Jump to content

தோனி, டிராவிட், கோலி போன்ற நல்ல குணமுள்ளவர்கள்ள் கிரிக்கெட்டுக்குத் தேவை: ஐசிசி புகழாரம்


Recommended Posts

தோனி, டிராவிட், கோலி போன்ற நல்ல குணமுள்ளவர்கள்ள் கிரிக்கெட்டுக்குத் தேவை: ஐசிசி புகழாரம்

 

 

 
cricket-ind-icc-c

ஐசிசி நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்ஸன் : கோப்புப்படம்

 வாழ்க்கையில் நல்ல குணமும், நல்ல ஒழுக்கமான நடவடிக்கையும் கொண்ட வீரர்கள் கிரிக்கெட்டுக்கு மிகவும் அவசியம். அதிலும் தோனி, டிராவிட், கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட்டுக்கு அவசியம் என்று ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்சன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:

 

இன்றைய சூழலில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டைக் காட்டிலும், வீரர்களின் ஒழுக்கமான நடவடிக்கையும், நல்ல குணங்களும்தான் முக்கியம்.

கோலின் மில்பர்ன்ஸ், பிளிண்டாப், ஷேன் வார்ன், விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ், தோனி, ராகுல் டிராவிட் போன்ற ஒழுக்கமான வீரர்கள் ஜென்டில்மேன் கிரிக்கெட்டின் மான்பை காத்து தங்களுக்கு உரிய எல்லையைமீறாமல் இருப்பார்கள். இதுபோன்ற நல்ல குணம் கொண்டவர்கள்தான் அவசியமாகும்.

India%20Captainsjpg

டிராவிட், தோனி, கோலி : கோப்புப்படம்

 

ஆடுகளத்தில் வீரர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் ஐசிசி தனிப்பட்ட முறையில் தீர்வுகாண்பதைக் காட்டிலும், கூட்டாக சேர்ந்து தீர்வுகாண வேண்டும்.

வீரர்களைத் தனிப்பட்டமுறையில் திட்டுவது, பேட்ஸ்மேன்களை சென்ட்ஆப் செய்வது, தேவையில்லாமல் உடலில் உரசுவது, நடுவரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விளையாடாமல் வீரர்கள் புறக்கணிப்பது, பந்தை சேதப்படுத்துதல், இவையெல்லாமல் கிரிக்கெட்டின் ஒழுக்கமான விஷயங்கள் அல்ல. உலகிற்கு நல்ல விதமான கிரிக்கெட்டை நாம் கற்பிக்க வேண்டும்.

இது போன்ற தவறான நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் குறைப்பதற்காக வீரர்களைத் தனிப்பட்ட முறையில் சீண்டினால், 6 டெஸ்ட்போட்டி அல்லது 12 ஒருநாள் போட்டிகளுக்கு வீரர்களுக்குத் தடைவிதிக்கும் கடும் விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை நல்ல உத்வேகத்துடன் எப்படி விளையாவது, ஜென்டில்மேன் கேமின் மாண்பு குறையாமல் எப்படிக் காப்பது என்பதை வீரர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர் நடக்கும்போது, எதிரணியினரை மரியாதையாக நடத்தும் கொள்கைகளை மதித்து நடக்க வேண்டும். சுற்றுலா வந்திருக்கும் அணியை மதிப்புடன் நடத்தி, அவர்களுக்குத் தேவையான பயிற்சி வசதிகள், போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைச் சிறந்த முறையில் உள்நாட்டு அணி ஏற்பாடு செய்து தர வேண்டும்.

சில நேரங்களில் அணியின் பயிற்சியாளர்களும், வீரர்களின் ஒழுக்கமற்ற செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். நடுவருக்கு எதிராகப் பேசுகிறார்கள், போட்டி நடுவரின் அறைக்குச் சென்று புகார் அளிக்கிறார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி என்பது அவசியம்தான். ஆனால், போட்டியின் நன்னம்பிக்கையை குலைத்துவிட்டு, சமரசம் செய்துவிட்டு வெற்றியைத் தேடக்கூடாது. பந்தைசேதப்படுத்துதல் போன்ற நடவடிக்கை கிரிக்கெட்டின் மாண்புக்கு தகுதியில்லாத செயல், கபடமான செயல் என்பது வீரர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்

இவ்வாறு ரிச்சார்ட்சன் தெரிவித்தார்

https://tamil.thehindu.com/sports/article24621836.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.