Jump to content

மாதவிடாய் மன அழுத்தம்: கணவர்களுக்கும் காதலர்களுக்கும் ஓர் எச்சரிக்கை


Recommended Posts

மாதவிடாய் மன அழுத்தம்: கணவர்களுக்கும் காதலர்களுக்கும் ஓர் எச்சரிக்கை

 
பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

''திருமணமான புதிதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சினிமாவுக்கு செல்வோம். ஆனால் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அன்று திரைப்படத்திற்கு போகமுடியாது என்று மனைவியிடம் சொன்னதும், அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.''

இதைச் சொலிவிட்டு, மனைவி மோனாவை பார்த்து சிரிக்கிறார் சந்தோஷ், மோனாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண பந்தத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஓராண்டுதான் ஆகிறது. தற்போது தம்பதிகளிடையே நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது.

மோனாவிடம் திரைப்படத்திற்கு செல்ல நேரமில்லை என்று சொன்னபோது, அவர் மாதவிடாய்க்கு முன்னதாக ஏற்படும் மன அழுத்தம் அதாவது பி.எம்.எஸ் (Pre-Menstrual Stress) என்ற அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது சந்தோஷுக்கு தெரியாது.

பெண்கள்படத்தின் காப்புரிமைMONALISA/FACEBOOK Image captionசந்தோஷ் - மோனா தம்பதி

ராஜஸ்தான் மாநில விவாகாரம்

இது சிறிய விவகாரம். எனவே கோபமும் விரைவிலேயே அடங்கிவிட்டது. ஆனால் பல சமயங்களில் இதுபோன்ற சமயத்தில் நிலைமை உயிரையும் குடித்துவிடுகிறது.

ராஜஸ்தானில் அஜ்மீரில் ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசியெறிந்துவிட்டார். அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது.

இந்த வழக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெண் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தத்தில் இருந்ததாக அந்த பெண்ணின் தரப்பில் வாதிடப்பட்டது. அதனால் தன்னுடைய செயலின் விளைவு என்ன என்று தெரியாத நிலையில் அந்த தாய் இருந்ததாக குறிப்பிடப்பட்டது. வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

பி.எம்.எஸ் என்றால் என்ன?

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு முன் இந்த காலகட்டம் துவங்குகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்கள் பெண்ணுக்கு மனதளவில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பிட்ட ஒரு பொருளை சாப்பிட விருப்பம் அல்லது வெறுப்பு, கோபம் வருவது, படபடப்பு வழக்கமான நடவடிக்கைகளில் வித்தியாசம் ஏற்படுவதை கவனிக்கலாம்.

பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

டெல்லியில் உள்ள பெண்கள் நல சிறப்பு மருத்துவர் அதிதி ஆசார்யாவை சந்தித்து அவரிடம் பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் அழுத்தம் பற்றி விரிவாக பேசினோம்.

''பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுதல்களால் பி.எம்.எஸ் நிகழ்கிறது. சிலருக்கு உடல் வலி அதிகரிக்கும். சிலருக்கு வயிற்று வலியும், மார்பகத்தின் அருகே வலியும் ஏற்படும். சிலருக்கு தலைவலி ஏற்படலாம். சில பெண்களின் மனோநிலை திடீரென மாறலாம். காரணமே இல்லாமல் அழுகை வரலாம்'' என்று அதிதி சொல்கிறார்.

அறிவியல் பொது நூலகத்தின் PLosONE என்ற பத்திரிகையில் 2017 ஏப்ரலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி 90 சதவிகித பெண்கள் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

இதில் 40 சதவிகித பெண்களுக்கு இந்த காலகட்டத்தில் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதிலும் இரண்டு முதல் ஐந்து சதவிகித பெண்களுக்கு மிக அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது, இது அவர்களின் அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

ஆண்களுக்கு புரியாத மாதவிடாய் பிரச்சனை

இந்த சமயத்தில் பெண்களின் மனம் அமைதியாக இருக்கவேண்டியது அவசியம். அப்போது, மற்றவர்கள் தங்களை புரிந்துகொள்ள வேண்டும் என விரும்பும் பெண்கள், குடும்பத்தினர் தங்களுக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயல்பே.

வணிகவியல் இளங்கலை பட்டம் பயிலும் ஆயுஷ், தனது தோழியின் மனோநிலையில் ஏன் மாறுதல் ஏற்படுகிறது என்று புரியாமல் குழம்பினார்.

''நாங்கள் பழகத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் எனக்கு ஆரம்பக்கட்டத்தில் மாதவிடாய் பிரச்சனைகள் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு நாள் காரணமே இல்லாமல் என் தோழி கோபித்துக் கொண்டபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நானும் பதிலுக்கு கோபத்தை கொட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன்'' என்கிறார் ஆயுஷ்.

மாதவிடாய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கூகுளில் வேறு ஒரு செய்தியை தேடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாதவிடாய் தொடர்பான விஷயங்களை ஆயுஷ் படித்தார். பிறகு அதுதொடர்பான தகவல்களை தேடிப்படித்து ஓரளவு விஷயங்களை புரிந்துகொண்டார். மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பும் பெண்களின் மனதில் அழுத்தம் உண்டாகலாம் என்றும் அதற்கு பெண்களின் சுபாவம் காரணமில்லை, ஹார்மோன்களே காரணம் என்பதையும் அறிந்துகொண்டார்.

ஆயுஷின் கருத்தை மேலும் விவரிக்கும் டாக்டர் அதிதி, ''என்னிடம் வரும் தம்பதிகளில் பலரின் கணவருக்கு மாதவிடாய், அதற்கு முன்பு ஏற்படும் மன அழுத்தம் பற்றி ஒன்றுமே தெரிவதில்லை. தனது வாழ்க்கைத் துணை எதிர்கொள்ளும் மன அழுத்தங்களையும், வலியையும் அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பது பெண்களுக்கு மேலும் அதிக எரிச்சலை கொடுக்கிறது. இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கிறது'' என்று சொல்கிறார்.

பெண்கள்படத்தின் காப்புரிமைLAURÈNE BOGLIO

வாழ்க்கைத்துணையின் பங்கு

ஓராண்டு திருமண வாழ்க்கையில் தன் கணவரின் புரிதலில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் மோனா.

என் கணவருக்கு சகோதரிகள் இருந்தாலும், மாதவிடாய் பற்றி அவருக்கு எதுவுமே தெரியவில்லை. அந்த சமயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை புரிந்துகொள்ளாமல் கோபப்படுவார். ஆனால் இப்போது அவரிடம் நல்ல மாற்றம் தெரிகிறது. அவரின் ஆதரவு இருப்பதால் நான் மாதந்தோறும் அந்த கொடுமையான காலகட்டத்தை கடப்பது சற்று இலகுவாக இருக்கிறது.''

PLosONE ஆய்வறிக்கையின்படி, இயல்பான தம்பதிகளுடன் ஒப்பிடும்போது லெஸ்பியன் ஜோடிகளிடம் மதாவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் குறித்த புரிதலும், ஆதரவும் அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால், இருவருமே பெண்களாக இருப்பதால் ஒருவரின் உணர்வுகள் மற்றவருக்கு புரிவது இயல்பாகவே இருக்கிறது.

எனவே, கணவனோ, காதலனோ அல்லது ஆண் நண்பரோ ஒரு பெண்ணின் மனோநிலையையும், குறிப்பாக மதாவிடாய் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில் அவர்களின் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றங்களையும் சிரமங்களையும் புரிந்து கொண்டால், பல பிரச்சனைகள் ஏற்படுவதையே தவிர்க்கலாம். ஆனால் பி.எம்.எஸ் காலகட்டத்தில் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், மருத்துவரை அணுகுவதே நல்லது என்கிறார் அதிதி.

பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மருத்துவ சிகிச்சை

பிரிட்டனில் த கன்வர்சேஷன் என்ற வலைதளத்தில் பி.எம்.எஸ் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மாதவிடாய்க்கு முந்தைய காலகட்டத்தில் மனோநிலையில் மாறுதல்கள் ஏற்படும் பெண்களுக்கு தனியாகவும், அவர்களின் துணைவர்களோடு இணைந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

துணைவரோடு சிகிச்சையளிக்கப்பட்ட பெண்கள் பி.எம்.எஸ்-இல் இருந்து குணமாகும் வாய்ப்புகள் அதிகமாக இருந்ததையும், தனியாக சிகிச்சை பெற்ற பெண்களுக்கு பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை என்று இந்த இந்த ஆய்வில் தெரியவந்தது.''

பெண்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதிதியின் கருத்துப்படி, ''பி.எம்.எஸ் சமயத்தில் பெண்களின் வயிறு, மார்பகங்கள் மற்றும் பிறப்புறுப்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் அவர்கள் வழக்கத்தைவிட வித்தியாசமாக உணர்வார்கள். ஒருவரின் அந்தரங்க உறுப்புகளில் வலி ஏற்பட்டால் அவர்களால் எப்படி இயல்பாக இருக்கமுடியும் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். அந்த சமயத்தில் வாழ்க்கைத் துணை புரிந்து கொண்டு உதவி செய்தால் அது எவ்வளவு ஆறுதலைக் கொடுக்கும்!''

மனைவி மோனாவுடன் அமர்ந்திருக்கும் சந்தோஷ் புன்சிரிப்புடன் இவ்வாறு கூறுகிறார், ''திருமணமான புதிதில் மனைவிக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பே ஆண்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொள்ளவேண்டும் என நினைப்பேன். ஆனால், இப்போது அந்த சிரமமான நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.''

https://www.bbc.com/tamil/science-45142846

Link to comment
Share on other sites

மாதவிடாய் மன அழுத்தம்: தெரிந்து கொள்ள வேண்டியவை

ரம்யா சம்பத்மனநல மருத்துவர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

மாதவிடாய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பெண்கள் ஆண்களுக்கு நிகராக அலுவலகங்களிலும் வெளியிடங்களிலும் அவர்களுக்கே உரித்தான முத்திரை பதித்து வரும் இந்நிலையில், மாதசுழற்சியும், அதையொட்டிய நாட்களில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களை குறித்தும் நாம் இந்த கட்டுரையில் அறிய இருக்கிறோம்.

சமீபத்தில், ஒரு புதுமணத் தம்பதியை சந்தித்தேன். மனைவியின் சுபாவத்தில் சில நாட்கள் வித்தியாசத்தை உணர்வதாக கூறினார் அவர்.

சில வாரங்கள், அவள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சில நாட்கள் அதிக கோபம், வாக்குவாதங்கள், அழுகை என இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .

இதன் பின்னணியில், அவர்களுக்கிடையே மனவிரிசல்களோ சிக்கல்களோ இல்லை என்பதை ஒரு மனநல மருத்துவராக உறுதிசெய்த பிறகு, இந்த சுபாவ வித்தியாசத்திற்கான மருத்துவ பின்னணியை அவர்களுக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

ஹார்மோன்கள் பாதிப்பு

பெண்களுக்கு உடல் ரீதியாக, ஹார்மோன்களின் தாக்கம் அதிகம். பூப்படையும் சமயம் தொடங்கி, மாதவிடாய் நிற்கும் சமயம் வரை ஒரு முப்பது நாற்பது வருடங்கள் பெண்கள் பல உடல் ரீதியான மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள்.

தோராயமாக எழுபது சதவீத பெண்களுக்கு பிஎம்எஸ் (PMS) எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் (Pre-Menstrual Syndrome) அவர்களுக்கு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

காதலர்கள்

ஹார்மோன்கள் நம் உடலின் இயக்கத்தையும், மனதின் தன்மையையும் மாற்ற வல்லவை என்பதை நாம் உணர வேண்டும்.

மாதவிலக்கு முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்கள் பெண்கள் ஈஸ்ட்ரோஜென் (Oestrogen) எனப்படும் ஹார்மோனின் பாதிப்பில் இருக்கிறார்கள்.

இந்த காலக்கட்டத்தில் (phase) பெண்களுக்கு அதிக உற்சாகமும் ஆர்வமும் ஏற்படும். ஆடித்தள்ளுபடியில் பொருட்களை வாங்குவதில் இருந்து , வீட்டு வேலைகளை பம்பரமாய் சுழன்று செய்வது வரை அனைத்தையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பார்கள். புதிய ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஏற்படும் . குடும்பத்தில் உறவுநிலைகளை கச்சிதமாக சகிப்புத்தன்மையுடன் அணுகுவார்கள்.

மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் என்றால் என்ன?

மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மாற்றங்களை உணர்கிறார்கள்.

மாதவிலக்கு முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்கள் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் பாதிப்பால் அதிக உற்சாகமும் ஆர்வமும் பெண்களிடம் ஏற்படும் ரம்யா சம்பத், மனநல மருத்துவர்

வயிறு உப்புவது , மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு , அஜீரண கோளாறுகள், உயிர் உறுப்புகளில் வலி, உடல் அசதி, தலை வலி போன்ற உபாதைகள் ஏற்படும்.

மனதளவிலும் பெண்கள் பல உளைச்சல்களை உணர்வதுண்டு. யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவது , காரணமில்லாமல் அழுகை, வேலையிடங்களில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவது, தனிமையாக உணர்வது, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்றவை பிஎம்எஸ்-இன் ('PMS') அறிகுறிகளே !

 

 

பசியின்மை, தூக்கமின்மை, நமக்கு பிடித்த விஷயங்களைக் கூட செய்வதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா ?

பிஎம்எஸ் அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன் தொடங்கி, ரத்தப்போக்கு தொடங்கியபின் படிப்படியாக குறையும். எல்லா அறிகுறிகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவது இல்லை.

வயதாக வயதாக இதன் தன்மையும் மாறுபடும். உணவுப்பழக்கங்களும் வாழ்க்கைமுறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

அதிகமாக எண்ணெய் பதார்த்தங்களை உண்பது, உடல் பருமன், ஒரே இடத்தில மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பது, போதிய தூக்கமின்மை, அதிக அழுத்தங்கள் போன்றவை பிஎம்எஸ் வீரியத்தை அதிகரிக்கும் .

பிஎம்எஸ் ('PMS') உள்ளதா என்பதை எப்படி அறிவது ?

உங்களுக்கு மேற்கூறிய அறிகுறிகள் எப்போது ஏற்படுகிறது என்பதை ஒரு டைரியிலோ, நாள்காட்டியிலோ குறித்துவையுங்கள்.

மனதளவில் ஏற்படும் மாற்றங்களை நடுநிலையாக ஒரு மூன்றாவது நபராக இருந்து கவனியுங்கள். உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை பட்டியலிடுங்கள் .

 

பிஎம்எஸ் என்பது நான்கில் மூன்று பெண்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதன் தாக்கம் குறைவாக இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

நூறில் ஐந்து பெண்களுக்கு பிஎம்எஸ்-இன் தன்மை மிகவும் அதிகமாகி அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும். அப்படி இருந்தால், அது மாதவிடாய்க்கு முந்தைய பதற்ற மனநிலை [Pre Menstrual Dysphoric Disorder (PMDD) ] என சொல்லக்கூடிய மனநலம் சார்ந்த கோளாறாக இருக்கலாம் . அதற்கு நீங்கள் ஒரு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது மிக முக்கியம்.

பிஎம்எஸ் - எப்படி சமாளிப்பது ?

ஹார்மோன்கள் உங்களில் ஏற்படுத்தும் பாதிப்புக்களை, உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைப்பதன் மூலம் சரிசெய்ய முடியும் .

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசுமுத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

ஒரே நேரம் அதிகமாக உண்பதைவிட, அடிக்கடி, அளவாக சாப்பிடுவது நல்லது. மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன் சில நாட்கள், பொரித்த உணவு வகைகள், அதிகம் உப்பு சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை குறைத்தால், வயிறு உப்புவது , மார்பகங்கள் கனப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.

நார்சத்து அதிகம் உள்ள காய்க்கறிகள், பழவகைகள், சிறுதானியம் உள்ள உணவு வகைகள் அதிகமாக உண்ணவேண்டும். காபி, டீ, குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம் .

ஒரு நாளில் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அது நடைபயிற்சியாகவோ, நடனமாகவோ, மிதி வண்டிஓட்டுதல், நீச்சல் போன்ற உங்களுக்கு முடிந்த விருப்பமுள்ள எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ரம்யா சம்பத், மனநல மருத்துவர் Image captionரம்யா சம்பத், மனநல மருத்துவர்

பொதுவாக மாதவிலக்கு நாட்களில் உடற்பயிற்சியை பலர் நிறுத்திவிடுவோம். ஆனால், மிதமான உடற்பயிற்சி பிஎம்எஸ்-ஐ குறைப்பது மட்டுமின்றி தாளாத வலியை ஏற்படுத்தும் மாதவிடாய் பிடிப்புகளையும் (menstrual cramps) குறைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை .

பகலில் எத்தனை தூங்கினாலும், அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது. தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன் திறன்பேசி, மடிக்கணினி போன்ற மின்னணுப் பொருட்களை தவிர்த்து (gadgets) தவிர்த்து புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் பேசி மகிழ்வது என மனதை இளைப்பாற்றி கொண்டால் உறக்கத்தின் தரம் மேம்படும் .

நினைவிருக்கட்டும் ! பிஎம்எஸ் ஒரு நோயல்ல. அதை நோயாக மாறாமல் இருப்பது, உங்கள் கையில் தான் இருக்கிறது. நம் உடலும் மனமும் இயங்கும் விதத்தை நாம் புரிந்துகொண்டால், எல்லாம் நலமே.

https://www.bbc.com/tamil/india-45238848

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.