Jump to content

கலைஞர் அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன் .


Recommended Posts

TRIBUTE TO KALAIGNAR
கலைஞர் அஞ்சலி
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
எங்கள் போர்கால நெருடல்களை மறந்து. காலமெல்லாம் ஈழத் தமிழருக்கு அரணாய் அவர் நின்றதை நினைந்து அஞ்சலிக்கிறேன், 

கலைஞரின் புகழ்பூத்த காலத்து இயல் இசை நாடக செம்மொழியாய் தமிழ்கூறும் நல்லுலகமெல்லாம் தமிழ் வளர தமிழகத்தில் அரசு இயற்றிய ஆற்றலை வியந்து கலங்குகிறேன்.

குமரியில் காலமெல்லாம் தமிழகத்தை தின்ற கடற்கோளும் தலைபணிய வள்ளுவனை எல்லைக் காவலாய் வைத்த மாண்புகளைப் போற்றி மனது நெகிழ்கிறதே

உன்னை வழியனுப்ப வந்து நீலமலையெங்கும் தேன்சிந்தி அழுகின்ற குறிஞ்சிமலர்களுடன் கண்சிந்தும் கவிஞன் நான். 

ஏற்கனவே உலகத் தமிழர் மனங்களிலே புதைதுவிட்டான். இனி அவனை எங்கே இடுவதென ஏங்குவதேன்? செம்மொழிப் பூங்கா அவனது நினைவிடமாய் என்றும் இருக்குமே. அண்ணா நூலகத்தைவிடவும் கலைஞருக்கோர் மணிமண்டபத்தை அமைப்பீரோ?

முஸ்லிம்களை அரவணைத்து நலிந்தார்க்குச் சமுகநீதி வளங்கி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக்கிய அரிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ஆழுமையை 

கலைஞரை ஐம்பூதங்களாய் ஏற்று நிமிர்க தமிழகமே. 
.

.

(நான் ஒருவனல்ல 30 லட்சம் ஈழத் தமிழ் மக்கள் கடந்து எதிர்காலத்துக்குள் முன்செல்லவேண்டிய பாதை என் கவிதைகள்)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த கலைஞருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களே நீங்கள்மட்டும் தமிழரினவிரோதிக்கு அஞ்சலி செய்யுங்கள் எதற்காக முப்பது இலட்சம் ஈழத்தமிழர்களையும் உங்களுடன் கூட அழைக்கிறீர்கள்  நான் முதலையோ மூர்க்கணோ தெரியாது ஆனால் தமிழினத்துரோகி முத்துவேலு கருனாநிதி என்பதிலிருந்து விலகமாட்டேன். நேற்றைய தினம்வரையில் யாழ் களத்தின்மீதும் அதன் நிர்வாகிகள்மீதும் மிகவும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தேன் ஆனால் அனைத்தும் கருனாநிதிக்காற்றில் கரைந்துபோய்விட்டது. இந்தியாவோ அன்றேல் தமிழ்நாட்டின் சகோதரர்களோ எமக்காக எதிர்காலத்தில் ஒரு துரும்பையும் கிள்ளிப்போட மாட்டார்கள் அத்துடன் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளும் அடக்கம் காரணம் இந்தியாவின் வல்லமைமிக்க உளவுப்பிரிவு அதற்கான காய்நகர்த்தல்களைக் கச்சிதமாகச் செய்துமுடித்திருக்கின்றது தவிர நாம் காணும் எமது உரிமைமீட்பில் இனிமேல் யாரது உதவியும் எதிர்காலத்தில் இருக்காது எமது விடுதலை சில காலங்கள் என்ன பல தசாப்தங்கள் பின்னோக்கிப்போகலாம் ஆனால் எமதுரிமையை நாமே வென்றெடுப்போம் அது எனது அன்றேல் உனது பேரனது காலத்திலோ அன்றேன் பேரனின் பேரஙாலத்திலோ கைகூடலாம் ஆனால் துரோகிகளை வாழ்த்தி பிச்சை கேட்பது கேவலம். எதிர்காலத்திலும் அப்படியே நெஞ்சில் துணிவிருந்தால் களத்துக்கு வாருங்கள் இப்படி நீங்கள் தமிழ்நாட்டில் காலம்தள்ள முப்பது இலட்சம் ஈழத்தமிழர்களையும் சாட்சிக்கு இழுக்காதீர்கள். 

நாம் அழிந்துபோவதாகவே இருக்கட்டும் நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே என வாழ்ந்து வீழ்ந்துபோவோம் ஆனால் இப்படியான துரோகிகளுக்குச் சாமரம் வீசவேண்டிய தேவை இல்லை.  

உலகிலுள்ள ஈழத்தனிழனில் எவனும் இவரது மரணத்துக்கு மண்டியிடமாட்டான் சில புல்லிருவிகளும் கோடரிக்காம்புகளுமே கருனாநிதி எனும் ஈழத்தமிழர்களது அழிவுக்குக் கொள்ளிவெட்டிக்கொடுத்த கோடரிக்காம்பின் இழப்புக்கண்டு கலங்குவார்கள் என்ன இப்போ யாழ்களமும் இப்போது சேர்ந்துவிட்டது. 

 

கவிஞர் நீங்கள் கோழியைப் பாடும்வாயால் குஞ்சைப் பாடியிருந்தால் பருவாயில்லை எமது அரும்பாடுபட்டுக் கட்டமுயன்ற விடுதலை எனும் மாலையை குலைத்துப்போட்ட குரங்கைப்பாடுகிறீர்கள்

 

முப்பது இலட்சம் என எழுதாதீர்கள் என்னையும் எனது பிள்ளைகள் இருவர் எனது மனைவி ஆகியோரைத் தவிர்த்து இருபத்தியொன்பது இலட்சத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தியாறு ஈழத்தமிழர்கள் என வேண்டுமாகில் எழுதுங்கோ. என்னைப்பொறுத்தவரை இவர் ஈழத்தமிழர் போராட்டத்தையும் அவர்கள் கனவுகளையும் அம்மக்களையும் அழித்த இனவழிப்புத் துரோகி மட்டுமே.

இனிமேல் யாழ் களத்துக்கும் எனக்குமான உறவு தாமரை இலைத்தண்ணிர் போலானதாகும்

 

யாமார்க்கும் குடியல்லோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு,

முப்பது இலட்சம் தமிழர்களின் பிரதிநிதி போன்று கவிஞர் கூறியதை நானும் ஒப்பவில்லை. ஆனால் கவிஞர்களுக்கு எப்போதும் பொய்யழகு என்று விட்டுவிடலாம்!

நிற்க, கலைஞரையோ தி.மு.க வையோ நானும் ஆதரிப்பதில்லை. ஆனால் அவரை தமிழினத் துரோகி என்று எழுந்தமானத்திற்கு சொல்வதை ஏற்கமுடியாது. இது ஒன்றில் எமது இயலாமையை அல்லது குற்றவுணர்வை மறைக்க முயற்சிக்கும் ஒரு சொல்லாடலாகத்தான் பார்க்கின்றேன். இன்னோர் திரியில் சொன்னதுபோன்று எமது அழிவுக்கு நாங்கள்தான் காரணம். அதை நாங்கள் உணருமட்டும் நமக்கு உய்வில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள். ஆகக்கூடியது ஐரோப்பியத்தெருக்களில் பதாகைகளைப்பிடித்து அலறமட்டுமே தெரிந்தவர்கள் இல்லாதுவிடின் ஐநா முன்றலில் மண்ணெண்ணை ஊற்றி எம்மைநாமே பற்றவைக்கலாம்.

ஆனால் முத்துவேலு கருனாநிதி அப்படியில்லை பலகோடு தொண்டர்களை உள்ளடக்கிய ஒரு கட்சியின் தலைவர்.
கடந்த ஓரிரு வருடங்களாக சிந்தனா சக்தி குன்றிப்போய் அவர் என்னத்தைச் சொல்ல வருகிறார் எனத்தெரியாது வாழ்ந்து இறுதிநாதளில் மூளை முற்றிலுமாகச் செத்துபோய் மரணப்படுக்கையில் கிடந்தபோதும் இந்தியாவின் முதன்மை அரசியல்வாதுகள் அனைவரும் வரிசைகட்டி வந்து நின்றார்களே 

அப்போ ஈழத்தமிழர்களை அழிக்கும்போது எந்த அளவுக்குப்பலமுடையவராக இருந்திருப்பார், சோணியாகாந்தியினதும் காங்கிரசினதும் இந்திய உளவுத்துறையினதும் பழிவாங்களுக்கு உடந்தையாகி எமை அழிப்பதில் உறுதுணை நின்றாரே 

அப்போது ஈழத்தமிழர்களை ஆதரித்துநின்ற இனாழிப்புக்கெதிராய் குரல்கொடுத்து நின்ற தமிழர் ஆதரவாளர்கள் மன்றாடிக்கேட்டார்களே மத்திய அரசிலிருந்து விலகு காங்கிரஸ் அரசைக்கலை உனது தமிழ்நாட்டுப்பதவிக்குப் பங்கம்வந்தால் நாம் எல்லோரும் ஒன்றுதிரண்டு மீண்டும் நீ பதவிக்குவர ஆவனசெய்வோம் என ஆனால் இவர் என்னசெய்தார் போர் நிறுத்தம் வந்ததெனப் பொய்சொல்லி எமை அடியோடு அழிப்பதற்கு கோடரிக்காம்பாய் நின்றாரே அது நியாயம் அப்படித்தானே 

மிகப்பெரிய அரசியல் சாணக்கியம் அனுபவம் இவை அனைத்தும் இருந்து அழிவைத்தடுக்க வழிதெரிந்தும் காங்கிரசுடனும் மத்திய உளவுத்துறையுடனும் கைகோர்த்து எமது விடுதலைப்போராட்டத்தையும் எம்மினத்தின் ஒருபகுதியையும் அழிக்கத் துணை நின்றவரை நான் அஞ்சலி செய்தால் எனைப்பெற்றவள் என்மேல் கோவம்கொள்வாள் நான் என் வாழ்நாளில் ஒருமுறையேனும் மாவீரனின் வித்துடலுக்கு மலர்வைத்து வணங்கியதற்கு அர்த்தம் இருக்காது.

புலவர்க்குப் பொய் அழகு ஆனால் பொய்யரைப் பாடும் பாடலில் பொய் அழகில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எழுஞாயிறு,

முப்பது இலட்சம் தமிழர்களின் பிரதிநிதி போன்று கவிஞர் கூறியதை நானும் ஒப்பவில்லை. ஆனால் கவிஞர்களுக்கு எப்போதும் பொய்யழகு என்று விட்டுவிடலாம்!

நிற்க, கலைஞரையோ தி.மு.க வையோ நானும் ஆதரிப்பதில்லை. ஆனால் அவரை தமிழினத் துரோகி என்று எழுந்தமானத்திற்கு சொல்வதை ஏற்கமுடியாது. இது ஒன்றில் எமது இயலாமையை அல்லது குற்றவுணர்வை மறைக்க முயற்சிக்கும் ஒரு சொல்லாடலாகத்தான் பார்க்கின்றேன். இன்னோர் திரியில் சொன்னதுபோன்று எமது அழிவுக்கு நாங்கள்தான் காரணம். அதை நாங்கள் உணருமட்டும் நமக்கு உய்வில்லை.

 

நீங்களும் உங்களைப்போன்றவர்களும் திரும்பத்திரும்ப அதையே பேசுவதான் நாங்களும் அவ்வாறாகவே பேசவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 கருணாநிதியின் பொய் உண்ணாவிரதமும் பொய் செய்தியும் எட்டடுக்கு இலக்கண வார்த்தையுமே ஈழத்தமிழர்களின் கோபத்திற்கு காரணம்.
மற்றும்படி அவர் தமிழ் விற்பன்னர். போட்டி போட யாருமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நீங்களும் உங்களைப்போன்றவர்களும் திரும்பத்திரும்ப அதையே பேசுவதான் நாங்களும் அவ்வாறாகவே பேசவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

 கருணாநிதியின் பொய் உண்ணாவிரதமும் பொய் செய்தியும் எட்டடுக்கு இலக்கண வார்த்தையுமே ஈழத்தமிழர்களின் கோபத்திற்கு காரணம்.
மற்றும்படி அவர் தமிழ் விற்பன்னர். போட்டி போட யாருமில்லை.

ஏதோ கலைஞர் கருணாநிதியோடு கலந்தாலோசித்து இறுதிப்போரை தொடங்கிய மாதிரியும் அவர் உதவுகின்றேன் என்று வாக்குக்கொடுத்து ஏமாற்றிய மாதிரியும் இருக்கின்றது இந்தக் கோபப்படும் ஈழத்தமிழர்களின் நடத்தை.

அவர் ஏமாற்றியதைவிட நாங்கள் அவரை நம்பி ஏமாந்துபோனோம் என்பதுதான் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஏதோ கலைஞர் கருணாநிதியோடு கலந்தாலோசித்து இறுதிப்போரை தொடங்கிய மாதிரியும் அவர் உதவுகின்றேன் என்று வாக்குக்கொடுத்து ஏமாற்றிய மாதிரியும் இருக்கின்றது இந்தக் கோபப்படும் ஈழத்தமிழர்களின் நடத்தை.

அவர் ஏமாற்றியதைவிட நாங்கள் அவரை நம்பி ஏமாந்துபோனோம் என்பதுதான் சரி.

சம்பந்தமில்லாத விடயத்திற்கு ஏன் கருணாநிதி உண்ணாவிரமிருந்தார்?
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின் கருணாநிதியின் பிரதிநிதிகள் ஏன் மகிந்தவை சந்தித்து பரிசுகள் கொடுக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தமில்லாத விடயத்திற்கு ஏன் கருணாநிதி உண்ணாவிரமிருந்தார்?
முள்ளிவாய்க்கால் சம்பவத்தின் பின் கருணாநிதியின் பிரதிநிதிகள் ஏன் மகிந்தவை சந்தித்து பரிசுகள் கொடுக்க வேண்டும்?

கலைஞர் கருணாநிதி ஒரு அரசியல்வாதி. அவர் தனது அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க நாடகம் ஆடினார். அதை நம்பி யுத்தம் முடிவுக்கு வரும் என்று நினைத்த நாங்கள்தான் உண்மையில் மூடர்கள்.

ஒரு நாட்டின் பிரதிநிதிகள் இன்னோர் நாட்டின் தலைவரைச் சந்திக்கும்போது பரிசுகள் கொடுப்பது வழனைதானே. புலிகளை வென்றதுக்கு கொடுத்த பரிசு என்று ஏன் வீணான அர்த்தம் கொடுக்கவேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லாடல் எல்லாம் எமக்குத் தேவையில்லை.
அதிகாரம் உள்ளவன் அகிலத்தை ஆள்கின்றான்.
அதிகாரம் யாரிடம் இருக்கின்றதோ அவனால் மட்டுமே எதுவும்  சாதிக்கலாம்.
அன்று கலைஞரிடம் இருந்த அதிகாரம் எமக்கும் தெரியும்.
அவர் நினைத்திருந்தால் அழிவை நோக்கிச் சென்ற ஈழத்து தமிழர்களுடன் அவரும் சேர்ந்திருக்கலாம்.

தமிழ் தமிழ்  என்று இன்று கூப்பாடு செய்யும் அத்தனைபேரும் அன்று வாய்மூடி மௌனமாகி அவரின் செயலிற்குத் துணை நின்றுவிட்டு இன்றும் வாழாவிருக்கின்றனர்.

நிச்சயமாகக் கலைஞர் ஒரு தமிழ்க்கடல் தான். அந்தக் கடலை இனிமேலும் யாராலும் நீந்திக் கடக்க முடியாது.
ஆனால் கடலைப்போலக் கறை என்ற சொல்லும் தமிழில் இருக்கின்றது.
தமிழுக்கும் அவர்தான்,
தமிழின் பால் கொண்ட அன்பிற்கும் அவர்தான்,
அதேவேளை தமிழ் இனத்திற்கு  ஏற்பட்ட அந்தக் கறைக்கும் அவர்தான் காரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கிருபன் said:

கலைஞர் கருணாநிதி ஒரு அரசியல்வாதி. அவர் தனது அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க நாடகம் ஆடினார். அதை நம்பி யுத்தம் முடிவுக்கு வரும் என்று நினைத்த நாங்கள்தான் உண்மையில் மூடர்கள்.

ஒரு நாட்டின் பிரதிநிதிகள் இன்னோர் நாட்டின் தலைவரைச் சந்திக்கும்போது பரிசுகள் கொடுப்பது வழனைதானே. புலிகளை வென்றதுக்கு கொடுத்த பரிசு என்று ஏன் வீணான அர்த்தம் கொடுக்கவேண்டும்?

நாங்கள் மூடர்கள் என்பது ஒருபுறமிருக்க...... அந்த மூடர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்ததுதான் அவர் தமிழினத்திற்கு செய்த தவறு. எல்லை மீறிப்போய் விட்ட நிலையிலும் தடுக்க ஒரு துரும்பும் இல்லாத நிலையிலும் உண்ணாவிரதமிருந்து   கபட நாடகமாடியதுதான் விரோதமாக மாறியது.

ஒருவருக்கு பரிசுப்பொருள் கொடுக்கும் நேரகாலத்தை வைத்துத்தான் காரணங்கள் கணிப்பிடப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி என்ற கலைஞனை......அரசியல் சாணக்கியனை நான் மதிக்கிறேன்!

அவனது கவித்துவத்தை.....அவனிடம்...தமிழ் வளைந்து குழையும் அழகை.....ரசிக்கிறேன்!

எனினும்....கருணாநிதி என்ற தனி மனிதனின் வாழ்வை...ஒரு சாதனையாக என்னால் பார்க்க முடியவில்லை!

ஊழல்கள்....உட்கட்சிப் பூசல்கள்....விளக்கவியாலாத தனி மனித மரணங்கள் என விரிந்தது தான்....தமிழக அரசின் ஆட்சி!

இந்தியாவின்.....அணு உலைகள்....மனித வாழ்வின் அத்தியாவசியமான...தண்ணீரையும்...காற்றையும் மாசு படுத்தும் தொழிற்சாலைகளின் முன்னெடுப்புகள் போன்றவற்றில்....பல் நிறுவனங்கள் தங்கள் நலனுக்காக....உள்ளூர் விவசாயத்தை படிப் படியாக அழித்தல் என்பவற்றில்...பொதுவாக தமிழக அரசியல் சாணக்கியர்களின் இரகசிய பணப்பரிமாற்றங்கள் நிறைய மறைந்திருக்கின்றன!

காமராஜர், ராஜாஜி , அண்ணாதுரை...எம்.ஜி.ஆர்...போன்றவர்களின் ஆட்சிகளுடன் ஒப்பிடும் போது....இவரது இலவசங்களை ஊக்கப் படுத்தும் அரசியல், மது பான நிலையங்களை ஊக்குவிக்கும் அரசியல்...எனக்குப் பிடிக்கவில்லை! 

சில தனிப்பட்ட காரணங்களுக்காக....ஈழ விடுதலைப் போராளிக் குழுக்கள் மீது இவருக்கு..ஒரு காலத்தில் கோபமிருந்தது என்பது என்னவே உண்மை தான்! அவர்கள்....எம். ஜி. ஆரிடம் அதிகம் நெருங்கியதை....இவர் தனிப்பட்ட கோபமாக....எவ்வளவுக்குப் பாதித்து இருக்கின்றது என்பதை....இவரது உண்ணாவிரத நாடகம் தெளிவாக வெளிப்படுத்தியது!

தனிப்பட்ட கோபங்களுக்காகவும்....தனது குடும்ப நலன்களுக்காகவும்.....பழி வாங்குபவன்....ஒரு சாதாரண மனிதன்!

அவன்....ஒரு நாளும்....ஒரு மக்கள் தலைவனாக....உருவாக முடியாது!

தென்னாபிரிக்காவில்....நிறைய நகைகள்....மகாத்மா காந்திக்கு அன்பளிப்பாகக் கிடைத்தன!

ஒரு சாதாரண மனைவியாக....கஸ்தூரி பாய்....அந்த நகைகளை....இந்தியாவுக்கு எடுத்து வர விரும்பிக் காந்தியிடம் மன்றாடினார்!

அப்போது மகாத்மா காந்தி.....அந்த அன்பளிப்புகளில் ஒரு சிறு பொருளேனும் இந்தியாவுக்குத் தன்னுடன் பயணிக்கக் கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டார்!

அந்த நிலையில் தான் ஒரு சாதாரணன்.....தலைவனாகப் பரிணமிக்கிறான் என்று நான் நம்புகிறேன்!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.