Jump to content

நல்லூர் பெருந்திருவிழாவுக்கான – கொடிச்சீலை ஒப்படைப்பு!!


Recommended Posts

நல்லூர் பெருந்திருவிழாவுக்கான – கொடிச்சீலை ஒப்படைப்பு!!

 

 

IMG_9224-780x405.jpg

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.

அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை சிறப்புப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து செல்லப்பட்டு காலை 10.00 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை வந்தடைந்தது.

அங்கு ஆலயத்தின் வெளிவீதி உலாசென்று சுபநேரத்தில் பூசைகள் இடம்பெற்று கொடிச்சீலை நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

 

IMG_9261.jpg
 
IMG_9248.jpg
 
IMG_9241.jpg
 
IMG_9229.jpg
 

 

 

DSC_1564.jpg
 
DSC_1644.jpg
 
DSC_1685.jpg
 
DSC_1731.jpg
 
DSC_1737.jpg
 
DSC_1738.jpg
 
IMG_9224-1.jpg
 
IMG_9229-1.jpg

https://newuthayan.com/story/11/நல்லூர்-பெருந்திருவிழாவுக்கான-கொடிச்சீலை-ஒப்படைப்பு.html

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தன் கொடியேற்றம் இன்று

 

 

fc28Nallur_temple_15082018_SPP_GRY.jpg

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று வியாழக்கிழமை முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ந்தும் 25 தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-25 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்- 05 மணிக்குத் திருமஞ்சத் திருவிழாவும், அடுத்த மாதம்-01 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் -06 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-06 மணிக்கு கார்த்திகை உற்சவமும், 03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-07 மணிக்கு சூர்யோற்சவமும், 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும், 05 ஆம் திகதி புதன்கிழமை காலை-07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-05 மணிக்கு வேல் விமான உற்சவமும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-07 மணிக்கு தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும், 07 ஆம் திகதி பிற்பகல்-05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை-07 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை-07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.அன்றைய தினம் மாலை கொடியிறக்க வைபவம் இடம்பெறும். வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நல்லூர்க் கந்தன் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான வசதிகளை வழமை போல யாழ் மாநகரசபை ஏற்பாடு செய்துள்ளது. விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்.

12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகவும், இலங்கையின் வடபகுதியிலுள்ள தமிழர்களின் இராசதானியாகவும் விளங்கியது நல்லூர்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு 'குருக்கள் வளவு' என்ற காணியில் 884 ஆம் ஆண்டளவில் கட்டியதாக 'கைலாய மாலை' எனும் நூல் கூறுகிறது.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் புவனேகபாகு தான் கட்டினான் என்பதற்கு ஆதாரமாக கைலாயமாலையில் வெளிவந்த பின்வரும் செய்யுளைக் குறிப்பிடலாம்.

 

 
 

"இலகிய சகாத்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே.”

ஆதியில் ஆலயத்தை நிர்மாணித்த ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு தற்போதும் மஹோற்சவ காலங்களில் கட்டியம் கூறும் போது ஆசிர்வதிக்கப்படுகின்றார்.போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில்'யாழ்ப்பாண வைபவ மாலை' நூலிலும் கூறப்பட்டுள்ளது.

திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பிற்போடும் வழக்கம் இந்தக் கோயிலில் அறவே கிடையாது. ஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக்கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திருவீதியும் திகழ்கின்றன.

ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன.

http://www.thinakaran.lk/2018/08/16/கட்டுரைகள்/26210/நல்லூர்-கந்தன்-கொடியேற்றம்-இன்று

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம்

 
 
 
வரலாற்று சிறப்பு மிக்க அலங்கார கந்தனின் நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 09 ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
 
முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையாருக்கு அபிசேங்களும்,ஸ்ரீமுருகப்பெருமானுக்கு உரிய மந்திரங்கள் ஆராதனைகளும்,என்பன வசந்த மண்டபத்தில் இடம்பெற்றது.
 
பின்னர் 10 மணி சுபநேரத்தில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.பின்னர் கொடிமரத்திற்கான கிரிகைகள் என்பன இடம்பெற்று அங்கு பக்தர்களின் அரோகரா கோசத்துடன் எம்பெருமான் சமேதர உள்வீதி வலம் வந்தனர்.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_1871.jpg?resize=800%2C533DSC_1908.jpg?resize=800%2C533DSC_1913.jpg?resize=800%2C533DSC_1943.jpg?resize=800%2C533DSC_1966.jpg?resize=800%2C533DSC_1997.jpg?resize=800%2C533DSC_2031.jpg?resize=800%2C533DSC_2052.jpg?resize=800%2C533DSC_2062.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/91633/

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா

DSC_2136.jpg?resize=533%2C800
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் திருவிழா நேற்று  (16.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_2079.jpg?resize=800%2C533DSC_2087.jpg?resize=800%2C533DSC_2088.jpg?resize=800%2C533DSC_2095.jpg?resize=533%2C800DSC_2099.jpg?resize=800%2C533DSC_2104.jpg?resize=533%2C800DSC_2109.jpg?resize=800%2C533DSC_2117.jpg?resize=800%2C533DSC_2124.jpg?resize=800%2C533DSC_2126.jpg?resize=533%2C800

http://globaltamilnews.net/2018/91701/

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா

DSC_2600.jpg?resize=533%2C800
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா நேற்று (20.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_2633.jpg?resize=533%2C800DSC_2644.jpg?resize=533%2C800DSC_2650.jpg?resize=800%2C533DSC_2656.jpg?resize=533%2C800DSC_2663.jpg?resize=800%2C533DSC_2566.jpg?resize=800%2C533DSC_2572.jpg?resize=533%2C800DSC_2587.jpg?resize=800%2C533DSC_2593.jpg?resize=800%2C533DSC_2600-1.jpg?resize=533%2C800DSC_2602.jpg?resize=533%2C800DSC_2629.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/92166/

Link to comment
Share on other sites

 

வணக்கம் தாய்நாடு...புகழ் மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் 2018

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஞ்சத் திருவிழா

DSC_3430.jpg?resize=800%2C533

 

யாழ்ப்பாணம் – நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா இன்று சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. சிற்ப சாஸ்திரி ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி இன்று அருள் பாலித்தார்.

 
 
மஞ்சத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வலம் வருவதை ‘வசந்தோற்சவம்’ என்றும் கூறுவது உண்டு. இந்த மஞ்சத்தில் அண்டவியற் கருத்துக்களும் பௌராணிகர் கருத்துக்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
 
இந்த அழகிய மஞ்சத்திலே முத்துக் குமாரசுவாமி எழுந்தருளி இன்று பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சியினை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் அலங்காரக் கந்தன் மஞ்சத்தில் வீதியுலா வருவதனை படங்களில் காணலாம்.
 
படங்கள் – ஐ .சிவசாந்தன்
DSC_3343.jpg?resize=533%2C800DSC_3357.jpg?resize=800%2C533DSC_3390.jpg?resize=800%2C533DSC_3397.jpg?resize=800%2C533  DSC_3523.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/92748/

 

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா

DSC_3801.jpg?resize=800%2C533
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா நேற்று   (26.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_3816.jpg?resize=800%2C533DSC_3817.jpg?resize=800%2C533DSC_3840.jpg?resize=800%2C533DSC_3861.jpg?resize=800%2C533DSC_3939.jpg?resize=800%2C533DSC_3957.jpg?resize=800%2C533DSC_3960.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/92893/

Link to comment
Share on other sites

நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா

DSC_4044.jpg?resize=533%2C800
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 12ம் திருவிழா நேற்று   (27.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
 
படங்கள்: ஐ.சிவசாந்தன்
DSC_3965.jpg?resize=800%2C533DSC_3974.jpg?resize=800%2C533DSC_3978.jpg?resize=800%2C533DSC_3985.jpg?resize=800%2C533DSC_3988.jpg?resize=800%2C533DSC_3999.jpg?resize=533%2C800DSC_4006.jpg?resize=533%2C800DSC_4029.jpg?resize=800%2C533  DSC_4084.jpg?resize=533%2C800DSC_4096.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/93027/

Link to comment
Share on other sites

பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக பெயர்பெற்றது நல்லூர்!

 

நல்லூர் கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ண விமான (தங்கவிமான அல்லது பொற்கூரை) மஹா கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பாக இடம்பெற்றது. அந்தவகையில் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயமாக இன்றுமுதல் நல்லூர் பெயர்பெற்றுள்ளது.

நல்லூர் ஆலய மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் கார்த்திகை நட்சத்திர நாளில் ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஐந்து பிரதான கும்பங்களை சிவாச்சாரியர்கள் ஏந்தி உள்வீதி வலம் வந்ததுடன் பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள் வீதியுலா வந்து, காலை 6.45 மணியளவில் வேத பாராயணம் ஓதி மங்கள இசையுடன் கலச அபிஷேகம் நடைபெற்றது.

இம்மஹாகும்பாபிஷேக கிரியைகளை நடத்துவதற்கு, தென்னிந்தியாவில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் உள்ளிட்ட நான்கு பூஜ்ய ஸ்ரீ தீக்ஷிதர்களும், வேத பண்டிதர்களும் நல்லூருக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருப்பதி ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாட்சியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

17398.jpg

Nallur-Kandasuwamy-Kovil-Festival-2.jpg

http://athavannews.com/பொற்கூரை-வேய்ந்த-முதல்-ஆ/

Link to comment
Share on other sites

நல்லூர் மகோற்சவ கார்த்திகை திருவிழா

 

nallur-day-18-4-720x450.jpg

நல்லூர் மகோற்சவத்தின் கார்த்திகை திருவிழா விசேட பூஜை வழிபாடுகளுடன் சிறப்புற இடம்பெற்றது.

திருவிழாவின் 18ஆம் நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கார்த்திகை திருவிழாவின் போது, ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

மாலை 5 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தீப்பந்தங்கள், கற்பூர சட்டிகள் சூழ ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் வெளிவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

இத்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகைதந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுச் சென்றனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் விசேட பூஜைகள் இடம்பெறுவதோடு, முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றார்.

 

nallur-day-18-7.jpgnallur-day-18-9-720x480.jpgnallur-day-18-6-720x480.jpgnallur-day-18-3-720x480.jpgnallur-day-18-2-720x480.jpgnallur-day-18-5.jpgnallur-day-18-8.jpgnallur-day-18-10.jpg

http://athavannews.com/நல்லூர்-மகோற்சவ-கார்த்தி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.