Jump to content

இறுக்கமற்ற உள்ளாடை 'விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது'


Recommended Posts

இறுக்கமற்ற உள்ளாடை 'விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது'

 

இறுக்கமற்ற உள்ளாடை (ஜட்டி) அணிவது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும், விந்தணுவை கட்டுப்படுத்துகின்ற ஹார்மோன்களையும் அதிகரிக்க செய்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.

இறுக்கமற்ற உள்ளாடை 'விந்து எண்ணிக்கையை அதிகரிக்கிறது'

அமெரிக்காவின் ஹார்வர்டு டிஹெச் சான் பொது சுகாதார கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர்கள் 656 ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

இறுக்கமான உள்ளாடை (ஜட்டி) அணிவோரைவிட இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோர் 25 சதவீத அதிக விந்தணு எண்ணிக்கை கொண்டவராக இருந்ததாக இந்த ஆய்வில் அவர்கள் கூறியுள்ளனர்.

விதைப்பைகளை சுற்றியிருக்கும் குளிரான வெப்பநிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் இந்த எளிமையான மாற்றம் ஆண்களின் ஆண்மைத்தன்மையை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

'மூளை விந்தணு உற்பத்தியை தூண்டுகிறது'

விந்தணு

விந்தணு உற்பத்தி 34 டிகிரி செல்சியஸை விட அதிகமான வெப்பநிலையில் பாதிக்கப்படுமென அறியப்படுகிறது. அதனால்தான் உடலுக்குள் இல்லாமல் விதைப்பை தனியாக தொங்கி கொண்டிருக்கிறது,

உள்ளாடைகள் (ஜட்டி) சில, விதைப்பையை உடலுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க செய்யும். இதனால் விரைகளை சுற்றிய வெப்பநிலை அதிகரிக்கிறது.

ஆனால், பாக்சர் போன்ற வேறு சில உள்ளாடைகள் விதைப்பையை தளர்வான இருக்க செய்து, குளிரான வெப்பநிலையை பாதுகாக்கின்றன.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கருவள சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்வோரில் இறுக்கமற்ற, தளர்வான பாக்சர் உள்ளாடை (ஜட்டி) பயன்படுத்தியோருக்கு அதிக விந்தணு எண்ணிக்கை இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இறுக்கமான உள்ளாடை அணிந்தோர் கொண்டிருந்த நீந்திச்செல்லும் சக்தியுடைய 33 சதவீத விந்தணுக்களைவிட 17 சதவீதம் அதிக விந்தணுக்களை இறுக்கமற்ற உள்ளாடை அணிந்திருந்தோர் பெற்றிருந்தனர்.

ஆனால், விந்தணுவின் வடிவமோ, டிஎன்ஏயின் தரமோ யாருக்கும் பாதிக்கப்படவில்லை.

விந்தணுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உள்ளாடைக்குள் நிலவும் அதிக வெப்பம் இந்தப் பிரச்சனையின் மூலக்காரணம் என்ற அனுமானத்தோடு, இந்த ஆண்களின் வயது, உடல் எடை குறியீடு மற்றும் புகை பிடித்தல், சுடுநீரில் குளிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட விந்தணுவை பாதிக்கக்கூடிய பிற அம்சங்களையும் ஆய்வாளர்கள் கவனத்தில் கொண்டு இதனை ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

விந்தணுவை உற்பத்தி செய்ய விதைப்பைகளுக்கு ஆணையிடும் மூனையின் ஒரு ஹார்மோன்தான் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்). இந்த வகையான ஹார்மோன் இறுக்கமற்ற உள்ளாடை அணிந்தோரிடம் 14 சதவீதம் குறைவாக இருந்தது 'ஹூமன் ரிபுராடக்ஷன்' பத்திரிகையில் வெளியான இந்த ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

விதைப்பையின் வெப்பநிலை அதிகரிப்பை ஈடுசெய்வதற்கு அதிக ஹாமோனை சுரக்க செய்வதும், இறுக்கமான உள்ளாடை அணிகின்றபோது விந்தணுக்களை குறைப்பதையும் இந்த நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் (ஃஎப்எஸ்ஹெச்) கட்டுப்படுத்துவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஷிஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண்குறி நோயியல் பேராசிரியர் ஆலன் பேஸி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இறுக்கமான உள்ளாடை அணிவது விதைப்பைகளில் சேதமடைய செய்வதை, வேறுபட்ட உள்ளாடை வகைகளை அணிந்த ஆண்களிடன் காணப்படும் நுண்ணுயிர் ஊக்குவிக்கும் ஹார்மோன் மாறுபடுகின்ற நிலை (ஃஎப்எஸ்ஹெச்) காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

இனப்பெருக்கம் ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு

விந்தணுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆய்வு விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை பற்றியது. ஆண்மைத்தன்மை பற்றியதல்ல.

எந்த வகையான உள்ளாடைகளை அணிந்தாலும், விந்தணு எண்ணிக்கை இயல்பாகவே இருக்கிறது.

ஆனால், குறைவான விந்தணு உற்பத்தி நிலையிலுள்ள சில ஆண்களுக்கு, இறுக்கமான உள்ளாடை அணிவதை மாற்றிக்கொண்டு தளர்வான உள்ளாடைகளை அணிவது உதவலாம் என்று பேராசிரியர் ஆலன் பேஸி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"இறுக்கமான உள்ளாடையால் பாதிப்பு இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. ஆண்கள் தங்களுடைய நிலைமையை மேம்படுத்தி கொள்வதற்கு மலிவான, எளிய முயற்சி இருப்பதையும் இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

"விந்தணு அதிகரிப்பதற்கு சுமார் 3 மாதங்கள் ஆகின்றன. எனவே முன்னதாகவே திட்டமிட்டு கொள்ளுங்கள்" என்று இந்த ஆய்வின் ஆசிரியர் டாக்டர் ஜோர்ஜ் சாவெரோ பிபிசியிடம் கூறியுள்ளார்.

"மலட்டுத்தன்மை என்பது வெறுமனே பெண்களை சார்ந்த பிரச்சனையல்ல. இனப்பெருக்கம் என்பது ஆண், பெண் இருபாலாரின் செயல்பாடு. எனவே, கருவளத்திற்கு ஆண்களின் பங்களிப்பு பற்றி நாம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறேன்" என்று டாக்டர் ஜோர்ஜ் தெரிவித்திருக்கிறார்.

https://www.bbc.com/tamil/science-45132898

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொள தொள என போட்டால் தொங்கிப் போய்விடும் என்கிறார்கள். டைட்டாக போட்டாலும் பிரச்சினை என்னப்பா இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவனமே கட்டாத நம்ம பூட்டர், 14 பிள்ளைகள் பெத்ததன் ரகசியம் வெளங்குது. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:

தொள தொள என போட்டால் தொங்கிப் போய்விடும் என்கிறார்கள். டைட்டாக போட்டாலும் பிரச்சினை என்னப்பா இது.

ஒரு அறிக்கையை விட்டு போட்டு 
ஆய்வுக்கு என்று ஒதுக்கிய பணத்தை 
ஆட்டயே போட்டுகொண்டு ......
இருக்கிற உள்ளாடையை போட்டுகொண்டு அவர்கள் போய்விடுவார்கள்.

வாசிக்கிறவர்கள்தான் ........
இவளவு காலமும் உள்ளாடை போடவனுக்கு 
பிள்ளை பிறக்காதமாதிரி ...
குழம்பி கொண்டு திரிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் காத்தோட்டமாய் இருக்கிற உடுப்புக்கள் தான் போடோணும்......கோமணத்தோடை இருக்கிற எம் பெருமான் முருகப்பெருமான் இரண்டு பேரை வைச்சிருக்கிற சூட்சுமம் ஏனெண்டு இப்பதான் விளங்குது :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இனிமேல் காத்தோட்டமாய் இருக்கிற உடுப்புக்கள் தான் போடோணும்......கோமணத்தோடை இருக்கிற எம் பெருமான் முருகப்பெருமான் இரண்டு பேரை வைச்சிருக்கிற சூட்சுமம் ஏனெண்டு இப்பதான் விளங்குது :cool:

Tooooooo late.Sorry.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.