Jump to content

இந்தியாவில் பூஜ்ஜியம் உருவானதன் பின்னணி என்ன?


Recommended Posts

இந்தியாவில் பூஜ்ஜியம் உருவானதன் பின்னணி என்ன?

 
 

பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு கணிதத்துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது. நுண்கணிதம், இயற்பியல், பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கும் அடிப்படையானதாக திகழ்கிறது பூஜ்ஜியம் என்னும் சுழியம்.

இந்தியாபடத்தின் காப்புரிமைMARIELLEN WARD

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடுநாயகமாக அமைந்துள்ள எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த குவாலியர் கோட்டை, இந்தியாவின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாகும். உயரமான விதானங்கள் கொண்ட கோபுரங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் மற்றும் வண்ணமயமான ஓவியங்கள் கொண்ட ஒன்பதாம் நூற்றாண்டு ஆலயம் ஒன்றையும் இக்கோட்டையில் காணலாம். இந்த ஆலயம் பாறைகளை செதுக்கி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜ்ஜியத்தின் தளம்

சதுர்புஜ் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம், இந்தியாவின் பிற புராதான ஆலயங்களை போலவே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் எழுத்து வடிவில் புஜ்ஜியம் அமைக்கப்பட்டிருக்கும் புராதன தளம் இந்த ஆலயம் என்பது இதற்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது.

ஆலயச் சுவரில் ஒன்பதாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட எழுத்துக்களில் '270'. என்ற எண் தெளிவாக தெரிகிறது.

கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில், பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு மிகவும் ஆக்கப்பூர்வமானது. இன்றைய உலகில், உலகின் ஒவ்வொரு நகர்வுக்கும் அடிப்படையாக திகழ்வது பூஜ்ஜியம். கணிதம், நுண்கணிதம், இயற்பியல், பொறியியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தொடக்கமும் பூஜ்யத்திலிருந்தே சாத்தியமானது.

நவீன இந்தியாவிற்கும், நவீன உலகத்திற்கும் அடித்தளமிட்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இந்திய கலாசாரத்தில் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

இந்தியாபடத்தின் காப்புரிமைMARIELLEN WARD Image captionகுவாலியர் கோட்டை

சூனியத்தில் இருந்து பூஜ்ஜியம்

ஒரு இந்திய தொன்மயில் வல்லுநர் தேவ்தத் பட்நாயக், ஒருமுறை சொன்ன கதை எனக்கு நினைவிற்கு வருகிறது. பேரரசர் அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்தது தொடர்புடைய கதை அது.

போரில் பல நாடுகளை வென்ற பிறகு இந்தியா வந்தடைந்த அலெக்சாண்டர், நாகா யோகி ஒருவரை சந்திக்கிறார். நிர்வாணமாக பாறையில் அமர்ந்து வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

அவரை பார்த்து அலெக்சாண்டர் கேட்டார், "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

"ஒன்றுமில்லாததை உணர்ந்துக் கொண்டிருக்கிறேன், நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்" என்று அந்த ஞானி கேட்டார்.

"நான் உலகத்தை வென்று கொண்டிருக்கிறேன்" என பதிலளித்தார் அலெக்சாண்டர்.

இருவருமே சிரித்தனர்; எதிரில் இருப்பவர் பைத்தியம், நேரத்தை வீணடிப்பதாக இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றியிருக்கலாம்.

குவாலியர் ஆலயச் சுவரில் பூஜ்ஜியம் என்ற குறியீடு உருவாக்கப்படுவதற்கு பல காலம் முன்னரே இந்த சம்பவம் நடந்தேறியது. ஆனால் அந்த துறவி சூனியத்தை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததற்கும் பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பிற்கும் ஒரு தொடர்பு இருந்திருக்கலாம்.

பிற நாகரீகங்களை விட, இந்திய கலாசாரத்தில் பூஜ்ஜியம் தொடர்பான விரிவான தத்துவங்கள் காணப்படுகின்றன. இந்திய கலாச்சாரத்தில், தியானம் மற்றும் யோகா போன்ற முறைகள் மூலம் மனதை சூனியமாக அதாவது ஒன்றுமில்லால் வெறுமையாக வைக்கும் முறைகள் தோன்றின.

இந்து மற்றும் பௌத்த சமயங்களில், பூஜ்யம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கோட்பாடுகள் போதிக்கப்படுகின்றன.

இந்தியாபடத்தின் காப்புரிமைMARIELLEN WARD

பூஜ்ஜியம் என்ற எண்ணின் பூர்வீகம் அல்லது தோற்றத்தைப் பற்றி ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளது நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜீரோ ஆரிக்இந்தியா (ZerOrigIndia) என்ற அமைப்பு.

அதன் செயலாளர் டாக்டர் பீட்டர் கோபட்ஸ் பூஜ்யத்தின் தோற்றத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "கணிதத்தில் பயன்படுத்தப்படும் பூஜ்யம் என்பது வெறுமை தொடர்பான சமகால தத்துவமான சூனியத்தில் இருந்து உருவாகியிருக்கலாம். சூனியத்தின் தத்துவம் என்பது, ஒருவர் மனதில் இருந்து பதிவுகள் மற்றும் எண்ணங்களை நீக்கி வெறுமையாக்குவது என்ற புத்தமத கோட்பாடு என்பது குறிப்பிடத்தக்கது".

மேலும், பண்டைய காலத்தில் இருந்தே இந்தியாவில் கணிதத்தில் மிகப்பெரிய ஆர்வம் இருந்தது. பண்டைய கிரேக்கர்கள் எண்களை 10,000 என்பது வரை கணக்கிட்ட நிலையில் இந்திய கணிதவியலாளர்கள் டிரில்லியன் போன்ற மிகப்பெரிய எண்களை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இன்ஃபினிட்டி என்று அழைக்கப்படும் முடிவிலியின் பல்வேறு வகைகளையும் இந்திய கணிதவியலாளர்கள் பயன்படுத்தினார்கள் என்பது கணிதத்துறையில் இந்தியர்களின் முன்னோடியாக இருந்தார்கள் என்பதை உணர்த்துகிறது.

இந்தியா

இந்திய அறிவியல் மற்றும் கணிதவியலாளர்களான ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டிலும், பிரம்மகுப்தா கி.பி 598 ஆம் ஆண்டிலும் பிறந்தனர். இவர்கள் இருவரும் நவீன தசம இட மதிப்பீட்டு முறையை முதன்முறையாக விவரித்த முன்னோடிகள் என்றும் பூஜ்ஜியத்தின் பயன்பாட்டை நிர்வகிக்கும் தற்போதைய விதிகளை வழங்கியவர்களாகவும் அறியப்படுகின்றனர்.

வட்ட வடிவில் பூஜ்ஜியத்தை எழுத்துவடிவில் முதல்முறையாக பதிவு செய்திருப்பது குவாலியர் கோட்டையில் உள்ள ஆலய சுவரில் என்று கூறப்பட்டாலும், மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டை சேர்ந்த பண்டைய பக்ஷாலி கையெழுத்து பிரதியில் (Bhakshali manuscript) பூஜ்ஜியத்தின் வடிவம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும், தட்சசீலத்தில் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது) கிடைத்த பழங்கால இந்திய பாக்ஷாலி கையெழுத்துப் பிரதியில் பூஜ்யம் என்ற எழுத்து காணப்படுகிறது. தற்போது இதுதான் பூஜ்ஜியத்தின் மிகப்பழைய எழுத்து வடிவமாக கருதப்படுகிறது.

எண்கள்படத்தின் காப்புரிமைCSUEB/ALAMY

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கணிதவியல் பேராசிரியர் மார்கஸ் டு செளடோய், பல்கலைக்கழக இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "கணித வரலாற்றில் மிகப்பெரும் சாதனையாக கருதப்படும் பூஜ்ஜியம் என்ற எண், பக்ஷாலி கையெழுத்து பிரதியில் புள்ளியைப் போன்று காணப்படும் வடிவத்தில் இருந்து உருவானது. இந்தியாவின் பண்டைய கணிதவியலாளர்கள் வழங்கிய பூஜ்ஜியம் இன்றைய நவீன உலகின் அடித்தளமாகும் வகையில் மூன்றாம் நூற்றாண்டிலேயே விதைக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக இந்திய துணை கண்டத்தில் கணிதம் எவ்வாறு துல்லியமானதாக இருந்தது என்றும் கணித பயன்பாடு வளமையுடன் இருந்தது என்பதையும் இந்த கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன."

இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் ஏன் பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பு நடக்கவில்லை? இதற்காக கூறப்படும் சில காரணங்கள் சுவாரசியமானவை.

சில கலாசாரங்களில் சூனியம் என்பது எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிப்பதாக கருதப்பட்டது. உதாரணமாக, ஐரோப்பாவில் பூஜ்ஜியத்தை பயன்படுத்துவதற்கு கிறித்துவ மதம் ஆரம்ப காலங்களில் தடை விதித்தது. அதற்கு காரணம் என்ன தெரியுமா?

"கடவுளே அனைத்துமாக இருப்பதால் சூனியம் அதாவது ஒன்றுமே இல்லை என்று சொல்லும் பூஜ்ஜியம் சாத்தானை குறிக்கும் குறியீடு".

எனவே இதுபோன்ற கருத்துக்களால் சூனியத்தை பற்றிய கண்டுபிடிப்புகள் பிற நாடுகளில் பூஜ்ஜியமாக இருந்ததோ என்னவோ?

ஆனால் ஆன்மீக அறிவு மேம்பட்டிருந்த இந்தியாவில் தியானமும் பூஜ்ஜியமும் கண்டுபிடிக்கப்பட்டன.

பண்டைய இந்தியா, கணிதத்துறைக்கு வழங்கிய மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பான பைனரி எண்கள் (இரும எண்கள்) நவீன உலகத்துடன் ஆழமான தொடர்பு கொண்டது. இந்த பைனரி எண்கள் நவீன கணிப்பீடுகள் மற்றும் கணினிகளின் அடிப்படையாகும்.

இந்தியாபடத்தின் காப்புரிமைJOERG BOETHLING/ALAMY

இந்திய சிலிகான் வேலி

பெங்களூரு கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்லும் 37 கிலோமீட்டர் இடைவெளியில் உள்ள ஊரகப் பகுதியில் பரந்து விரிந்துள்ள ஐ.டி நிறுவனங்களின் வானாளவிய கட்டடங்கள் அடங்கிய வளாகங்களை பார்க்கலாம்.

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை பறைசாற்றும் விதமாக இண்டெல், கூகுள், ஆப்பிள், அராகல், மைக்ரோசாஃப்ட், அடோப், சாம்சங், அமேசான் என பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இன்ஃபோசிஸ் விப்ரோ போன்ற இந்திய நிறுவனங்களும் இந்திய சிலிகான் வேலியில் அமைந்துள்ளன.

ஆடம்பரமான, பல்வேறு நாடுகளை இணைக்கும் விமான சேவைகளை வழங்கும்அழகான விமான நிலையம் மாற்றத்திற்கான முதல் உதாரணமாக திகழ்கிறது. பூங்கா நகரம் என்று அறியப்பட்ட பெங்களுர், ஐ.டி நிறுவனங்கள் வந்த பிறகு பெங்களூருவாகவும், இந்தியாவின் சிலிகான் வேலி என்றும் அறியப்படுகிறது.

எலக்ட்ரானிக் சிட்டி என்ற ஒற்றை தொழிற்துறை வளாகமாக 1970களில் தொடங்கப்பட்ட தொழில்நுட்பத் துறை வளர்ச்சியானது, கர்நாடக மாநிலத்தின் முதுகெலும்பாக பரிணமித்துவிட்டது. தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் ஐ.டி தொழிலின் 40% பெங்களூருவை சார்ந்திருக்கிறது.

ஒரு கணக்கீட்டின்படி, இருபது லட்சம் ஐ.டி தொழில் நிபுணர்கள், 60 மில்லியன் ஐ.டி தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய பிற வேலைகள் மற்றும் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐ.டி தொழில் ஏற்றுமதி என 2020ஆம் ஆண்டிற்குள் உலகின் மிகப்பெரிய ஐ.டி. மையமாக பெங்களூரு மாறிவிடும்.

இது அனைத்தும் சாத்தியமானது பைனரி எண்களால் தான்!

நவீன டிஜிட்டல் கணினிகள் இரண்டு சாத்தியங்களின் அடிப்படையில் இயங்குகின்றன. 'ஆன்' மற்றும் 'ஆஃப்' ('On' & 'off') 'On' என்பதை '1' என்றும், 'off' என்பதை '0' அதாவது பூஜ்ஜியம் என்றும் கொண்டு இவை இயங்குகின்றன.

"கி.மு இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்திய இசை வித்வான் பிங்கலா பைனரி எண்களை பயன்படுத்தியிருக்கிறார்" என்று அமெரிக்காவின் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் வானியல் பேராசிரியர் சித்தார்த் கக் கூறுகிறார்.

இவை அனைத்துமே சூனியத்தில் இருந்து பூஜ்ஜியத்தை கண்டறிந்த இந்தியாவில் தோன்றியது.

https://www.bbc.com/tamil/india-45173928

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.