Jump to content

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்


Recommended Posts

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

 

 
 

நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத் திருவிழா திங்கட்கிழமை 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 

38660584_260950761172804_151977958934839

இம்மாதம் 15 ஆம் திகதி மடுமாதா திருவிழா பக்தி உணர்வு மேலிட நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார். 

போர்க்காலத்தில் 35 ஆயிரம் மக்களுக்கு பாதுகாப்பு அடைக்கலம் அளித்த மடு அன்னை சமாதானத்தின் அடையாளமாக, இன நல்லிணக்கத்தின் குறியீடாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

மடு பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் கூட இறுக்கமான பாதுகாப்பு சூழலுக்குள் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த கத்தோலிக்க பக்தர்கள் மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. 

38738350_450771595401367_239956270889566

இருப்பினும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மடு பிரதேசத்தில் இராணுவம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதலின் போது மடு தேவாலயமும் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பகுதியில் தஞ்சமடைந்த பலர் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையில் அங்கு தஞ்சமடைந்திருந்த இடம்பெயர்ந்த மக்களில் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினார்கள். 

இறுதி நேரம் வரையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அபயமளித்து அடைக்கலம் வழங்கிய மடு அன்னையும் தீவிரமடைந்த யுத்த மோதல்கள் காரணமாக பாதுகாப்புக்காக இடம்பெயர நேர்ந்தது.

அந்தநேரம் பாதுகாப்பை முன்னிட்டு மடு அன்னையின் சொரூபத்தை வடமேற்குக் கரையோரக் கிராமமாக்கிய தேவன்பிட்டி பகுதிக்குக் கொண்டு செல்ல நேர்ந்ததாக அந்த வேளையில் மடு பரிபாலகாராகப் பணியாற்றிய அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்தார்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மடு அன்னையின் திருச்சொரூபம் மீண்டும் மடு ஆலயத்திற்குக் கொண்டு வரப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டு, மடு மாதா ஆலயம் சிறப்புற செயற்படத் தொடங்கியது. 

யுத்தத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான கத்தோலிக்கர்கள் மற்றும் இந்து சமய மக்களும் மடுமாதாவின் ஆவணி மாதத் திருவிழாவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுவதாகவும் அவர் கூறினார். 

38655891_849441291927707_695250103507196

அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள போதிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவின்போது 9 நாட்களும் ஆலயத்தில் கூடித் தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அக்காலப்பகுதியில் பாம்பு போன்ற விஷம் தோய்ந்த உயிரினங்களினாலோ அல்லது வன விலங்குகளினாலோ பக்தர்கள் எவரும் இதுவரையில் பாதிக்கப்பட்டதில்லை என்பது அன்னையின் அருளுக்கு அடையாளமாகக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இத்தகைய சிறப்பு மிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழாவின் கொடியேற்ற வைபவத்தில் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளையிடம் இருந்து மடு பரிபாலகர் பொறுப்பை ஏற்கவுள்ள அருட்தந்தை பெப்பிசோசை உள்ளிட்ட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பெருமளவான பக்தர்களும் கலந்து கொண்டனர். மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மடு பிரதேச செயலாளர் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்

http://www.virakesari.lk/article/37984

Link to comment
Share on other sites

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா

 

 
 

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.30 மணிக்கு கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

39070702_333928890481914_849034952606482

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் ஏனைய மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கின்றனர்.

39127253_246561082660902_300927629200562

இன்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஆரம்பமாகி ஒப்பக்கொடுக்கப்பட்டு வருகின்றது.

39177572_885407088318114_161672971432230

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடையவுள்ளது.

39266583_219380078739133_494351480516929

மடுத் திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான அனைத்து இன பக்தர்களும் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/38493

Link to comment
Share on other sites

மடு திருவிழாவில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு 

 

 

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

ma.jpg

மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து இன்று புதன் கிழமை காலை 6.30 மணியளவில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுப்பட்டது.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை, குருநாகல் மறைமாவட்ட ஆயர் கெரல்ட் அன்ரனி பெர்னாண்டோ , காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க , கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்சல் சில்வா ஆண்டகை ஆகியோர் இணைந்து திருநாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

ee.jpg

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவணியும், திருச் சொரூப ஆசியும் வழங்கப்பட்டது. மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளடங்களாக போது மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,ரவி கருநாநாயக்க உற்பட அரசியல் பிரமுகர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நீதிபதிகள், வைத்தியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டதோடு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

r.jpg

a.jpg

மேலும் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவிற்காக கிறிஸ்தவ அமைச்சினால் வழங்கப்பட்ட நிதி உதவியினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மன்னார் ஆயரிடம் கையளித்தார்.

இதேவேளை மடு திருத்தலத்தின் புதிய பரிபாலகராக அருட்தந்தை பொப்பி சோசை அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை மக்கள் மத்தியில் அறிவிப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று  புதன்கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38515

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.