Jump to content

இந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது


Recommended Posts

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 72 ஆவது சுதந்திரன தின நிகழ்வு

 

 
 

இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

in02.jpg

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.என்.என். தரஞ்சித் சிங் சந்து தல‍ைமையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் இலங்கை - இந்தியாவின் வர்த்தக சபையின் உறுப்பினர்கள் இலங்கை வாழ் இந்தியப் பிரஜைகள் மற்றும் வெவ்வேறு துறைசார்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ta.jpg

tar.jpg

01.jpg

அத்துடன் இந் நிகழ்வில் இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நாட்டுப்புற கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/38520

Link to comment
Share on other sites

இந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது

 

இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி  வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில்  இன்று புதன்கிழமை   காலை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

01__1_.jpg

 யாழ். இந்திய உயர்ஸ்தானிகர் இந்திய தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

01__4_.jpg

அதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுதந்திரதின உரையினை உயர்ஸ்தானிகர் வாசித்ததுடன், வடக்கில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள்  , மக்களுடனான  தொடர்பாடல் மற்றும் இந்திய புலமைப் பரிசில்கள் பற்றியும்   உரையாற்றினார்.

01__5_.jpg

உரையினைத்  தொடர்ந்து  யாழ் பல்கலைக்கழக நடனத்துறையினரின்  "பாரத சுதந்திரம்" நாட்டிய நாடகம்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது. 

01__12_.jpg

குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், கலைஞர்கள், உட்பட  பலர் கலந்துக் கொண்டனர்

01__9_.jpg

http://www.virakesari.lk/article/38546

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

archeological-exhumation-in-Allaipitty-3

காங்கேசன்துறை  தொடக்கம்  வவுனியா வரைக்கும் இருக்கிற உள்ள வடலியள்,பனங்கூடல் எல்லாத்தையும் சீனனுக்கு காட்டுங்கோப்பா......

அப்பதான் தேவையில்லாத இடத்திலை சுதந்திரதினம் கொண்டாடுற கிந்தியனுக்கு வயிறு எரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இற்றைவரை இலங்கையில் சாதித்தவைகள்

1. இந்திரா காந்தி காலத்தில் மேற்கு நோக்கி ஒட்டிக்கொண்டிருந்த இலங்கைக்கு பாடம் புகட்ட வலிந்து தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுத , பண , பயிற்சி உதவிகளை வழங்கியது.

2. அவ்வாறு தான் வழங்கிய உதவிகளைப் பெற்றுக்கொண்டு போராளிகள் தனது சொல்லைக் கேட்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

3. போராளிகளைத் துரும்புச் சீட்டாக வைத்து இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

4. தன்னால் கொடுக்கப்பட்ட உதவிகளைக் கொண்டு போராளிகள் ஈழம் பெறும் தறுவாயை அடையமுதல், அதைத் நிறுத்தி தமிழர் ஈழம் பெறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டது.

5. 1987 இல் தமிழர்களுக்கு உதவுகிறோம் என்கிற போர்வையில் 125,000 இந்திய ஜவான்களை தமிழர் தாயகத்தில் களமிறக்கியது.

6. தவறான வெளிநாட்டுக் கொள்கையினால் உந்தப்பட்டு, காக்க வந்த மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்து, மனித குலத்திற்கெதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் தனது ராணுவம் நிலைகொண்டிருந்த வெறும் இரண்டரை வருடங்களில் செய்துமுடித்து, முகத்தில் கரிபூசியபடி அவமானத்துடன் வெளியேறியது.

7. 1991 இல், தனது நம்பிக்கை நட்சத்திரமான வருங்காலப் பிரதமரை தமிழ்நாட்டில் பலிகொடுத்தது.

8. தொடர்ந்தும் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டினை தனது வெளையுறவுக்கொள்கையாக வரிந்துகொண்டு 18 வருடங்கள் காத்திருந்தது.

9. 2008 - 2009 காலப்பகுதியில், தனக்குச் சார்பான சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து தமிழர் மீதான திட்டமிட்ட இனவழிப்புப் போர் ஒன்றை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்து முடித்ததுடன், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் மிகவும் பயங்கரமான போர்க்குற்றங்களைப் புரிவதற்கு உடந்தையாக இருந்ததுடன், வெளியுலகிலிருந்து வந்த அழுத்தங்களை தனது பிராந்திய ராஜதந்திர பலத்தின் மூலம் தடுத்து நிறுத்தி முற்றான இனக்கொலை ஒன்றினை முன்னின்று நடத்தியதுடன் அதை மூடி மறைத்தது.

10. தமிழர்களைப் பழி வாங்குவதற்காக தனது பரம வைரிகளான சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் நாட்டின் ராணுவ, அரசிய பிரசன்னத்தை இலங்கையில் காலூன்ற அனுமதித்தது. 


11. இற்றைவரை தமிழர் மீதான இனவழிப்பின் தனது காத்திரமான பங்கினை மூடி மறைத்து வருவதுடன், தொடர்ந்தும் சிங்களத்திற்கு ஆதரவாகச் செயற்படுவது.

12. சொந்தப் பழிவாங்கலுக்காக ஒரு இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி மிகப்பெரும் துரோகத்தை தமிழருக்குச் செய்தது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஒரு பொம்மை அரசை வைத்துக்கொண்டு, தமிழகத்தின் வாயை அடைத்து மூடியது.

13. இன்று, இலங்கை முழுதும் சீனாவின் கைகளுக்குள் போவது கண்டும் , எதுவுமே செய்யமுடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது.

14. இடையிடையே நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்கு வருடந்தோறும் சுதந்திரமில்லா தமிழர்களின் முன்னால் தனது சுதந்திரதினத்தைக் கொண்டாடி மகிழ்வது.

இதைவிடவும் வேறு ஏதும் சாதனைகள் செய்திருந்தால் கேட்க ஆசை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்துக்கு வேலை கொலைகார ஹிந்தியாவுக்கு நாட்டிய நடனம் ஆடுவதா..??!

யுத்தத்தால்.. ஹிந்திய ஆக்கிரமிப்பு படையால் அழிக்கப்பட்ட எம் மக்களுக்கு இன்னும்.. ஒரு ஒழுங்கான நீதி.. நியாயம் கிடைக்கக் கூட இல்லை.. இதுக்க இவை நாட்டியம் ஆடினம்.

எதுக்கு இந்த தேவையில்லாத வேலைகள். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சுதந்திரம் ஆனதுக்கு நீங்கள் ஏனப்பா கொண்டாடுகிறீர்கள்..?

இவ்வளவு பட்டும் புத்தி வரவில்லையா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

இந்தியா இற்றைவரை இலங்கையில் சாதித்தவைகள்

1. இந்திரா காந்தி காலத்தில் மேற்கு நோக்கி ஒட்டிக்கொண்டிருந்த இலங்கைக்கு பாடம் புகட்ட வலிந்து தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுத , பண , பயிற்சி உதவிகளை வழங்கியது.

2. அவ்வாறு தான் வழங்கிய உதவிகளைப் பெற்றுக்கொண்டு போராளிகள் தனது சொல்லைக் கேட்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

3. போராளிகளைத் துரும்புச் சீட்டாக வைத்து இலங்கையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

4. தன்னால் கொடுக்கப்பட்ட உதவிகளைக் கொண்டு போராளிகள் ஈழம் பெறும் தறுவாயை அடையமுதல், அதைத் நிறுத்தி தமிழர் ஈழம் பெறப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டது.

5. 1987 இல் தமிழர்களுக்கு உதவுகிறோம் என்கிற போர்வையில் 125,000 இந்திய ஜவான்களை தமிழர் தாயகத்தில் களமிறக்கியது.

6. தவறான வெளிநாட்டுக் கொள்கையினால் உந்தப்பட்டு, காக்க வந்த மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்றுகுவித்து, மனித குலத்திற்கெதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் தனது ராணுவம் நிலைகொண்டிருந்த வெறும் இரண்டரை வருடங்களில் செய்துமுடித்து, முகத்தில் கரிபூசியபடி அவமானத்துடன் வெளியேறியது.

7. 1991 இல், தனது நம்பிக்கை நட்சத்திரமான வருங்காலப் பிரதமரை தமிழ்நாட்டில் பலிகொடுத்தது.

8. தொடர்ந்தும் தமிழர்களுக்கெதிரான நிலைப்பாட்டினை தனது வெளையுறவுக்கொள்கையாக வரிந்துகொண்டு 18 வருடங்கள் காத்திருந்தது.

9. 2008 - 2009 காலப்பகுதியில், தனக்குச் சார்பான சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து தமிழர் மீதான திட்டமிட்ட இனவழிப்புப் போர் ஒன்றை குறிப்பிட்ட கால வரையறைக்குள் நடத்து முடித்ததுடன், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் மிகவும் பயங்கரமான போர்க்குற்றங்களைப் புரிவதற்கு உடந்தையாக இருந்ததுடன், வெளியுலகிலிருந்து வந்த அழுத்தங்களை தனது பிராந்திய ராஜதந்திர பலத்தின் மூலம் தடுத்து நிறுத்தி முற்றான இனக்கொலை ஒன்றினை முன்னின்று நடத்தியதுடன் அதை மூடி மறைத்தது.

10. தமிழர்களைப் பழி வாங்குவதற்காக தனது பரம வைரிகளான சீனா மற்றும் பாக்கிஸ்த்தான் நாட்டின் ராணுவ, அரசிய பிரசன்னத்தை இலங்கையில் காலூன்ற அனுமதித்தது. 


11. இற்றைவரை தமிழர் மீதான இனவழிப்பின் தனது காத்திரமான பங்கினை மூடி மறைத்து வருவதுடன், தொடர்ந்தும் சிங்களத்திற்கு ஆதரவாகச் செயற்படுவது.

12. சொந்தப் பழிவாங்கலுக்காக ஒரு இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி மிகப்பெரும் துரோகத்தை தமிழருக்குச் செய்தது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஒரு பொம்மை அரசை வைத்துக்கொண்டு, தமிழகத்தின் வாயை அடைத்து மூடியது.

13. இன்று, இலங்கை முழுதும் சீனாவின் கைகளுக்குள் போவது கண்டும் , எதுவுமே செய்யமுடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது.

14. இடையிடையே நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்கு வருடந்தோறும் சுதந்திரமில்லா தமிழர்களின் முன்னால் தனது சுதந்திரதினத்தைக் கொண்டாடி மகிழ்வது.

இதைவிடவும் வேறு ஏதும் சாதனைகள் செய்திருந்தால் கேட்க ஆசை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.


14. இடையிடையே நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்கு வருடந்தோறும் சுதந்திரமில்லா தமிழர்களின் முன்னால் தனது சுதந்திரதினத்தைக் கொண்டாடி மகிழ்வது. 

பஞ்ச் வசனம் மாதிரி இருக்கு ப்ரோ 

 

15 minutes ago, ராசவன்னியன் said:

இந்தியா சுதந்திரம் ஆனதுக்கு நீங்கள் ஏனப்பா கொண்டாடுகிறீர்கள்..?

இவ்வளவு பட்டும் புத்தி வரவில்லையா..?

அடக்கி, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வாழும் மக்கள் வெறும் தலையாட்டி பொம்மைகள் போன்று தானே ஐயா செயல்படுவார்கள்..
 

Link to comment
Share on other sites

யாழிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடியாக பயணிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை; இந்திய துணைத் தூதுவர்

 

 
 

யாழ்ப்பாணத்தில் இருந்து  நேரடியாக வெளிநாடுகளுக்கு  விமானம் மூலம் பயணிக்கவும் . கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லையென யாழ் இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்  தெரிவித்துள்ளார். 

01__12_.jpg

இந்திய நாட்டின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணம் துணைத் தூதுவராலயத்தில் நேற்று காலை  9 மணிக்கு யாழ்ப்பாணம் இந்திய இல்லத்தில் இடம்பெற்றது . இவ் நிகழ்வில் தலைமை அதிதியாகக் கலந்து கொண்டு  இந்திய தேசியக் கொடியை ஏற்றி  உரையாற்றும் போதே  அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சுதந்திர  காலத்திற்கு முற்பட்ட  வரலாற்றுக் காலம் முதல் இன்றைய காலம் வரை   இலங்கை இந்திய உறவானது பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்தது நாம் எல்லோரும் அறிந்ததே . இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை தமது  சேவைகளை வடமாகாண மக்களுக்காக வழங்கி வருகின்றது. 

அண்மையில் பாரதப் பிரதமர்  காணொளி மூலமாக  இலங்கை பிரதமருடன் இணைந்து  திறந்து வைத்த  இலவச  சுகப்படுத்தும் சேவை  என்கின்ற  அவசர  கால  நோயாளர் வண்டிச் சேவை. ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அறுநூறு மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பணம் பல்கலைக் கழக கிளிநொச்சி வளாகத்தில் விவசாயம் மற்றும் பொறியியல் பீடம் என்பன  வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றன   .பாடசாலைகளின்   கட்டட புனரமைப்புக்காக 187 ரூபா மில்லியன் செலவிடப்பட்டு அதில் 29 பாடசாலைகளின் கட்டடங்கள்  புனரமைக்கப் பட்டுள்ளன. 

அடுத்த கட்டமாக 250  மில்லியன் ரூபா செலவில் வடமாகாணத்தில் பாடசாலைகள்   தெரிவு செய்யப்பட்டு  வகுப்பறைத் தொகுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் 8 பாடசாலைகளின்  கட்டடத் தொகுதிகள்  பாடசாலை நிர்வாகத்திடம்  கையளிக்கப்பட்டுள்ளதுடன்   ஏனைய பாடசாலையின் வகுப்பறைக் கட்டடத் தொகுதிகளும் மாணவர்களின் பாவனைக்கு கையளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். 

இலங்கையின் கல்வி  பொது தராதர உயர்தரப்  பரீட்சையில்   சித்தி பெற்ற  மாணவர்களிற்கு 150 க்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்  இந்திய அரசினால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இலங்கை அரசாங்கத்தில் சேவையாற்றும் ஊழியர்கள்  தங்கள் திறமைகளை ஆளுமைகளை செயற்திரனை வளர்த்துக் கொள்வதற்கான தொழிநுட்ப  குறுங்கால  பயிற்சிக்கான புலமைப் பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றது. 

01__1_.jpg

சர்வதேச யோகா தினத்தில் வடமாகாணத்தில் அனைத்து மாவட்டத்திலும் மாணவர்களை ஆரோக்கியமாக கல்வி கற்க  யோகா பயிற்சி   நடத்தவும் , மாணவர்கள் பங்கு கொள்ளவும் அதற்கான ஏற்பாடுகளை  இந்திய துணைத் தூதரகம் வழங்கி வருகின்றது.  

அண்மைய  அபிவிருத்தி திட்டங்களின் வரிசையில் 160 கோடி ரூபா செலவில் கட்டப்பபட்டு வரும் யாழ்ப்பாண கலாசார நிலையம்  கட்டட  பணிகள் விரைவு படுத்தப் பட்டுவுள்ளன . அதன்  வளர்ச்சியை நான் கண்கூடாகவே பார்க்க முடிந்தது. 

முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு, 150  மீன்பிடி படகுகளும், 300 மீன் பிடி வலைகளும்  150 மில்லியன் ரூபா செலவில் வழங்கப்படவுள்ளன. நான் புதிதாக கடந்த மாதம் பதவி ஏற்றமையினை தொடர்ந்து  மக்களின்  தூதரக சேவைகள்; மற்றும்  தனிப்படட  சேவைகளின் அடிப்படையில் மக்கள் சந்திப்பு  நேரமாக ஒவ்வொரு புதன்கிழமையும்  ஒதுக்கப்பட்டுள்ளது. 

மக்கள்  முன் அனுமதி இன்றி  நேரடியாக  சந்தித்து கலந்துரையாட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . மேலும் தங்களின் குறைகளை  வேண்டுகோள்களை  முன் வைக்கும் வகையில்  விசா அலுவலகத்திலும்  தூதரகத்திழும்  பரிந்துரைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மக்களின் பரிந்துரைகள் நேரடியாக என்னால் பரிசீலிக்கப்படும் , அந்த வகையில் மக்கள் எந்தவித  தயக்கமும் இன்றி  பரிந்துரைகளை கடிதத்தின்  மூலம் தெரிவிக்க முடியும் . 

வடமாகாணத்தில் பெரும்பான்மை மக்களின் மொழியாக தமிழ் மொழியே முன்னிலையில் உள்ளது . இருப்பினும்   அலுவலக மொழியாக ஆங்கில மொழியை பயன்படுத்த வேண்டும் என்றும் , தமிழ் மொழியை பயன்  படுத்த முடியாதோ என்ற ஐயமும் தமிழ்  மக்களிடம்  உண்டு .  தூதரகத்தை பொருத்தவரையில்  மக்கள் தொடர்பாடலுக்கு எந்த வித தடையும் இல்லாமல் தமிழ்  மொழியை மக்களை பயன்படுத்த முடியும் .   

தூதரகத்தின்  தொடர்பாடல் மொழியாக தமிழ் மொழியே நடைமுறையில் இருக்கும் தூதரகத்தினால் அனுப்பப்படும் அவசரமான கடிதங்கள் தவிர்ந்த ஏனையவும்  தமிழ் மொழியில் அமையும் என்பதனை இவ்வேளையில் தெரிவிதத்துக் கொள்கின்றேன்.

கலை கலாசார பண்பாட்டினை  தேடும்  அடிப்படையில் தூதரகமானது  வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து  நல்லூர் உற்சவ காலத்தில் கடந்த 6 வருடங்களாக தெய்வீக சுகானுபவம் என்னும் கலை நிகழ்வுகளை நடத்தி வருகின்றது. இவ்வருடமும்  இவ் நிகழ்வு இடம்பெறவுள்ளது 

எதிர்காலத்  திட்டங்களின் அடிப்படையில் யாழ் பல்கலைக் கழக இசைத்துறை , நடனத்துறை , சித்த மருத்துவ பிரிவு இந்து நாகரிக துறை முகாமைத்துவ பீடம் கணித்து துறைக்கான  பணத் தேவைக்கான வேண்டுகோள்கள்  முன் வைக்கப்பட்டுள்ளன.  அவற்றிற்கு எம்மால் இயன்ற  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . 

மேலும் வடமாகாணத்தின்  பொருளாதார  முன்னேற்றத்துக்கான முக்கிய விடயங்களாக  வடமாகாண மக்களுக்கான காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலையம் என்பன இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு அமைய ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள்  சகல வழிகளிலும் இடம்  பெற்று  வருகின்றன 

 

.விரைவில் யாழ்ப்பாணத்தில் இருந்து  நேரடியாக வெளிநாடுகளுக்கு  விமானம் மூலம் பயணிக்கவும் .கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. என்பதையும் மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்வதுடன்  யாழ் இந்திய துணைத் தூதரகமானது   தொடர்ந்தும் வடமாகாண அபிவிருத்திக்கு  பங்களிப்பினை வழங்கும்  என்கிறார். 

http://www.virakesari.lk/article/38578

Link to comment
Share on other sites

14 hours ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழகத்துக்கு வேலை கொலைகார ஹிந்தியாவுக்கு நாட்டிய நடனம் ஆடுவதா..??!

12 hours ago, Sasi_varnam said:

 

அடக்கி, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வாழும் மக்கள் வெறும் தலையாட்டி பொம்மைகள் போன்று தானே ஐயா செயல்படுவார்கள்..
 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, நவீனன் said:

யாழ்ப்பாணத்தில் இருந்து  நேரடியாக வெளிநாடுகளுக்கு  விமானம் மூலம் பயணிக்கவும் . கப்பல் மூலம் ஏற்றுமதி இறக்குமதி  நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லையென யாழ் இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன்  தெரிவித்துள்ளார். 

 

அதை தீர்மாணிப்பது சிறிலங்கா ஜனாதிபதி.......இந்திய துணைத்தூதுவர் அல்ல கண்டியலோ.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.