Jump to content

சதாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன


Recommended Posts

சதாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன??

39433875.jpg

 

சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை 
அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும்.
 
 
இச் சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள். இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால்,
 
 
 
வரலாற்றுப் பிண்ணனி
 
இப் பதவி நிலையானது இற்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னனினால் அறிமுகப்படுத்தப்பட்டதொன்றாகும். இதன் பிரகாரம் நியமிக்கப்பட்ட நபர்கள் அக்காலத்தில் சட்டத்தை மதிக்காது சமூகத்தில் குழப்பத்தினை உண்டு பண்ணும், கட்டுப்படுத்த முடியாத நபர்கள் வாழும் பிரதேசங்களில், சமூகங்களில் சமாதானத்தினை ஏற்படுத்தி அதனைப் பேணுவதனை பிரதானமான கடமையாக கொண்டிருந்ததுடன் இவர்கள் சமூகத்தில் சட்டமானது ஒழுங்காக பேணப்படுகின்றது என்பதனை மன்னனிடம் உறுதிசெய்பவர்களாகவும் காணப்பட்டனர். இதனால் இவர்கள் “சமாதானத்தின் பாதுகாவலர்கள்” எனவும் அழைக்கப்பட்டனர்.
 
 
 
இப் பதவி நிலைக்கு 1327ம் ஆண்டின் பின்னர் சட்டத்தினை மதிக்கக் கூடிய நல்ல பழக்கவழக்கமுடைய நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் சமூகத்திலுள்ள சட்டத்தை மதிக்காத நபர்களின் நடவடிக்கைகளினை கட்டுப்படுத்துபவர்களாகக் காணப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1361ம் ஆண்டிலிருந்து “சமாதானத்தின் பாதுகாவலர்கள்” என்பதற்கு பதிலாக “சமாதான நீதவான்” என்ற தலைப்பு 3றாம் எட்வர்ட் மன்னனின் காலப்பகுதியில் வழங்கப்பட்டது. இக் காலப்பகுதியில் இவர்களுக்கு சமூகத்தில் சமாதானத்தினை குழப்பி அசாதாரண நிலையை உண்டுபண்ணும் நபர்களினை கட்டுப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இவர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 16ம் நூற்றாண்டில் இவர்கள் “நீதவான்” எனவும் அழைக்கப்பட்டனர்.
 
 
 
தொழிற் புரட்சியினைத் தொடர்ந்;து சமாதான நீதவான் என்ற பதவிநிலை பிரித்தானிய அரசாங்க முறைமையில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக காணப்பட்டது. இதன் கீழ் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களினை பிரித்தானிய அரசாங்கம் சமாதான நீதவானாக நியமித்தனா.; இருந்த போதிலும் இப் பதவிநிலை ஊதியமற்றதொன்றாக காணப்பட்டது.
 
 
பிரித்தானிய அரசாங்கத்தினர் தம் நாட்டில் மட்டுமல்லாது தமது காலணித்துவ நாடுகளிலும் தமது அரசாங்க வேலைகள் சரிவர நடைபெற வேண்டும் என்ற நோக்குடன் பல நபர்களை காலணித்துவ நாடுகளில் இருந்து தெரிவு செய்து சமாதான நீதவான்களாக நியமித்தனர்.
 
 
 
அதேவேளை 1919ம் ஆண்டு வரை சமாதான நீதவான்களாக பதவி நிலை வகிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தவொன்றாகும். ஆனால் தற்போது பிரித்தானியாவில் காணப்படும் சமாதான நீதவான்களில் 50மூ ஆனவர்கள் பெண்களாகும்.
 
 
 
தற்காலத்தில் கனடா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வகையில் அதிகாரங்கள் வழங்கப்பட்டு சமாதான நீதவான்கள் நியமிக்கப்படுகின்றனர்.
 
 
 
இலங்கையில் சமாதான நீதவானின் நிலை.
 
 
 
இலங்கையைப் பொறுத்த மட்டில் சமாதான நீதவான் என்ற பதவி நிலையானது ஆளுனர் பிரடரிக் நோர்த்தினால் 1801ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்ட நபர்கள் பிரித்தானிய அரசாங்க நிர்வாக முறையானது சமூகத்தில் சமாதானமாக இடம் பெற உதவுபவர்களாக காணப்பட்டனர். இவர்களது அதிகாரங்கள் 1871ம் ஆண்டில் மீள வடிவமைக்கப்பட்டது.
 
 
அண்மைக் காலங்களில் 100,000க்கும் மேற்பட்ட சமாதான நீதவான்கள் இலங்கை பூராக காணப்படுகின்றனர். மேலும் இவர்கள் அதிகாரபூர்வமற்ற நீதவான்களாகவும் நியமிக்கப்பட முடியும்.
 
 
 
சமாதான நீதவான்களின் நியமனம்.
 
 
சமாதான நீதவானாக நியமனம் பெறுபவர் இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும் என்பதுடன் சமூக, பொது விடயங்களில் ஆர்வமிக்கவராகவும் சமூகத்தில் ஒழுக்கமுடைய நற்பிரஜையாகவும் காணப்படல் வேண்டும்.
 
 
 
இவர்களின் நியமனம் பிரதானமாக இருவழிகளில் இடம் பெறும்…
1.   கௌரவ நியமனம்   : சமூகத்தில் சிறந்த, சமூக சேவையை ஆற்றிய, ஆற்றக்கூடிய நற்பிரஜைகளுக்கு வழங்கப்படும் நியமனம்.
 
 
 
2.   உத்தியோக பூர்வ நியமனம் : குறித்த பதவியின் பொருட்டு அப்பதவிக் காலம் முடியும் வரை நீதித்துறை சட்டத்தின் பிரிவு 45 ன் உப பிரிவு 01 ன் கீழ் நியமிக்கப்படும் நியமனம்.
 
 
இவ்வாறு நியமிக்கப்பட்ட நபர்கள் நீதி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்துடன் அதன் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியுடனும் தங்களது நியமனம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரதியுடனும் நியமனக் கடிதத்தில் குறித்துரைக்கப்பட்ட நீதிமன்ற பதிவாளரை சந்தித்து சத்தியப் பிரமாணத்திற்கான திகதியை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு சமாதான நீதவானாக செயற்பட முடியும்.
 
 
 
சமாதான நீதவான் கவனிக்க வேண்டிய விடயங்கள்.
 
 
• தாங்கள் கடமைபுரியும் நியாயாதிக்கத்தினை அறிந்து கொண்டு அதனுள் செயற்படல்.
• அரசாங்க இலச்சினையை தமது அலுவலக இலச்சினையில், கடித தலைப்புக்களில் பயன் படுத்தாமை.
 
• மக்களின் ஆவணங்களை அத்தாட்சிப்படுத்தும்போது விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் அத்தாட்சிப்படுத்துகையானது சம்பந்தப்பட்ட ஆளின் முன்னிலையில் அமைந்து காணப்பட வேண்டும்.
 
• கடமை நிமிர்த்தம் கட்டணங்களை அறவிடலாகாது என்பதுடன் சன்மானங்களையும் அன்பளிப்புக்களையும் கடமை நிமிர்த்தம் பெற முடியாது.
 
• தமது அணைத்துக் கடமைகளின் போதும் அலுவலக இலச்சினையை உபயோகிக்க வேண்டும் என்பதுடன் பதிவு இலக்கத்தினையும் குறிப்பிடல் வேண்டும்.
 
• தனது தனிநபர் நடத்தையில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.
 
• சமூகத்தில் முன்மாதிரியாக இருப்பதுடன் தனது பதவியின் கௌரவத்தினை பேணும் வகையில் காணப்படல்.
 
• தமது சேவையை நாடி வருபவர்களிடம் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளல்.
• சமுதாய சட்ட விரோத செயல்களில் ஈடுபடல் மற்றும் துணைபோதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்தலும் இவ்வாறான சட்ட விரோத செயல்களைத் தடுக்க ஏனைய ஊழியர்களுக்கு ஆதரவு வழங்கல்.
 
• சட்டத்தை அமுல் படுத்தும் பொலீஸ், நீதிமன்றம் போன்றவற்றின் தொழிற்பாட்டினை இலகுபடுத்த துணையாக இருத்தல்.
 
• தங்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட ஆவணம் தொடர்பில் பொறுப்பு கூறுபவராக இருத்தல்.
 
• பதவி இலச்சினையை தனிப்பட்ட கடிதங்களுக்கு பாவிக்கக் கூடாது. உடமை சம்பந்தப்பட்ட ஆவணங்களில் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.
 
 
 
சமாதான நீதவான்கள் தமது பதவியினை துஸ்பிரயோகம் பண்ணுகையில் அல்லது அவரது நடவடிக்கை தொடர்பில் முறைப்பாட்டினை நீதி அமைச்சின் செயலாளருக்கு தெரிவிக்க முடியும்.
 
 
செயலாளர்,
நீதி அமைச்சு,
மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி,
அதிகரணமாவத்தை,
கொழும்பு – 12.
 
தொலைபேசி இலக்கம் :    011 244 9959
மின் அஞ்சல் : secretary@justiceministry.gov.lk
 
 
ஆக்கம்,
 
பிரஷாந்தன் வேலுப்பிள்ளை 
ஆலையடிவேம்பு.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.