Jump to content

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பதியப்பட்ட சில காட்சிகள்


Recommended Posts

 

படம் சொல்லும் கதைகள் :

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பதியப்பட்ட சில காட்சிகள்

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/diaspora/80/104679?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே கோயில் கட்டுங்கள். கோயிலில் சிற்பங்களைச் செதுக்குங்கள். தேரோட்டுங்கள். பக்தி இலக்கியங்களைக் கொண்டு செல்லுங்கள். இவற்றின் மூலமாக தமிழனின் இறைமை கலை சார்ந்தது ; மானிடத்திற்கானது ; அறிவியல் பூர்வமானது என உலகோர்க்குப் பறைசாற்றுங்கள். அதை விடுத்து கன்னத்தில் அலகு குத்தி, முதுகில் கொக்கியை மாட்டி என்னை   நாகரிகமடையாதவனாய்க் காண்பிக்கவா கடல் கடந்து சென்றீர்கள் ?

Link to comment
Share on other sites

5 hours ago, சுப.சோமசுந்தரம் said:

அங்கே கோயில் கட்டுங்கள். கோயிலில் சிற்பங்களைச் செதுக்குங்கள். தேரோட்டுங்கள். பக்தி இலக்கியங்களைக் கொண்டு செல்லுங்கள். இவற்றின் மூலமாக தமிழனின் இறைமை கலை சார்ந்தது ; மானிடத்திற்கானது ; அறிவியல் பூர்வமானது என உலகோர்க்குப் பறைசாற்றுங்கள். அதை விடுத்து கன்னத்தில் அலகு குத்தி, முதுகில் கொக்கியை மாட்டி என்னை   நாகரிகமடையாதவனாய்க் காண்பிக்கவா கடல் கடந்து சென்றீர்கள் ?

இவை இந்து சமய பண்பாடுகள் இல்லையா? எல்லா சமய சம்பிராதயங்களிலும் இவ்வாறான பல கலாச்சார செயற்பாடுகள் இருக்கின்றனவே. நீங்கள் ஏன் இந்து சமய சம்பிராயதங்களை நாகரிகம் அற்றவை என்று கருதுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

இவை இந்து சமய பண்பாடுகள் இல்லையா? எல்லா சமய சம்பிராதயங்களிலும் இவ்வாறான பல கலாச்சார செயற்பாடுகள் இருக்கின்றனவே. நீங்கள் ஏன் இந்து சமய சம்பிராயதங்களை நாகரிகம் அற்றவை என்று கருதுகிறீர்கள்?

பண்பாடு அல்லது கலாச்சாரம் என்பதும் சம்பிரதாயம் அல்லது வழக்கம் என்பதும் வெவ்வேறானவை . நீங்கள் சொல்கிற இந்து சமய சம்பிரதாயங்களில்தான் ஒரு காலத்தில் சில இடங்களில் உடன்கட்டை ஏறுதலும் , சிறார் திருமணங்களும் நடந்தேறின .  தன் சாமியை நினைத்து உடலை வருத்துவதிலும் மனித நாகரிகத்தில் வரைமுறை உண்டு . நெடுந்தூரம் நடந்து சென்று வணங்குவதில் வன்முறையில்லை. அலகு குத்துவதிலும் தீ மிதிப்பதிலும் வன்முறை உண்டு . அபாயமும் உண்டு .

இந்து சமயத்தில் மட்டுமல்ல . எந்த சமயத்திலும் தவறான வழக்கங்களைச் சுட்டுவது நம் கடமை . குடும்பக் கட்டுப்பாடு முறைகளுக்கு எதிரான கிறித்துவத்தையும் , பல (மூன்று) தார மணத்தை ஆதரிக்கும் இஸ்லாத்தையும் , துறவிகள் ஆடை துறந்து திரியும் ஜைனத்தையும் விமர்சிப்பது என் கடமை என நினைக்கிறேன் . மதம் சொல்லும் மானுடத்தை ஏற்கலாம் . மதம் 'மதம்' கொள்வதை ஏற்க இயலாது . அநாகரிகங்களை  ஜனநாயக அரசேயானாலும் நிராகரிக்க வேண்டும் . இன்னும் சொல்லப்போனால் ஒரு ஜனநாயக அரசுதான் முதலில் நிராகரிக்க வேண்டும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.