Jump to content

திரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

திரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு

ஆழ்ந்த அஞ்சலிகள்..!

 

 

  • Thanks 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலையென்றால் உதிரத்தான் செய்யும்

கட்டுமரமென்றால் கவிழத்தான் செய்யும்.
அண்டையவர் சாவில் வருந்தாது

மானாட்டி மயிலாடி மகிழ்ந்தவ போ போ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

91ல் தமிழக ஆட்சியினைக் கைப்பற்றுகிறார் ஜெயலலிதா அம்மையார்.  தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் பல்கலைக்கழக அனுமதிகள் மறுக்கப்படுகின்றன.  அகதிமுகாம்களில் இருந்து ஈழ அகதிகள் சிலர் காணாமல் போகிறார்கள். அவர்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன.  பலர் கைது செய்யப்படுகிறார்கள்.  96ல் கலைஞர் ஆட்சியினைக் கைப்பற்றுகிறார்.  ஈழ அகதிகளுக்கான பல்கலைக்கழக அனுமதியினை வழங்குகிறார். தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 இடங்களை ஈழ அகதிகளுக்கு வழங்குகிறார்.  அதாவது பொறியியல்துறைக்கு 20 இடங்களும், மருத்துவதுறைக்கு 10 இடங்களுமாக கோட்டா முறையில் 30 ஈழ அகதிகளுக்கு இலவசக்கல்வியினை வழங்குகிறார்.  

ஈழத்தில்  பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளைகளை வெற்றிகரமாக செய்து முடித்து திரும்பிய இந்தியப்படைகளினை வரவேற்க செல்லாமல் தவிர்த்தவர் கலைஞர்.  

ஆனால் அவரின் இறுதிக்காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு செய்ய வேண்டியவற்றை புத்திர பாசத்தினால் செய்யாமல் தவிர்த்தார். செய்திருந்தால் இன்னும் உயர்ந்திருப்பார்.  

கலைஞரின் பராசக்தி திரைப்படத்தினை பலமுறை பார்த்து இரசித்திருக்கிறேன். அவரின் நாவல்கள் பலவற்றினை வாசித்திருக்கிறேன். 'வான் கோழி'  பிடித்தநாவல்.

எனக்குப்பிடித்த கலைஞரின் பேட்டிகளில் சில

1) 90களில் ஒரு பத்திரிகையாளர் கலைஞரினைப் பார்த்து ஒருவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிச் சொல்லும் படி கேட்டிருந்தார்.
அவரின் பதில்  - ஜெயலலிதா ஒரு சிறந்தநடிகை.     மேலோட்டமாகப்பார்த்தால் நடிகை ஜெயலலிதாவைப்பற்றிச் சொல்வதாகத் தோன்றும். ஆனால் அரசியல்வாதி ஜெயலலிதாவைப் பற்றி கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார்.

2) இன்னுமொரு பத்திரிகையாளர்   'திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கலைஞரைப்பார்த்து கேட்டிருந்தார்.

கலைஞரின் பதில்  'சுத்தம்' உடன் 'அ' சேர்த்தால் 'அசுத்தம்' என்று வரும்
'நீதி' உடன் 'அ' சேர்த்தால் 'அநீதி' வரும்.
'திமுக'வுடன் 'அ' சேர்த்தால் 'அதிமுக' வரும்.

தமிழக உறவுகளுக்கு ஆழ்ந்த  இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.