Jump to content

எல்லாம் எவன் செயல்?


Recommended Posts

எல்லாம் எவன் செயல் ?

கடவுளை வணங்குபவர்கள்  அல்லது அதன் இருப்பை ஏற்றுக்கொள்பவர்கள் யாரென்றால், தாயிடம் இருந்து தாய் மொழியை கற்றுக்கொள்வதைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் அவனது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்கிறான்.

எப்படி உலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்ச்சு, லட்டின், ஸ்பானிஷ், சைனிஷ் போன்று ஒவ்வொரு நாட்டினருக்கும், இன குழுவிற்கும் அவர்கள் பேசி வழங்கிய மொழி வழி வழியாக தொடர்கிறதோ அதைப்போலதான் கடவுள் நம்பிக்கையும் அந்தந்த பகுதியில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையில் ராமன், சிவன், அல்லா, ஏசு இன்ன பிற கடவுள் என்று வழி வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

கடவுளை விட மொழி ஒரு வகையில் மனிதனுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால்,  ஒரு மனிதன் தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் அவனால் அவன் விரும்பும் ஏனைய மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் சிவனையோ, கிருஷ்ணரையோ கடவுளாக கொண்டவன் ஏசுவையோ அல்லாவையோ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் விசயங்களில் நல்ல விசயம் என்று கொண்டால் அது மொழிதானே தவிர கடவுள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இன்றுவரை ஆராய்ச்சியில் எத்தனையோ புதிய புதிய கண்டு பிடிக்க முடிந்த மனிதனால், கண்ணுக்கு தெரியாத காற்றைக் கூட பிடித்து குடுவையில் அடைத்த மனிதனால் கடவுளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள், இல்லாத ஒன்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் பதில். ஆக, கடவுள், கடவுள் நம்பிக்கை யாவும் ஒவ்வொரு மனிதனின் பெற்றோரின் செயலே அன்றி வேறில்லை.

நன்றி - கடவுளின் தத்துவம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, tulpen said:

எல்லாம் எவன் செயல் ?

கடவுளை வணங்குபவர்கள்  அல்லது அதன் இருப்பை ஏற்றுக்கொள்பவர்கள் யாரென்றால், தாயிடம் இருந்து தாய் மொழியை கற்றுக்கொள்வதைப் போலவே, ஒவ்வொரு மனிதனும் கடவுளையும் கடவுள் நம்பிக்கையையும் அவனது பெற்றோரைப் பார்த்தே கற்றுக்கொள்கிறான்.

பிழை. நான் எனது பெற்றோர்களின் மதத்தை பின்பற்றுவதிலை. நான் ஓர் இறைவனாகிய‌ இயற்கையை வழிபடுகின்றேன். 

48 minutes ago, tulpen said:

எப்படி உலகில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், பிரஞ்ச்சு, லட்டின், ஸ்பானிஷ், சைனிஷ் போன்று ஒவ்வொரு நாட்டினருக்கும், இன குழுவிற்கும் அவர்கள் பேசி வழங்கிய மொழி வழி வழியாக தொடர்கிறதோ அதைப்போலதான் கடவுள் நம்பிக்கையும் அந்தந்த பகுதியில் தோன்றிய நம்பிக்கையின் அடிப்படையில் ராமன், சிவன், அல்லா, ஏசு இன்ன பிற கடவுள் என்று வழி வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

பிழை. உ+ம். இயேசு பிறந்தது யூத நாட்டில் ஆனால் அங்கு கிறிஸ்தவம் பின்பற்றப்படுவதில்லை.

48 minutes ago, tulpen said:

கடவுளை விட மொழி ஒரு வகையில் மனிதனுக்கு சுதந்திரத்தை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால்,  ஒரு மனிதன் தமிழை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் அவனால் அவன் விரும்பும் ஏனைய மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் சிவனையோ, கிருஷ்ணரையோ கடவுளாக கொண்டவன் ஏசுவையோ அல்லாவையோ ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் விசயங்களில் நல்ல விசயம் என்று கொண்டால் அது மொழிதானே தவிர கடவுள் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

பிழை. மதம் நம்பிக்கை சார்ந்தது. மொழிதொடர்பாடல் சார்ந்தது.

48 minutes ago, tulpen said:

 

இன்றுவரை ஆராய்ச்சியில் எத்தனையோ புதிய புதிய கண்டு பிடிக்க முடிந்த மனிதனால், கண்ணுக்கு தெரியாத காற்றைக் கூட பிடித்து குடுவையில் அடைத்த மனிதனால் கடவுளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள், இல்லாத ஒன்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் பதில். ஆக, கடவுள், கடவுள் நம்பிக்கை யாவும் ஒவ்வொரு மனிதனின் பெற்றோரின் செயலே அன்றி வேறில்லை.

நன்றி - கடவுளின் தத்துவம். 

கடவுள் இருக்கின்றார் என‌ விசுவாசம் / நம்பிக்கை முக்கியம் அது இருந்தால் கடவுளின் செயல்களை காணலாம். "விசுவாசிப்பவர்கள் பேறுபெற்றவர்கள்"

Link to comment
Share on other sites

மனிதர்களாகிய எம்மை மீறிய  ஒரு சக்தி உண்டெண்ற ரீதியல் அந்த சக்தியை கடவுள் என்று நம்புவது வேறு. மதங்களை அதன் முரண்பாடான கோட்பாடுகளை நம்புவது என்பது வேறு. 

மதவாதிகள் ஆயிரம் கூறினாலும் மதங்கள் என்பவை இவ்வுலகில் நீண்டகாலமாய் இயங்கும் அரசியல் கட்சிகளே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.