கொடுத்து ... அன்று அவருடைய ஆதரவுடன் இருந்த மத்திய அரசிலிருந்து வெளியேறி...,,, தனது இதயம் எப்போதும் தமிழிற்காகவே.... தமிழ் இனத்திற்காகவே..... உலகமெங்கும் வாழும் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தால்.... என் இதயம் அழும்..... என்று அடித்துக் கூறியிருந்தால்......
அவர் மீண்டும் வெற்றி முரசோடு வீறு கொண்டு எழுந்திருப்பார்.
கோடானு கோடி   தமிழ் மக்கள் இன்றும் அவர் பின்னால் அணி வகுத்துச் சென்று விடை கொடுத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நவீனன் செய்திகளை தொடர்ந்து “கருத்துக்களாக” பக்கம் பக்கமாக ஒட்டுவதால்தான் பலர் “இரங்கல் புறக்கணிப்பு” செய்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். நல்ல காலம் அப்படியெல்லாம் இல்லையென்று தெரிகின்றது.

புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்டதற்கும், இறுதிப்போரில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணத்தை எமக்குள்ளே தேடாமல் எல்லா அழிவுக்கும் “வெளியார்”தான் காரணம் என்று இலகுவாக பிறர்தலையில் ஏற்றிவைத்துவிட்டு,  படுகொலைகளை தடுக்க கலைஞர் உதவவில்லை என்று அவரையும் ஈழத் தமிழர்களுக்கு எதிரியாகக் காட்ட ஒரு கூட்டம் இருக்கின்றது. தமது வங்குரோத்தை மறைக்க இப்படியான சந்தர்ப்பத்தை நழுவவிடுவார்களா என்ன!

கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றவர். பலகோடி தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அம்மக்களை இழிவுசெய்யாமல் இருக்கவேண்டியது சில இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்யும்.

கலைஞர் அவர்கள் ஈழப்போராட்ட இறுதிக்கட்டத்தில் அவசியமற்ற பண்டைத்தமிழை உதிர்க்காமலும்.....பகட்டுக்கு உண்ணவிரதமிருந்து போர்முடிந்துவிட்டது என அறிக்கை விடாமலிருந்திருந்தால்  இன்று அகில  தமிழரே  உலகம் வியக்கும் வண்ணம் பிரியாவிடை செய்திருப்பர்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கலைஞர் அவர்கள் ஈழப்போராட்ட இறுதிக்கட்டத்தில் அவசியமற்ற பண்டைத்தமிழை உதிர்க்காமலும்.....பகட்டுக்கு உண்ணவிரதமிருந்து போர்முடிந்துவிட்டது என அறிக்கை விடாமலிருந்திருந்தால்  இன்று அகில  தமிழரே  உலகம் வியக்கும் வண்ணம் பிரியாவிடை செய்திருப்பர்.
 

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

அது இந்திய அரசியலுக்குள் இருந்த வரட்டு கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்டது. கருணாநிதியின் பூதவுடல் புதைக்கப்பட்ட இடம் உட்பட.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

கிருபன் பல ஆயிரங்களைப் பற்றிக் கதைக்கின்றார்.
நாங்கள் பல கோடிகளைப்பற்றிக் கதைக்கின்றோம்.

21 குண்டுகளின் மரியாதையைவிட
பத்து ஏழை விதவைகளின் கண்ணீரின் மதிப்பு அதிகம் என்று நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

கிருபன் பல ஆயிரங்களைப் பற்றிக் கதைக்கின்றார்.
நாங்கள் பல கோடிகளைப்பற்றிக் கதைக்கின்றோம்.

21 குண்டுகளின் மரியாதையைவிட
பத்து ஏழை விதவைகளின் கண்ணீரின் மதிப்பு அதிகம் என்று நான் நினைக்கின்றேன்.

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

Link to comment
Share on other sites

மக்கள் தி மு க வின் துரோகத்துக்கு தேர்தல் தோல்விகளால் பரிசளித்துள்ளனர். எவரும் போராட்டத் தோல்விக்கு அவர் காரணம் என்று சொல்லவில்லை. அவர் செய்த கபடத்தனமான துரோகத்தையுயம் அதனால எழும் வெறுப்பையும் காட்டுகிறோம். அவர் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டங்களை அடக்கி தனது குடும்ப வியாபார நலங்களைக் காப்பாறி உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை கிருபன்.
இங்கு நான் கூறுவது அதுவல்ல.எத்தனையோ தடவை எங்களுக்காய் பதவியை இழந்த கலைஞர் அவர்கள் இறுதி யுத்த நேரத்தில் எங்களுடன் உண்மையான நேர்மையான வழியில் கை கோர்க்கவில்லை.
எத்தனை அழிவுகளும்  நடந்திருக்கலாம். இழப்புக்களை அவரால் நிறுத்தியிருக்க முடியாது. அவலங்களையும் நிறுத்தியிருக்க முடியாது.
ஆனாலும் கலைஞரும் எங்களுக்காகத் தனது குடும்ப அரசியலைப் புறக்கணித்து பதவி ஆசைகளை புறந்தள்ளி தமிழிற்காக தமிழ் இனத்திற்காக மட்டுமே,,, தமிழிற்காக மட்டுமே ,,,, தான் வாழ்கின்றேன் என்று வாழ்ந்து காட்டியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமில்லை.

ஏனெனில்.. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்துக்கு முன்னரே.. ஈழத்தில் ஹிந்தியாவின் அராஜகம் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. அதனை தடுக்க கருணாநிதியோ.. அல்லது அம்மையார் செயலலிதாவோ எந்த திடமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

எம் ஜி ஆர் காலத்தில் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக தமிழீழ ஆதரவை எடுத்திருந்த கருணாநிதி.. எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்.. ஈழத்தமிழினத்தை நட்டாற்றில் விட்டது தான் அதிகம்.

எமது போராட்டம் என்பது.. குறிப்பாக.. ஆயுதப் போராட்டம் என்பது தமிழகத்திடம் இருந்து தார்மீக ஆதவரை எம் ஜி ஆருக்குப் பின் பெறவில்லை என்பது தான் யதார்த்தம். அதற்கு எம் ஜி ஆருக்குப் பின் ஆட்சிப் பீடமேறிய கருணாநிதி.. செயலலிதா போன்றோரின் சுய நல அரசியலும்.. மத்திய ஹிந்திய சர்க்காரை திருப்திப்படுத்தி தமது தேவைகளை தீர்த்துக் கொள்வது என்ற கொள்கையும் தான் முக்கிய காரணம். 

ராஜீவ் கொலை தமிழகத்தில் பெரிய செல்வாக்குச் செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால்.. அதைச் சாட்டு வைத்து.. ஈழ ஆதரவு அரசியலை பலவீனப்படுத்த கருணாநிதியும் செயலலிதாவும் முண்டு கொடுத்தார்கள் என்பதே கள யதார்த்தமாகும். 

Link to comment
Share on other sites

உடன்பிறப்புகள் பத்திரமாக வீடு திரும்பியப் பிறகே உறங்கச் செல்வேன்..! மு.க.ஸ்டாலின் உருக்கம்

 
 

கருணாநிதியின் திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணாவுடன் இணையும் `இறுதிப் பரிசை' நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றத் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்களுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'நம் உயிருடன் கலந்துவிட்ட தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம். ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கருணாநிதியை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும் நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம். அவர், நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்தளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.

 

 

karunanidhi_23546.jpg

ஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தமத் தலைவராகவும் திகழ்ந்த தலைவர் கருணாநிதி திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளைப் போற்றிப் பாதுகாத்தவர். 

 

 

அந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள்-அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், கருணாநிதியின் உயிர் காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும் பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்து பொதுமக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை-ஊடகத்துறையினர் என அனைவருக்கும் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

homage_3_23271.jpg

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான நம் தலைவர் கருணாநிதி, தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் தலைவருக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அ.தி.மு.க அரசின் காழ்ப்பு உணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.

 

 

பேரறிஞர் அண்ணாவுக்கு நம் தலைவர் கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். தலைவர் கருணாநிதியின் திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணாவுடன் இணையும் `இறுதிப் பரிசை' நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய கழக சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வில் அழுத்தம் திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்கச் செய்த கழக சட்டத்திட்ட திருத்த குழுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை - ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து தலைவர் கருணாநிதிக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.

காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த தலைவர் கலைஞர் அவர்களை காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது "கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை" சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது. தலைவர் கருணாநிதியின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளைச் செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  மிகச் சோதனையான காலகட்டத்தில் தலைவர் கருணாநிதியின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கும், இந்தியத் திருநாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆகவே, கழகத் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிச் செல்லும் உடன்பிறப்புகள் அனைவரும் பத்திரமாக வீடு சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வாகனங்களில் வந்ததால் ஓய்வு இல்லாமல் தவிக்கும் உடன்பிறப்புகள் இன்று இரவு சென்னையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டு நாளை காலை புறப்பட்டுச் செல்லலாம். தூக்கத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதைக் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். தலைவர் கருணாநிதியைப் பார்த்துவிட்டுச் செல்லும் ஒவ்வொரு உடன்பிறப்பும் பத்திரமாக வீடு திரும்பி விட்டார்கள் என்ற செய்தி கடைசி உடன்பிறப்பிடமிருந்தும் கிடைத்த பிறகுதான் `உங்களில் ஒருவனான' நான் உறங்கச் செல்வேன் என்பதை ஒவ்வொரு உடன்பிறப்புகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஈடு செய்ய முடியாத பேரிழப்பான தலைவர் கருணாநிதியின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

 

https://www.vikatan.com/news/tamilnadu/133422-mkstalin-letter-to-his-party-cadres.html

Link to comment
Share on other sites

நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய தமிழ் தலைவர் அவர், இது போல் ஒரு தமிழ் தலைவரின் இறுதி ஊர்வலத்தை நான் இனி  பார்க்க போறது இல்லை 

பெருவாழ்வு வாழ்ந்த பெருமகன் தொண்டர்களும் அவர் மக்களும் சிறப்பாக விடை கொடுத்தார்கள் 

அவர் தனது இரத்த உறவுகளின் (மகன் மகள்,பேரன் பூட்டன் மரணத்தை அவர் கண்ணால் பார்க்கவில்லை என்பது சிறப்பு ?

ஒருவித உணர்ச்சிகொந்தளிப்புடன் உறுதி ஊர்வலத்தை  தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தேன், நீதிமன்ற தீர்ப்பு வந்து ஸ்டாலின் தொண்டர்களை நோக்கி கை குவித்து விட்டு துரைமுருகன் தோளில் சாயும் போது என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த்து,மற்றது விஜயகாந் எமோஷனல் இரங்கல், இறுதியில் கனிமொழி கன்னத்தை கைகளால்  தொட்டு முத்தமிட்டு இறுதி விடை கொடுத்தது என்பன உணர்வு பூர்வமாக இருந்த்து,

இறுதியாக தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இரங்கல் தெரிவித்து இருப்பார் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். 

இச்செய்தி தவறானது . முதன் முறையாக அவர் 1977ல் பதவி இழக்கப்பட்டார். அக்காலங்களில் ஈழப்போராட்டம் எழுச்சி பெறவில்லை.

http://www.keetru.com/literature/essays/packiyarasan.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீள கோட்பட்டுக்கு 100% மான தமிழர்களே ஆத‌ரவில்லாத‌தபோது பிறகேன் இன்னோர் நாட்டின் அரசில்வாதியை குற்றம் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய தலிவர் என்ற வரிசையில் இடம்பிடித்துவிட்டார்....
அதை நிருபிப்பதில் இந்திய மத்திய அரசு முன்னுக்கு நின்று உழைத்துள்ளது...

இந்திய தேசியக்கொடிபோர்க்கப்பட்டு
இந்திய இராணுவ ம‌ரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்..

உதய சூரியன் கொடி,திராவிட கொடி எதுவும் அவர் மேல் போர்க்கப்பட‌வில்லை....வாழும் பொழுது கிந்தி எதிர்ப்பு,தேசிய எதிர்ப்பு, ....

Link to comment
Share on other sites

தமிழ் ஈழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும்!


 

 

m-karunanidhi-a-lifelong-warrior-for-sri-lankan-tamil-cause-but-misunderstood-in-the-end

 

கட்டுரையாளர்: கே-வெங்கடரமணன்

ஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடு அந்தத் தலைவரின் சமீபத்திய நடவடிகைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது பொதுவெளியில் உருவான கருத்துகளால் மறைக்கப்படுவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

 

அதுதான் கருணாநிதிக்கு நடந்திருக்கிறது. 50 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த கருணாநிதியின் குரலின் மீது 2009-ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிநாட்களில் அவர் செயலற்று இருந்ததாக உருவான பார்வையால் களங்கப்பட்டது.

கருணாநிதியின் ஆதரவாளார்களுக்கு அவர் இன்றளவும் தமிழ் இனத்தலைவர் தான். அவரது அரசியல் ஆரம்ப காலகட்டத்தில் அவர் இந்த அடையாளத்தை பெருமிதத்துடன் சுமந்திருந்தார். ஆனால், அவரது இறுதிகாலகட்டத்தில் பலரும் கருணாநிதியை தமிழ் இனத்தலைவராகப் பார்க்கவில்லை. 
கருணாநிதி மீதான வெறுப்பு 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் மறைவுக்குப் பின்னர்தான் உருவெடுத்தது என்று கூறலாம்.

ஆனால், இந்த வெறுப்பு கருணாநிதி மீது திணிக்கப்பட்ட அநீதி. காரணம், கருணாநிதி இலங்கை தமிழ்த் தலைவர்கள் பலருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர்களது மரியாதையும் பெற்றிருந்தார். பாக் ஜலசந்தியில் தமிழர்கள் அடைந்த துயரத்தில் பங்கேற்பவராக அவர்களது அரசியல் பிரச்சினையை நன்கு அறிந்திவராக இருந்தார்.
தனித் தமிழ் ஈழம் என்ற அவரது கோரிக்கையுடன் நிறைய பேர் உடன்படாவிட்டாலும்கூட தான் தமிழர்களுக்கான நியாயமான தீர்வுக்காக துணை நிற்பதாக அப்போது கருணாநிதி தெளிவுபடுத்தினார்.

1956-ல் சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். இலங்கை அரசின் 'சிங்களம் மட்டுமே' (Sinhala Only) என்ற கொள்கையைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் அது.
இலங்கை தமிழரின் அரசியல் தலைவராக தந்தையாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சா.ஜே.வே.செல்வநாயகத்தை (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்) கருணாநிதி நன்கு அறிந்திருந்தார். தமிழர் விடுதலை கூட்டணியின் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துக்கு நெருங்கிய நண்பராக கருணாநிதி இருந்தார். 
1977-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பேரணிகளை ஒருங்கிணைத்தவர் கருணாநிதி. 1983-ல் நடந்த வன்முறைகளையும் அவர் கண்டித்தார். இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிராக 1983-ல் நடந்த கலவரத்துக்குப் பிறகு கருணாநிதியும், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். 

1983-க்குப் பின்னர் தமிழ் போராளிகள் இயக்கம் சென்னையிலேயே தலைமையிடம் கொண்டு இயங்கத் தொடங்கின. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவை எல்டிடிஇ பெற்றிருந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) திமுகவின் ஆதரவைப் பெற்றிருந்தது. அதன் நீட்சியாகத் தமிழ் ஈழ ஆதரவு இயக்கத்தை (TESO) கருணாநிதி உருவாக்கினார். 
1986-ல் மே மாதத்தில் மதுரையில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டை கருணாநிதி ஒருங்கிணைத்தார். இலங்கையில் தமிழர்கள் தங்களின் சுய அதிகாரத்தை கோருவதற்கு டெசோ மாநாடு பரந்துபட்ட அரசியல் தளமாக இருந்தது.
மதுரை கூட்டத்தில், வாஜ்பாய், எச்.என்.பகுகுணா, சுப்பிரமணியன் சுவாமி, என்.டி.ராமா ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தகாலகட்டத்தில்தான் இலங்கையில் இயங்கிய பல தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு இடையே நிலவிய சகோதர யுத்தத்தை கருணாநிதி தெரிந்து கொண்டார். 

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் டெலோ போராளி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த வேளையில் எல்டிடிஇ அமைப்புக்கு கருணாநிதி தனிப்பட்ட முறையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்னத்தை விடுவிக்குமாறு கோரியிருந்தார். ஆனால், இதற்கெல்லாம் புலிகள் செவிசாய்க்கவே இல்லை. அடுத்தடுத்து டெலோ தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 
இதை கருணாநிதி என்றுமே மறக்கவில்லை. அதன்பின்னர் நிறையமுறை தனது உரையின்போது தமிழ் ஈழம் அமையாததற்கு தமிழ் இயக்கங்கள் மத்தியில் நடந்த சகோதர யுத்தமே காரணம் எனக் கூறிவந்தார்.

ஐபிகேஎப்-க்கு எதிர்ப்பு
இந்தியா - இலங்கை 1987 ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு இந்தியா அமைதிக் குழுவை அனுப்பும் முடிவை கருணாநிதி வெகுக் கடுமையாக விமர்சித்தார். இலங்கையில் ஐபிகேப் மேற்கொண்ட அத்துமீறல்களை சுட்டிக்காட்டியதாலேயே அவர் தேச விரோதியாக அடையாளம் காட்டப்பட்டார்.

1989-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது அவர் பங்கு வகித்த தேசிய முன்னணி கூட்டணி, எல்டிடிஇ தலைமையுடன் தொடர்பு கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கருணாநிதியைக் கோரியது. அந்த நேரத்தில் இலங்கையில் இருந்து ஐபிகேஎப்-பும் திரும்பப் பெறப்பட்டிருந்தது. கருணாநிதியின் ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகள் தமிழகத்தில் சுதந்திரமாக உலவினர் என்ற குற்றச்சாட்டை கருணாநிதி திட்டவட்டமாக மறுத்தார். அதேவேளையில், தமிழகத்தில் தங்களுக்கு சாதகமாக நிலவிய சூழலை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். 
இந்நிலையில்தான், விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதாக கருணாநிதியின் ஆட்சி 1991 ஜனவரி 30-ல் கலைக்கப்பட்டது. 4 மாதங்களுக்குப் பின்னர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் எல்டிடிஇ ஆதரவாளர்களுக்கு அவர்சற்றும் இரங்கவில்லை. 
ஆனால், தனித் தமிழ் ஈழமே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை மட்டுமே அவர் அடிக்கடி நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். 

2000-ல் மத்தியில் வாஜ்பாய் அரசுடன் கூட்டனியில் இருந்தபோது இலங்கையில் சிங்களர்கள் - தமிழர்கள் இடையேயான பிரச்சினைக்கு செக்கஸ்லோவாகியா மாதிரியில் தீர்வு காணலாம் என யோசனை கூறியிருந்தார்.
2006-ல் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு மீண்டும் இலங்கையில் வெறுப்புணர்வு மேலோங்கியது. 2008-09 காலகட்டத்தில் இலங்கையில் போர் தீவிரமடைந்தது. அப்போது, இலங்கை தமிழர்களை அழிவிழிருந்து மீட்க கருணாநிதி போதுமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறாரா என்ற விமர்சனங்கள் மேலோங்கியபோது. இந்த விமர்சனங்கள் அவரை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஆட்சியில் இருந்தது அவருக்கு அரசியல் நெருக்கடியைத் தந்தது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்ததால், இலங்கை போரில் அப்பாவி தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு ஆவண செய்து வருகிறது என்ற காங்கிரஸ் கூறிய வாக்கினை நம்பியாக வேண்டிய சூழ்நிலையில் அவர் இருந்தார்.

போர் சூழல் முற்றியிருந்ததால் இலங்கையில் போரை திரும்பப் பெறச் செய்வது என்பதை கருணாநிதி நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால் ஒரு நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஆனால், மதியப் பொழுதிலேயே, மத்திய அரசு தங்களுக்கு இலங்கையிடம் இருந்து உறுதிமொழி வந்திருப்பதாகத் தெரிவிக்க உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். 
பெரிய அளவிலான தாக்குதல்கள் முடிந்துவிட்டதாக இலங்கை உறுதி அளித்ததாக மத்திய அரசு கூறியதால்தான் கருணாநிதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

1533706664.jpg

ஆனால், போர் அதன் பின்னரும் நீடித்தது. மே மாத மத்தியில் எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அப்போது கருணாநிதி மீது விமர்சனங்கள் குவிந்தன.

போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அறிவித்ததை நம்பிதான் உண்ணாவிரதத்தை முடித்ததை தன் மீது பழியாக சுமத்த முடியாது என்று கருணாநிதி மீண்டும் மீண்டும் விளக்கினார்.

அன்றிலிருந்து இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தத் தொடங்கினார். 2012-ல் டெசோ மறு ஆய்வுக் கூட்டம் நடந்தது. கொசோவா, மான்டெனக்ரோ, கிழக்கு தைமோர், தெற்கு சூடான் உதாரணங்களை சுட்டிக்காட்டி தமிழர்களுக்கு தனி நாடு தர பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்மொழிந்தார்.

கருணாநிதி தனது கடைசி காலகட்டத்தில் தன் மீது சுமத்தப்பட்ட இருமைக் கொள்கை மீதான விமர்சனங்களை எதிர்கொண்டே வாழ வேண்டியிருந்தது. கருணாநிதி எதிர்ப்பாளர்கள் அவரை எல்டிடிஇ ஆதரவாளர் என்றனர். தமிழ்த் தேசியவாதிகளோ அவரது வார்த்தையிலோ செயலிலோ ஏதோ ஒரு தடுமாற்றம் ஏற்படாதா அதை வைத்து கருணாநிதி இன விரோதி என வியாபாரம் செய்யலாமா எனக் காத்திருந்தனர்.

ஆழமான பங்களிப்பு:
ஆனால், கருணாநிதியின் உண்மையான ஆதரவாளர்கள் இன்றளவும் தமிழர் நலனுக்காக அவர் ஆழமாக பங்களித்திருப்பதாக நம்புகின்றனர். அவர் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாளராக இருந்திருக்கலாம் ஆனால் அதை பயன்படுத்தி தமிழகத்தில் எல்டிடிஇ ஆதரவு இயக்கங்கள் பிரிவினைவாதத்தை விதைக்காமல் காப்பதில் கவனமாக இருந்தார்.

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழ் அகதிகள் மீது கருணாநிதி தனிப்பட்ட கரிசனம் கொண்டிருந்தார். அவர்களுக்காக நலத்திட்டங்களை அறிவித்தார். 2006-ல், இலங்கை அகதிகள் முகாம்களில் நிலைமையை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அவர்கள் வசிப்பிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கினார்.

https://www.kamadenu.in/news/politics/4614-m-karunanidhi-a-lifelong-warrior-for-sri-lankan-tamil-cause-but-misunderstood-in-the-end.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maruthankerny said:

வாங்கோ வாங்கோ !
எப்போதும் கூடத்துக்குள் நிக்கிறதிலே 
சில நண்மைகள் உண்டு. 

தனித்து நின்று கல்லெறி வாங்கிய 
இளமைக்காலம் கடந்து போகிறது.

இப்ப நான் எங்க போனாலும் அட‌க்கித்தான் வாசிக்கிறது....உடம்பும் தாங்காது,மனசும் தாங்காது
tw_tounge:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இப்ப நான் எங்க போனாலும் அட‌க்கித்தான் வாசிக்கிறது....உடம்பும் தாங்காது,மனசும் தாங்காது
tw_tounge:

எனக்கு உடம்புதான் அப்பிடி இப்பிடி.....
ஆனால்  மனசு பதினாறிலைதான் நிப்பன் எண்டு அடம்புடிக்குது :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இந்திய தேசிய தலிவர் என்ற வரிசையில் இடம்பிடித்துவிட்டார்....
அதை நிருபிப்பதில் இந்திய மத்திய அரசு முன்னுக்கு நின்று உழைத்துள்ளது...

இந்திய தேசியக்கொடிபோர்க்கப்பட்டு
இந்திய இராணுவ ம‌ரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்..

உதய சூரியன் கொடி,திராவிட கொடி எதுவும் அவர் மேல் போர்க்கப்பட‌வில்லை....வாழும் பொழுது கிந்தி எதிர்ப்பு,தேசிய எதிர்ப்பு, ....

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

அவர் வாழும் பொழுது அப்படி வாழவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

ஆனால் உண்மை ....அவ்வாறில்லை!

இந்திய நடுவண் அரசு....தமிழ் நாட்டை என்றுமே....மாற்றாந்தாய்....மனப்பான்மையுடனேயே நடத்துகின்றது!

 

வட இந்தியர்களின் பார்வையில்......மெட்ராஸ் காரன்....இந்தியனே அல்ல!

சுரண்டப் படுவதற்காகவே...கடவுள்களால் படைக்கப்பட்டவன்!

 

அதே போலத் தான்......சிங்கள மக்களின் பார்வையிலும் தமிழனின் நிலை!

 

நீ வேண்டாம்.....ஆனால் உனது பணமும் உழைப்பும் வேண்டும்!

அண்மைய இராணுவத் தளபதியின்.....அழைப்பைப் பாருங்கள்! 

ஆசையிலா...அவர் உங்களை அழைக்கிறார்?

 

இதைப் போய்...இலங்கை முஸ்லிம்களிடம் சொல்லிப்பாருங்கள்!

முதலில்....சிறிலங்கன்......பிறகு தான் முஸ்லிம் என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

நீங்கள் என்னவென்றாலும் சொல்லலாம்.. ஆனால் நாங்கள் யாரும் அப்படி நினைப்பதில்லை..!

முதலில் தமிழன்,

விதி வசத்தால் பின் 'பொந்தியன்' priso.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பெருந்தன்மையாக 
குட்ட குட்ட குனிந்துகொண்டு இருந்தால் 
பின்பு குட்டியவர் ஏதும் தருவார் என்று எதிர்பார்க்கிறார்கள் 

கடந்த வரலாறும் தொடரும் வரலாறும் 
அவர் குட்டி முடிய ... குட்டுவதற்கு வேறு ஆட்களை 
கூட்டிவந்த கதைதான் தமிழனோடு உண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.