Jump to content

தி.மு.க., தலைவர் கருணாநிதி காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


அவரால் முடிந்திருக்கும். முடியாதிருந்திருக்கும்.
அதுவும் பிரச்சனையில்லை. எதுவுமே தேவையில்லை.
அன்று நாம் அவரிடமிருந்து எதிர்பாத்தது ஒன்றே ஒன்று   தான்.
அவருடைய உண்மையான, நேர்மையான,  தார்மீகமான ஆதரவு அன்று ஈழத்து தமிழர்கள் பக்கம் இருந்திருக்க வேண்டும்.  
எதுவுமே அவரால் நடக்காது என்று அவருக்குத் தெரியும். தெரிந்தும் எதற்காக உண்ணாவிரத நாடகம்.

எத்தனையோ தடவை தோல்வியிலிருந்து வெற்றிக்கான பாதையை அமைத்த கலைஞர்.....
இன்னொரு தடவை தான் நேசித்த தமிழுக்காக .... அவர் நேசித்த தமிழ்  இனத்திற்காக ,,,
அவர் ஆதரவால் வளர்ந்த தமிழ் ஈழத்திற்காக .... இன்னும் ஒரேயொரு தடவை .... தனது ஆதரவை .... கொடுத்து ... அன்று அவருடைய ஆதரவுடன் இருந்த மத்திய அரசிலிருந்து வெளியேறி...,,, தனது இதயம் எப்போதும் தமிழிற்காகவே.... தமிழ் இனத்திற்காகவே..... உலகமெங்கும் வாழும் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தால்.... என் இதயம் அழும்..... என்று அடித்துக் கூறியிருந்தால்......
அவர் மீண்டும் வெற்றி முரசோடு வீறு கொண்டு எழுந்திருப்பார்.
கோடானு கோடி   தமிழ் மக்கள் இன்றும் அவர் பின்னால் அணி வகுத்துச் சென்று விடை கொடுத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நவீனன் செய்திகளை தொடர்ந்து “கருத்துக்களாக” பக்கம் பக்கமாக ஒட்டுவதால்தான் பலர் “இரங்கல் புறக்கணிப்பு” செய்கின்றார்கள் என்று நான் நினைத்தேன். நல்ல காலம் அப்படியெல்லாம் இல்லையென்று தெரிகின்றது.

புலிகளின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடித்துவைக்கப்பட்டதற்கும், இறுதிப்போரில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணத்தை எமக்குள்ளே தேடாமல் எல்லா அழிவுக்கும் “வெளியார்”தான் காரணம் என்று இலகுவாக பிறர்தலையில் ஏற்றிவைத்துவிட்டு,  படுகொலைகளை தடுக்க கலைஞர் உதவவில்லை என்று அவரையும் ஈழத் தமிழர்களுக்கு எதிரியாகக் காட்ட ஒரு கூட்டம் இருக்கின்றது. தமது வங்குரோத்தை மறைக்க இப்படியான சந்தர்ப்பத்தை நழுவவிடுவார்களா என்ன!

கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யாவிட்டாலும், தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றவர். பலகோடி தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். அம்மக்களை இழிவுசெய்யாமல் இருக்கவேண்டியது சில இலட்சம் ஈழத் தமிழர்களுக்கு நல்லது செய்யும்.

கலைஞர் அவர்கள் ஈழப்போராட்ட இறுதிக்கட்டத்தில் அவசியமற்ற பண்டைத்தமிழை உதிர்க்காமலும்.....பகட்டுக்கு உண்ணவிரதமிருந்து போர்முடிந்துவிட்டது என அறிக்கை விடாமலிருந்திருந்தால்  இன்று அகில  தமிழரே  உலகம் வியக்கும் வண்ணம் பிரியாவிடை செய்திருப்பர்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

கலைஞர் அவர்கள் ஈழப்போராட்ட இறுதிக்கட்டத்தில் அவசியமற்ற பண்டைத்தமிழை உதிர்க்காமலும்.....பகட்டுக்கு உண்ணவிரதமிருந்து போர்முடிந்துவிட்டது என அறிக்கை விடாமலிருந்திருந்தால்  இன்று அகில  தமிழரே  உலகம் வியக்கும் வண்ணம் பிரியாவிடை செய்திருப்பர்.
 

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

அது இந்திய அரசியலுக்குள் இருந்த வரட்டு கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்டது. கருணாநிதியின் பூதவுடல் புதைக்கப்பட்ட இடம் உட்பட.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

சென்னையில் மரீனா கடற்கரையில் 21 குண்டுகள் முழங்க அரசமுழுமரியாதையுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரியாவிடை கொடுத்துத்தான் உள்ளனர். 

 

கிருபன் பல ஆயிரங்களைப் பற்றிக் கதைக்கின்றார்.
நாங்கள் பல கோடிகளைப்பற்றிக் கதைக்கின்றோம்.

21 குண்டுகளின் மரியாதையைவிட
பத்து ஏழை விதவைகளின் கண்ணீரின் மதிப்பு அதிகம் என்று நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

கிருபன் பல ஆயிரங்களைப் பற்றிக் கதைக்கின்றார்.
நாங்கள் பல கோடிகளைப்பற்றிக் கதைக்கின்றோம்.

21 குண்டுகளின் மரியாதையைவிட
பத்து ஏழை விதவைகளின் கண்ணீரின் மதிப்பு அதிகம் என்று நான் நினைக்கின்றேன்.

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

Link to comment
Share on other sites

மக்கள் தி மு க வின் துரோகத்துக்கு தேர்தல் தோல்விகளால் பரிசளித்துள்ளனர். எவரும் போராட்டத் தோல்விக்கு அவர் காரணம் என்று சொல்லவில்லை. அவர் செய்த கபடத்தனமான துரோகத்தையுயம் அதனால எழும் வெறுப்பையும் காட்டுகிறோம். அவர் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி அவர்களின் போராட்டங்களை அடக்கி தனது குடும்ப வியாபார நலங்களைக் காப்பாறி உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை கிருபன்.
இங்கு நான் கூறுவது அதுவல்ல.எத்தனையோ தடவை எங்களுக்காய் பதவியை இழந்த கலைஞர் அவர்கள் இறுதி யுத்த நேரத்தில் எங்களுடன் உண்மையான நேர்மையான வழியில் கை கோர்க்கவில்லை.
எத்தனை அழிவுகளும்  நடந்திருக்கலாம். இழப்புக்களை அவரால் நிறுத்தியிருக்க முடியாது. அவலங்களையும் நிறுத்தியிருக்க முடியாது.
ஆனாலும் கலைஞரும் எங்களுக்காகத் தனது குடும்ப அரசியலைப் புறக்கணித்து பதவி ஆசைகளை புறந்தள்ளி தமிழிற்காக தமிழ் இனத்திற்காக மட்டுமே,,, தமிழிற்காக மட்டுமே ,,,, தான் வாழ்கின்றேன் என்று வாழ்ந்து காட்டியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வாத்தியார் அண்ணா,

பத்து அல்லது நூறு விதவைகளின் கண்ணீருக்கு கலைஞர் காரணமில்லை.

பதிவுகள் இணையத்தில் உள்ளதுதான் எனது பதிலும்..

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் தமிழகம் அழுத்தங்களைக் கொடுக்கும் நிலையில் ஒரு காலத்திலிருந்தது. தமிழக மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்த காலமொன்றிருந்தது. ஆனால் அவ்வாதரவினை பிரதமராக மீண்டும் வரவிருந்த ராஜீவ்காந்தி கொலைச்சம்பவம் மாற்றியமைத்து விட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினையே ஈழத்தமிழர்கள் விடயத்தில் முற்றாக மாற்றி விட்ட கொலைச்சம்பவம் அது. இந்நிலையில் கலைஞர் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம் என்று நினைப்பது நடைமுறைச்சாத்தியமானதல்ல. ஆனால் அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். இலங்கையில் படுகொலைகளைப்புரிந்து மீண்ட இந்தியப்படையினரை வரவேற்கச் செல்லாதவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் போராட்டத்தோல்விக்கு அவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியற் செயற்பாடுகளே காரணம். கலைஞரின் செயற்பாடுகள் அல்ல. 

இது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமில்லை.

ஏனெனில்.. ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்துக்கு முன்னரே.. ஈழத்தில் ஹிந்தியாவின் அராஜகம் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. அதனை தடுக்க கருணாநிதியோ.. அல்லது அம்மையார் செயலலிதாவோ எந்த திடமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

எம் ஜி ஆர் காலத்தில் அவருக்கு ஏட்டிக்குப் போட்டியாக தமிழீழ ஆதரவை எடுத்திருந்த கருணாநிதி.. எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின்.. ஈழத்தமிழினத்தை நட்டாற்றில் விட்டது தான் அதிகம்.

எமது போராட்டம் என்பது.. குறிப்பாக.. ஆயுதப் போராட்டம் என்பது தமிழகத்திடம் இருந்து தார்மீக ஆதவரை எம் ஜி ஆருக்குப் பின் பெறவில்லை என்பது தான் யதார்த்தம். அதற்கு எம் ஜி ஆருக்குப் பின் ஆட்சிப் பீடமேறிய கருணாநிதி.. செயலலிதா போன்றோரின் சுய நல அரசியலும்.. மத்திய ஹிந்திய சர்க்காரை திருப்திப்படுத்தி தமது தேவைகளை தீர்த்துக் கொள்வது என்ற கொள்கையும் தான் முக்கிய காரணம். 

ராஜீவ் கொலை தமிழகத்தில் பெரிய செல்வாக்குச் செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால்.. அதைச் சாட்டு வைத்து.. ஈழ ஆதரவு அரசியலை பலவீனப்படுத்த கருணாநிதியும் செயலலிதாவும் முண்டு கொடுத்தார்கள் என்பதே கள யதார்த்தமாகும். 

Link to comment
Share on other sites

உடன்பிறப்புகள் பத்திரமாக வீடு திரும்பியப் பிறகே உறங்கச் செல்வேன்..! மு.க.ஸ்டாலின் உருக்கம்

 
 

கருணாநிதியின் திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணாவுடன் இணையும் `இறுதிப் பரிசை' நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

மு.க.ஸ்டாலின்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றத் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்களுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'நம் உயிருடன் கலந்துவிட்ட தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கண்ணீர் பெருகும் நன்றிக் கடிதம். ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கருணாநிதியை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும் நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம். அவர், நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்தளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.

 

 

karunanidhi_23546.jpg

ஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தமத் தலைவராகவும் திகழ்ந்த தலைவர் கருணாநிதி திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளைப் போற்றிப் பாதுகாத்தவர். 

 

 

அந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள்-அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், கருணாநிதியின் உயிர் காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும் பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்து பொதுமக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை-ஊடகத்துறையினர் என அனைவருக்கும் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

homage_3_23271.jpg

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான நம் தலைவர் கருணாநிதி, தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார். அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் தலைவருக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அ.தி.மு.க அரசின் காழ்ப்பு உணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.

 

 

பேரறிஞர் அண்ணாவுக்கு நம் தலைவர் கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். தலைவர் கருணாநிதியின் திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் பேரறிஞர் அண்ணாவுடன் இணையும் `இறுதிப் பரிசை' நீதியரசர்களே வழங்கியிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய கழக சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர் நீதிமன்ற அமர்வில் அழுத்தம் திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்கச் செய்த கழக சட்டத்திட்ட திருத்த குழுச் செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைவர் கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோப லட்சம் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை - ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து தலைவர் கருணாநிதிக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.

காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த தலைவர் கலைஞர் அவர்களை காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது "கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை" சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது. தலைவர் கருணாநிதியின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளைச் செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  மிகச் சோதனையான காலகட்டத்தில் தலைவர் கருணாநிதியின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கும், இந்தியத் திருநாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது. ஆகவே, கழகத் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிச் செல்லும் உடன்பிறப்புகள் அனைவரும் பத்திரமாக வீடு சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வாகனங்களில் வந்ததால் ஓய்வு இல்லாமல் தவிக்கும் உடன்பிறப்புகள் இன்று இரவு சென்னையில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு விட்டு நாளை காலை புறப்பட்டுச் செல்லலாம். தூக்கத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதைக் கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். தலைவர் கருணாநிதியைப் பார்த்துவிட்டுச் செல்லும் ஒவ்வொரு உடன்பிறப்பும் பத்திரமாக வீடு திரும்பி விட்டார்கள் என்ற செய்தி கடைசி உடன்பிறப்பிடமிருந்தும் கிடைத்த பிறகுதான் `உங்களில் ஒருவனான' நான் உறங்கச் செல்வேன் என்பதை ஒவ்வொரு உடன்பிறப்புகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஈடு செய்ய முடியாத பேரிழப்பான தலைவர் கருணாநிதியின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

 

https://www.vikatan.com/news/tamilnadu/133422-mkstalin-letter-to-his-party-cadres.html

Link to comment
Share on other sites

நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய தமிழ் தலைவர் அவர், இது போல் ஒரு தமிழ் தலைவரின் இறுதி ஊர்வலத்தை நான் இனி  பார்க்க போறது இல்லை 

பெருவாழ்வு வாழ்ந்த பெருமகன் தொண்டர்களும் அவர் மக்களும் சிறப்பாக விடை கொடுத்தார்கள் 

அவர் தனது இரத்த உறவுகளின் (மகன் மகள்,பேரன் பூட்டன் மரணத்தை அவர் கண்ணால் பார்க்கவில்லை என்பது சிறப்பு ?

ஒருவித உணர்ச்சிகொந்தளிப்புடன் உறுதி ஊர்வலத்தை  தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தேன், நீதிமன்ற தீர்ப்பு வந்து ஸ்டாலின் தொண்டர்களை நோக்கி கை குவித்து விட்டு துரைமுருகன் தோளில் சாயும் போது என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்த்து,மற்றது விஜயகாந் எமோஷனல் இரங்கல், இறுதியில் கனிமொழி கன்னத்தை கைகளால்  தொட்டு முத்தமிட்டு இறுதி விடை கொடுத்தது என்பன உணர்வு பூர்வமாக இருந்த்து,

இறுதியாக தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் அவர் கூட இரங்கல் தெரிவித்து இருப்பார் ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

அதே சமயத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்சினைக்காக இரு தடவைகள் ஆட்சியை இழந்தவர் கலைஞர். 

இச்செய்தி தவறானது . முதன் முறையாக அவர் 1977ல் பதவி இழக்கப்பட்டார். அக்காலங்களில் ஈழப்போராட்டம் எழுச்சி பெறவில்லை.

http://www.keetru.com/literature/essays/packiyarasan.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீள கோட்பட்டுக்கு 100% மான தமிழர்களே ஆத‌ரவில்லாத‌தபோது பிறகேன் இன்னோர் நாட்டின் அரசில்வாதியை குற்றம் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய தலிவர் என்ற வரிசையில் இடம்பிடித்துவிட்டார்....
அதை நிருபிப்பதில் இந்திய மத்திய அரசு முன்னுக்கு நின்று உழைத்துள்ளது...

இந்திய தேசியக்கொடிபோர்க்கப்பட்டு
இந்திய இராணுவ ம‌ரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்..

உதய சூரியன் கொடி,திராவிட கொடி எதுவும் அவர் மேல் போர்க்கப்பட‌வில்லை....வாழும் பொழுது கிந்தி எதிர்ப்பு,தேசிய எதிர்ப்பு, ....

Link to comment
Share on other sites

தமிழ் ஈழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும்!


 

 

m-karunanidhi-a-lifelong-warrior-for-sri-lankan-tamil-cause-but-misunderstood-in-the-end

 

கட்டுரையாளர்: கே-வெங்கடரமணன்

ஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடு அந்தத் தலைவரின் சமீபத்திய நடவடிகைகள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் மீது பொதுவெளியில் உருவான கருத்துகளால் மறைக்கப்படுவது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

 

அதுதான் கருணாநிதிக்கு நடந்திருக்கிறது. 50 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த கருணாநிதியின் குரலின் மீது 2009-ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிநாட்களில் அவர் செயலற்று இருந்ததாக உருவான பார்வையால் களங்கப்பட்டது.

கருணாநிதியின் ஆதரவாளார்களுக்கு அவர் இன்றளவும் தமிழ் இனத்தலைவர் தான். அவரது அரசியல் ஆரம்ப காலகட்டத்தில் அவர் இந்த அடையாளத்தை பெருமிதத்துடன் சுமந்திருந்தார். ஆனால், அவரது இறுதிகாலகட்டத்தில் பலரும் கருணாநிதியை தமிழ் இனத்தலைவராகப் பார்க்கவில்லை. 
கருணாநிதி மீதான வெறுப்பு 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் மறைவுக்குப் பின்னர்தான் உருவெடுத்தது என்று கூறலாம்.

ஆனால், இந்த வெறுப்பு கருணாநிதி மீது திணிக்கப்பட்ட அநீதி. காரணம், கருணாநிதி இலங்கை தமிழ்த் தலைவர்கள் பலருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர்களது மரியாதையும் பெற்றிருந்தார். பாக் ஜலசந்தியில் தமிழர்கள் அடைந்த துயரத்தில் பங்கேற்பவராக அவர்களது அரசியல் பிரச்சினையை நன்கு அறிந்திவராக இருந்தார்.
தனித் தமிழ் ஈழம் என்ற அவரது கோரிக்கையுடன் நிறைய பேர் உடன்படாவிட்டாலும்கூட தான் தமிழர்களுக்கான நியாயமான தீர்வுக்காக துணை நிற்பதாக அப்போது கருணாநிதி தெளிவுபடுத்தினார்.

1956-ல் சிதம்பரத்தில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். இலங்கை அரசின் 'சிங்களம் மட்டுமே' (Sinhala Only) என்ற கொள்கையைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானம் அது.
இலங்கை தமிழரின் அரசியல் தலைவராக தந்தையாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சா.ஜே.வே.செல்வநாயகத்தை (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்) கருணாநிதி நன்கு அறிந்திருந்தார். தமிழர் விடுதலை கூட்டணியின் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துக்கு நெருங்கிய நண்பராக கருணாநிதி இருந்தார். 
1977-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பேரணிகளை ஒருங்கிணைத்தவர் கருணாநிதி. 1983-ல் நடந்த வன்முறைகளையும் அவர் கண்டித்தார். இலங்கையில் தமிழ்மக்களுக்கு எதிராக 1983-ல் நடந்த கலவரத்துக்குப் பிறகு கருணாநிதியும், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். 

1983-க்குப் பின்னர் தமிழ் போராளிகள் இயக்கம் சென்னையிலேயே தலைமையிடம் கொண்டு இயங்கத் தொடங்கின. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆதரவை எல்டிடிஇ பெற்றிருந்த நிலையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) திமுகவின் ஆதரவைப் பெற்றிருந்தது. அதன் நீட்சியாகத் தமிழ் ஈழ ஆதரவு இயக்கத்தை (TESO) கருணாநிதி உருவாக்கினார். 
1986-ல் மே மாதத்தில் மதுரையில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டை கருணாநிதி ஒருங்கிணைத்தார். இலங்கையில் தமிழர்கள் தங்களின் சுய அதிகாரத்தை கோருவதற்கு டெசோ மாநாடு பரந்துபட்ட அரசியல் தளமாக இருந்தது.
மதுரை கூட்டத்தில், வாஜ்பாய், எச்.என்.பகுகுணா, சுப்பிரமணியன் சுவாமி, என்.டி.ராமா ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தகாலகட்டத்தில்தான் இலங்கையில் இயங்கிய பல தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு இடையே நிலவிய சகோதர யுத்தத்தை கருணாநிதி தெரிந்து கொண்டார். 

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் டெலோ போராளி ஒருவர் கொல்லப்பட்டார். அந்த வேளையில் எல்டிடிஇ அமைப்புக்கு கருணாநிதி தனிப்பட்ட முறையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்னத்தை விடுவிக்குமாறு கோரியிருந்தார். ஆனால், இதற்கெல்லாம் புலிகள் செவிசாய்க்கவே இல்லை. அடுத்தடுத்து டெலோ தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 
இதை கருணாநிதி என்றுமே மறக்கவில்லை. அதன்பின்னர் நிறையமுறை தனது உரையின்போது தமிழ் ஈழம் அமையாததற்கு தமிழ் இயக்கங்கள் மத்தியில் நடந்த சகோதர யுத்தமே காரணம் எனக் கூறிவந்தார்.

ஐபிகேஎப்-க்கு எதிர்ப்பு
இந்தியா - இலங்கை 1987 ஒப்பந்தத்தின்படி இலங்கைக்கு இந்தியா அமைதிக் குழுவை அனுப்பும் முடிவை கருணாநிதி வெகுக் கடுமையாக விமர்சித்தார். இலங்கையில் ஐபிகேப் மேற்கொண்ட அத்துமீறல்களை சுட்டிக்காட்டியதாலேயே அவர் தேச விரோதியாக அடையாளம் காட்டப்பட்டார்.

1989-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது அவர் பங்கு வகித்த தேசிய முன்னணி கூட்டணி, எல்டிடிஇ தலைமையுடன் தொடர்பு கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கருணாநிதியைக் கோரியது. அந்த நேரத்தில் இலங்கையில் இருந்து ஐபிகேஎப்-பும் திரும்பப் பெறப்பட்டிருந்தது. கருணாநிதியின் ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகள் தமிழகத்தில் சுதந்திரமாக உலவினர் என்ற குற்றச்சாட்டை கருணாநிதி திட்டவட்டமாக மறுத்தார். அதேவேளையில், தமிழகத்தில் தங்களுக்கு சாதகமாக நிலவிய சூழலை விடுதலைப் புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். 
இந்நிலையில்தான், விடுதலைப் புலிகளை ஊக்குவிப்பதாக கருணாநிதியின் ஆட்சி 1991 ஜனவரி 30-ல் கலைக்கப்பட்டது. 4 மாதங்களுக்குப் பின்னர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் எல்டிடிஇ ஆதரவாளர்களுக்கு அவர்சற்றும் இரங்கவில்லை. 
ஆனால், தனித் தமிழ் ஈழமே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை மட்டுமே அவர் அடிக்கடி நிலைநிறுத்திக் கொண்டிருந்தார். 

2000-ல் மத்தியில் வாஜ்பாய் அரசுடன் கூட்டனியில் இருந்தபோது இலங்கையில் சிங்களர்கள் - தமிழர்கள் இடையேயான பிரச்சினைக்கு செக்கஸ்லோவாகியா மாதிரியில் தீர்வு காணலாம் என யோசனை கூறியிருந்தார்.
2006-ல் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு மீண்டும் இலங்கையில் வெறுப்புணர்வு மேலோங்கியது. 2008-09 காலகட்டத்தில் இலங்கையில் போர் தீவிரமடைந்தது. அப்போது, இலங்கை தமிழர்களை அழிவிழிருந்து மீட்க கருணாநிதி போதுமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறாரா என்ற விமர்சனங்கள் மேலோங்கியபோது. இந்த விமர்சனங்கள் அவரை சற்று குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஆட்சியில் இருந்தது அவருக்கு அரசியல் நெருக்கடியைத் தந்தது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்ததால், இலங்கை போரில் அப்பாவி தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு ஆவண செய்து வருகிறது என்ற காங்கிரஸ் கூறிய வாக்கினை நம்பியாக வேண்டிய சூழ்நிலையில் அவர் இருந்தார்.

போர் சூழல் முற்றியிருந்ததால் இலங்கையில் போரை திரும்பப் பெறச் செய்வது என்பதை கருணாநிதி நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால் ஒரு நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ஆனால், மதியப் பொழுதிலேயே, மத்திய அரசு தங்களுக்கு இலங்கையிடம் இருந்து உறுதிமொழி வந்திருப்பதாகத் தெரிவிக்க உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். 
பெரிய அளவிலான தாக்குதல்கள் முடிந்துவிட்டதாக இலங்கை உறுதி அளித்ததாக மத்திய அரசு கூறியதால்தான் கருணாநிதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

1533706664.jpg

ஆனால், போர் அதன் பின்னரும் நீடித்தது. மே மாத மத்தியில் எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அப்போது கருணாநிதி மீது விமர்சனங்கள் குவிந்தன.

போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அறிவித்ததை நம்பிதான் உண்ணாவிரதத்தை முடித்ததை தன் மீது பழியாக சுமத்த முடியாது என்று கருணாநிதி மீண்டும் மீண்டும் விளக்கினார்.

அன்றிலிருந்து இலங்கை போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தத் தொடங்கினார். 2012-ல் டெசோ மறு ஆய்வுக் கூட்டம் நடந்தது. கொசோவா, மான்டெனக்ரோ, கிழக்கு தைமோர், தெற்கு சூடான் உதாரணங்களை சுட்டிக்காட்டி தமிழர்களுக்கு தனி நாடு தர பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்மொழிந்தார்.

கருணாநிதி தனது கடைசி காலகட்டத்தில் தன் மீது சுமத்தப்பட்ட இருமைக் கொள்கை மீதான விமர்சனங்களை எதிர்கொண்டே வாழ வேண்டியிருந்தது. கருணாநிதி எதிர்ப்பாளர்கள் அவரை எல்டிடிஇ ஆதரவாளர் என்றனர். தமிழ்த் தேசியவாதிகளோ அவரது வார்த்தையிலோ செயலிலோ ஏதோ ஒரு தடுமாற்றம் ஏற்படாதா அதை வைத்து கருணாநிதி இன விரோதி என வியாபாரம் செய்யலாமா எனக் காத்திருந்தனர்.

ஆழமான பங்களிப்பு:
ஆனால், கருணாநிதியின் உண்மையான ஆதரவாளர்கள் இன்றளவும் தமிழர் நலனுக்காக அவர் ஆழமாக பங்களித்திருப்பதாக நம்புகின்றனர். அவர் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவாளராக இருந்திருக்கலாம் ஆனால் அதை பயன்படுத்தி தமிழகத்தில் எல்டிடிஇ ஆதரவு இயக்கங்கள் பிரிவினைவாதத்தை விதைக்காமல் காப்பதில் கவனமாக இருந்தார்.

தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழ் அகதிகள் மீது கருணாநிதி தனிப்பட்ட கரிசனம் கொண்டிருந்தார். அவர்களுக்காக நலத்திட்டங்களை அறிவித்தார். 2006-ல், இலங்கை அகதிகள் முகாம்களில் நிலைமையை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அவர்கள் வசிப்பிடங்களை சீரமைக்க நிதி ஒதுக்கினார்.

https://www.kamadenu.in/news/politics/4614-m-karunanidhi-a-lifelong-warrior-for-sri-lankan-tamil-cause-but-misunderstood-in-the-end.html?utm_source=tamilhindu&utm_medium=TTH_home_slider_content&utm_campaign=TTH_home_slider_content

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maruthankerny said:

வாங்கோ வாங்கோ !
எப்போதும் கூடத்துக்குள் நிக்கிறதிலே 
சில நண்மைகள் உண்டு. 

தனித்து நின்று கல்லெறி வாங்கிய 
இளமைக்காலம் கடந்து போகிறது.

இப்ப நான் எங்க போனாலும் அட‌க்கித்தான் வாசிக்கிறது....உடம்பும் தாங்காது,மனசும் தாங்காது
tw_tounge:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இப்ப நான் எங்க போனாலும் அட‌க்கித்தான் வாசிக்கிறது....உடம்பும் தாங்காது,மனசும் தாங்காது
tw_tounge:

எனக்கு உடம்புதான் அப்பிடி இப்பிடி.....
ஆனால்  மனசு பதினாறிலைதான் நிப்பன் எண்டு அடம்புடிக்குது :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இந்திய தேசிய தலிவர் என்ற வரிசையில் இடம்பிடித்துவிட்டார்....
அதை நிருபிப்பதில் இந்திய மத்திய அரசு முன்னுக்கு நின்று உழைத்துள்ளது...

இந்திய தேசியக்கொடிபோர்க்கப்பட்டு
இந்திய இராணுவ ம‌ரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்..

உதய சூரியன் கொடி,திராவிட கொடி எதுவும் அவர் மேல் போர்க்கப்பட‌வில்லை....வாழும் பொழுது கிந்தி எதிர்ப்பு,தேசிய எதிர்ப்பு, ....

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

அவர் வாழும் பொழுது அப்படி வாழவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

ஆனால் உண்மை ....அவ்வாறில்லை!

இந்திய நடுவண் அரசு....தமிழ் நாட்டை என்றுமே....மாற்றாந்தாய்....மனப்பான்மையுடனேயே நடத்துகின்றது!

 

வட இந்தியர்களின் பார்வையில்......மெட்ராஸ் காரன்....இந்தியனே அல்ல!

சுரண்டப் படுவதற்காகவே...கடவுள்களால் படைக்கப்பட்டவன்!

 

அதே போலத் தான்......சிங்கள மக்களின் பார்வையிலும் தமிழனின் நிலை!

 

நீ வேண்டாம்.....ஆனால் உனது பணமும் உழைப்பும் வேண்டும்!

அண்மைய இராணுவத் தளபதியின்.....அழைப்பைப் பாருங்கள்! 

ஆசையிலா...அவர் உங்களை அழைக்கிறார்?

 

இதைப் போய்...இலங்கை முஸ்லிம்களிடம் சொல்லிப்பாருங்கள்!

முதலில்....சிறிலங்கன்......பிறகு தான் முஸ்லிம் என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, colomban said:

பல தென்இந்திய தமிழருக்கு நான் இதுதான் சொல்கின்றேன்.
"முதலாவது நீ இந்தியன், பின்பு தான் நீ தமிழன்"

நீங்கள் என்னவென்றாலும் சொல்லலாம்.. ஆனால் நாங்கள் யாரும் அப்படி நினைப்பதில்லை..!

முதலில் தமிழன்,

விதி வசத்தால் பின் 'பொந்தியன்' priso.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் பெருந்தன்மையாக 
குட்ட குட்ட குனிந்துகொண்டு இருந்தால் 
பின்பு குட்டியவர் ஏதும் தருவார் என்று எதிர்பார்க்கிறார்கள் 

கடந்த வரலாறும் தொடரும் வரலாறும் 
அவர் குட்டி முடிய ... குட்டுவதற்கு வேறு ஆட்களை 
கூட்டிவந்த கதைதான் தமிழனோடு உண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.